15 July, 2014

சிலப்பதிகாரம் 10 - ஆம் வகுப்பு சமச்சீர்


பொருள் கூறு
  1. கொற்கை பாண்டிய நாட்டின் துறைமுகம்
  2. தென்னம் பொருப்பு தென்பகுதியில் உள்ள பொதிகைமலை
  3. பலியோடு படரா மறநெறியில் செல்லாத
  4. அடர்த்துஎழு குருதி - வெட்டப்பட்ட இடத்தினின்றும் பீறிட்டு எழும் செந்நீர்
  5. பசுந்துணி பசிய துண்டம்
  6. தடக்கை நீண்ட கைகள்
  7. அறுவற்கு இளைய நங்கை பிடாரி
  8. இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - இறைவனை நடனமாடச் செய்த காளி
  9. கானகம் காடு
  10. உகந்த விரும்பிய
  11. தாருகன் அரக்கன்
  12. பேர்உரம் கிழித்த பெண் - அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கை
  13. செற்றம் கறுவு
  14. செயிர்த்தனள் - சினமுற்றவள்
  15. பொற்றொழில் சிலம்பு - வேலைப்பாடுமிக்க பொற்சிலம்பு
  16. கடையகத்தாள் - வாயிலின் முன்னிடத்தாள்
  17. நீர்வார்கண் - நீரொழுகும் கண்கள்
  18. தேரா ஆராயாத
  19. எள்ளறு - இகழ்ச்சி இல்லாத
  20. இமையவர் - தேவர்
  21. புள் பறவை
  22. புன்கண் துன்பம்
  23. கடைமணி - அரண்மனை வாயில்மணி
  24. ஆழி தேர்ச்சக்கரம்
  25. ஏசா -பழியில்லா
  26. கோறல் - கொல்லுதல்
  27. கொற்றம் - அரச நீதி
  28. நற்றிறம் - அறநெறி
  29. படரா செல்லாத
  30. வாய்முதல் உதடு
இலக்கணக் குறிப்பு
  1. மடக்கொடி அன்மொழித்தொகை
  2. தேரா மன்னா, ஏகாச் சிறப்பின,; படராப் பஞ்சவ, அடங்காப் பசுந்துணிஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  3. தடக்கை உரிச்சொற்றொடர்
  4. புன்கண், பெரும்பெயர,அரும்பெறல், பெருங்குடி, கடுங்கோல், செங்கோலன், நன்மொழிபண்புத்தொகை
  5. உகுநீர், சூழ்கழல், செய்கொல்லன் வினைத்தொகை
  6. அவ்வூர் சேய்மைச்சுட்டு
  7. வாழ்தல் தொழிற்பெயர்
  8. என்கால் என்பெயர், நின்னகர், என்பதி ஆறாம் வேற்றுமைத்தொகை
  9. புகுந்து வினையெச்சம்
  10. தாழ்ந்த, தளர்ந்த பெயரெச்சம்
  11. வருக, தருக, கொடுக வியங்கோள் வினைமுற்று
பிரித்தறிதல்:
  1. எள்ளறு = எள் + அறு
  2. புள்ளுறு = புள் + உறு
  3. அரும்பெறல் = அருமை + பெறல்
  4. பெரும்பெயர் = பெருமை + பெயர்
  5. அவ்வூர் = அ + ஊர்
  6. பெருங்குடி = பெருமை + குடி
  7. புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு
  8. பெண்ணணங்கு = பெண் + அணங்கு
  9. நற்றிறம் = நன்மை + திறம்
  10. காற்சிலம்பு = கால் + சிலம்பு
  11. செங்கோல் = செம்மை + கோல்
நூலெழுந்த வரலாறு:
  • சேரன் செங்குட்டுவன், சீத்தலைச்சாத்தனாரோடும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காணச் சென்றான்.
  • அங்கிருந்த மலைவாழ் மக்கள், “வேங்கை மரத்தின்கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம்என்று கூற, உடனிருந்த பெரும்புலவர் அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்என்று கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
  • அதனைக் கேட்ட இளங்கோவடிகள், “இக்கதையைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம்என்று கூறினார்.
  • சாத்தனாரும், “அடிகள் நீரே அருளுகஎன்றார்.
நூற்கூறும் உண்மை:
  • அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
  • உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
  • ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
நூல் குறிப்பு:
  • சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
  • கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.
  • இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
  • புகார்க்காண்டம் = 10 காதை
  • மதுரைக்காண்டம் = 13 காதை
  • வஞ்சிக்காண்டம் = 7 காதை
  • இக்காப்பியம் உரையிடை இட்ட பாட்டுடைச்செய்யுள்என அழைக்கப்படுகிறது.
  • முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைக் போற்றிப் புகழ்வார்.
  • நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடுஎனப் பாரதியார் புகழ்கிறார்.
  • வழக்குரைக் காதை மதுரைக்கான்டத்தின் பத்தாவது காதை.
  • இசை நாடகமேசிலப்பதிகாரக் கதையின் உருவம்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...