20 August, 2014

யார் கவிஞன்? - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

                    யார்  கவிஞன்?    
  
                    காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்;

               கைம்மாறு விளைந்துபுகழ் பெறுதல் வேண்டி

        மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை

              மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்;

        தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி    விட்டுத்

             தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்;

        மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு

             மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்;

        ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும்

          ஆள்கஎனத் துஞ்சாமல், தனது நாட்டின்

        மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்;

          மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது

        காட்சிக்குப் புளியாகிக் கொடுமை மாளக்

          கவிதைகளைப் பைசுபவன் கவிஞன் ஆவன்;

        தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்

          தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்.

சொற்பொருள்:

  1.   கைம்மாறு –  பயன்
  2.   மாசற்ற –  குற்றமற்ற
  3.   தேட்டையிட –  செல்வம் திரட்ட
  4.   மீட்சி –  மேன்மை
  5.   மாள நீங்க




ஆசிரியர் குறிப்பு:

  பெயர்                : முடியரசன்

  இயற்பெயர்           : துரைராசு

  பெற்றோர்            : சுப்புராயலு, சீதாலட்சுமி

  ஊர்                  : தேனி  மாவட்டம் பெரியகுளம்

  இயற்றிய  நூல்கள்   : பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம்
                                                         முடியரசன்   கவிதைகள் முதலியன.                
                       
  பணி                : தமிழாசிரியர், மீ.சு. உயர்நிலைப்    
                        பள்ளி, காரைக்குடி.

  பட்டம்              :  பறம்புமலையில் நடந்த விழாவில் கவியரசு    
                        என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால்
                        வழங்கப்பெற்றது.

  பரிசு               :  பூங்கொடி என்னும் காவியத்திற்காக 1966-ல் 
                        தமிழக அரசு பரிசு வழங்கியது .

  சிறப்பு              :  முடியரசன், பாரதிதாசன் பரம்பரைக் 
                        தலைமுறைக்  கவிஞர்களுள் மூத்தவர். தந்தை                           பெரியார்,  பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம்                              நெருங்கிப் பழகியவர்.



  காலம்             :  07-10-1920  முதல் 03-12-1998 வரை

TNPSC General Tamil Questions -002






























இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...