16 September, 2014

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்


மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
   யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய பொது  நான் காப்பேன் என்று    எழுந்தவர் உ.வே.சா. அவரே அனைவராலும் தமிழ்த்தாத்தா என்று   அழைக்கபடுபவர். உ.வே.சா.வின் ஆசிரியரே மகாவித்துவான்    மீனாட்சிசுந்தரனார்.

இளமையும் கல்வியும்:
  மீனாட்சிசுந்தரனார் 1815ஆம் ஆண்டு ஏப்ரல்  6ஆம் நாள் திருச்சி மாவட்டம்     எண்ணெய்க்கிராமத்தில் பிறந்தார்.  பெற்றோர்: சிதம்பரம் – அன்னத்தாச்சியார்.  தமது தந்தையிடமே தமிழ்  கற்றார்.

கல்வியே  வாழ்க்கை:
  மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு  குடும்பத்துடன் திரிசிரபுரத்தில்(    திருச்சிராப்பள்ளி )  வாழ்ந்தார்.  அவரை திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார் என்றே   அழைப்பர். அவரிடம் கல்வி கற்க வேண்டும் என்ற வேட்கை தணியாததாக   இருந்தது.  கல்வியே வாழ்கை என்று இருந்தவர்.

தமிழ்  கற்பித்தல்:
  மீனாட்சிசுந்தரனார் சாதி, சமயம் பாராது  அனைவருக்கும் கல்வி கற்பித்தார்.  குலாம்காதர் நாவலர், சவரிராயலு,  தியாகராசர், சாமிநாதர் ஆகியோர்,    அவர்களுள் குறிப்பிடத்தக்க மாணவர்கள் . இவர் சில காலம்    திருவாவடுதுறையில் ஆதின  வித்துவானாக பணியாற்றினார்.    திருவாவடுதுறையில் வாழ்ந்த காலத்தில் தான்  உ.வே.சாமிநாதருக்கு   ஆசிரியராக இருந்தார்.

தமிழ்த்  தொண்டு:
  இவர், எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை  இயற்றியுள்ளார்.
  கோவில்களை  பற்றிய தலபுராணங்கள் பல இயற்றியுள்ளார்.

பண்பு  நலன்கள்:
  மீனாட்சிசுந்தரனார் அருங்குணமும் நிறைந்த  புலமையும் தளராத          நாவன்மையும் படைத்தவர்.  நகைச்சுவை உணர்வு மிக்கவர்
  ஒருமுறை அவரது நண்பர் ஆறுமுகம் என்பவர்,  தம்முடைய குடும்பத்     தொடர்பாக கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரம் ஒன்று  எழுதிக்கொடுத்தார்.  அதில், சாட்சிக் கையொப்பமிட வந்த ஒருவருடைய  இருப்பிடம்     கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரன் தெரு என்பது. அதனை நீற்றுக்காரத்   தெருஎனவும் வழங்குவர். இந்த இரண்டில் எதனைப் பெயருக்கு முன்னால்     சேர்க்கலாம் என்று அவர் கேட்டபோது, மீனாட்சிசுந்தரனார்இரண்டும் வேண்டாம்,   மூன்றாவது தெரு என்று போட்டுவிடும் என்று சொன்னார். அதிலுள்ள     நகைச்சுவை உணர்வை  அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது   சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு  சொல்லாகும்.(வெற்றிலை + பாக்கு +     சுண்ணாம்பு)

நோய்க்கு  மருந்து இலக்கியம்:
  தனக்கு உடல்நிலை சரியில்லாத போது சற்று  ஓய்வெடுத்தல் நல்லதென்று   மற்றவர் கூற, நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறினார்.

மறைவு:
  01.02.0876 அன்று உலகவாழ்வை நீத்தார்.

முதுமொழிக்காஞ்சி - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

 சிறந்த பத்து

1.ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
 ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை.
  • ஆர்கலி - கடல்
  • ஓதலின் - கற்றலைப் பார்க்கிலும்
     ஓசையினை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒழுக்கத்துடன் இருப்பது சிறந்ததாகும்.

2. காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்.
  • காதலின் - பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும்
  • சிறந்தன்று - சிறப்புடையது
     பிறர் அன்பு பாராட்டும்படி நடத்தலை விட அவர் மதிக்கும்படி நடத்தல் மேலானது.

3. மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை.
  • கற்றது - கற்ற பொருளை
  • மறவாமை - மறவாதிருத்தல்
     புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதை விட கற்றதை நினைவில் வைத்திருப்பது மேலானது.

4. வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை.
  • வண்மையின் - வளமையோடிருத்தலை விட 
   செல்வத்தினும் சிறப்புடையது உண்மை வாழ்க்கையாகும்.
5. இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை.
  • மெய் - உடம்பு
  • பிணி இன்மை - நோயில்லாமலிருத்தல்
     நோயில்லாமல் இருத்தல் இளமையினும் சிறப்பானது.

6. நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
  • நலன் உடமையின் - அழகுடைமையை விட
  • நாணு - நாணமுடைமை
     அழகைக் காட்டிலும் வெட்கம் சிறப்பானது.

7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
  • குலன் உடைமையின் - நல்ல குணத்தையுடைமையினும்
  • கற்பு - கல்வியுடைமை
     உயர்ந்த குலத்தைக் காட்டிலும் கல்வி மேன்மையானது.

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
  • கற்றாரை - கற்ற பெரியாரை
  • வழிபடுதல் - போற்றியொழுகுதல்
     கற்றலை விடக் கற்றாரை வழிபட்டொழுகுதல் மேலானது.

9. செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று.
  • செற்றாரை - பகைவரை
  • செலுத்துதலின் - ஒறுத்தலினும்
பகைவரை வெல்லுவதைவிட தன்னை மேம்படுத்திக் கொள்வது சிறப்பானது.

10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.
  • முன் பெருகலின் - முன்பு பெருகிப் பின் அழிதலைக் காட்டிலும்
  • சிறுகாமை - நின்ற நிலையில் குறையாதிருத்தல்
     செல்வம் பெருகி அழிவதைவிட, பெருகாமல் நிலையாக இருத்தல் நன்று.

சொற்பொருள்:
  1.   ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
  2.   காதல் – அன்பு, விருப்பம்
  3.   மேதை – அறிவு நுட்பம்
  4.   வண்மை – ஈகை, கொடை
  5.   பிணி – நோய்
  6.   மெய் – உடம்பு
ஆசிரியர் குறிப்பு:
  •   பெயர்: மதுரை கூடலூர் கிழார்
  •   பிறந்த ஊர்: கூடலூர்
  •   சிறப்பு: இவர் தம் பாடல்களை  நச்சினார்க்கினியர் முதலிய      நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள்.
  •   காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர்.
நூல் குறிப்பு:
  •   முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின்  துறைகளுள் ஒன்று.
  •   இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  •   இந்நூலை அறவுரைக்கோவை எனவும் கூறுவர்
  •   இந்நூலில் பத்து அதிகாரங்களும்,  அதிகாரத்திற்கு பத்துச் செய்யுள் வீதம் நூறு   பாடல்களும் உள்ளன.



மாநில நிர்வாகம் - மாநில ஆளுநர்


* குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தின் தலைவர் ஆளுநர் ஆவார்,

* மாநில ஆட்சி ஆளுநரின் பெயரிலேயே நடைபெறுகிறது.

* மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி எல்லா விதமான ஆட்சி அதிகாரங்களையும் ஆளுநர் செயல்படுத்துவார்.

* பொதுவாக ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆளுநரைக் கொண்டிருக்க வேண்டுமென்றாலும், 7-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1956-ன்படி ஒரு ஆளுநர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஆளுநராக நியமிக்கப்படலாம்.

* மாநில ஆளுநரை குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். எனினும் பதவிக்காலத்திற்கு முன்னரே பதவிலிருந்து குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம்.

* குடியரசுத் தலைவர் விரும்புகிற வரையில் மட்டுமே ஆளுநர் பதவியில் இருப்பார்.

