29 August, 2014

திருவள்ளுவமாலை - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


        தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட 
        பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
        வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் 
        வெள்ளைக் குறட்பா விரி 
                                                                                           - கபிலர் 

நூல் குறிப்பு: 
  •   திருக்குறளின்  சிறப்பை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல்  ஒன்று இயற்றப்பட்டது . 
  •  இந்நூலில் 53  புலவர்கள் பாடிய 55 பாடல்கள் உள்ளன.   
  • இப்பாடல்  அறிவியல் அணுகுமுறையை சார்ந்தது. 
உவமை: 
  •  சிறுபுல்லின்  தலையில் தினையளவினும் சிறுபனிநீர் நெடிதுயர்ந்த பனை மரத்தின் உருவத்தை தன்னுள்  தெளிவாக காட்டும். 
உவமிக்கப்படும் பொருள்: 
  •   வள்ளுவரின்  குறள் வெண்பாக்கள் அருள்பெறும் கருத்துக்களைத் தம்மகத்தே அடக்கிக் காட்டும். 

அறிவியல் கருத்து: 
  •   ஒளியைக்  கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவிலுள்ள  பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றும்படி  செய்யலாம் என்று  கண்டவர் கலீலியோ கலிலி. 
  •   நெடுந்தொலைவிலுள்ள  பெரிய பனைமரத்தின் உருவத்தைப் புள் நுனியில்  தேங்கிய சிறுபனித்துளி மிகத்தெளிவாகக்  காட்டும் என்ற கபிலரின் சிந்தனை  அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை  வெளிப்படுத்துக்கிறது. 

ஆசிரியர் குறிப்பு: க.சச்சிதானந்தன் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்



  •   இயற்பெயர் -  க.சச்சிதானந்தன் 
  •   ஊர் -  இலங்கையில் யாழ்ப்பாண  மாவட்டத்திலுள்ள  பருத்தித்துறை 
  •   பணி- ஆசிரியர்  பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார் 
  •   புலமை - தமிழ்,  ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் ஆழ்ந்த        புலமை பெற்றிருந்தார்  
  •  படைப்புகள் -  ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி-1954), அன்னபூரணி(புதினம்),  யாழ்பாணக்காவியம்
  •  சிறப்பு -  மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம்  பாடல்களில் கம்பனின்  மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும்  ஒருமித்துக் காணலாம்.

28 August, 2014

ரகசியப் போர்க் கப்பல் கடற்படையில் சேர்ப்பு


உள்நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்ட, ரேடார் போன்ற சாதனங்களின் கண்காணிப்பில் சிக்காத, நீர்மூழ்கி எதிர்ப்பு ரகசியப் போர்க் கப்பலான "ஐஎன்எஸ் கமோர்ட்டா', விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி முன்னிலையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

நாமே தயாரித்துள்ள இந்த ரகசியப் போர்க் கப்பல் நமது பலத்தை வெளிப்படுத்துவதுபோல் உள்ளது என்று ஜேட்லி பேசினார். கமோர்ட்டா போர்க்கப்பல் குறித்து கடற்படை அதிகாரிகள் கூறியதாவது:

""ரேடார் போன்ற கண்காணிப்புச் சாதனங்களில் கண்களில் சிக்காத இந்தப் போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளையும், ஹெலிகாப்டரையும் சுமந்து செல்லும்.

