31 October, 2014

பழமொழி நானூறு - 6 ஆம் வகுப்பு


ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.

மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார் .அவ்வறிவு படைத்தவர்களது (புகழ்) நான்கு திசையின் கண்ணும் பரவாத நாடுகளில்லை,அந்த நாடுகள் அயல் நாடுகளாகா அவ்வறிவுடையோர் நாடுகளேயாம்.ஆகையால் வழியில் உண்பதற்கு உணவு  கொண்டுசெல்ல வேண்டியதில்லை


நூல் குறிப்பு:

  •   பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  •   நானூறு பாடல்களை கொண்டது.
  •   ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி உண்டு.
  •   ஆற்றுணா வேண்டுவது இல் என்பதற்கு கற்றவனுக்கு கட்டுச்சோறு    வேண்டாம்   என்பது பொருள்.


ஆசிரியர் குறிப்பு:

  •   இந்நூலின் ஆசிரியர் = முன்றுறை அரையனார்.
  •   முன்றுறை என்பது ஊர்பெயர்.
  •   அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
  •   முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம்  அல்லது அரையன்     என்பது புலவரின் குடிபெயராக இருக்கலாம்.


30 October, 2014

அழ. வள்ளியப்பா


உயர்ந்த கருத்துக்களுக்கும் , எளிய வார்த்தைகளுக்கும், ஓசை நயத்துக்கும் சொந்தக்காரர் கவிஞர் அழ. வள்ளியப்பா. குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்களை எழுதியவர்.

’அம்மா இங்கே வா... வா...

ஆசை முத்தம் தா... தா...’

‘மாம்பழமாம் மாம்பழம்...

மல்கோவா மாம்பழம்...’
‘கை வீசம்மா கை வீசு...

 கடைக்குப் போகலாம் கை வீசு...’

 - தலைமுறைகள் தாண்டினாலும் மாறாத குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு இது போன்ற எண்ணற்ற எளிய பாடல்களை எழுதியவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. 

பிறப்பு: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தின் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாக 07.11.1922 பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன்

இதழ் ஆசிரியர் பணி: 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஒய்வு பெற்ற பின்பு 1983 முதல் 1987 வரை கல்கி வெளியீடான கோகுலம் இதழில் ஆசிரியராக பணியாற்றினார்.

குழந்தை எழுத்தாளர் சங்கம்: குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950-ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

எழுதிய நூல்கள்:

மலரும் உள்ளம் - 1

பாப்பாவுக்குப் பாட்டு

சின்னஞ்சிறு பாடல்கள்

சுதந்திரம் பிறந்த கதை

ஈசாப் கதைப் பாடல்கள்

ரோஜாச் செடி

உமாவின் பூனைக் குட்டி

அம்மாவும் அத்தையும்

மணிக்குமணி

மலரும் உள்ளம் - 2

கதை சொன்னவர் கதை

மூன்று பரிசுகள்

எங்கள் கதையைக் கேளுங்கள்

நான்கு நண்பர்கள்

பர்மாரமணி

எங்கள் பாட்டி

மிருகங்களுடன் மூன்று மணி

நல்ல நண்பர்கள்

பாட்டிலே காந்தி கதை (பாடல் தொகுதி)

குதிரைச் சவாரி

நேரு தந்த பொம்மை

நீலாமாலா

பாடிப் பணிவோம் (பாடல் தொகுதி)

வாழ்க்கை விநோதம்

சின்னஞ்சிறு வயதில்

பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்

28 October, 2014

பரிதிமாற் கலைஞர்


  • பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார்),  ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில்முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்.
  •  இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர்.
  •  'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர்.
  • இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.
  • இராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார் .

பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:

  •    ரூபவதி
  •    கலாவதி
  •    மான விஜயம்
  •    தனிப்பாசுரத் தொகை
  •    பாவலர் விருந்து
  •    மதிவாணன்
  •    நாடகவியல்
  •    தமிழ் விசயங்கள்
  •    தமிழ் மொழியின் வரலாறு.
  •    சித்திரக்கவி விளக்கம்


பதிப்பித்த நூல்கள் :
1.சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
2. மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)
3.புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)
4.உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)
5.தனிப்பாசுரத்தொகை (1901)
ஞானபோதினி என்னும் இதழை பரிதிமாற் கலைஞர் நடத்தினார்



27 October, 2014

TNPSC General Knowledge Questions -004























ANSWERS

திருக்குற்றாலக் குறவஞ்சி - 6 ஆம் வகுப்பு சமச்சீர்


வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் 
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர் 
கவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர் 
தேனருவித்திரை எழும்பி வானின்வழி ஒழுகும் 
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் 
கூனல் இளம்பிறைமுடித்த வேணியலங்காரர் 
குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே!

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற் றாலர்தென் ஆரிய நாடே

நூல் குறிப்பு :

திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.

குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.


சொற்பொருள்:

  வானரங்கள் – ஆண் குரங்குகள்
  மந்தி – பெண் குரங்குகள்
  வான்கவிகள் – தேவர்கள்
  காயசித்தி – இறப்பை நீக்கும் மூலிகை
  பரிக்கால் – குதிரை 
  வேணி – சடை
  மின்னார் – பெண்கள்
  மருங்கு – இடை

25 October, 2014

TNPSC General Knowledge Questions -002





ANSWERS

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்


* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள்.

* சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் காலம் என்பதும் பல்லவர் காலமாகும்.

* சைவப்பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். இவை 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

* 1,2,3ம் திருமுறைகள் -திருஞான சம்பந்தர் - தேவராம்.

* 4,5,6ம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் - தேவாரம்.

* 7ம் திருமுறை - சுந்தரர் -தேவாரம்.

* 8ம் திருமுறை - மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவையார்.

* 9ம் திருமுறை - திருமாளிகைத் தேவர் உட்பட்ட 9 நபர்கள்

* 10ம் திருமுறை - திருமலர் - திருமந்திரம்.

* 11ம் திருமுறை - திரு ஆலவாய் உடையார் உட்பட்ட 12 நபர்கள்.

* 12ம் திருமுறை - சேக்கிழார் - பெரிய புராணம்.

* திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாணடார் நம்பி. நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே. நம்பியாண்டார் நம்பிக்குப் பின் சேர்ந்தது பெரிய புராணம்.

* முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் மூவர் முதலிகள் எனப்படுவர்.

* திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் சமயக் குரவர்கள் என்று அழைப்பர்.

* குரவர் என்பதற்கு பெரியவர்கள் என்று பொருள்.

* சைவர்களின் தமிழ் வேதம் பன்னிரு திருமுறைகள்.

திருஞானசம்பந்தர்

* இவருடைய இயற்பெயர் ஆளுடைய பிள்ளை. சமயக் குரவர் நால்வரின் முதலாவதாக்க குறிப்பிடப்படுபவர்.

* தேவாரத்தின் முதல் நூலைப்பாடியவர். 23 பண்களில் (இசைகளில்) திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

* திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் முதன் முதலில் சந்தித்த இடம் திருப்புகலூர்.

* திருமறைக்காடு (வேதாரண்யம்) கோயில் கதவு திறக்கவும், மூடவும் பதிகம் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.

* கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்கியவர் திருஞானசம்பந்தர்.

* திருஞானசம்பந்தர் வைகையாற்றில் இட்ட ஏடு கரையேறிய இடம் திருஏடகம்.

* திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயரைக் கொடுத்தவர் திருஞானசம்பந்தர்.

* பால் குடித்தபோது பாடியது முதல் பாடல் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் பாடல்.

* கதவு திறக்கப் பாடிய பாடல் இரக்கம் ஒன்றிலிர் என்று தொடங்கும் பாடல்.

* மன்னனின் நோய் தீர்க்கப் பாடிய பாடல் மந்திரமாவது நீறு என தொடங்கும் பாடல்.

* காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பதும் இவர் இயற்றிய பாடலே.

* நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று திருஞானசம்பந்தரைப் புகழ்ந்தவர் சுந்தரர்.

திருநாவுக்கரசர்

* திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார். இவரது தமக்கை திலகவதியார்.

* வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர் ஆகிய வேறு பெயர்களும் திருநாவுக்கரசருக்கு வழங்கப்படுகின்றன.

* திருஞான சம்பந்தர் இவரை அப்பரே என்று அழைத்ததால் அப்பர் எனப்பட்டார்.

* திருநாவுக்கரசர் தாண்டகம் என்ற செய்யுள் வகையில் சிறந்த பாடல்கள் இயற்றியதால் தாண்டக வேந்தர் எனப்பட்டார்.

* திருநாவுக்கரசர் முதலில் சமணத்தைத் தழுவியவர் ஆவார். இவரது சூலைநோய் (வயிற்று வலி) தீர்க்க தம் தமக்கை திலகவதியாரால் திருநீறு அளிக்கப் பெற்றவர். பின்னர்

* சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.

* முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர் ஆவார்.

* மாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசர்.

* என் கடன் பணி செய்து கிடப்பதே - திருநாவுக்கரசர்.

* தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் - திருநாவுக்கரசர்.

சுந்தரர்

* கைலாயத்தில் இவருக்கு ஆலால சுந்தரனார் என்று பெயர். சுந்தரர் பிறந்த ஊர் திருநாவலூர்.

* வன் தொண்டர், தம்பிரான் தோழர் ஆகிய வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.

* இறைவனையே மனைவியிடம் தூது அனப்பியதால் வன்தொண்டர் எனப்பட்டார்.

* சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்ட இடம் திருவெண்ணெய் நல்லூர்.

* பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா - சுந்தரர்.