* குடியரசுத் தலைவரின் விருப்பத்தை நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்த இயலாது.

* ஒன்றிய அரசின் பிரதிநிதியாகவே ஆளுநர் செயல்படுகிறார்.

* ஆளுநரின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுற்ற பின்னரும், அவரைத் தொடர்ந்து வேறு ஆளுநர் நியமிக்கப்படும் வரை, தொடர்ந்து பதவி வகிக்க கேட்டுக்கொள்ளப்படுவார்.

* ஆளுநரை ஒரு மாநிலத்தைவிட்டு மற்ற மாநிலத்திற்கு மாற்றுவதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநர் மாத ஊதியமாக ரூ.1,10,000 பெறுகிறார்.

* ஆளுநரின் ஊதியம் அந்தந்த மாநிலத்தின் மாநில ஒருங்கிணைப்பு நிதியத்திலிருந்து வாக்கெடுப்பின்றியே வழங்கப்பட அரசியலமைப்பு வழி செய்துள்ளது.

* ஆளுநரின் அதிகாரப்பூர்வமான இருப்பிடம் இலவசமாக தரப்படுவதுடன், சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் இதர படிகளும் அவருக்கு வழங்கப்படும்.

* ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென்றால் அவர் இந்தியக் குடிமகனாகவும், 35 வயது நியம்பியவராகவும் இருக்க வேண்டுமென்று ஷரத்து 157 குறிப்பிடுகிறது.

* பாராளுமன்றம் அல்லது மாநில சட்டபேரவைகளில், ஆளுநர் உறுப்பினராக இருக்க இயலாது. அப்படி ஏதேனும் ஒர் உறுப்பினர் ஆளுநராக நியமிக்கப்பட்டால், அவர் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்ட நாளிலிருந்து, அவரது சட்டபேரவை அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இடம் காலியாகிவிட்டதாக கருதப்படும்.

* ஊதியம் பெறும் வேறு எந்தப் பதவியையும் ஆளுநர் வகிக்க இயலாது.

* அரசியலமைப்பு மாநில ஆளுநருக்கென்று சில சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

* அதன்படி ஒரு மாநில ஆளுநர் தமது பதவிக்காலத்தில் பதவியின் காரணமாக மேற்கொண்ட எவ்வித செயல்பாடுகள் குறித்தும் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்.

* மேலும் அவரது பதவிக்காலத்தின்போது அவர் மீது எந்தவித குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இயலாது.

* அது போலவே அவரது பதவிக்காலத்தில் அவர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளார்.

* உரிமையியல் நடவடிக்கைகளை ஆளுநர் மீது மேற்கொள்வதாக இருப்பின் அது குறித்த விவரங்களை 2 மாதங்களுக்கு முன்பாக ஆளுநருக்கு அறிவித்தல் வேண்டும்.



ஆளுநரின் அதிகாரங்கள் - பணிகள்:

ஆட்சித்துறை அதிகாரங்கள் - Executive Powers


* மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரின் அதிகாரம் ஆளுநரின் கையிலேயே உள்ளது. அந்த அதிகாரங்களை அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளது. அவரே நேரிடையாகவோ, தமக்குக் கீழுள்ள அதிகாரிகள் மூலமாகவோ செயல்படுத்த வேண்டும்.

* மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் என்பது அதன் சட்டமியற்றும் அதிகாரத்துடன் சேர்ந்தே காணப்படும்.

* பொதுப்பட்டியலில் உள்ள விசயங்களைப் பொறுத்தவரையில் அரசியல் சட்டத்தின்படி அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின்படி ஒன்றியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டதே மாநில நிர்வாகத்தின் அதிகாரம் எனப்படும்.

* மாநிலத்தின் அனைத்து நிர்வாகச் செயல்களும் ஆளுநரின் பெயராலேயே மேற்கொள்ளப்படும்.

* ஜார்க்கண்ட, மத்திய பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்துவதும் ஆளுநரின் கடமையாகும்.

