01 September, 2014

வரலாற்று ஆய்வாளர் பிபின் சந்திரா (27 மே 1928 – 30 ஆகஸ்டு 2014)


பத்மபூஷண் விருது பெற்ற அரசியல், பொருளாதார, வரலாற்று ஆய்வாளர் பிபின் சந்திரா (86) உடல் நலக்குறைவால் ஹரியாணா மாநிலம் குர்கானில் சனிக்கிழமை காலமானார்.

இடதுசாரி சிந்தனை கொண்ட பிபின் சந்திரா, ஹிமாசலப் பிரதேச மாநிலம், காங்க்ரா மாவட்டத்தில் 1928ஆம் ஆண்டு பிறந்தார். அவர், லாகூரில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரி, அமெரிக்காவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றவர்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் அரசியல், பொருளாதாரம், சமூக வளர்ச்சி ஆகியவை குறித்து பல்வேறு நூல்களை அவர் எழுதியுள்ளார்.

"இன் தி நேம் ஆஃப் டெமாக்ரசி: தி ஜேபி மூவ்மென்ட் அண்ட் தி எமர்ஜென்ஸி' உள்ளிட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார்.

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வு மையம், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்து வந்தார்.
நன்றி-தினமணி 
31-08-2014

ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை ஓய்வு


ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பில் இருந்து நவநீதம்பிள்ளை  ஓய்வு பெறுகிறார். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமை ஆணையாளராகப் பணியாற்றி வந்தார்.

இன்றுடன் அவர் பணி ஓய்வு பெறும் நிலையில் இலங்கைக்கு எதிராக, போர் குற்ற விசாரணையை நடத்திவரும் குழு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.   ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நவநீதம்பிள்ளை, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதானியாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பிற்கு, ஏற்கனவே ஐ.நா சார்பில் தேர்வாகியுள்ள, ஜோர்டன் நாட்டின் இளவரசர் சையத் அல் ஹூசைன் நாளை முறைப்படி பொறுப்பேற்கிறார் என தெரிகிறது.

நன்றி-தினமணி 
31-08-2014

பிபிசி நிர்வாகக் குழுவின் தலைவராகப் பெண் தேர்வு


உலகப் புகழ்பெற்ற வானொலி, தொலைக்காட்சி செய்தி நிறுவனமான பிபிசி}யின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பிபிசி அறக்கட்டளை நிர்வாகக் குழுவின் புதிய தலைவராக ரோனா ஃபேர்ஹெட்(Rona Fairhead) (53) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எச்.எஸ்.பி.சி. வங்கி, பெப்ஸிகோ உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள ரோனா ஃபேர்ஹெட், பிபிசி அறக்கட்டளையின் முதல் பெண் தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற பிபிசி}யில் தலைவர் பொறுப்பு ஏற்கவுள்ளது பற்றிக் கருத்து கூறிய அவர், "திறமை வாய்ந்த பலரைக் கொண்டுள்ள பிரிட்டனின் உன்னதமான நிறுவனத்தின் நிர்வாகக் குழுவுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்றார்.

இவரது நியமனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிரிட்டிஷ் கலாசாரத் துறை அமைச்சர் ஸஜித் ஜாவீத் பின்னர் வெளியிடுவார்.

அதன் பிறகு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் கலாசாரம், ஊடகம், விளையாட்டுத் துறைகளின் தேர்வுக்குழு முன்பாக அவர் ஆஜராக வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்களின் விசாரணைக்குப் பிறகே அவர் பதவியேற்பது உறுதி செய்யப்படும்.
நன்றி-தினமணி 
31-08-2014

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...