15 July, 2014

கம்பராமாயணம்





இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும்.

(இராம+அயனம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர்.

தமிழ்மொழியில்இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.

கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டு விளங்குகிறது. காண்டங்கள் என்பவை காப்பியத்தின் பெரும்பிரிவுகளைக் குறிக்கும்.
கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டு விளங்குகிறது.
  1. பாலகாண்டம் - இருபத்துநான்கு படலங்கள்.
  2. அயோத்தியா காண்டம் - பதின்மூன்று  படலங்கள்.
  3. ஆரண்ய காண்டம் - பதின்மூன்று  படலங்கள்.
  4. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்கள்
  5. சுந்தர காண்டம் பதினான்கு படலங்கள்
  6. யுத்த காண்டம் - நாற்பத்து இரண்டு படலங்கள்

ஒவ்வொரு காண்டமும் உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும். அத்தகு உட்பிரிவுகளுக்குப் படலம் என்று பெயர்


இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் தமிழுக்கு கதி என்பர் .

கம்பர்- 10 ஆம் வகுப்பு சமச்சீர்



கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார். கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர். சடையப்ப வள்ளல் இவரை ஆதரித்தார் .
கம்பரது காலம் கி பி பன்னிரண்டாம் நூற்றாண்டு.

கம்பனின் காலத்தைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள்  உண்டு. ஒட்டக்கூத்தன், சேக்கிழார் ஆகியோருக்கு அவர் சமகாலத்தவர் அல்லது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் என்று உறுதியாகச் சொல்லலாம்.

 சடையப்ப வள்ளலின் பெயர் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்களில் உள்ள லிபியும் தியாக மாவிநோதன் என்பவனுக்கு உரிய சோழநாடு என்று கம்பன் சொல்லியிருப்பதும் இந்தக் கருத்தை உறுதிபடுத்துகின்றன. தியாக மாவிநோதம் என்பது மூன்றாம் குலோத்துங்கனின் பட்டப் பெயர்களுள் ஒன்று.

கம்பர் எழுதிய நூல்கள்
  • சிலையெழுபது
  • சடகோபர் அந்தாதி
  • சரசுவதி அந்தாதி
  • திருக்கை வழக்கம்
  • கம்பராமாயணம்
  • ஏரெழுபது
  • மும்மணிக்கோவை


கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் , விருத்தமெனும் ஒண்பாவிற்கு கம்பன் , கல்வியிற் பெரியவர் கம்பர் என்னும் தொடர்களால் கம்பரின் பெருமையை அறியலாம் . யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று பாரதியார் புகழ்ந்து பாடியுள்ளார். 

பாரதிதாசன்


பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர்.


  • இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். 
  • தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.

  • பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக்கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். 
  • இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

  • எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
  • பாண்டியன் பரிசு
  • எதிர்பாராத முத்தம்
  • குறிஞ்சித்திட்டு
  • குடும்ப விளக்க 
  • இருண்ட வீடு
  • அழகின் சிரிப்பு 
  • தமிழ் இயக்கம்
  • இசையமுது
  • குயில்
  • தமிழச்சியின் கத்தி
  • பாண்டியன் பரிசு
  • பாரதிதாசன் ஆத்திசூடி
  • பெண்கள் விடுதலை
  • பிசிராந்தையார் 
  • மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
  • முல்லைக் காடு
  • கலை மன்றம்
  • விடுதலை வேட்கைமற்றும் பல.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு அவரது மரணத்திற்குப் பின், 1970 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.