* மாநிலத்தின் முதல்வரையும், அவரது ஆலோசனையின்படி பிற அமைச்சர்களையும், மாநில ஆளுநரே நியமனம் செய்கிறார்.

* அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் விரும்பும் வரை பதவியில் நீடிப்பார்கள்.

* ஆனால் அமைச்சரவை மாநில சட்டப்பேரவைக்குக் கூட்டுப் பொறுப்புடையதாக உள்ளது.

* அதாவது சட்டப்பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்றவரே முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்றும், மாநில சட்டப்பேரவையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை மட்டுமே அமைச்சரவை பதவியில் நீடிக்க இயலும் என்றும் இதற்குப் பொருள்படும்.

* மாநிலத்தின் நிர்வாகப் பணிகளை எளிதாக மேற்கொள்ளவும், அமைச்ர்களிடையே பொறுப்புக்களை ஒதுக்கீடு செய்யவும், தேவையான விதிகளை ஆளுநர் உருவாக்கலாம்.

* மாநில அட்வகேட் ஜெனரல், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சார்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் ஆகி்யோரையும் ஆளுநரே நியமனம் செய்கிறார்.

* மாநிலத்தில் சட்டமன்ற மேலவை இருப்பின், அதன் உறுப்பினர்களில் ஆறில் ஒரு பங்கினரை, இல்க்கியம், கலை, அறிவியல், கூட்டுறவு இயக்கம், சமூக சேவை போன்ற துறைகளின் சிறப்பறிவும், பழுத்த அனுபவமும் வாய்ந்தவர்களில் இருந்து ஆளுநர் நியமிக்க வேண்டும்.

* ஆங்கிலோ-இந்திய சமூகத்தினருக்கு சட்டப்பேரவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லையென்றும், அதற்குப் பிரதிநிதித்துவம் தேவையென்று ஆளுநர் கருதினால், அந்தச் சமூகத்தில் இருந்து ஒருவரை பேரவைக்கு ஆளுநர் நியமனம் செய்யலாம் என ஷரத்து 333 கூறுகிறது.



ஆளுநரின் சட்டத்துறை அதிகாரங்கள்:

* மாநிலச் சட்டப்பேரவையின் ஒரு ்ங்கமாகவே ஆளுநர் திகழ்கிறார். சட்டப்பேரவையின் இரு அவைகளையும்(பேரவை,மேலவை என இரு அவைகள் உள்ள மாநிலங்களில்) கூடுமாறு ஆணையிடுவதும், கூட்டத் தொடரை முடித்து வைப்பதும் ஆளுநரே ஆவார்.

* அவர் நினைத்தால் பேரவையைக் கலைத்து விட முடியும். மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே அவர் உரையாற்றுவதுடன், சட்டப்பபேரவைக்கு செய்திகளையும் அனுப்ப ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.

* பொதுத் தேர்தல் முடிந்தபின் நடைபெறும் முதல் கூடட்த்தில் ஆளுநர் உரையாற்றுகிறார்.

* அதே போன்று ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்திலும் ஆளுநரே உரையாற்றுவார்.

* தேவைப்படும்போது இரு அவைகளையும் ஒன்றாகவோ, தனித்தனியாகவோ கூட்டி உரை நிகழ்த்தவும் ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.

* சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டாலும், ஆளுநரின் ஒப்புதலின்றி அது சட்டமாகாது என ஷரத்து 200 கூறுகிறது.

* அவையில் ஒரு மசோதாவை நிறைவேற்றிய பின்னர், அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்ற அமைச்சரவையின் ஆலோசனையுடன், அம்மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

* அம்மசோதாவுக்கு ஆளுநர் தமது ஒப்புதலை அளிக்கலாம்.

* ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கலாம்.

* குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அதனை அனுப்பி வைக்கலாம்.

* பண மசோதாவைத் தவிர வேறு மசோதாவாக இருப்பின், ஆளுநர் தம்து குருத்தையும் கூறி, அந்த மசோதாவைப் பரிசீலனை செய்யுமாறு அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பலாம்.

