16 November, 2014

ஜனவரி 29-ல் மலேசியாவில் 9 வது உலகத் தமிழ் மாநாடு


9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜனவரி 29-ம் தேதி மலேசியாவில் தொடங்குகிறது.

இதுகுறித்து இந்திய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான மலேசிய சிறப்புத் தூதரும், மாநாட்டின் தலைவருமான டத்தோ  சாமிவேலு சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

9-வது உலகத் தமிழ் மாநாடு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

27 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து மாநாட்டுக்கு அழைத்திருக்கிறேன்.

இந்த மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகள் தமிழறிஞர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது. ஆய்வுக் கட்டுரைகளை imtcindia@yahoo.com என்ற இ-மெயில் முகவரிக்கு டிசம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மொத்தம் 29 வகையான தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். இதில் சிறந்த 4 கட்டுரைகளுக்கு பரிசுகளும் வழங்கப்படும். ஆய்வுக் கட்டுரை தலைப்புகள் மற்றும் மாநாடு குறித்த விவரங்களை www.91csts2014.um.edu.my என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி 
தி இந்து 

இன்றைய கேள்விகள்- 15/11/2014

1.பின்வரும் சமுதாயம் உருவாதல் பற்றிய விவரங்களில் எது
 சரியானது ?
A. சமுதாயம் – குடும்பம்-தனிநபர் – சமூகம் 
B. தனிநபர் –குடும்பம் – சமூகம் – சமுதாயம் 
C. குடும்பம் – சமுதாயம் – தனிநபர் – சமூகம் 
D. சமூகம் – தனிநபர் – குடும்பம் – சமுதாயம்

விடை : தனிநபர் –குடும்பம் – சமூகம் – சமுதாயம் 

2.புவி மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு 
ஏற்ப்படுவது ------------------ நகர்வு என்று அழைக்கப்படுகிறது 
A. என்டோஜெனிக் 
B. எபிரோஜெனிக் 
C. மையம் 
D. தேய்வுறுதல் 

விடை : எபிரோஜெனிக்

3.சட்டங்கள் இயற்றும்போதும் அவற்றை நடைமுறைப் படுதும்போதும் பின்பற்ற வேண்டிய செயல் முறைகள் 
A. வழிகாட்டு கோட்பாடுகள்
B. அடிப்படை உரிமைகள்
C. அடிப்படைக் கடமைகள்
D. அரசு நெறிமுறை கோட்பாடுகள்

விடை : அரசு நெறிமுறை கோட்பாடுகள்

4.இருப்புபாதையின் தந்தை எனப்பட்டவர் --------------------
A. டல்ஹௌசி பிரபு 
B. ரிப்பன் பிரபு 
C. பெண்டிங் பிரபு 
D. கானிங் பிரபு 

விடை : டல்ஹௌசி பிரபு 

5.23 - வது தீர்த்தங்கரர் ------------------------
A. ரிஷபர் 
B. பார்சவநாதர் 
C. மகாவீரர் 
D. புத்தர் 

விடை :  பார்சவநாதர்

6.சமூக ஒப்பந்தங்கள் என்ற நூலை எழுதியவர் ---------------
A. வால்டேர் 
B. ரூசோ 
C. மான்டெஸ்கியூ
D. டான்டன்

விடை :  ரூசோ

 7.விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மலை -----------------------
A. செஞ்சி மலை 
B. சித்தேரிமலை 
C. கல்ராயன் மலை 
D. ஜவ்வாது மலை 

விடை :  கல்ராயன் மலை 

8.தேக்கு மரமும் சந்தன மரமும் ---------------வகை காடுகளைச் 
சார்ந்தது.
A. அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் 
B. அயன மண்டல அகன்ற இலைக்காடுகள் 
C. சதுப்பு நிலக்காடுகள் 
D. மலைக்காடுகள் 

விடை :  அயன மண்டல அகன்ற இலைக்காடுகள் 

9.தென்மேற்குப் பருவக்காற்றால் அதிக அளவில் மழைப்பெறும் 
மாவட்டம் எது ?
A. கன்னியாகுமரி 
B. திருநெல்வேலி 
C. மதுரை 
D. விருதுநகர் 

விடை :  கன்னியாகுமரி

10. கல்வியில் செய்யப்படும் முதலீடு -----------------
மூலதனம் எனப்படும் .
A. பருமப்பொருள் 
B. மனித 
C. பண
D. செல்வ 

விடை :  மனித 

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...