இந்தப் போர்க்கப்பல் 110 மீட்டர் நீளத்துடனும், 14 மீட்டர் அகலத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கமோர்ட்டா போர்க்கப்பலை இந்திய கடற்படையைச் சேர்ந்த நிறுவனமான கடற்படை வடிவமைப்பு இயக்குநகரம் (டிஎன்டி) வடிவமைத்துள்ளது.
நன்றி-தினமணி 
24-08-2014

ஜி.யு.போப் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்



  •   பெயர் -  ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
  •   பிறந்த ஊர் - பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
  •   பிறப்பு -  கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் நாள் பிறந்தார் 
  •   பெற்றோர் - ஜான் போப், கேதரின்  யூக்ளோ போப் 
  •   போப்பின்  தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில்  கிறித்துவமதத்தைப்  பரப்பும் சமய குருவாகப்  பணியாற்றினார்.    அவரைப்போன்று  பணியாற்ற  விரும்பி, தமது 19வது வயதில் தமிழகம்  வந்தார்.
  •  அவர் பாய்மரக்  கப்பலில் தமிழகம் வந்து சேர எட்டு மாதங்கள் ஆகின.
  •   தமிழ்நாட்டில்  சென்னை சாந்தோம் பகுதியில் முதலில் சமயப்பணி ஆற்றினார். திருநெல்வேலி  மாவட்டம் சாயர்புரம் என்னும் பகுதியில் சமயப்பணி ஆற்றினார். அங்கு பள்ளிகளை  நிறுவினார். கல்விப்பனியையும் சமயப்பணியையும் ஒருங்கே ஆற்றினார்.
  •  சமயக்கல்லூரியில்  தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தின்,  எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.
  •  கணிதம், அறிவாய்வு(தருக்கம்),  மெய்யறிவு(தத்துவம்) ஆகியவற்றை கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  •   திருநெல்வேலியில்  1842 முதல் 1849 வரை கல்விப் பணியும் சமயப்பணியும்  ஆற்றினார் .
  • 1850இல்  இங்கிலாந்து சென்று திருமணம் செய்துக்கொண்டு, தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம்  வந்து தஞ்சாவூரில் சமயப்பணி ஆற்றினார்.
  • தஞ்சையில்  பணியாற்றிய எட்டு ஆண்டுக் காலத்தில், புறநானூறு முதலான சங்க நூல்களையும் நன்னூல்  முதலான இலக்கணங்களையும் பயின்றார்.
  •  அவற்றை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
  •  இந்தியன்  சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு போன்ற ஏடுகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.
  •  அக்கட்டுரைகளில்  புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கங்களும்,  தமிழ்ப்புலவர் வரலாறும் இடம் பெற்றன.
  •  போப் உயர்ந்த  பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் 600  செய்யுள்களை, நீதிநூல்களில் இருந்து எடுத்து,   தமிழ் செய்யுட் கலம்பகம்  என்னும் தொகுத்து அதன் விளக்கங்களையும் எழுதி வெளியிட்டார்.
  •  பள்ளி  குழந்தைகளுக்காக வினாவிடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.
  •  பெரியவர்கள்  கற்கும் வகையில் இலக்கண நூலொன்றையும் படைத்தார்.
  •  மேலை நாட்டார்  தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றையும், ஆங்கிலம்-தமிழ் அகராதி ஒன்றையும் எழுதி வெளியிட்டார்.
  •   பழைய தமிழ் இலக்கியங்களில்  இருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு, அதனைப் பாடநூலாக வைக்க  ஏற்பாடு செய்தார்.
  • 1858ஆம் ஆண்டு  உதகமண்டலம் சென்ற அவர், பள்ளி ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  • இங்கிலாந்திற்கு  சென்ற போப் 23 ஆண்டுகள் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு  கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்தார்.
  •   திருக்குறளை 40  ஆண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1866ஆம் ஆண்டு  வெளியிட்டார்.
  •   தமது 86ஆம்  வயதில் 1900ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.
  • 13.02.1908  அன்று போப் தம் இன்னுயிரை நீத்தார்.
  •  அவர், தம்  கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என எழுத வேண்டும் என்று தமது இறுதிமுறியில்  எழுதி வைத்தார்.
  •  அவர்  தமிழ் மாணவன் என்றே தம்மை கூறிக்கொண்டார்.