* மசோதாவைப் பற்றிச் சில தகவல்கள், விவரங்கள் தேவையெனக் கேட்டு, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கிற ஆலோசனையை மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பலாம்.

* ஆளுநர் தமது கருத்தைக் கூறி ஒரு மசோதாவை சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பினால், அவருடைய கருத்தின்படி அந்த மசோதா பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டோ, அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமலோ மீண்டும் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும்.

* சட்டப்பேரவையின் சூட்டத்தொடர், அல்லது மேலைவை இருந்தால் இரு அவைகளின் கூட்டத்தொடர், நடைபெறாத காலத்தில், ஷரத்து 213-ன்படி ஆளுநர் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கலாம்.

* சட்டப்பேரவை இயற்றி, ஆளுநர் ஒப்புதல் அளித்த சட்டங்களைப் போலவே, அவசரச் சட்டங்களும் செயல் வீச்சுயுடையவை.

* எனினும், சட்டப்பேரவையில் இயற்றப்படும் சட்டங்களுக்கு உள்ள அதே கட்டுப்பாடுகள் அவசரச் சட்டங்களும் உள்ளன.

* எனவே ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதல் பெற வேண்டியிருப்பினும்

* ஒரு மசோதாவின் உள்ளடக்கத்தைப் பொறுத்து அதனைக் குடியரசுத் தலைவரின் பரிசீலினைக்காக ஆளுநர் அனுப்ப வேண்டியிருப்பினும்

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் செல்லுபடியாகாமல் போய்விடக்கூடியதாக அம்மசோதா இருந்தாலும் இம்மூன்று இனங்களிலும், குடியரசுத் தலைவரின் உத்தரவின்றி, ஆளுநர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க இயலாது. ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்கள் சட்டப்பேரவை முன் (மேலவை இருப்பின் இரு அவைகளின் முன் வைக்கப்பட வேண்டும்)

* சட்டப்பேரவை மாண்டும் கூடியதும் 6 வாரங்களுக்குப் பின்னர் அவசரச் சட்டம் செயலிழந்து விடும்.

* அதற்கு முன்னரே அதனை நிராகரிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை நிறைவேற்றினால் அப்போதே அவசரச் சட்டம் செயலற்றுப் போய்விடும். அவசரச் சட்டத்தை எந்த நேரத்தில் மேண்டுமானாலும் ஆளுநர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
** ஆளுநரின் நிதித்துறை அதிகாரங்கள்

* எந்த ஒரு பண மசோதாவும், நிதி மசோதாவும் ஆளுநரின் பரிந்துரையின்றி சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட இயலாது. பட்டஜெட் அல்லது ஆண்டு நிதிநிலை

அறிக்கைகளை மாநில சட்டப்பேரவை அல்லது ்வைகளின் முன் ஆளுநர் தாக்கல் செய்ய வேண்டும்.

* இது அவரது தலையாய கடமையாகும். மானியக் கோரிக்கைகளையும் ஆளுநரின் பரிந்துரை இல்லாமல் தாக்கல் செய்ய இயலாது.

* மானியக் கோரிக்கைகள் சம்மந்தமான திருத்தங்களுக்குக் கூட ஆளுநரின் பரிந்துரை அவசியமாகிறது.

** ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரங்கள்

* குடியரசுத் தலைவருக்கு இருப்பதுபோல தண்டனைகளை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்கவோ, தண்டனை அளவைக் குறைக்கவோ, குற்றவாளியை மன்னித்துத்

தண்டனையை முற்றிலுமாக நீக்கிவிடவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

* மரண தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு இல்லை. மரண தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் தவிர பிற அதிகாரங்கள் மாநில ஆளுநருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் நிலை

* ஆளுநரின் நிலை பற்றிக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவரது அலுவலகம் மாநில அமைச்சரவைக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையே உள்ள அஞ்சல்

நிலையம் என்றும் கூறுவார்கள்.