மாணிக்கவாசகர்

* மாணிக்கவாசகர் இயற்பெயர் தெரியவில்லை. எனினும் சிலர் திருவாதவூரார் என்கின்றனர்.

* திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களை இயற்றி உள்ளார்.

* மாணிக்கவாசகர் பொருட்டே இறைவன் நரியைப் பரியாக்கினார். இவர் பொருட்டே வந்தி   என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார்.

* பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார் என்பது மரபு.

* மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படுகிறது.

* நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க - மாணிக்கவாசகர்.

* ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி - மாணிக்கவாசகர்

* தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி - மாணிக்கவாசகர்.

* வானாகி மண்ணாகி, ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்

* அம்மையே அப்பா ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்

* திருவாசகத்திற்கு உருகாதர் ஒரு வாசகத்திற்கும் உருகார் - பழமொழி.

* சைவவேதம் எனப்படுவது திருவாசகம்.

24 October, 2014

TNPSC General Knowledge Questions -001




ANSWERS

நான்மணிக்கடிகை - 6 ஆம் வகுப்பு சமச்சீர்


மனைக்கு விளக்கம் மடவார் ; மடவார் 
தனக்குத் தகைசால் புதல்வர்; மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே;  கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு.
                                                          -விளம்பிநாகனார்
சொற்பொருள்:

  1.   மடவாள் - பெண்
  2.   தகைசால் - பண்பில் சிறந்த
  3.   உணர்வு - நல்லெண்ணம்
  4.   புகழ்சால் - புகழைத் தரும்
  5.   காதல் புதல்வர் - அன்பு மக்கள்
  6.   மனக்கினிய - மனத்துக்கு இனிய
  7.   ஓதின் - எதுவென்று சொல்லும்போது


நூல்குறிப்பு:

*  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நான்மணிக்கடிகை.
*  கடிகை என்றால் அணுகலன்(நகை)
*  நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
*  ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.

ஆசிரியர் குறிப்பு:

*  பெயர்: விளம்பிநாகனார்.
*  விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.


23 October, 2014

TNPSC General Tamil Questions -010


ANSWERS

பறவைகள் பலவிதம் - 6 ஆம் வகுப்பு சமச்சீர்



உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்திற்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்.

அதிக பனி அல்லது அதிக வெயிலின் காரணமாக புறவைகள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது - வலசை போதல்

பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன.

ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு, மற்றொரு நாட்டில் எச்சமிடுவதன் காரணமாக அங்கு மரம், செடி, கொடி போன்றவை உருவாக பறவைகள் காரணமாகின்றன.

வயல்வெளிகளில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், வண்டுகளை தின்று விவசாயிகளுக்கு உதவுகின்றன.

பறவைகள் ஐந்து வகையாக பிரிப்பர்.

1. தென்னை குடித்து வாழும் பறவைகள்
2. பழத்தை உண்டு வாழும் பறவைகள்
3. பூச்சியை தின்று வாழும் பறவைகள்
4. வேட்டையாடி உண்ணும் பறவைகள்
5. இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்.

பூநாரையானது நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும் வாழக்கூடியது. கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.

சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்: மஞ்சள் சிட்டு, செங்காகம், கடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி.

நீர்நிலையில் வாழும் சில பறவைகள்: கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.

மலைகளில் வாழும் சில பறவைகள்: இருவாச்சி, செந்தாலைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைகாலி, பொன்முதுகு, மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டாய் உலவரான், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை.

1. தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் = 13

2. பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்

3. உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.

4. நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.

5. பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என அழைப்பர்.

6. வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம் என அழைப்பர்.

7. அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.

8. அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.

9. நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.

*   தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்:

1. வேடந்தாங்கல்
2. கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்),
3. கஞ்சிரால்குளம்
4. சித்திரஸ்குடி
5. மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)
6. பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்)
7. உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்)
8. வடுவூர் (தஞ்சை மாவட்டம்)
9. கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்)
10. வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்),
11. வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
12. கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்)
13. கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்)

*   தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம்.


21 October, 2014

TNPSC General Tamil Questions -009



ANSWERS

நாலடியார் - 6 ஆம் வகுப்பு



   நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கு அணியர் ஆயினும்

    ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்!

    சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய் விளைக்கும்

    வாய்க்கால் அனையார் தொடர். 
                                                                                         -   சமண முனிவர் 

பொருள் :

நாயின் கால்களில் உள்ள சிறியவிரல்கள் இடைவெளியின்றி
நெருங்கியிருக்கும். இதுபோல நன்றாக நெருங்கிப் பழகினாலும், ஈயின் சிறுகால் அளவுகூட உதவி செய்யாதவர்களின் நட்பினால் பயன் இல்லை. வயல்களிலே பாய்ந்து அவைகளிலே தானியங்களை விளையச் செய்கின்ற வாய்க்கால் போன்றவர்களின் நட்பையே தேடிக்கொள்ள வேண்டும். அவர்கள் தொலைத்தூரத்தில் இருந்தாலும் தேடிக்கொண்டுபோய் அவர்களுடைய நட்பைப் பெற வேண்டும்.
இச்செய்யுளிலே நெருங்கிப் பழகுவதற்கு, நாயின் கால் விரல்களும்,
சிறிய உதவிக்கு ஈயின்காலும் உவமானங்களாகக் காட்டப்பட்டன.

சொற்பொருள்:

அணியார் = நெருங்கி இருப்பவர்
என்னாம் = என்ன பயன்?
சேய் = தூரம்
செய் = வயல்
அனையர் = போன்றோர்


*  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நாலடியார்.
*  நானூறு பாடல்களைக் கொண்டது - நாலடியார்.
*  அறக்கருத்துக்களைக் கூறுவது - நாலடியார்.
*  நாலடி நானூறு என்ற சிறப்பு பெயர் உடையது - நாலடியார்.
*  சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் - நாலடியார்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு
உறுதி; இப்பழமொழி நாலடியாரின் பெருமையைக் காட்டும்; திருக்குறளின் சிறப்பையும் உணர்த்தும். ‘‘நாலு’’ என்பது நாலடியார்; ‘‘இரண்டு’’ என்பது திருக்குறள்.


‘‘பழகு தமிழ்ச்சொல் அருமை நாலிரண்டில்’’ என்பதும் நாலடியின்
சிறப்பையும், திருக்குறளின் பெருமையையும் காட்டும்.


பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம்:

*  சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்,    பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக  மொத்தம் பதினொட்டு நூல்கள். 
*  இவற்றை மேல்கணக்கு நூல்கள் எனக் கூறுவர்.
*  சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு -    பதினெண்கீழ்க்கணக்கு
*  பதினெண் என்பது - பதினெட்டு என்று பொருள்.
*  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்களே.
*  கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறப்படும் நூல் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.

20 October, 2014

TNPSC General Tamil Questions -008



Answers

தமிழ்த்தாத்தா உ.வே.சா.

உ வே சாமிநாத ஐயர்


  •  ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்

  •   இயற்பெயர் - வேங்கடரத்தினம்

  •   ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

  •  அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்

  •  உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான  சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா

  •   இவரின் தந்தை - வேங்கடசுப்பையா

  •  காலம் - 19.02.1855 முதல் 28.04.1942

  •  1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் துவங்கப்பட்டது.

  •  உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.

  •   உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

  •  இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

  •   பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.

  • ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது;  ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.

  • ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.

  •   குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.

  •  தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.

  •  ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா

  •  உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.

  •   உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.

  •    குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று   ஒன்பது



  உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
  1. எட்டுத்தொகை - 8
  2. பத்துப்பாட்டு - 10
  3. சீவகசிந்தாமணி - 1
  4. சிலப்பதிகாரம் - 1
  5. மணிமேகலை - 1
  6. புராணங்கள் - 12
  7. உலா - 9
  8. கோவை - 6
  9. தூது - 6
  10. வெண்பா நூல்கள் - 13
  11. அந்தாதி - 3
  12. பரணி - 2
  13. மும்மணிக்கோவை - 2
  14. இரட்டைமணிமாலை - 2
  15. பிற பிரபந்தங்கள் - 4

17 October, 2014

"உழைப்பே வெல்லும்' புதிய திட்டம்-பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

உழைப்பே வெல்லும்

"உழைப்பே வெல்லும்' புதிய திட்டம்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
தொழிலாளர்களின் நலன்களைக் காக்கும் வகையில் "உழைப்பே வெல்லும்' என்ற புதிய செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் தொடக்கி வைத்தார்.(16-10-2014)

தில்லியில் மத்திய தொழிலாளர் நலத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் "தீனதயாள் உபாத்யாய ஷிரமேவ ஜெயதே' (உழைப்பே வெல்லும்) என்ற செயல்திட்டத்தின் கீழ், பல்வேறு துணைத் திட்டங்களை பிரதமர் தொடக்கி வைத்தார். தொழிலாளர் வைப்பு நிதியை எளிதில் மாற்றிக் கொள்ள ஏதுவாக நிரந்தரக் கணக்கு எண், தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்துடன் தொடர்புகொள்ள ஒற்றைச் சாளர இணையதள வசதி, தொழிலக ஆய்வுத் திட்டம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

திறன் ஊக்குவிப்புத் திட்டம்: "புரோத்சாஹன் யோஜனா' என்ற பெயரிலான பயிற்சி மாணவர்களின் திறன் ஊக்குவிப்புத் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது: உலகிற்கு மனித ஆற்றலை வழங்குவதற்கான மிகப்பெரிய வளம் நம் நாட்டில் உள்ளது. தற்போது, நாட்டில் 2.82 லட்சம் பயிற்சி மாணவர்கள் உள்ளனர். இந்த மாணவர்களின் பயிற்சித் திட்டத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்புக் கணக்குகளில் ரூ.27,000 கோடி உரிமை கோரப்படாமல் கிடக்கிறது. அதன் உரிமையாளர்களுக்கு இத்தொகையைத் திருப்பி அளிக்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருக்கிறேன். இந்தப் பணமானது ஏழைகளுக்குச் சொந்தமானது.

