18 July, 2014

புறப்பொருள்


புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம், வெற்றி, கொடை முதலியவற்றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும்.

புறப்பொருள் திணைகள்
வெட்சித் திணை
கரந்தைத் திணை
வஞ்சித் திணை
காஞ்சித் திணை
நொச்சித் திணை
உழிஞைத் திணை
தும்பைத் திணை
வாகைத் திணை
பாடாண் திணை
பொதுவியல்
கைக்கிளை
பெருந்திணை

வெட்சித் திணை:

பழைய காலத்தில் பகை அரசனிடம் போர் செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகை அரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இது வெட்சித் திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

கரந்தைத் திணை:

பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர், கரந்தைத் திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

வஞ்சித் திணை:

பகை அரசன் நாட்டைப் பிடிப்பதற்காக அந்த நாட்டின் மேல் படை எடுத்துச் செல்லுதல் வஞ்சித் திணை எனப்படும்.  வஞ்சி வீரன், வஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

காஞ்சித் திணை:
படை எடுத்து வரும் பகை அரசனைத் தடுத்துத் தன் நாட்டைக் காக்க நினைக்கும் அரசன் போருக்குச் செல்லுதல் காஞ்சித் திணைஎனப்படும். காஞ்சி வீரன் காஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

நொச்சித் திணை:

பகை அரசன் படை எடுத்து வந்து கோட்டை மதிலைச் சூழ்ந்து கொண்டபோது, தன்னுடைய கோட்டையைக் காத்துக் கொள்ள அரசன் போர் செய்தல் நொச்சித் திணை எனப்படும். நொச்சி வீரன் நொச்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

உழிஞைத் திணை:

பகை அரசனுடைய கோட்டையை வெல்லக் கருதிய அரசன் தன் படைகளோடு மதிலைச் சுற்றி முற்றுகை இடுதல் உழிஞைத் திணைஎனப்படும். உழிஞை வீரன் உழிஞைப்பூச் சூடி, போருக்குச் செல்வான்.

தும்பைத் திணை:

பகை அரசர்கள் இருவரும் போர்க் களத்தில் எதிர் எதிர் நின்று போரிடுதல் தும்பைத் திணை எனப்படும். தும்பை வீரன் தும்பைப் பூச் சூடி, போருக்குச் செல்வான். 

வாகைத் திணை:

போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்து பாடுதல் வாகைத்திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள்.

பாடாண் திணை:
இதுவரை சொன்ன புறத்திணைகள் போர் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. பாடாண் திணையில் கொடை, கடவுள் வாழ்த்து, அரசனை வாழ்த்துதல் முதலியவை இடம்பெறும்.

பொதுவியல் திணை:
போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடுதல், போரில் இறந்த வீரர்களின் மனைவியர் இரங்கல், நிலையாமை முதலியவை பொதுவியல் திணையில் இடம்பெறும்.

கைக்கிளைத் திணை:
தன்னை விரும்பாத ஒரு பெண்ணிடம் ஒருவன் காதல் கொள்வதுகைக்கிளைத் திணை எனப்படும். இதை ஒருதலைக்காதல் என்று கூறுவர்.

 பெருந்திணை:
தன்னை விட வயதில் மிகவும் மூத்த பெண் ஒருத்தியிடம் ஒருவன் காதல் கொள்வது பெருந்திணை எனப்படும். இதைப் பொருந்தாக் காதல் என்று கூறுவர். கைக்கிளை, பெருந்திணை என்னும் இவ்விரண்டுதிணைகளையும் அகப்பொருள் திணையாகவும் கூறுவர்.