அனுமன் தேடிய “சஞ்சீவினி” மூலிகை


ராமாயணத்தில் அனுமார் கொண்டு வந்ததாகக் கருதப்படும் சஞ்சீவனி மூலிகை போன்ற ஒன்று இமாலயத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் அதிசயித்துள்ளனர்.

இமாலயத்தில் உயிர்வாழ்வதற்கே கடினமான பகுதிகள் உள்ளன. இந்நிலையில் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை பன்மடங்கு அதகரித்து ஒழுங்கு படுத்துவதும், பிராண வாயு பற்றாக்குறை இருக்கும் மலைப்பிரதேசங்களில் உயிர்களைப் பாதுகாக்கவும் செய்யும் ரோடியோலா என்ற அதிசய மூலிகையின் மகத்துவங்களை விஞ்ஞானிகள் பாராட்டி வருகின்றனர்.

இந்த ரோடியோலாவை ‘சஞ்சீவனி’ என்றே கருதுகின்றனர் விஞ்ஞானிகள். லடாக்கில் ‘சோலோ’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகையின் அரிய குணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படாமலே உள்ளது. ஆனால் லடாக்வாசிகள் இதன் இலைகளை உணவுப்பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இதன் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வருகின்றனர். 

ரோடியோலா என்ற இந்த மூலிகை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது, கடினமான வாழ்விடச் சூழலில் நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான சக்தியை வழங்குகிறது, அனைத்திற்கும் மேலாக கதிரியக்கத்தின் விளைவுகளிலிருந்தும் இந்த மூலிகை உயிர்களைப் பாதுகாக்கிறது என்று ஆய்வுக் கழகத்தின் ஆர்.பி.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

ரசாயன ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவை வெளிப்படுத்தும் நச்சுக் கதிரியக்கத்தின் விளைவுகளை இந்த ரோடியோலா மூலிகை அகற்றும் என்கிறார் இவர்.

மேலும் மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணையாகவும் ஜீரண சக்திகளை மேம்படுத்தும் குணங்களும் இந்த மூலிகைக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி - தி இந்து 
26-08-2014

27 August, 2014

அனைத்து குடும்பத்தினருக்கும் வங்கி கணக்கு திட்டம்


நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வங்கிக் கணக்கையும், ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டு வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும் "பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்)' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

சுதந்திர தினத்தன்று இந்தத் திட்டத்தை மோடி அறிவித்திருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இதை நடைமுறைக்கு கொண்டுவரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் முதல் படியாக, வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு "ரூபே' என்ற வங்கிப்பற்று அட்டையும் (டெபிட் கார்டு),  ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடும் வழங்கப்படுகிறது. இதற்காக அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் மோடி, மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

நன்றி-தினமணி 
26-08-2014


லோக்பால் குழுவுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிப்பு


லோக்பால் தேர்வுக் குழுவுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

லோக்பால் தேர்வுக் குழுவில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் குறித்து இறுதி செய்வதற்கு சட்டத் துறை அமைச்சகத்துடன், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

லோக்பால் அமைப்புக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்காக, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் வழங்கப்படும் பட்டியலில் உள்ளவர்களைத் தவிர, வெளியிலுள்ள தகுதியான நபர்களை பரிந்துரைக்க லோக்பால் தேர்வுக் குழுவுக்கு விரைவில் அதிகாரம் வழங்கும் விதமாக, புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

முன்னதாக அரசு தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி தலையிலான குழுவினர், லோக்பால் தேர்வுக் குழுவின் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ரோத்தகி குழுவின் அறிக்கையானது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் பரிசீலிக்கப்பட்டு, லோக்பால் தேர்வுக் குழுவுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகே லோக்பால் அமைப்புக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்ய முடியும்.