அரசானது நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயல்படுகிறதே தவிர, சந்தேகத்தின் அடிப்படையில் அல்ல. எனவே, மாணவர்கள் சுயச் சான்றளிப்பு ஆவணங்களை அளிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. முன்பு, அதிகாரிகளின் கையொப்பத்தைப் பெறுவதற்காக மாணவர்கள் மிகவும் அலைய வேண்டியிருந்தது. அந்த முறையைத் தற்போது நீக்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பற்ற, ஏதோ ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற ஒரு பட்டதாரி, சமூகத்தால் மதிக்கப்படுவதும், ஐ.டி.ஐ. தொழில் பயிற்சி நிலையங்களில் பயின்றோர் மதிக்கப்படாததும் முரண்பாடாக இருக்கிறது. நாம் தொழிலாளர்களை மரியாதைக்குரியவர்களாகக் கருதுவதில்லை. இந்நிலை மாற வேண்டும். ஷிரம யோகியானவர் (உழைப்பாளர்), ராஷ்டிர யோகியாகவும் (நாட்டுக்கு உழைப்பவர்), ராஷ்டிர நிர்மாதாவாகவும் (தேசத்தைக் கட்டமைப்பவர்) மாறுவதை கருணையுடன் கூடிய அணுகுமுறை உறுதிப்படுத்தும்.

15 October, 2014

பிரெஞ்ச் பேராசிரியர் ஜீன் டிரோலுக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல்


2014 ஆம்  ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜீன் டிரோலுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையின் ஆற்றல், அதனை முறைப்படுத்துவது குறித்த மிகச் சிறந்த ஆய்வுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

ஸ்வீடன் விஞ்ஞானியான ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக, பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிப் பணி ஆகிய துறைகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இறுதியாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு பொருளாதார நிபுணர் ஜீன் டிரோலுக்கு வழங்கப்படுவதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஸ்விட்சர்லாந்தின் ஸ்டாக்ஹோம் நகரிலுள்ள "ராயல் ஸ்வீடிஷ் அகாடமி'யில் இந்த அறிவிப்பை வெளியிட்ட தேர்வுக் குழு தெரிவித்ததாவது:

மிகச் சில நிறுவனங்களின் நடவடிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு,  தொழில்துறையை கட்டுப்படுத்துவதற்கான புரிந்துணர்வை அரசுகளுக்கு ஏற்படுத்தியமைக்காக ஜீன் டிரோலுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

நிறுவனங்களின் வீழ்ச்சி தொடர்பாக ஜீன் டிரோல் 1980-களின் மத்தியிலிருந்தே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துவது, உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றின் வாயிலாக நிறுவனங்கள் ஏகபோக உரிமையை நிலைநாட்டுவதை அரசுகள் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை அவரது ஆய்வுக் கட்டுரைகள் தெளிவாக விளக்குகின்றன. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முதல் வங்கிகள் வரையிலான பல்வேறு துறை நிறுவனங்கள் குறித்தும் தொழில் கொள்கை வகுக்க அவரது புத்தகங்கள் பேருதவி புரிகின்றன என்று தேர்வாளர்கள் குறிப்பிட்டனர்.

ஆல்ஃபிரட் நோபலால் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு உருவாக்கப்படவில்லை என்றாலும், அத்துறையை ஊக்கப்படுத்துவதற்காக ஸ்வீடன் மத்திய வங்கி 1968-ஆம் ஆண்டு இந்த விருதை உருவாக்கியது.

ஜீன் டிரோல் உள்பட, இந்த ஆண்டு நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் ஆல்ஃபிரட் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசு வழங்கப்படும்.

ஜீன் டிரோல் (61)
பிரான்ஸின் டிராயஸ் நகரில் 1953-ஆம் ஆண்டு பிறந்தவர் ஜீன் டிரோல். மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் 1981-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற இவர், டூலூஸ் பொருளாதாரக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். ஹங்கேரியில் வழங்கப்படும் கெளரவம் மிக்க "ஜான் வான் நியூமன்' விருதினை 1998-ஆம் ஆண்டு இவர் வென்றுள்ளார்.

14 October, 2014

திருவாரூர் நான்மணிமாலை


என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோவில் முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் – அன்புஎன்னாம் புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார் மண்சுமந்தார் என்றுருகு வார் சொற்பொருள்: என்பணிந்த – எலும்பை மாலையாக அணிந்த தென்கமலை – தெற்கில் உள்ள திருவாரூர் பூங்கோவில் – திருவாரூர் கோவிலின் பெயர் புண்ணியனார் – இறைவன் நூல் குறிப்பு: திருவாரூர் + நான்கு + மணிமாலை = திருவாரூர் நான்மணிமாலை. இது திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற நான்மணிமாலை எனப் பொருள்படும். நான்மணிமாலை என்பது தமிழில் வழங்கும் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகையான மணிகளால் ஆனா மாலையைப் போன்று நால்வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா) ஆனா நாற்பது செய்யுள்களை கொண்டது.
குமரகுருபரர்
திருச்செந்தூர் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாக குழந்தையில்லாத இத்தம்பதியர் கந்தசஷ்டி விரதமிருந்து ஒரு ஆண்குழந்தையைப் பெற்றனர். குழந்தைக்கு குமரகுருபரன் என்று வைத்தனர். பிறந்ததில் இருந்து குழந்தைக்கு பேச்சு வரவில்லை. பெற்றோர் கவலையடைந்தனர். கவிராயர் ஒரு முடிவுக்கு வந்தவராய், சிவகாமி நமது பிள்ளை குருபரன், முருகன் கொடுத்த வரம். அவனால் தான் குழந்தைக்கு பேசும் ஆற்றலை தர முடியும். நாம் திருச்செந்தூர் சென்று அவனிடம் முறையிட்டு விரதம் இருப்போம். அவன் பார்த்து எது செய்தாலும் சரி என்றார். அதன்படி அவர்கள் குழந்தையுடன் திருச்செந்தூர் சென்றனர். கடலலைகள் கோயில் மதிற்சுவரில் அடித்து விளையாடியதை குருபரன் பார்த்து கொண்டிருந்தான். கடலுக்குள் இறங்கி அலைகளுடன் விளையாடினான். அந்த அலைகள் கரைகளில் மோதிய சப்தத்தில் ஓம், ஓம் என்ற மந்திர ஒலி கேட்டது. கவிராயரும், அவரது மனைவியும் அங்கேயே தங்கி விரதம் மேற்கொண்டனர். காலையில் கடலில் குளித்து, நாழிக்கிணற்றில் நீராடி முருகனை வழிபட்டு, ஒருவேளை உப்பில்லாத உணவு சாப்பிட்டு 40 நாள் விரதமிருந்தனர். ஆனால், குருபரனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேதனை மிகுந்த பெற்றோர், குழந்தை பேசும் வரை கோயிலை விட்டு செல்லமாட்டோம் என பிடிவாதமாக முருகனிடம் சொல்லி விட்டனர். 45வது நாள் மாலையில், கவிராயர் தன் மனைவி குழந்தையுடன் கோயிலுக்குள் நுழைந்தார். குழந்தை ஏக்கத்துடன் பெற்றோரை பார்த்தது. இதைக்கண்ட தகப்பனின் கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் கொட்ட, முருகா! என் தெய்வமே! இன்னும் எத்தனை நாள் தான் எங்களை சோதிப்பாய். நீ கருணைக்கடல் ஆயிற்றே! இந்த குழந்தைக்கு மட்டும் கருணை காட்டாதது ஏன்? என மனமுறுகி பிரார்த்தித்தார். அவரது மனைவியும், சண்முகா! குழந்தை இல்லாமல் இருப்பது கொடுமைதான். அதைவிட கொடுமையானது ஊமைக்குழந்தையை வைத்திருப்பது இல்லையா? நாங்கள் தவறு செய்திருந்தால் எங்களுக்கு தண்டனை கொடு. இந்தக்குழந்தை என்ன தவறு செய்தது? அதை ஏன் தண்டிக்கிறாய்? எங்கள் குழந்தையை காப்பாற்று, என கதறினாள். இந்த நிலையில் குருபரன் வாய்திறந்து ஏதோ பேச முற்பட்டான். பெற்றோர்கள் கூர்ந்து கேட்க, தெளிவில்லாமல் ஏதோ சில சொற்களை சொன்னான். அடுத்த சில நொடிகளில் அந்த பாலகன், கார்மேகம் கடும் மழை பொழிவது போல கவி மழை பொழியலானான். முருகனைப்பற்றிய பாடல்கள் அவன் வாயிலிருந்து காட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டு ஒலித்தது. குழந்தை பேசமாட்டானா என ஏங்கியிருந்த பெற்றோர் வாயடைத்து நிற்க, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும் இந்த அதிசயம் கண்டு திகைத்து நின்றனர். தேனினும் இனிய குரலில் அவன் பாடிய பாடல் தொகுப்பே கந்தர் கலிவெண்பா ஆகும். இதுவே குமரகுருபரரின் முதல் நூல் ஆகும். சரவணபவ என்ற மந்திரத்தின் மகிமையை வெண்பாக்களாக விட்டார் குருபரர். குமரா! முருகா! உனது கருணையால் ஊமையும் பேசுவது மட்டுமில்லாமல், பெரும் கவிஞனும் ஆவான் என்பதை நிரூபித்துவிட்டாய். உனது கருணையே கருணை என உள்ளம் நெகிழ்ந்தனர் பெற்றோர். பெரும்கவியாக திகழ்ந்த குருபரர் பெற்றோருடன் அதிக நாட்கள் தங்கவில்லை. அவர்களது ஆசியுடன் தல யாத்திரை புறப்பட்டார். மக்கள் அவரை குமரகுருபர சுவாமிகள் என அழைத்தனர். ஒருமுறை குமரகுருபரர் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தார். மீனாட்சி சன்னதியின் முன் நின்றிருந்த போது, மடை திறந்த வெள்ளம் போல், மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடலை பாடினார். அன்னையை சிறு குழந்தையாக பாவித்து, அவளது அழகு, அருள், ஆற்றல், திருவிளையாடல்கள் அனைத்தையும் பாடி நூலாக வடித்தார். அந்நாளில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சி தோன்றி, மன்னா! என் செல்லக் குழந்தை குமரகுருபரன் மதுரை வந்துள்ளான். அவன் என்மீது பாடிய நூலை யாம் கேட்டு ஆனந்தமடைய ஏற்பாடு செய்க என்று பணித்தாள். உடனே மன்னர் குமரகுருபரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர் பாதம் பணிந்து அம்மனின் விருப்பத்தை கூறினார். கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

