20 October, 2014

TNPSC General Tamil Questions -008



Answers

தமிழ்த்தாத்தா உ.வே.சா.

உ வே சாமிநாத ஐயர்


  •  ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்

  •   இயற்பெயர் - வேங்கடரத்தினம்

  •   ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

  •  அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்

  •  உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான  சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா

  •   இவரின் தந்தை - வேங்கடசுப்பையா

  •  காலம் - 19.02.1855 முதல் 28.04.1942

  •  1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் துவங்கப்பட்டது.

  •  உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.

  •   உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

  •  இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

  •   பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.

  • ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது;  ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.

  • ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.

  •   குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.

  •  தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.

  •  ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா

  •  உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.

  •   உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.

  •    குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று   ஒன்பது



  உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
  1. எட்டுத்தொகை - 8
  2. பத்துப்பாட்டு - 10
  3. சீவகசிந்தாமணி - 1
  4. சிலப்பதிகாரம் - 1
  5. மணிமேகலை - 1
  6. புராணங்கள் - 12
  7. உலா - 9
  8. கோவை - 6
  9. தூது - 6
  10. வெண்பா நூல்கள் - 13
  11. அந்தாதி - 3
  12. பரணி - 2
  13. மும்மணிக்கோவை - 2
  14. இரட்டைமணிமாலை - 2
  15. பிற பிரபந்தங்கள் - 4

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...