* இவர் மாநில ஆட்சித் துறையில் ஒரு சிறந்த அங்கமாக விளங்குகிறார். அமைச்சரவையின் ஆலோசனைப்படி இயங்க வேண்டும் என்றிருந்தாலும், சட்டப்பேரவையில் எந்த

ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை முதல் அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும்போது பயன்படுத்துவார்.

* நெருக்கடிக் காலங்களின்போது குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாகக் செயல்படுவார்.

மாநில அமைச்சரவை

* மாநில ஆட்சிக்குழு ஆளுநரின் தலைமையில் விடப்பட்டிருந்தாலும், அவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் தான் இயங்க வேண்டும்.

* பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆளுநர் சட்டப்பேரவையின் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை அழைத்து முதல்வராக இருக்கக் கேட்டுக்கொள்வார்.

* பிற அமைச்சர்களை முதல்வர் மற்ற அமைச்சர்களின் பட்டியலைத் தயாரித்து ஆளுநரிடம் சமர்ப்பிப்பார். அதனை அப்படியே ஆளுநர் ஏற்றுக்கொள்வார்.

* சட்டப்பேரவையின் உறுப்பினர் அல்லாதவரையும் அமைச்சராக நியமிக்கலாம். ஆனால் ஆறு மாத காலத்திற்குள் அவர் ஏதேனும் ஒரு சபையில் உறுப்பினராக வேண்டும்.

* எத்தனை அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்பதற்கு வரையறை இல்லை.

* எனினும் தற்போது இந்த வரையறை சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் 15 சதவீதம் வரை இருக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

* அமைச்சர்களின் எண்ணிக்கையை தேவைப்படும்போது கூட்டவோ, குறைக்கவோ செயயலாம்.

* மாநில அளவிலும் மூன்று விதமான அமைச்சர்கள் உள்ளனர். அவை: 1. கேபினட் அமைச்சர்கள் 2. மாநிலத்துறை அமைச்சர்கள் 3. துணை அமைச்சர்கள் ஆகியோர்.

* அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் ஆளுநரிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவி ஏற்பர்.



 அட்வகேட் ஜெனரல்

* மாநிலத்தின் தலைமை வழக்கறிஞரே அம்மாநிலத்தின், முதல் சட்ட அலுவலராவார்.

* இவர் ஒன்றியத்தில் அமைந்துள்ள அட்டர்னி-ஜெனரல் போலவே மாநில அளவில் செயல்படுகிறார்.

* அட்வகேட்-ஜெனரல், மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டு, அவரது விருப்பம் உள்ளவரை பதவியில் நீடித்திருப்பார்.

* உயர்நீதிமன்ற நீதிபதியாவதற்கு தகுதி பெற்ற நபர்களையே அட்வகேட் ஜெனரலாக ஆளுநர் நியமிக்க வேண்டும்.

* இவர் Art.177-ன் படி சட்டமன்றத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும், உரை நிகழ்த்துவதற்கும் உரிமை பெற்றுள்ளார். ஆனால் வாக்களிப்பதற்கு உரிமை இல்லை.



மாநில சட்டப்பேரவை - The State Legislature

* ஆளுநரும் சட்டப்பேரவையும் சேர்ந்துதான் மாநில சட்டப்பேரவையாகும்.

* சில மாநிலங்களில் பேரவை (Legislative Assembly), மேலவை (Legislative Council) என இரண்டு அவைகள் இருக்கும்போது மேலவையும் சட்டப்பேரவையின் அங்கமாகும்.

* தற்போது பீகார், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகா, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே மேலவைகள் உள்ளன.

* மேலவை இருக்கின்ற இடங்களில் அதனை நீக்கிவிடலாம் என்றோ, மேலவை இல்லாத இடங்களில் அதனை உருவாக்க வேண்டுமென்றோ சட்டப்பேரவை தீர்மானம் இயற்றி, பாராளுமன்றத்திற்குப் பரிந்துரைக்கலாம்.

* ஒரு மாநில சட்டப்பேரவையில் 500-க்கு மிகாமலும், 60-க்குக் குறையாமலும் மாநிலத்தின் தொகுதிகளில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

* பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமலும், குறைந்தபட்சம் 40 உறுப்பினர்களைக் கொண்டதாகவும், அம்மாநிலத்தின் மேலவை அமைய வேண்டும்.

* மேலவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் நகராட்சிகள், மாவட்ட வாரியங்கள், ஏனைய உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் இருந்து மூன்றில் ஒரு

பங்கினரும், ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து 12-ல் ஒரு பகுதியினரும் சட்டப்பேரவை உறுப்பினர்களால் மூன்றில் ஒரு பங்கினரும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

* எஞ்சிய 6-ல் ஒரு பங்கினரை ஆளுநர் நியமிப்பார். மேலவைத் தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவப்படி, ஒற்றை மாற்று வாக்கெடுப்பு மூலம் நடைபெற வேண்டும்.

* சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். மேலவை கலைக்க முடியாத, தொடர்ந்து நீடிக்கும் அவையாக விளங்கும். எனினும் மேலவையின் மூன்றில் ஒரு

பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டாண்டு முடிவிலும் பதவி விலகுவார்கள்.

* மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராவதற்கு 25 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

* மேலவையில் உறுப்பினராக வேண்டுமானால் 30 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

* மாநிலப் பட்டியலில் உள்ள விஷயங்கள் குறித்துச் சட்டமியற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு உண்டு.

* பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்களில் பாராளுமன்றமும், மாநில சட்டப்பேரவையும் சட்டங்களை இயற்றலாம்.

* மாநில மேலவையின் நிலை, நாடாளுமன்ற மாநிலங்களவையின் நிலையைப் போன்றதே ஆகும்.

* அவையின் சிறப்புரிமைகள், உறுப்பினர்களின் தகுதியிழப்பு, இரண்டு அவைகளுக்கும் இடையேயான உறவு, அவை நடவடிக்கைகள், பண மசோதா அறிமுகம் போன்ற விஷயங்கள் அனைத்திற்கும் இது பொருந்தும்.

* ஆங்கிலோ-இந்திய சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் சட்டப்பேரவையில் இல்லாதிருக்கும்போது, ஆளுநர் ஒரு ஆங்கிலோ-இந்திய உறுப்பினரை நியமன உறுப்பினராக நியமிக்கலாம்.

* மாநில சட்டப்பேரவைக்கு சபாநாயகர் ஒருவரும், துணை சபாநாயகர் ஒருவரும் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

* மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர் போலவே இவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.

* மேலவைத் தலைவரும், மேலவை துணைத்தலைவரும் மேலவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

* சட்டப்பேரவையின் பதவிக்காலம் இயல்பாக 5 ஆண்டுகள். எனினும் ஆளுநரால் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கலைக்கப்படலாம்.

* 1976-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 420வது சட்டத்திருத்தம் சட்டப்பேரவையின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக உயர்த்தியது.

* எனினு ம் 44-வது திருத்த சட்டம் மீண்டும் 5 ஆண்டுகளாக மாற்றம் செய்தது.

* மேலும் தேசிய நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும்போது, மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலத்தை, பாராளுமன்றம் நீட்டிக்க இயலும்.

* எனினும் நெருக்கடி நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையின் பதவிக்கால நீட்டிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

** மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராவதற்கான தகுதிகள்:

* . இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

* . மாநில சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவராக இருப்பின் 25 வயதும், மாநில சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவராக இருப்பின், 30 வயதும் நிரம்பியிருத்தல் வேண்டும்.

* . பாராளுமன்றம் அவ்வப்போது சட்டத்தின் மூலம் விதிக்கக்கூடிய பிற தகுதிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.



உறுப்பினர் தகுதிக் குறைபாடுகள்

* மைய அரசிடம்  அல்லது மாநில அரசின் ஊதியம் தரும் பதவிகள் எதையும் வகித்தல் கூடாது.

* மனநிலை தவறியவராக இருத்தல் கூடாது. கடன் தீர்க்க இயலாதவராக அறிவிக்கப் பட்டிருக்கக்கூடாது.

