29 August, 2014

திருவள்ளுவமாலை - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


        தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட 
        பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
        வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் 
        வெள்ளைக் குறட்பா விரி 
                                                                                           - கபிலர் 

நூல் குறிப்பு: 
  •   திருக்குறளின்  சிறப்பை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல்  ஒன்று இயற்றப்பட்டது . 
  •  இந்நூலில் 53  புலவர்கள் பாடிய 55 பாடல்கள் உள்ளன.   
  • இப்பாடல்  அறிவியல் அணுகுமுறையை சார்ந்தது. 
உவமை: 
  •  சிறுபுல்லின்  தலையில் தினையளவினும் சிறுபனிநீர் நெடிதுயர்ந்த பனை மரத்தின் உருவத்தை தன்னுள்  தெளிவாக காட்டும். 
உவமிக்கப்படும் பொருள்: 
  •   வள்ளுவரின்  குறள் வெண்பாக்கள் அருள்பெறும் கருத்துக்களைத் தம்மகத்தே அடக்கிக் காட்டும். 

அறிவியல் கருத்து: 
  •   ஒளியைக்  கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவிலுள்ள  பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றும்படி  செய்யலாம் என்று  கண்டவர் கலீலியோ கலிலி. 
  •   நெடுந்தொலைவிலுள்ள  பெரிய பனைமரத்தின் உருவத்தைப் புள் நுனியில்  தேங்கிய சிறுபனித்துளி மிகத்தெளிவாகக்  காட்டும் என்ற கபிலரின் சிந்தனை  அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை  வெளிப்படுத்துக்கிறது. 

ஆசிரியர் குறிப்பு: க.சச்சிதானந்தன் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்



  •   இயற்பெயர் -  க.சச்சிதானந்தன் 
  •   ஊர் -  இலங்கையில் யாழ்ப்பாண  மாவட்டத்திலுள்ள  பருத்தித்துறை 
  •   பணி- ஆசிரியர்  பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார் 
  •   புலமை - தமிழ்,  ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் ஆழ்ந்த        புலமை பெற்றிருந்தார்  
  •  படைப்புகள் -  ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி-1954), அன்னபூரணி(புதினம்),  யாழ்பாணக்காவியம்
  •  சிறப்பு -  மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம்  பாடல்களில் கம்பனின்  மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும்  ஒருமித்துக் காணலாம்.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...