28 August, 2014

ரகசியப் போர்க் கப்பல் கடற்படையில் சேர்ப்பு


உள்நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்ட, ரேடார் போன்ற சாதனங்களின் கண்காணிப்பில் சிக்காத, நீர்மூழ்கி எதிர்ப்பு ரகசியப் போர்க் கப்பலான "ஐஎன்எஸ் கமோர்ட்டா', விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி முன்னிலையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

நாமே தயாரித்துள்ள இந்த ரகசியப் போர்க் கப்பல் நமது பலத்தை வெளிப்படுத்துவதுபோல் உள்ளது என்று ஜேட்லி பேசினார். கமோர்ட்டா போர்க்கப்பல் குறித்து கடற்படை அதிகாரிகள் கூறியதாவது:

""ரேடார் போன்ற கண்காணிப்புச் சாதனங்களில் கண்களில் சிக்காத இந்தப் போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளையும், ஹெலிகாப்டரையும் சுமந்து செல்லும்.

இந்தப் போர்க்கப்பல் 110 மீட்டர் நீளத்துடனும், 14 மீட்டர் அகலத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கமோர்ட்டா போர்க்கப்பலை இந்திய கடற்படையைச் சேர்ந்த நிறுவனமான கடற்படை வடிவமைப்பு இயக்குநகரம் (டிஎன்டி) வடிவமைத்துள்ளது.
நன்றி-தினமணி 
24-08-2014

ஜி.யு.போப் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்



  •   பெயர் -  ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
  •   பிறந்த ஊர் - பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
  •   பிறப்பு -  கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் நாள் பிறந்தார் 
  •   பெற்றோர் - ஜான் போப், கேதரின்  யூக்ளோ போப் 
  •   போப்பின்  தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில்  கிறித்துவமதத்தைப்  பரப்பும் சமய குருவாகப்  பணியாற்றினார்.    அவரைப்போன்று  பணியாற்ற  விரும்பி, தமது 19வது வயதில் தமிழகம்  வந்தார்.
  •  அவர் பாய்மரக்  கப்பலில் தமிழகம் வந்து சேர எட்டு மாதங்கள் ஆகின.
  •   தமிழ்நாட்டில்  சென்னை சாந்தோம் பகுதியில் முதலில் சமயப்பணி ஆற்றினார். திருநெல்வேலி  மாவட்டம் சாயர்புரம் என்னும் பகுதியில் சமயப்பணி ஆற்றினார். அங்கு பள்ளிகளை  நிறுவினார். கல்விப்பனியையும் சமயப்பணியையும் ஒருங்கே ஆற்றினார்.
  •  சமயக்கல்லூரியில்  தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தின்,  எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.
  •  கணிதம், அறிவாய்வு(தருக்கம்),  மெய்யறிவு(தத்துவம்) ஆகியவற்றை கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  •   திருநெல்வேலியில்  1842 முதல் 1849 வரை கல்விப் பணியும் சமயப்பணியும்  ஆற்றினார் .
  • 1850இல்  இங்கிலாந்து சென்று திருமணம் செய்துக்கொண்டு, தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம்  வந்து தஞ்சாவூரில் சமயப்பணி ஆற்றினார்.
  • தஞ்சையில்  பணியாற்றிய எட்டு ஆண்டுக் காலத்தில், புறநானூறு முதலான சங்க நூல்களையும் நன்னூல்  முதலான இலக்கணங்களையும் பயின்றார்.
  •  அவற்றை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
  •  இந்தியன்  சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு போன்ற ஏடுகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.
  •  அக்கட்டுரைகளில்  புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கங்களும்,  தமிழ்ப்புலவர் வரலாறும் இடம் பெற்றன.
  •  போப் உயர்ந்த  பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் 600  செய்யுள்களை, நீதிநூல்களில் இருந்து எடுத்து,   தமிழ் செய்யுட் கலம்பகம்  என்னும் தொகுத்து அதன் விளக்கங்களையும் எழுதி வெளியிட்டார்.
  •  பள்ளி  குழந்தைகளுக்காக வினாவிடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.
  •  பெரியவர்கள்  கற்கும் வகையில் இலக்கண நூலொன்றையும் படைத்தார்.
  •  மேலை நாட்டார்  தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றையும், ஆங்கிலம்-தமிழ் அகராதி ஒன்றையும் எழுதி வெளியிட்டார்.
  •   பழைய தமிழ் இலக்கியங்களில்  இருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு, அதனைப் பாடநூலாக வைக்க  ஏற்பாடு செய்தார்.
  • 1858ஆம் ஆண்டு  உதகமண்டலம் சென்ற அவர், பள்ளி ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  • இங்கிலாந்திற்கு  சென்ற போப் 23 ஆண்டுகள் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு  கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்தார்.
  •   திருக்குறளை 40  ஆண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1866ஆம் ஆண்டு  வெளியிட்டார்.
  •   தமது 86ஆம்  வயதில் 1900ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.
  • 13.02.1908  அன்று போப் தம் இன்னுயிரை நீத்தார்.
  •  அவர், தம்  கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என எழுத வேண்டும் என்று தமது இறுதிமுறியில்  எழுதி வைத்தார்.
  •  அவர்  தமிழ் மாணவன் என்றே தம்மை கூறிக்கொண்டார்.

அனுமன் தேடிய “சஞ்சீவினி” மூலிகை


ராமாயணத்தில் அனுமார் கொண்டு வந்ததாகக் கருதப்படும் சஞ்சீவனி மூலிகை போன்ற ஒன்று இமாலயத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் அதிசயித்துள்ளனர்.

இமாலயத்தில் உயிர்வாழ்வதற்கே கடினமான பகுதிகள் உள்ளன. இந்நிலையில் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை பன்மடங்கு அதகரித்து ஒழுங்கு படுத்துவதும், பிராண வாயு பற்றாக்குறை இருக்கும் மலைப்பிரதேசங்களில் உயிர்களைப் பாதுகாக்கவும் செய்யும் ரோடியோலா என்ற அதிசய மூலிகையின் மகத்துவங்களை விஞ்ஞானிகள் பாராட்டி வருகின்றனர்.

இந்த ரோடியோலாவை ‘சஞ்சீவனி’ என்றே கருதுகின்றனர் விஞ்ஞானிகள். லடாக்கில் ‘சோலோ’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகையின் அரிய குணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படாமலே உள்ளது. ஆனால் லடாக்வாசிகள் இதன் இலைகளை உணவுப்பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இதன் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வருகின்றனர். 

ரோடியோலா என்ற இந்த மூலிகை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது, கடினமான வாழ்விடச் சூழலில் நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான சக்தியை வழங்குகிறது, அனைத்திற்கும் மேலாக கதிரியக்கத்தின் விளைவுகளிலிருந்தும் இந்த மூலிகை உயிர்களைப் பாதுகாக்கிறது என்று ஆய்வுக் கழகத்தின் ஆர்.பி.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

ரசாயன ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவை வெளிப்படுத்தும் நச்சுக் கதிரியக்கத்தின் விளைவுகளை இந்த ரோடியோலா மூலிகை அகற்றும் என்கிறார் இவர்.

மேலும் மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணையாகவும் ஜீரண சக்திகளை மேம்படுத்தும் குணங்களும் இந்த மூலிகைக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி - தி இந்து 
26-08-2014

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...