நன்றி-தினமணி 
26-08-2014

தமிழ் வளர்த்த சான்றோர் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வீரமாமுனிவர்(1680-1747)


  •  வீரமாமுனிவர் இத்தாலி  நாட்டில் பிறந்தார். 
  • வீரமாமுனிவரின்  இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி   தம்  முப்பதாம் வயதில் தமிழகம் வந்தார். 
  •  தமிழின் மீது  கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை தைரியநாதன் என  மாற்றிகொண்டார்.   பின்னர்  தனித்தமிழுக்கு ஏற்ப வீரமாமுனிவர்  என மாற்றம் பெற்றது. 
  •  தமிழில்  முதன்முதலாக சதுரகராதி  என்னும் அகரமுதலியை படைத்தார். 
  •  கிறித்துவ  சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும்  தேம்பாவணி என்னும் காப்பியத்தை படைத்தார். 
  •   தமிழ் எழுத்து  வரிவடிவத்தை திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். 
  •  குட்டித்  தொல்காப்பியம் எனப் போற்றப்படும் தொன்னூல் விளக்கம்  படைத்தார். 
  •   கலம்பகம்,  அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களையும்,  பரமார்த்த குரு கதை என்னும்  நகைச்சுவை நூலையும் படைத்தார். 
  •  " தேம்பாவணி,  காவலூர் கலம்பகம் கதம்ப மாலையாக காட்சி அளிக்கிறது. தொன்னூல் பொன்நூலாக  இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது. வீரமாமுனிவர் தமிழ்  முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்"  என ரா.பி.சேதுபிள்ளை பாராட்டுகிறார்

குணங்குடி  மஸ்தான்(1788-1835)
  •  "மாதவஞ்ச்சேர்  மேலோர் வழுத்தும் குணங்குடியான்  "என்று  அழைக்கப்படுபவர். 
  •  இயற்பெயர் -  குணங்குடி மஸ்தான் சாகிபு.  
  •  இளம்வயதிலே  முற்றும்  துறந்தவராய் வாழ்ந்தவர்.
  •  இவர்  தாயுமானவர் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் .
  •  அவருடைய  பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல  இயற்றியுள்ளார். 
  •   பராப்பரக்கண்ணி,  எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி,  நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில  கண்ணிகள். 
  •  இவர்தம்  பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப்  பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை  அழைத்து செல்லும். 
  •   இவர் குருநிலை,  தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை,  தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும்  வகையில் பாடல்கள் பல  இயற்றியுள்ளார். 
  •  இவர் மீது  கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள்    நான்மணிமாலை ஒன்று  இயற்றியுள்ளார். 
  •  அந்நூலில் "மடல் சூல்புவியில உளத்திருளைக் கருணை ஒளியினாற்  களைந்து, விடல்சூழ்பவரின் குணங்குடியான், மிக்கோன் எனற்கு ஓர்  தடையுளதோ? எனக் கேட்கிறார்.
  •  "தடை உண்டு என உரைப்பார்  தமிழுலகில் இல்லை "என்கிறார். 
ஆறுமுக நாவலர்(1822-1879)

  •   ஆறுமுக நாவலர்  யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். 
  •   இவருடைய  இயற் பெயர்   ஆறுமுகனார். 
  •   இளமையிலே சைவ  சிந்தாந்த சாத்திரங்கள் படித்தவர். 
  •   இவரின்  சொற்பொழிவு திறமையை கண்டு திருவாவடுதுறை ஆதினம்       இவருக்கு நாவலர் பட்டம் வழங்கினார். 
  •   இவர் சிறந்த  பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர். 
  •   நாவலரே முதன்  முதலில் இலக்கண வலுவற்ற தூய்மையான எளிய        தமிழ்   உரைநடையை கையாண்டார். 
  •   தமிழ்  உரைநடைக்கு இவர் ஆற்றிய தொண்டிற்காக பரிதிமாற்கலைஞர்     இவரை வசன நடை கைவந்த  வல்லாளர் என பாராட்டினார். 
  •   சென்னையில்  அச்சுக்கூடம் நிறுவி, சிறந்த தமிழ் நூல்கள் பல    பதிப்பித்தார். 
  •   பாரதம்,  பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை  போன்ற    இலக்கிய நூல்களை  பதிப்பித்தார். 
  •   இலக்கண  வினாவிடை, இலக்கண சுருக்கம், நன்னூல் விருத்தியுரை,    நன்னூல்    காண்டிகையுரை, இலக்கண  கொத்து, இலக்கண சூறாவளி  முதலிய இலக்கண     நூல்களை பதிப்பித்து வெளியிட்டார். 
  •   முதல் வகுப்பு  முதல் நான்காம் வகுப்பு வரை பாலபாடங்களையும் எழுதி        அச்சிட்டு வெளியிட்டார்