சிலப்பதிகாரம் 10 - ஆம் வகுப்பு சமச்சீர்


பொருள் கூறு
  1. கொற்கை பாண்டிய நாட்டின் துறைமுகம்
  2. தென்னம் பொருப்பு தென்பகுதியில் உள்ள பொதிகைமலை
  3. பலியோடு படரா மறநெறியில் செல்லாத
  4. அடர்த்துஎழு குருதி - வெட்டப்பட்ட இடத்தினின்றும் பீறிட்டு எழும் செந்நீர்
  5. பசுந்துணி பசிய துண்டம்
  6. தடக்கை நீண்ட கைகள்
  7. அறுவற்கு இளைய நங்கை பிடாரி
  8. இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - இறைவனை நடனமாடச் செய்த காளி
  9. கானகம் காடு
  10. உகந்த விரும்பிய
  11. தாருகன் அரக்கன்
  12. பேர்உரம் கிழித்த பெண் - அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கை
  13. செற்றம் கறுவு
  14. செயிர்த்தனள் - சினமுற்றவள்
  15. பொற்றொழில் சிலம்பு - வேலைப்பாடுமிக்க பொற்சிலம்பு
  16. கடையகத்தாள் - வாயிலின் முன்னிடத்தாள்
  17. நீர்வார்கண் - நீரொழுகும் கண்கள்
  18. தேரா ஆராயாத
  19. எள்ளறு - இகழ்ச்சி இல்லாத
  20. இமையவர் - தேவர்
  21. புள் பறவை
  22. புன்கண் துன்பம்
  23. கடைமணி - அரண்மனை வாயில்மணி
  24. ஆழி தேர்ச்சக்கரம்
  25. ஏசா -பழியில்லா
  26. கோறல் - கொல்லுதல்
  27. கொற்றம் - அரச நீதி
  28. நற்றிறம் - அறநெறி
  29. படரா செல்லாத
  30. வாய்முதல் உதடு
இலக்கணக் குறிப்பு
  1. மடக்கொடி அன்மொழித்தொகை
  2. தேரா மன்னா, ஏகாச் சிறப்பின,; படராப் பஞ்சவ, அடங்காப் பசுந்துணிஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  3. தடக்கை உரிச்சொற்றொடர்
  4. புன்கண், பெரும்பெயர,அரும்பெறல், பெருங்குடி, கடுங்கோல், செங்கோலன், நன்மொழிபண்புத்தொகை
  5. உகுநீர், சூழ்கழல், செய்கொல்லன் வினைத்தொகை
  6. அவ்வூர் சேய்மைச்சுட்டு
  7. வாழ்தல் தொழிற்பெயர்
  8. என்கால் என்பெயர், நின்னகர், என்பதி ஆறாம் வேற்றுமைத்தொகை
  9. புகுந்து வினையெச்சம்
  10. தாழ்ந்த, தளர்ந்த பெயரெச்சம்
  11. வருக, தருக, கொடுக வியங்கோள் வினைமுற்று
பிரித்தறிதல்:
  1. எள்ளறு = எள் + அறு
  2. புள்ளுறு = புள் + உறு
  3. அரும்பெறல் = அருமை + பெறல்
  4. பெரும்பெயர் = பெருமை + பெயர்
  5. அவ்வூர் = அ + ஊர்
  6. பெருங்குடி = பெருமை + குடி
  7. புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு
  8. பெண்ணணங்கு = பெண் + அணங்கு
  9. நற்றிறம் = நன்மை + திறம்
  10. காற்சிலம்பு = கால் + சிலம்பு
  11. செங்கோல் = செம்மை + கோல்
நூலெழுந்த வரலாறு:
  • சேரன் செங்குட்டுவன், சீத்தலைச்சாத்தனாரோடும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காணச் சென்றான்.
  • அங்கிருந்த மலைவாழ் மக்கள், “வேங்கை மரத்தின்கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம்என்று கூற, உடனிருந்த பெரும்புலவர் அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்என்று கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
  • அதனைக் கேட்ட இளங்கோவடிகள், “இக்கதையைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம்என்று கூறினார்.
  • சாத்தனாரும், “அடிகள் நீரே அருளுகஎன்றார்.
நூற்கூறும் உண்மை:
  • அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
  • உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
  • ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
நூல் குறிப்பு:
  • சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
  • கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.
  • இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
  • புகார்க்காண்டம் = 10 காதை
  • மதுரைக்காண்டம் = 13 காதை
  • வஞ்சிக்காண்டம் = 7 காதை
  • இக்காப்பியம் உரையிடை இட்ட பாட்டுடைச்செய்யுள்என அழைக்கப்படுகிறது.
  • முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைக் போற்றிப் புகழ்வார்.
  • நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடுஎனப் பாரதியார் புகழ்கிறார்.
  • வழக்குரைக் காதை மதுரைக்கான்டத்தின் பத்தாவது காதை.
  • இசை நாடகமேசிலப்பதிகாரக் கதையின் உருவம்.