புலவர்கள் எல்லாம் கூடியிருக்க, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறி கொண்டிருந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகரின் மகள் அங்கு வந்து மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குருபரர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும் சிறுமி உரிமையுடன் மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றி குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். பின் மூலஸ்தானத்தை நோக்கி நடந்து மறைந்தாள். அதன் பின்தான் வந்தது மீனாட்சி என அனைவருக்கும் தெரிந்தது. பின்னர் குமரகுருபரர் காசி சென்று விஸ்வநாதரை புகழ்ந்து பாடினார். ஒரே நாளில் இந்துஸ்தானி கற்று அங்கியிருந்த சுல்தானிடம் பேசி, அனுமதி பெற்று கேதார் ஆலயத்தின் அருகே குமாரசுவாமி மடம் என்ற சைவ மடத்தை நிறுவினார். இப்போதும் காசியில் இந்த மடம் சமயப்பணி செய்து வருகிறது. குமரகுருபரர் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், சிதம்பரச் செய்யுட் கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை என இன்னும் பற்பல நூல்களால் தமிழன்னையை அலங்கரித்த பெருமகன் அவர். முருக பக்தராகவும், மீனாட்சிபக்தராகவும், சரஸ்வதி பக்தராகவும் திகழ்ந்தவர். காசியில் ஒளரங்கசீப்பின் மூத்த சகோதரரான தாரா ஷுகோ என்ற மன்னர்முன் சிங்கத்தின் மேல் ஏறிச் சென்று அந்த சுல்தானை வியக்க வைத்து, தாம் காசியில் நிறுவிய இந்து மடத்திற்கு நிலத்தை தானமாகப் பெற்றவர். இவர் காசியில் இந்துஸ்தானி மொழியில் நிகழ்த்திய கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்டுக் கவரப்பட்டுத்தான் துளசிதாசர் இந்தியில் ராமாயணம் எழுதும் உத்வேகம் பெற்றார். முருகப் பெருமானையே சிந்தனை செய்து வாழலானார் குமரகுருபரர் சில ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் அவர் தன் பெற்றோரை அழைத்தார். இந்த உலகிற்கு நான் வரக் காரணமானவர்கள் நீங்கள். இப்பிறவியில் நீங்களே என் தாய், தந்தை ஆனால் எல்லா ஆன்மாக்களுக்கும் என்றென்றும் தாயாகவும் தந்தையாகவும் பரம்பொருளை நாடுகிறது என் உள்ளம். நான் துறவுநெறியில் ஈடுபட்டுத் தமிழையே துணையாய்க் கொண்டு வாழ விரும்புகிறேன். உங்களை நான் பிரிந்து செல்வதாக எண்ணலாகாது. உங்களுக்கும் சொந்தமான முருகன் அருள் உங்களை எப்போதும் காத்து நிற்கும்! கடவுள் துணை உங்களுக்கும் இருக்கும்போது நான் என்கிற இந்த மனிதத் துணை தேவையில்லை. ஒரே ஊரில் நான் வாழ்வதை விரும்பவில்லை. பல ஊர்களுக்குச் சென்று பல்வேறு ஆலயங்களை தரிசித்து அங்குள்ள தெய்வங்கள் பற்றியெல்லாம் பாடல் புனைய விழைகிறேன்! தன் அருமைப் புதல்வன் பேசிய பேச்சைக் கேட்டுக் கவிராயரின் கண்கள் கசிந்தன. பிள்ளைக்கு மணமுடித்துப் பேரன் பேத்தியைப் பார்க்க எண்ணியிருந்த சிவகாச சுந்தரி செய்வதறியாது திகைத்தாள். அப்போது முருகன் அவள் ஏற்கெனவே தன் சன்னதியில் சொன்ன வாசகத்தை அவள் ஆழ்மனத்தில் நினைவுபடுத்தினான். முருகன் அருளால் பிறந்த குழந்தை முருகனிடமே இவனை ஒப்படைப்போம் என்றல்லவா அன்று சொன்னாள்? முருகன் திருவருளால் இத்தனை ஆண்டு காலம் குமரகுருபரனோடு வாழும் பேறு கிடைத்தது. மற்றபடி முருகன் சன்னதியில்தானே இவன் கவிமழை பொழியத் தொடங்கினான்? அன்றே முருகன் இவனை ஆட்கொண்டு விட்டான். தன் பிள்ளையாகத் தமிழன்னைக்குத் தத்துக் கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதை அவள் புரிந்துகொண்டாள். கண்ணீர் வழிய வழிய அவனை நிரந்தரமாக வழியனுப்பி வைத்தாள். விம்மிய உதடுகளைத் துண்டால் மறைத்துக் கொண்டு கவிராயரும் அவனுக்கு விடைகொடுத்தார். பெற்ற பிள்ளை எப்போதும் பெற்றோருடன் இருந்தால்தான் ஆயிற்றா? அவன் எங்கிருந்தாலும் அவன் புகழைக் கேட்கும்போதெல்லாம் தாங்கள் பெற்ற பிள்ளை என்ற ஆனந்தம் அவனால் கிடைக்கத்தானே போகிறது? அந்த ஆனந்தத்திற்கு விலையேது? குமரகுருபரன் தங்களின் தற்காலிகக் குழந்தைதான். அந்த உறவு நிலையல்ல, செந்தூர்க்குமரனே தங்களின் நிரந்தரக் குழந்தை, கடவுளே நிலையான உறவு என்பதை அவர்கள் மனம் புரிந்துகொண்டு ஆறுதல் அடையத் தொடங்கியது. எஞ்சிய வாழ்வைச் செந்தூர் முருகன்மேல் பக்தி செலுத்தி அவர்கள் வாழலானார்கள். வாய்பேசாத குழந்தைக்குக் கடவுள் அருளால் வாய்ப்பேச்சு வந்ததும், பெற்றவர்கள் சில ஆண்டுகள் அவனை வளர்த்துக் கடவுள் பணிக்கே அவனைத் தந்ததும், உறவுகளைத் துறந்து அவன் துறவியாக வாழ்ந்ததும் குமரகுருபரன் கதை.

10 October, 2014

இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இருவருக்கும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு



இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர்.

குழந்தைகள் நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

கைலாஷ் சத்யார்த்தி

டெல்லியில் வசித்து வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார். இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80,000 குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.

குழந்தைகளுக்கு கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவது ஒரு குற்றம் என்று கூறும் சத்யார்த்தி, இதுவே வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றுக்குக் காரணம் என்கிறார். இவரது இந்த கருத்துக்கள் பல்வேரு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் உருவானதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்களிப்பு உண்டு. இவரது கருத்துக்கள், இவரது இயக்கம் ஆகியவை நிறைய ஆவணப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விழிப்புணர்வு படங்கள் என்று தாக்கம் செலுத்தியுள்ளது.

இவரது இந்த தன்னலமற்ற அயராத பணிக்காக இதற்கு முன்னர் ஏகப்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். கைலாஷ் சத்யார்த்தி மனைவி, மகள், மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் இவரது அமைப்பினால் மீட்கப்பட்ட ஏகப்பட்ட சிறார்களுடன் புது டெல்லியில் வாழ்ந்து வருகிறார்.

மலாலா


இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன் அமைதி நோபல் பரிசைப் பெறுகிறார் சிறுமி மலாலா யூசுப்சாய். பாகிஸ்தானில் மகளிர் கல்விக்காக போராடி, அதனால் பல இன்னல்களையும், தாலிபான்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ள  மலாலாவுக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது நோபல் கமிட்டியின் ஒரு திட்டமிட்ட பார்வையின் விளைவினால் என்று கூறப்படுகிறது.

அதாவது, ஓர் இந்து மற்றும் ஒரு முஸ்லிம், அதிலும் இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசினை அளிக்கும்போது கல்வி மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராகக் கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்களிப்பு செய்ய முடிவதாக நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

இன்று உலகில் 168 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 2000ஆம் ஆண்டில் இதைவிட 78 மில்லியன் அதிகம் இருந்தது. எனவே குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கமல், முற்றிலும் இல்லாமல் செய்யும் லட்சியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உயரிய நோபல் பரிசை வெல்லும் இளம் வயது சாதனையாளர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் பெறுகிறார் 17 வயது யூசுப் மலாலா.