* இந்தியக் குடிமகனாக இல்லாதிருத்தலோ, அல்லது பிற நாட்டுக் குடியுரிமையைப் பெற்றவராகவோ இருத்தல் கூடாது.

* பாராளுமன்றத்தின் ஏதேனும் பிற சட்டத்தினால் தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டிருக்கக் கூடாது.

* மாநில சட்டப்பேரவை உறுப்பினரின் தகுதி குறித்த விஷயங்களில் சபையின் தலைவர், மாநில ஆளுநருக்குத் தெரிவித்து அவரது முடிவைப் பெற்று அதன்படி நடக்க

வேண்டும்.

* இந்த விஷயத்தில் ஆளுநரின் முடிவே இறுதியானது. எனினும் ஆளுநர் இது குறித்த விஷயங்களில் தேர்தல் ஆணையத்தின் கருத்தைப் பெறுவது அவசியமாகும்.



மாநில சட்டமியற்றும் முறை

* ஒரு சபை முறை கொண்ட மாநிலங்களில் சட்டமியற்றும் முறையில் ஏதும் சிக்கல் இல்லை.

* ஏனெனில் அனைத்து மசோதாக்களும், சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதத்திற்குப் பின், நிறைவேற்றப்பட்டால், ஆளுநருக்கு அனுப்ப்படும். ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அது சட்டமாகும்.

* ஆனால் இரு டபை முறை உள்ள மாநிலங்களாக இருப்பின் அங்கு சட்டமியற்றும் முறை, சற்றே மாறுபடுகிறது.

* பாராளுமன்றத்தில் சட்டமியற்ரும் முறைக்கும், மாநில சட்டப்பேரவையில் சட்டமியற்றும் முறைக்கு சிறிதே வேறுபாடு காணப்படுகிறது.

* மாநில சட்ட மேலவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மசோதா, மாநில சட்டப்பேரவையால் நிராகரிக்கப்பட்டால், அந்த மசோதா முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

* பண மசோதாவைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தில் பின்பற்றும் வழிமுறைகளைப் போலவே, மாநில சட்டப்பேரவையிலும் பின்பற்றப்படும்.

* நிதி மற்றும் சாதாரண மசோதாக்களைப் பொறுத்தவரை மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்ற் சட்டவேலவைக்கு அனுப்பப்பட்டால், சட்ட மேலவை அந்த மசோதவை முற்றிலும் நிராகரிக்கலாம்

* மசோதாவில் திருத்தங்கள் புகுத்தலாம்

* மூன்று மாதங்கள் வரை எந்தவித பதிலும் தராமல் வைத்திருக்கலாம்.

* இவற்றில் எந்த வழியைப் பின்பற்றினாலும், சட்டப்பேரவை மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி, இரண்டாவது முறையாக, சட்ட மேலவைக்கு அனுப்பினால், மீண்டும் 1 மாத காலம் வரை மேலைவை தாமதப் படுத்த இயலும்.

* அதற்கு மேலும் முடிவெடுக்காமல் வைத்திருந்தால், அந்த மசோதா நிறைவேறியதாகக் கருதப்படும்.

* அதன் பின்னர் ஆளுநருக்கு அனுப்பப்படும் சட்டமேலவையைப் பொறுத்தவரை சம அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை.

* பணமசோதா தவிர பிற மசோதாக்களை அதிகபட்சம் 4 மாதங்கள் வரை காலதாமதம் செய்வது மட்டுமே சட்டமேலவையால் செய்ய முடிந்த ஒன்றாகும்.

* மாநிலங்களில் மசோதா மீது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதைத் தீர்த்துக்கொள்வதற்கு கூட்டுக் கூட்டம் கூட்டும் முறை ஏதும் நடைமுறையில் இல்லை.


* மாநிலங்களில் இரு அவைகளும் ஆளுநர் உரையாற்றும்போதும், ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநரின் பேருரையின்போதும் மட்டுமே கூட்டுக் கூட்டமாக கூடுவர். இது தவிர பிற காரணங்களுக்காக கூட்டுக் கூட்டம் கூட்டப் படுவதில்லை.

நன்றி - தினமணி

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...