காந்தியம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்



சீறாப்புராணம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  1. தெண்டிரை தெளிந்த அலைகள்
  2. கான் காடு
  3. தடக்கரி பெரிய யானை
  4. திரள் கூட்டம்
  5. தாரை வழி
  6. அடவி காடு
  7. உழுவை புலி
  8. கனல் நெருப்பு
  9. வெள்ளெயிறு வெண்ணிறப் பற்கள்
  10. வனம் காடு
  11. வள்ளுகிர் கூர்மையான நகம்
  12. மடங்கள் சிங்கம்
  13. நிணம் கொழுப்பு
  14. கோடு தந்தம்
  15. கிரி மலை
  16. உரும் இடி
  17. தொனி ஓசை
  18. மேதி எருமை
  19. கவை பிளந்த
  20. கேழல் பன்றி
  21. எண்கு கரடி
  22. மரை மான்
  23. எழில் அழகு
  24. புயம் தோள்
  25. இடர் துன்பம்
  26. வேங்கை புலி
  27. மாத்திரம் மலை
  28. கேசரி சிங்கம்
  29. புளகிதம் மகிழ்ச்சி
  30. கவின் அழகு
  31. பூதரம் மலை
  32. தெரிசனம் காட்சி
  33. திறல் வலிமை
  34. புந்தி அறிவு
  35. மந்தராசலம் மந்தரமலை
  36. சந்தம் அழகு
  37. சிரம் தலை
  38. செகுதிடுவது உயிர்வதை செய்வது
  39. உன்னி நினைத்து
  40. தெளிந்தார் தெளிவு பெற்றார்

இலக்கணக்குறிப்பு:

  1. படர்ந்த தெண்டிரை பெயரெச்சம்
  2. நதிப்பரப்பு ஆறாம் வேற்றுமைத்தொகை
  3. தொழுது அறைகுவன் வினையெச்சம்
  4. தடக்கரி உரிச்சொற்றொடர்
  5. நெடுநீர் பண்புத்தொகை
  6. பொருந்தி வினையெச்சம்
  7. புடைத்து, நிமிர்ந்து வினையெச்சம்
  8. கால் மடித்து இரண்டாம் வேற்றுமைத்தொகை
  9. வெள்ளெயிறு பண்புத்தொகை
  10. பெருங்கரி பண்புத்தொகை
  11. முதிர்ந்தமேதி பெயரெச்சம்
  12. பொதிந்தமெய் பெயரெச்சம்
  13. செவிபுக ஏழாம் வேற்றுமைத்தொகை
  14. நின்ற வேங்கை பெயரெச்சம்
  15. செங்கதிர், பெருவரி பண்புத்தொகை
  16. பூதரப்புயம் உவமைத்தொகை
  17. வால்குழைத்து இரண்டாம் வேற்றுமைத்தொகை
  18. பெருஞ்சிரம், தண்டளி பண்புத்தொகை
  19. எழுந்து, புதைத்து, வணங்கி வினையெச்சம்
  20. நனிமனம் உரிச்சொற்றொடர்
  21. சிரமுகம் உம்மைத்தொகை
  22. உயிர்செகுத்து இரண்டாம் வேற்றுமைத்தொகை
  23. புகுக வியங்கோள் வினைமுற்று
  24. மலரடி உவமைத்தொகை
  25. நன்று நன்று அடுக்குத்தொடர்
  26. கொலைப்புலி இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

பிரித்தறிதல்:

  1. பெருக்கெடுத்து - பெருக்கு+ எடுத்து
  2. மாதிரத்துறை - மாதிரத்து+ உறை
  3. செங்கதிர் - செம்மை+ கதிர்
  4. பணிந்திவர் = பணிந்து + இவர்
  5. சிரமுகம் = சிரம் + முகம்
  6. பெருஞ்சிரம் = பெருமை + சிரம்
  7. தண்டளிர்ப்பதம் = தண்மை + தளிர் + பதம்
  8. திண்டிறல் = திண்மை + திறல்
  9. எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
  10. வீழ்ந்துடல் = வீழ்ந்து + உடல்
  11. கரிக்கோடு = கரி + கோடு
  12. பெருங்கிரி = பெருமை + கிரி
  13. இருவிழி = இரண்டு + விழி
  14. வெள்ளெயிறு = வெண்மை + எயிரு
  15. உள்ளுறை = உள் + உறை
  16. நெடுநீர் = நெடுமை + நீர்
  17. அவ்வழி = அ + வழி
  18. தெண்டிரை = தெண்மை + திரை



ஆசிரியர் குறிப்பு:

  • சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்.
  • இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
  • அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க சீறாப்புராணம் இயற்றினார்.
  • நூல் முற்றும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.
  • அபுல்காசிம் என்ற வள்ளல் உதவியால் இந்நூல் நிறைவு பெற்றது.
  • இவர் எண்பது பாக்களால் ஆன முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்துள்ளார்.
  • இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:

  • சீறா = வாழ்க்கை, புராணம் = வரலாறு.
  • இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிரத்துக் காண்டம் என்னும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
  • 5027 விருதப்பாக்களால் ஆனது.




பொருள் இலக்கணம் - அகப்பொருள்






இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...