09 October, 2014

ஒளி நுண்ணோக்கி ஆய்வு: 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு


2014ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்க விஞ்ஞானிகள் இருவரும், ஜெர்மன் விஞ்ஞானி ஒருவரும் கூட்டாக வென்றுள்ளனர்.

அமெரிக்காவின் ஆஷ்பர்னில் உள்ள ஜேன்லியா ஃபார்ம் ரிசர்ச் கேம்பஸைச் சேர்ந்த விஞ்ஞானி எரிக் பெட்ஸிக், ஜெர்மனியின் ஹைடல்பர்க் புற்றுநோய் ஆய்வு மையம் மற்றும் மாக்ஸ் பிளாங்க் உயிர் பவுதீக வேதியியல் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹெல், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் மோர்னர் ஆகியோர் 2014ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பகிர்ந்துள்ளனர்.

உயர் தொழில்நுட்ப புளூரசென்ஸ் மைக்ராஸ்கோப்-ஐ மேம்படுத்த மகத்தான பங்களிப்பு செய்ததற்காக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயன்சஸ் இந்த நோபல் பரிசை வழங்கியுள்ளது.

நீண்ட காலமாக ஆப்டிகல் மைக்ராஸ்கோப் என்பது வரம்புகளுக்குட்பட்ட அளவிலேயே பயன்படுத்தப்பட முடிந்துள்ளது. ஆய்வு செய்யும் பொருள் குறித்து ஒளியின் பாதி அளவு அலைநீளத்திற்கு மேல் உயர்தெளிவை பெற முடியாத நிலை இருந்தது. 

தற்போது இந்த விஞ்ஞானிகள் புளூரசெண்ட் மூலக்கூறுகள் உதவியுடன் இந்த வரம்பைக் கடந்து ஒளி நுண்ணோக்கி தொழில்நுட்பத்தில் நேனோ பரிமாணத்தை எட்ட பங்களிப்பு செய்துள்ளனர். 

இந்த 3 விஞ்ஞானிகள் செய்த சாதனை என்ன? அதனால் ஏற்படும் பயன்கள் என்ன?

ஆப்டிகல் மைக்ராஸ்கோப் 0.2 மைக்ரோமீட்டர்களுக்கு அதிகமாக தெளிவை ஒருபோதும் அளிக்காமல் இருந்து வந்தது. தற்போது புளூரசென்ஸ் மூலக்கூறுகளை பயன்படுத்தி இந்த 3 விஞ்ஞானிகளும் இந்த வரம்பை உடைத்துள்ளனர்.

இதனால் செல்களின் உள்ளே தனிப்பட்ட மூலக்கூறுகளின் ஊடாட்டத்தை சிறப்பாக அறுதியிட முடியும். நோய்களுக்கு தொடர்பான புரோட்டீன்களை இப்போது நுண்ணோக்கி மூலம் பார்க்க முடியும், மேலும் செல் பிரிவதை மிகவும் நுண்ணிய நேனோ மட்டத்தில் தடம் காண முடியும்.

17ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானிகள் மைக்ராஸ்கோப் மூலம் வாழும் நுண்ணுயிர்கள் பற்றி ஆராய்ச்சி செய்த போது அவர்கள் கண்கள் முன் புதிய உலகமே திறந்தது. ரத்தத்தின் சிகப்பு செல்கள், பாக்டீரியா, யீஸ்ட் செல்கள், உயிரணுக்கள் ஆகியவை பற்றிய உலகம் அவர்கள் கண் முன்னே விரிந்தன.

இதுதான் ‘மைக்ரோ பயாலஜி’ என்ற ஒரு பெரிய விஞ்ஞானத் துறையாக வளர்ச்சி கண்டது. பிற நுண்ணோக்கிகளுக்கான கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து வந்த போதிலும் சில வேளைகளில் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் செல்களையே அழிப்பதாக அமைந்தது.

இந்த நிலையில் மைக்ராஸ்கோப்பின் வரம்புகளும் தெரியவந்தது. அதாவது ஒளியின் அலைநீளத்திற்கு தோராயமாக பாதியளவு உள்ள நுண்ணுயிரிகளை, (அதாவது 0.2 மைக்ரோமீட்டர்கள்) மைக்ரோஸ்கோப்பினால் சரியாகப் பார்க்க முடிவதில்லை. 

செல்லின் உள்ளே, தனிப்பட்ட புரோட்டீன் மூலக்கூறுகளின் ஊடாட்டங்களை மரபான நுண்ணோக்கியினால் சரியாகக் கணிக்க முடியாமல் இருந்தது.

உதாரணத்திற்குக் கூற வேண்டுமென்றால், ஒரு நகரத்தின் கட்டிடங்களையே பார்க்க முடிந்தது என்று கூறலாம். கட்டிடங்களுக்குள் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் அல்லது எப்படி தங்களுக்குள் உறவாடுகிறார்கள் என்பதை அறிய முடியவில்லை என்று கூறலாம். 

ஒரு செல் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய தனிப்பட்ட மூலக்கூறுகள் அதனுள் எப்படி ஊடாடுகின்றன என்பதை அறுதியிடுவது அவசியம்.

தற்போது எரிக் பெட்ஸிக், ஸ்டீபன் ஹெல் மற்றும் வில்லியம் மோர்னர் ஆகியோரது புளூரசண்ட் மூலக்கூறுகள் உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டில் இருந்த மைக்ராஸ்கோப், மேலும் நுண்ணிய மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் நேனோஸ்கோப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.

இதன் மூலம் மூளையில் உள்ள நரம்பு செல்களினிடையே நரம்புகளின் நியூட்ரான் முனைகளை மூலக்கூறுகள் உருவாக்குகின்றன என்பதை இப்போது அறிய முடியும். 

தலை முதல் உடல் முழுதும் நடுங்கும் நரம்புத் தளர்ச்சி நோயான பார்கின்சன் நோய் மற்றும் பெருமறதி நோயான அல்செய்மர் ஆகியவற்றிற்கு மூலக்காரணமான புரோட்டீன்களை இப்போது தெளிவாக தடம் காண முடியும்.

கருமுளைகளாகப் பிரியும் கருமுட்டைகளில் உள்ள தனிப்பட்ட புரோட்டீன்களை இப்போது பின்தொடர முடியும். சுருக்கமாக மருந்தில்லா நோய்களைத் தற்போது முற்றிலும் தடுப்பதற்கான மகத்தான பல ஆய்வுகளுக்கு நேனோஸ்கோப் வித்திட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

நன்றி
தி இந்து 

07 October, 2014

2014ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு


2014ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் வென்றுள்ளனர். ஜப்பான் விஞ்ஞானிகள் இருவரும், அமெரிக்க வாழ் ஜப்பானிய விஞ்ஞானி ஒருவரும் இப்பரிசை பகிர்கின்றனர்.

இசமு அகாசாகி, ஹிரோஷி அமானோ, ஷுஜி நகமுரா ஆகியோர் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

ஆற்றல் திறன் படைத்த, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத நீல ஒளி-உமிழ்வு டயோடு (LED) அதாவது, வெண்மை ஒளியை புதிய வழியில் உருவாக்கும் விளக்குகளை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கணினித் திரைகள் மற்றும் நவீன ஸ்மார்ட் போன்களுக்கு ஒளியூட்டும் LED தொழில்நுட்பத்தில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இசமு அகாசாகி (85) ஜப்பானின் மெய்ஜோ பல்கலைக் கழகம் மற்றும் நகோயா பல்கலைக்கழக விஞ்ஞானி ஆவார். ஹிரோஷி அமானோவும் (54) நகோயா பல்கலைக்கழக விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது. ஷூஜி நகமுரா (60) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.

இந்தக் கண்டுபிடிப்பு மனித குலத்திற்கு பெரிதும் நலம் விளைவிப்பது என்று ராயல் ஸ்வீடிஷ் அகாதமி தனது நோபல் பரிசு அறிவிப்பில் கூறியுள்ளது.

நீல ஒளி உமிழ்வு டயோடு (LED) விளக்குகள் நீண்ட காலத் திறன் படைத்தது. மேலும் பழைய விளக்குகளுக்கு இது ஒரு சிறந்த மாற்று என்று அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டுகளின் தொடக்க காலகட்டத்தில் விஞ்ஞானிகள் இசமு அகாசாகி, ஹிரோஷி அமானோ, ஷூஜி நகமோரா ஆகியோர் குறைமின் கடத்தி மூலம் நீல ஒளிக்கற்றைகளை உற்பத்தி செய்து காட்டிய போது ஒளித் தொழில்நுட்பத்தில் இவர்கள் ஆதாரமான ஒரு மாற்றத்தை நிகழ்த்தினர்.

இதற்கு முன்பாக சிகப்பு மற்றும் பச்சை டயோடுகள் இருந்தன. ஆனால் நீல ஒளி இல்லாமல் வெள்ளை பல்புகளை உருவாக்க முடியாது. 

இந்தக் கண்டு பிடிப்புக்கான பெரு முயற்சிகள் இருந்தும், விஞ்ஞான சமூகத்திலும், தொழில்துறையிலும் நீல ஒளி உமிழ்வு எல்.இ.டி. என்பது 30 ஆண்டுகளுக்கு பெரும் சவாலாகவே இருந்தது.

இந்த 3 விஞ்ஞானிகளும் மற்றவர்கள் சாதிக்க முடியாததைச் சாதித்தனர். அகாசாகி மற்றும் அமானோ நகோயா பல்கலைக் கழகத்தில் ஆய்வில் ஈடுபட ஷூஜி நகமுரா, டொகுஷிமாவில் உள்ள நிசியா ரசாயனம் என்ற சிறிய நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

20ஆம் நூற்றாண்டை பிற ஒளிவிளக்குகள் ஒளியூட்டின என்றால் 21ஆம் நூற்றாண்டில் இந்த விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பான எல்.இ.டி. விளக்குகள் ஒளியூட்டும்.