சிலப்பதிகாரம்


  • சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது.
  • சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று.
  • இந்நூல் தமிழில்எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.
  • இந்நூல் பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள் எனவும் வழங்கப்படுகிறது.
  • இக்காப்பியத்தில் இயல்இசைநாடகம் என்னும் மூன்றனையும் காணலாம்.
  • கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர்
  • ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க  சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்என்றும் கூறுவர்
  • இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோஅடிகள் என்பவராவார்.
  • இவர் புகழ் பெற்ற சேரமன்னன்செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.
  • அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள்.
  • இவர் கி. பி ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்ற ஆதாரமாக செங்குட்டுவன்கண்ணகிக்கு கோயில் எடுத்து விழாக் கொண்டாடிய போது இலங்கை மன்னன் கயவாகு உடனிருந்தான் என்பதை இளங்கோவடிகளே கடல்சூழ் இலங்கைக்கயவாகு வேந்தனும் நன்னாள் செய்த நாளினி வேள்வியும் (வரந்தரு காதை )எனக் கூறியுள்ளார். 
  • கயவாகு மன்னனது ஆட்சி கி.பி 2-ஆம் நூற்றாண்டு எனஇலங்கை சரித்திரமாகிய மகாவம்சம் கூறுகிறது

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;,

என்று பாரதியார் கூறுகிறார்

  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.
  • நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது
  • இது உரையிடப்பட்ட பாட்டுடை செய்யுள் எனவும் வழங்கப்பெறும்.


இக்காப்பியத்தில் பதிகம் என்ற பகுதியில் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள்

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர்  ஏத்துவர்,
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்

காண்டங்கள்
  1. புகார் காண்டம்
  2. மதுரை காண்டம்
  3. வஞ்சிக் காண்டம்


புகார் காண்டம்

இது 10 காதைகளைக் கொண்டது.அவையாவன
  1. மங்கல வாழ்த்துப் பாடல்
  2. மனையறம் படுத்த காதை.
  3. அரங்கேற்று காதை.
  4. அந்தி மாலைச் சிறப்பு செய் காதை.
  5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை.
  6. கடல் ஆடு காதை.
  7. கானல் வரி
  8. வேனிற்காதை
  9. கனாத் திறம் உரைத்த காதை.
  10. நாடு காண் காதை


மதுரை காண்டம்
இது 13 காதைகளைக் கொண்டது. அவை,
  1. காடு காண் காதை,
  2. வேட்டுவ வரி,
  3. புறஞ்சேரி இறுத்த காதை,
  4. ஊர் காண் காதை,
  5. அடைகலக் காதை,
  6. கொலைக்களக் காதை,
  7. ஆய்ச்சியர் குரவை,
  8. துன்ப மாலை,
  9. ஊர் சூழ் வரி,
  10. வழக்குரை காதை,
  11. வஞ்சின மாலை,
  12. அழற்படுகாதை,
  13. கட்டுரை காதை

வஞ்சிக் காண்டம்

1.குன்றக் குரவை
2.காட்சிக் காதை
3.கால்கோள் காதை.
4.நீர்ப்படைக் காதை
5.நடுநற் காதை.
6.வாழ்த்துக் காதை.
7.வரம் தரு காதை.


இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...