30 July, 2014

Tnpsc Aptitude 006

இன்றைய கேள்விகள் -30/07/2014



மணிப்பூரில் உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம்


மணிப்பூரில், உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடகிழக்குப் பிராந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:
மணிப்பூரில், ஜிரிபம் - துபுல் - இம்பால் பகுதிகளை இணைக்கும் வகையில் 111 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில்பாதைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நோனி என்னுமிடத்தின் அருகே 141 மீட்டர் உயரம் கொண்ட ரயில்வே பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில், பெல்கிரேடு- பார் இடையேயான 139 மீட்டர் உயரம் கொண்ட ரயில்வே பாலம்தான் தற்போது உலகிலேயே உயரமானதாகக் கருதப்படுகிறது. அதனைவிட மணிப்பூரில் அமைக்கப்பட இருக்கும் ரயில்வே பாலம் அதிக உயரமானதாகும். இந்தப் பாலம் கட்டும் பணி, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்து விடும்.
மணிப்பூரில் நிறைவேற்றப்பட இருக்கும் அகல ரயில் பாதைத் திட்டம், பட்கயில் உள்ள செங்குத்தான மலைப்பகுதியில் அமைக்கப்படுகிறது. இந்த ரயில்பாதைத் திட்டத்துக்காக 54.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 46 சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. பல இடங்களில் உயரமான தூண்கள் கட்டப்படுகின்றன. இதில் ஜிரிபம் - துபுல் இடையே 4.9 கிலோ மீட்டர் தூரத்துக்கும், துபுல் - இம்பால் இடையே 10.75 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அமைக்கப்பட இருக்கும் சுரங்கப் பாதைகள் நீளமானதாகும்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றின் மீது 360 மீட்டர் உயரத்தில் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதான் உலகத்திலேயே மிக உயரமான பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலமாகும் என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளைப் புலிக்கு ஒரே பிரசவத்தில் 4 வகை குட்டிகள்


ஒடிஸாவில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் ஒரு வெள்ளைப் புலி, ஒரே சமயத்தில் அரிய வகையான கரும் புலிக் குட்டி உள்பட 4 வகை புலிக் குட்டிகளை ஈன்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது. மேலும், உயிரியல் பூங்காவில் இதுபோன்று கரும் புலிக்குட்டி பிறப்பது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நந்தன்கானன் உயிரியல் பூங்காவின் இயக்குநர் சுதர்ஸன் பாண்டா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: "சினேகா' என்ற வெள்ளை நிறப் பெண் புலிக்கும் அதன் ஜோடியான "மணீஷ்' என்ற ஆண் புலிக்கும் இந்தக் குட்டிகள் பிறந்துள்ளன. இதில் ஒன்று கரும்புலிக்குட்டி, மற்றொன்று வெள்ளை நிறக்குட்டியாகும். மூன்றாவது, அடர்த்தி குறைந்த கரிய நிறத்தில் உள்ளது. நான்காவது குட்டி வங்கப்புலியின் நிறத்தில் உள்ளது. உலகப் புலிகள் தினத்தையொட்டி இந்தக் குட்டிகள் பிறந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சனி கிரகத்தின் நிலாவில் 101 வெந்நீர் ஊற்றுகள்

Map showing the locations of all known 101 geysers along the tiger
 stripes  fissures at the south pole of Enceladus

நாசாவின் காஸினி விண்கலம், சனிக் கிரகத்தின் பனி நிலாவான என்சிலேடஸில் 101 தனித்துவ வெந்நீர் ஊற்றுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
அந்த நிலாவின் அடிநிலப்பகுதியில் இருந்து திரவ நிலை நீர் மேலே வந்திருப்பதற்கான சாத்தியக் கூறு இருப்பதாக இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த 7 ஆண்டுகளாக காஸினியின் கேமரா, இந்தச் சிறிய நிலாவின் தெற்கு முனைப் பகுதியில் படங்களை எடுத்து ஆராய்ந்து வருகின்றது.
காஸினி ஹைஜன் மிஷன் என்பது நாஸா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் இத்தாலி விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆராய்சித் திட்டம்.

கலிங்கத்துப்பரணி- 9 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  1.  தீயின்வாய் - நெருப்பில்
  2.  சிந்தை - எண்ணம்
  3.  கூர - மிக
  4.  நவ்வி - மான்
  5.  முகில் - மேகம்
  6.  மதி - நிலவு
  7.  உகு - சொரிந்த(பொழிந்த
  8.  புனல் - நீர்


இலக்கணக் குறிப்பு:
  1.  வெந்து, உலர்ந்து, எனா, கூர - வினையெச்சங்கள்
  2.  செந்நாய் - பண்புத் தொகை
  3.  கருமுகிலும் , வெண்மதியும் - எண்ணும்மை
  4.  கருமுகில், வெண்மதி - பண்புத்தொகைகள்
  5.  கடக்க ஓடி, இளைத்து - வினையெச்சங்கள்
  6.  வியர்த்த வியர்வன்றோ - பெயரெச்சம்


பிரித்தெழுதுக:
  1.  வாயினீர் - வாயின் + நீர்
  2.  வெந்துலர்ந்து - வெந்து + உலர்ந்து
  3.  காடிதனை  - காடு + இதனை
  4.  கருமுகில் - கருமை + முகில்
  5.  வெண்மதி - வெண்மை + மதி


ஆசிரியர் குறிப்பு:
  •  கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் சயங்கொண்டார்.
  •  இவர், திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊரினர். முதல் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர்.
  •  பரணிக்கோர் சயங்கொண்டார் எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.
  •  இசையாயிரம், உலாமடல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
  •  இவரது காலம் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு.


நூற் குறிப்பு:
  •  ஆயிரக்கணக்கான யானைகளாப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் பரணி என்பது பெயர்.
  •  இது தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  •  பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல் கலிங்கத்துப் பரணி.
  •  கலிங்க மன்னன் அனந்தபன்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான்.
  •  அவ்வெற்றியைப் பாராட்டி எழுந்த இந்நூல் தோல்விவுற்ற கலிங்க நாட்டின் பெயரால் அமைந்துள்ளது.
  •  இந்நூல் ஐந்நூற்றுத் தொண்ணூற்றொன்பது தாழிசைகள் உள்ளன.
  •  சயங்கொண்டாரின் சமகாலப் புலவரான ஒட்டக் கூத்தர் இந்நூலைத் "தென்தமிழ்த் தெய்வப்பரணி" எனப் புகழ்ந்துள்ளார்.

பரணி இலக்கியங்கள்:
  •  தக்கயாகப்பரணி
  •  மோகவதைப்பரணி
  •  சீனத்துப்பரணி
  •  வங்கத்துப்பரணி
  •  பாசவதைப்பரணி
  •  திராவிடத்துப்பரணி

 ஆயிரம் யானை அமரிடை வென்ற
 மாணவ னுக்கு வகுப்பது பரணி
- பன்னிரு பாட்டியல்

* பேரறிஞர் அண்ணா "எனக்கு விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே" என்றார்.





























இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...