ராட்சத மின் வினியோக கோபுரங்கள் இல்லாததால் போதிய மின்வசதி இல்லாமல் அவதிப்படும் உலகம் முழுதும் உள்ள 1.5 பில்லியன் மக்கள் எல்.இ.டி. விளக்குகளால் பயனடைவர்.

இதற்கு மின் ஆற்றல் குறைவாகவே தேவைப்படுவதால் சூரிய ஒளியினால் கூட இதற்கு மின்சக்தி அளித்துவிட முடியும். 

உலக மின்சக்தி நுகர்வில் நான்கில் ஒரு பங்கு மின்விளக்குகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. எல்.இ.டி. சுமார் 1 லட்சம் மணி நேரங்கள் தாங்கக்கூடியது. மாறாக மற்ற விளக்குகளில் புளூரோசெண்ட் விளக்குகள் 10,000 மணி நேரமே தாங்கக்கூடியது.

நீல எல்.இ.டி. கண்டுபிடிக்கப்பட்டு 20 ஆண்டுகளே ஆனாலும் வெண்மை ஒளியை புதிய வழியில் உருவாக்குவதில் இது ஏற்கனவே தனது பங்களிப்பைச் செய்யத் தொடங்கி விட்டது.

நன்றி 
தி இந்து 


06 October, 2014

இந்தியா - இயற்கையமைப்பு


* சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியது. சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் புவியியல் மாறுபாடுகளின் விளைவாக டெர்ஷியரி கால டெத்திஸ் என்ற மிகப்பெரிய கடல் பகுதியிலிருந்து மேலெழுந்து இமயமலைகள் தோன்றின.

* புவியியல் கொள்கையின்படி, துவக்க காலத்தில் பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே நிலப்பகுதியாக இருந்ததென்று கருதப்படுகிறது. ஒரே தொகுப்பான அப்பகுதி பேஞ்சியா என்று அழைக்கப்பட்டது. அதைச்சுற்றி பேன்தலாசா என்ற நீர்ப்பரப்பும் காணப்பட்டது.

* பேஞ்சியா நிலப்பகுதி டெத்திஸ் என்ற தாழ்வான இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு காலப் போக்கில், அந்த ஒன்றை நிலப்பகுதி சிறிது சிறிதாக இரண்டு பெரிய நிலப்பரப்புகளாக உடைந்தன.

* வடக்கில் உடைந்த பகுதி அங்காரா நிலப்பகுதி என்றும், தெற்கில் உடைந்த பகுதி கோண்ட்வானா நிலப்பகுதி என்றும் அழைக்கப்பட்டது.

* அவ்வாறு தெற்கில் உடைந்த கோண்ட்வானா நிலப்பகுதியில் இருந்து காலப்போக்கில் சிறிது சிறிதாகப் பிரிந்து வந்ததே இந்தியத் துணைக்கண்டமாகும்.

* நிலத்தோற்றம், நில உள்ளமைப்பு, வடிகாலமைப்பு, காலநிலை, இயற்கைத்தாவரம் மற்றும் மண் ஆகிய இயற்கைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்படும் வட்டாரம் இயற்கை வட்டாரம் எனப்படும்.

* ஒருமித்த புவியியல் கூறுகளை உள்ளக்கிய ஓர் நிலப்பகுதி வட்டாரம் எனப்படுகிறது.

* இந்தியாவின் இயற்கையமைப்பை 3 பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன 1. வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள் 2. வடக்கிலுள்ள சமவெளிப்பகுதிகள் 3.தீபகற்ப பீடபூமிப் பகுதி ஆகியன.


வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள்

* காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை கிழக்கு மேற்காக சுமார் 2500 கிமீ நீளம் வரை இமயமலைகள் சங்கிலித் தொடர் போன்று பரவியுள்ளது.

* அத்துடன் இவை சுமார் 150 முதல் 400 கிமீ அகலம் வரை உள்ளது. மேற்கில் சுமார் 400 கிமீ அகலத்துடனும், கிழக்கில் சமார் 150 கிமீ அகலத்துடனும் காணப்படுகிறது.

* இமயமலைகள் இந்தியாவிற்கு வடக்கில் ஓர் இயற்கை அரணாக அமைந்துள்ளது. இளம் மடிப்பு மலைகளால் (Young Fold Mountains) ஆனதே இமயமலைகள் ஆகும்.

* இமயமலை மத்திய ஆசியாவின் பாமீர் முடிச்சில் இருந்து, (பாமீர் முடிச்சு உலகின் கூரை என்று குறிப்பிடப்படுகிறது) தொடங்குகிறது.

* இந்த இமயமலைத் தொகுப்பை நாம் மூன்று உட்பிரிவுகளாகக் காண்போம். அவையான அ) பெரும் இமாலயத் தொடர் (Greater Himalayas) ஆ.மத்திய இமாலயத் தொடர் (Middle Himalayas) இ. புற இமாலயத் தொடர் (Outer Himalayas)


பெரும் இமயமலைத் தொடர்கள்

* உலகின் உயர்ந்த மலைத்தொடர்கள் இங்குதான் உள்ளன. இவற்றிற்கு ஹிமாத்ரி தொடர் என்றும் வேறு பெயர் உண்டு காரகோரம், லடாக், கைலாயம், ஜாஸ்கர் போன்ற மலைத்தொடர்கள் இதில் உள்ளன.

* காரகோரம் மலைத்தொடரில் தான் காட்வின் ஆஸ்டின் அல்லது K2 என்ற உலகின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரம் அமைந்துள்ளது. இதன் உயரம் 8611 மீட்டர் ஆகும்.

* K2 என்பது தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ளது. கைபர் மற்றும் போலன் கணவாய்களும் தற்போது பாகிஸ்தானில் தான் உள்ளன.

* இவை தவிர பால்ட்ரோ பனியாறு, சியாச்சின் பனியாறு போன்றவைகளாலும் இத்தொடர் புகழ் பெறுகிறது.

* மக்காலு, தவளகிரி, நங்க பர்வதம், நந்தா தேவி போன்ற பிற சிகரங்களும் இத்தொடரில் தான் அமைந்துள்ளன. மேலும் இத்தொடரில் சில முக்கியக் கணவாய்கள் உள்ளன.

* காஷ்மீரிலுள்ள காரகோரம், கணவாய், இமாச்சலப் பிரதேசத்திலுள்ள ஷிப்கிலா கணவாய், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள பொம்டிலா கணவாய் ஆகிய குறிப்பிடத்தக்கவை.

* பெரும் இமாலயத் தொடர்கள் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டிருக்கும். ஹிமம் என்றால் பனி என்று பொருள், ஹிமாலயா என்றால் பனியின் இருப்பிடம் என்று பொருள்.

* வடக்குப் பகுதியில் இத்தொடர்களில்தான் உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் (8848 மீ) அமைந்தள்ளது. இது நேபாளத்தில் அமைந்துள்ளது. இதற்கு சாகர் மாதா என்றும் பெயர் வவங்கப்படும்.

* அத்துடன் கஞ்சன் ஜங்கா மலைத்தொடரில், 8598 மீ உயரமுடைய, இந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான கஞ்சன் ஜங்கா சிகரம் விளங்குகிறது. இது சிக்கிம் மாநிலத்தில் உள்ளது.


மத்திய இமயமலைத் தொடர்கள்

* ஹிமாச்சல் தொடர்கள் என்றும் இதற்கு வேறுபெயர் உண்டு. சுமார் 3000 முதல் 4500 மீட்டர் உயரமுடையவை.ஹிமாத்ரி தொடருக்குத் தெற்கே அமைந்துள்ளது.

* பீர் பாஞ்சால், குமாயுன், மகாபாரத், திம்பு ஆகிய மலைத்தொடர்கள் இதில் அமைந்துள்ளன. இவற்றில் பீர் பாஞ்சால் தொடர் காஷ்மீரிலும், தவுளதார்தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத் தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத்தொடர்கள் நேபாளத்திலும் அமைந்துள்ளன.

* புகழ்பெற்ற பீர்பாஞ்சால் மற்றும் காஷ்மீர் பள்ளதாக்கு இத்தொடரில் உள்ளன. இதில் அதிக  உயரத்தில் உள்ள கோடை வாசஸ்தலம் குல்மார்க் ஆகும்.

* மேலும் டல்ஹெளசி (இமாச்சலப் பிரதேசம்), தர்மசாலா, சிம்லா (இமாச்சலப் பிரதேசம்), முசெளரி (உத்திரப் பிரதேசம்), நைனிடால் (உத்திராஞ்சல்), டார்ஜிலிங் (மேற்கு வங்காளம்) ஆகிய கோடை வாசஸ்தலங்கள் அமைந்துள்ளன.


புற இமயமலைத் தொடர்கள்

* இமயமலைகளின் தெற்குமுனைப்பகுதி இது. சிவாலிக் கொடர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. சராசரியாக 1000 மீ உயரமுடையது. தராய் காடுகள் இங்கு காணப்படுகிறது.

* இத்தொடர் தொடர்சிசியற்றுக் காணப்படுகிறது. இத்தொடருக்கும், மத்திய இமாலயத் தொடருக்கும் இடையில் பல பள்ளத்தாக்குகள் உள்ளன. அவை டூன்கள் என்றழைக்கப்படுகின்றன.