26 August, 2014

எத்தனாலில் இயங்கும் பேருந்து: இந்தியாவில் முதல்முறையாக தொடக்கம்


இந்தியாவிலேயே முதல்முறையாக எத்தனாலில் இயங்கும் பேருந்தை மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

முதல் முயற்சியாக இயக்கப்பட்ட இந்தப் பேருந்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

இந்தியா ஒவ்வோர் ஆண்டும் ரூ.6 லட்சம் கோடி மதிப்புக்கு பெட்ரோல், டீசல், எரிவாயுவை இறக்குமதி செய்கிறது.

மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் இறக்குமதியை ஆண்டொன்றுக்கு ரூ.2 லட்சம் கோடியாக நம்மால் குறைக்க இயலும். அதற்கான தொடக்க முயற்சியாக எத்தனால் மூலம் இயங்கும் பேருந்துத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பசுமைப் பேருந்துத் திட்டத்தின் கீழ், எத்தனால் மூலம் இயங்கும் 200 முதல் 500 பேருந்துகளை நாகபுரி மாநகராட்சிக்கு மத்திய அரசு வழங்கும்.

உயிரி எரிபொருள் மூலம் இயங்கும் வாகனம், மின்சாரம்-டீசல் இணைந்து செயல்படும் வாகனம் ஆகியவற்றை இயக்குவதற்கு வழிவகை செய்யக்கூடிய மசோதா நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும்.

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் எத்தனாலை உற்பத்தி செய்வதால், இந்த பசுமைப் பேருந்து திட்டத்தின் மூலம் அந்த மாநிலங்கள் பெரிதும் பயனடையும்.

மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதற்கான கொள்கையை மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் கொண்டுவருகிறது என்று நிதின் கட்கரி கூறினார்.


நன்றி-தினமணி 
25-08-2014

இந்திய வம்சாவளி பெண்மணிக்கு ஆராய்ச்சியாளர் விருது


தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லீலா படேல் என்பவருக்கு சிறந்த பெண் ஆராய்ச்சியாளருக்கான விருது கிடைத்துள்ளது.

அந்நாட்டின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்த விருது, ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள லீலா படேல், "சமூக மேம்பாட்டு மையம்' என்ற அமைப்பை 2002-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

நன்றி-தினமணி 
21-08-2014

ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-வியட்நாம் ஒப்புதல்


பாதுகாப்பு, எண்ணெய் உற்பத்தித் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும், வியட்நாமும் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டுள்ளன.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தற்போது வியத்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர், அந்நாட்டு  பிரதமர் குயன் தான் டங், வெளியுறவுத் துறை அமைச்சர் பாம் பின் மின் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

""இந்தச் சந்திப்பின்போது சுஷ்மா ஸ்வராஜ் இரு நாடுகளிடையேயான பல்வேறு வர்த்தகங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

பாதுகாப்பு, எண்ணெய் உற்பத்தித் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இந்தியா, வியத்நாம் இடையே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வியட்நாமில் உள்ள எண்ணெய் உற்பத்தித் துறையில் இந்தியா முதலீடு செய்வது குறித்தும் சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தினார்'' என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

நன்றி-தினமணி 
26-08-2014

TNPSC General Tamil Questions -006





















Answers

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...