* டேராடூன் அத்தகைய பள்ளத்தாக்கே ஆகும். இத்தொடரின் கிழக்குப் பகுதியில் பூர்வாஞ்சல் குன்றுகள் உள்ளன. மேலும் இத்தொடரில் தான் காசி குன்றுகள், காரோ குன்றுகள், ஜெயந்தியா குன்றுகள் ஆகியன மேகாலயாவில் அமைந்துள்ளன. இத்தொடரில் பெருமளவு மண்ணரிப்பு நடைபெறுகிறது.

* மேற்காணும் பிரிவுகள் போலவே இமயமலைகளை திசைகளை அடிப்படையாகக் கொண்டும் பிரிப்பர்.

* ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாலங்களிலுள்ள இமயமலைகள் மேற்கு இமயமலைகள் என்றும், உத்திரப்பிரதேசம், நேபாளம் ஆகிய இடங்களிலுள்ளவை * மத்திய இமயமலைகள் என்றும், மேற்கு வங்காளம், சிக்கிம், பூடான், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் உள்ள இமயமலைகள் கிழக்கு இமயமலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

* குமாயுன் பள்ளத்தாக்கு உத்திரப்பிரதேசத்திலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு (பூமியின் சொர்க்கம்) ஜம்மு-காஷ்மீரிலும் அமைந்துள்ளன.


தீபகற்ப இந்திய மலைத்தொடர்கள்

* தீபகற்ப இந்தியாவில் மூன்று மலைத்தொடர்கள் உள்ளன. 1.விந்திய-சாத்பூரா மலைகள் 2. மேற்குத்தொடர்ச்சி மலைகள் 3. கிழக்குக்குன்றுகள் ஆகியன. இவற்றில் விந்திய சாத்பூரா மலைகள் ந்ரமதை நதி பள்ளத்தாக்கிற்கு இணையாக மேற்கு-கிழக்கான செல்லுகின்றன. இவை உண்மையில் நர்மதா பள்ளத்தாக்கின் பக்கச்சுவர்களே உண்மையில் மலைகளே அல்ல. இம்மலைகள் வாரணாசிக்கு அருகில் முடிவடைகின்றன.

* சாத்பூரா மலைகள் நர்மதைக்கும் தபதிக்கும் இடையே காணப்படுகின்றன. இம்மலைகளின் பாறைகள் தக்காண, லாலா பீடமூபூமி பாறை வகைகளைச் சார்ந்தவை. இவை வரலாற்று காலத்தில் ஏற்பட்ட மடிப்பு மவைகள் ஆகும்.

* சாத்பூரா என்றால் ஏழு மடிப்புகள் என்று பொருள்படும் சாத்பூரா மலைகள் மிகப் பழமையான மடிப்பு மலைகள்.

* இவ்வாறே தீபகற்ப இந்தியாவின் மேற்கில் மேற்கு கடற்கரைக்கு இணையாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. தபதி நதியின் முகத்துவாரத்திலிருந்து கன்னியாகுமரி வரை வடக்கு தெற்காவும் அமைந்துள்ளன.

* இத்தொடரில் மூன்று கணவாய்களும் உள்ளன. வடக்கில் தால்காட் போர்காட் கணவாய்களும், தெற்கில் பாலக்காட்டுக் கணவாயும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் உயரமான சிகரங்கள் உள்ளன.

* குறிப்பாக, நீலகிரி மலைகள் தொட்டபெட்டாவும், ஆனைமலையில் ஆனைமுடியும் குறிப்பிடத்தக்கவை. பழனிமலை, கொடைக்கானல் மலை, குற்றால மலை ஆகியனவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்தவை.

* கோடை வாழிடங்களான உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, ஆகியனவும் இம்மலைத் தொடரில் உள்ளன.

* கிழக்குக் குன்றுகள் கிழக்குக்  கடற்கரைச் சமவெளியை ஒட்டி அமைந்துள்ளன. தொடர்ச்சியற்ற பல குன்றுகளாகவும் உள்ளன. ஒரிசா மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டிச் செல்கின்றன.

* பின்னர் தென்மேற்காகச் சென்று நீலகரியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன் இணைகின்றன. இதில் திருப்பதி மலை, ஜவ்வாது மலை, கொல்லி மலை, பச்சைமலை ஆகியவை முக்கியமானவை. ஏற்காடு, ஏலகிரி ஆகியவை இம்மலைகளில் முக்கிய சுற்றுலாத் தலங்கள்.


வடக்கில் உள்ள சமவெளிப் பகுதிகள்

* இமயமலைகளின் அடிப்பகுதியிலிருந்து தீபகற்ப இந்தியாவின் வடபகுதி வரை சுமார் 7.5 இலட்சம் சதுர கிலோ மீட்டர் வரை சமவெளிகள் பரந்துள்ளன.

* பஞ்சாப் சமவெளி முதல் அல்லாம் பள்ளத்தாக்கு வரையில் இச்சமவெளி பரவியுள்ளது. சுமார் 3200 கிமீ நீளமும், 150 முதல் 300 கிமீ வரை அகலும் உடையது. வண்டல் படிவுகளால் ஆனது.

* இமயமலையிலிருந்து தோன்றும் ஆறுகளால் இப்பகுதி வளப்படுத்தப்படுகிறது. இச்சமவெளியின் உயர்நிலப் பகுதி பாங்கர் மண்ணால் ஆன வளம் மிக்க பகுதியாகும்.

* மேலும் இச்சமவெளியின் தாழ்நிலப்பகுதி காதர் மண்ணால் ஆனது.

* ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு இடைப்பட்ட, தோவாப் பகுதிகளில் உயரமான இடங்களில் பழமையான படிவு மண் காணப்படுகிறது. இதுவே பாங்கர் ஆகும்.

* எனினும் பாங்கர் நிலப்பகுதிகளில், சமச்சீரற்ற சுண்ணாம்புப்படிவுகள் உள்ளன. இவை கான்கர் எனப்படும்.

* பாங்கர் பகுதிகளைப் பொறுத்த வரை, உயரமான உடங்களில் அமைந்துள்ளதால், வெள்ளத்தினால் அரிக்கப்படாமல் உள்ளது.

* ஆற்றுப்பள்ளத்தாக்குளின் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மண் காதர் ஆகும். உத்திரப்பிரதேசத்தில் இம்மண் காதர் என்றும் பஞ்சாப் பகுதியில் இம்மண் பெட் என்றும் வழங்கப்படுகிறது.

* இம்மண் உள்ள இடங்கள் தாழ்நிலங்களாக உள்ளமையால், வெள்ளத்தினால் அரிப்புக்கு உட்படுகிறது.
பஞ்சாப் சமவெளி

* ராவி, பியாஸ், சட்லெஸ் பேபான்ற ஆறுகளின் படிவுகளால் இச்சமவெளி வளப்படுத்தப்படுகிறது. சட்லெஜ் மற்றும் யமுனா நதிகளுக்கிடையில் காக்கர் ஆறு அல்லது சரஸ்வதி ஆறு பாய்கிறது.

இராஜஸ்தான் சமவெளி

* தார் பால்வனத்தின் மருஸ்தாலி மற்றும் ஆரவல்லி மலைத்தொடர்களின் மேற்குப் பகுதிகளில் இச்சமவெளி காணப்படுகிறது.

* கட்ச் வளைகுடாவை நோக்கிப் பாயும் லூனி ஆறு இச்சமவெளியை வளப்படுத்துகிறது. சாம்பார் எரியும் இச்சமவெளியில் தான் உள்ளது.

கங்கைச் சமவெளி

* சுமார் 3.5 லட்சம் சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இச்சமவெளி உத்திரப்பிரதேசம், பீகார், மேறு வங்காளம் ஆகிய பகுதிகளில் அமைகிறது.

* கங்கை மற்றும் அதன் துணை ஆறுகளால் இச்சமவெளி உருவாகிறது. இச்சமவெளியின் கீழ்ப்பகுதிகளில்தான்  கங்கையின் டெல்டா படிகிறது.

* கங்களையின் பழைய டெல்டா அடுக்கினை பரின்ட் என்பர். கங்கையின் விளைவாகவே சுந்தர்பன் டெல்டா படிகிறது.

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு

* இதனை அஸ்ஸாம் பள்ளத்தாக்கு என்றும் அழைப்பர். பிரம்மபுத்திராவின் படிவுகளால் இச்சமவெளிப்பகுதி உருவாகிறது. கிழக்கிலிருந்து மேற்காக தாழ்வாக உள்ளது.

* பிரம்மபுத்திரா தனது மிகப் பரந்த டெல்டாவை பங்களாதேசத்தில் உருவாக்குகிறது.

* அருணாச்சலப் பிரதேசத்தில் பிரம்மபுத்திரா பகுதி திஹாங் என்றும், திபெத்தில் ஸாங்போ என்றும் அழைக்கப்படுகிறது.

தீபகற்ப பீடபூமி

* இப்பீடபூமி வடசமவெளிக்குத் தெற்கில் காணப்படுகிறது. இது பழமையானதும், கடினமானதுமான படிகப் பாறைகளால் ஆனதாகும்.

* நர்மதை ஆறு அமைந்துள்ள பிளவுப்பள்ளத்தாக்கு இப்பீடபூமியை வட, தென் பகுதிகளாகப் பிரிக்கிறது. வடக்கில் அமைந்த சிறிய பீடபூமிப் பிரதேசத்தை மாளவப் பீடபூமி என்றும், பெரிய பீடபூமியை தக்காணப் பீடபூமி என்றும் வழங்குவர்.

மாளவப் பீடபூமி

* மாளவப் பீடபூமியின் மேற்குப் பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரும், தெற்கில் விந்திய மலைத்தொடரும், மாளவப்பீடபூமியின் வடமேற்கில் இராஜஸ்தான் பாலைவனமும் அமைந்துள்ளது.

* ஆரவல்லி மலைத்தொடரில் தான் மவுண்ட் அபு (கோடை வாசஸ்தலம்) மற்றும் குரு ஷிக்கார் ஆகிய முக்கிய சிகரங்கள் உள்ளன.

* இப்பீடபூமியில் தான் பண்டில்கண்ட் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கு அமைந்துள்லது. மாளவப் பீடபூமி இந்தியாவின் கனிமச் சுரங்கங்களின் இருப்பிடம் ஆகும்.

* மாளவப் பீடபூமியின் கிழக்கில்தான் தாமோதர் நதியினால் உருவாக்கப்பட்ட சோட்டா நாகபுரி பீடபூமிப்பகுதி அமைந்துள்ளது.

* ஆரவல்லி மலைத்தொடர் தான் உலகின் மிகப்பழமையான மலைத்தொடர் (எஞ்சிய மலைகள்) ஆகும். மாளவப்பீடபூமியின் பெரும்பகுதி மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

* மாளவப் பீடபூமி சிறிய முக்கோண வடிவத்தில் உள்ளது. மாளவப்பீடபூமியின் மிக உயர்ந்த சிகரம் மவுண்ட் அபு (குறு ஷிகார்) என்பதாகும்.

தக்காணப் பீடபூமி

* நர்மதைப் பிளவிற்குத் தெற்கில் தக்காணப்பீடபூமி உள்ளது. தக்காணப் பீடபூமி தலைகீழ் முக்கோண வடிவில் அமைந்துள்ளது.

* இதன் வடக்குப் பகுதியில் சாத்பூரா தொடர், மைக்கால் தொடர், ஹசாரிபாக் தொடர் ஆகியன அமைந்துள்ளன. நர்மதா மற்றும் தபதி நதிகளுக்கிடையில் சாத்பூரா தொடர் அமைந்துள்ளது.

* தக்காணப் பீடபூமியின் மேற்கு எல்லை மேற்குத் தொடர்ச்சி மலை என்னும் பெயருடன் வடக்கு தெற்காக உள்ளது. வடக்கில் சஹாயத்ரி என்றும், இடையில் நீலகிரி என்றும், முடிவில் ஆனைமலை, ஏலமலை என்றும் பெயர் பெறும் இம்மலைத் தொடர்ச்சி உண்மையில் மலையே அன்று.

* பீடபூமியின் உயர்ந்த மேற்கு விளிம்பே ஆகும். இவ்விளிம்பு மேற்கில் வன்சரிவுடன் குறுகிய அரபிக்கடற்கறையை அடைகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை தெற்கில் உயரம் மிகுந்துள்ளது.

* இதன் உயர்ந்த சிகரம் கேரளாவில் உள்ள ஆனைமுடி (2695 மீ) ஆகும். இச்சிகரம் ஆனைமலையில் உள்ளது.

* மேற்குத் தொடர்ச்சி மலையில் தால்காட், போர்காட், பால்காட், தார்வார், ஆரியங்காவு, ஆரல்வாய் மொழிக் கணவாய் போன்ற கணவாய்கள் உள்ளன.

* அத்துடன் மேற்குத் தொடர்ச்சியின் முகட்டில் இருந்து நிலம் கிழக்கு நோக்கி மென்சரிவுடன் சாய்கிறது. தக்காணப் பீடபூமியின் கிழக்கு எல்லையிலும் மலைகள் காணப்படுகின்றன. இவை கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகும்.

* எனினும் இவை தொடர்ச்சியானவை அல்ல. அத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலை போன்று உயரமானவையும் அல்ல.

* ஆறுகளின் நர்மதை மற்றும் தபதி ஆகிய இரு ஆறுகள் மட்டும் மேற்கு நோக்கிப் பாய்கின்றன. பிற ாறுகள் அனைத்தும் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன.

* கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் அனைத்தும் அகன்ற டெல்டாக்களை அமைக்கின்றன. ஆனால் நர்மதையும் தபதியும் அவ்விதமான டெல்டாக்களை அமைக்கவில்லை,

* தக்காணப் பீடபூமியின்  மூன்று பக்கங்கள் மலைகளால் சூழப்பட்டும், கிழக்கு நோக்கிச் சரிந்தும் காணப்படுகிறது.

* கிழக்குத் தொடர்ச்சி மலைகளும், மேற்குத்தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மலையில் உள்ள தொட்டபெட்டா(2637 மீ) (தமிழகத்தின் உயர்ந்த சிகரம்) சிகரத்தில் இணைகின்றன.

* கிழக்குத் தொடர்ச்சி மலையில் நல்லமலை (ஆந்திரப்பிரதேசம்), ஜவ்வாது மலை (தமிழ்நாடு), கொல்லி மலை (தமிழ்நாடு), பச்சமலை (தமிழ்நாடு) ஆகிய மலைகள் உள்ளன.

* மேற்குத் தொடர்ச்சி மலையில் அPந்தா குன்றுகள் (மகாராஷ்டிரா), நீலகிரி மலைகள், ஆனைமலை, ஏலக்காய் மலை, அகத்திய மலை போன்றவைகள் உள்ளன.

கடற்கரைச் சமவெளிகளும் தீவுகளும்

* தக்காணப் பீடபூமியின் கிழக்கில் கிழக்குக் கடற்கரைச் சமவெளியும், மேற்கில் மேற்குக் கடற்கரைச் சமவெளியும் அமைந்துள்ளன.

* கிழக்குக் கடற்கரைக் சமவெளி மகாநதி டெல்டா பகுதியிலிருந்து கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. 50 முதல் 250 கிமீ வரை அமைந்துள்ளது.

* மகாநதி டெல்டா, கிருஷ்ணா டெல்டா, கோதாவரி டெல்டா ஆகிய டெல்டாக்கள் இக்கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ளன. சில்கா ஏரி மற்றும் புலிக்காட் ஏரி ஆகிய இரண்டும் இதில் தான் உள்ளன.

* கிழக்குக் கடற்கரைச் சமவெளியை சோழ மண்டலக் கடற்கரை என்றும் வழங்குவர்.

* சோழ மண்டலக் கடற்கரையின் வடபகுதி அதாவது ஒரிசா மாநிலத்தின் கடற்கரைப்பகுதி, உத்கல் கடற்கரைச் சமவெளி என்றும், அதன்கீழ் வடசார்க்கார் கடற்கரைச் சமவெளி (ஆந்திரப்பகுதி) என்றும் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் காவிரி டெல்டா இக்கடற்கரைச் சமவெளியின் சிறப்பம்சம் ஆகும்.

* மேற்குக் கடற்கரைச் சமவெளி வடக்கில் சூரத் (குஜராத்) முதல் தெற்கில் திருவனந்தபுரம் (கேரளா) வரை பரவியுள்ளது. இக்கடற்கரைச் சமவெளியின் வடபகுதி கொங்கணக் கடற்கரை என்றும், தென்பகுதி மலையாளக் கடற்கரை அல்லது மலபார் கடற்கரை என்றும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நடுப்பகுதி கன்னடக் கடற்கரை என்றும் வழங்கப்படுகிறது.

* வெம்புநாடு என்னும் உப்பு ஏரி இக்கடற்கரைச் சமவெளியில் தான் அமைந்துள்ளது. இக்கடற்கரைச் சமவெளியில் தான் மும்பை மற்றும் மப்மகோவா துறைமுகங்கள் அமைந்துள்ளன.

* தீபகற்ப இந்தியாவின் பிளவுகள் ஏற்பட்டபோது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கில் வடக்கு தெற்காக ஏற்பட்ட பிளவின் வழியே நிலப்பகுதி கடலில் அமிழ்ந்தது.

அவ்வாறு நிலப்பகுதி அமிழ்ந்ததால்தான் மேற்குக்க கடற்கரை உருவானது. எனவேதான் மேற்குக் கடற்கரை நேராகவும், குறுகலாகவும் காணப்படுகிறது.

* இந்தியப் பெருங்கடலில் சுமார் 350 தீவுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான தீவுகள் மிகவும் சிறியவை. இவை இரு பிரிவுகளாக உள்ளன. அவை:1. அந்தமான் மற்றும் நிக்கோபார் 2. இலட்சத் தீவுகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

* இவை வங்காள விரிகுடாவில் அந்தாமான் என்றும் நிக்கோபார் தீவுகள் என்றும் இரு பிரிவுகளாக அமைந்துள்ளன. இவை மொத்தம் 300 தீவுகள் உள்ளன.

* அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைப் பிரிப்பது Ten Degree Channel என அழைக்கப்படுகிறது. இதன் தலைநகர் போர்ட்ப்லேயர் ஆகும். இந்தியாவின் தென்கோடி

முனையாகிய இந்திரா முனை இங்குதான் உள்ளது. இந்திரா முனை நிக்கோபார் தீவுகளில்தான் உள்ளது.

* வடக்கில் அந்தமான் தீவுகளும், தெற்கில் நிக்கோபார் தீவுகளும் அமைந்துள்ளன. இங்கு பாரன் மற்றும் நார்கெடாம் தீவுகளில் எரிமலைகள் உள்ளன.

* சில தீவுகளில் பவழப்பாறைகள் உள்ளன. அந்தமானில் உள்ள உயர்ந்த சிகரம் சாடில் சிகரம் ஆகும்.

இலட்சத் தீவுகள்

* அரபிக்கடலில், கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 320 கிமீ தொலைவில் இலட்சத்தீவுகள் உள்ளன. இவற்றில் வளைம் போன்ற அமைப்போடு காணப்படுவை தீவுகள் எனப்படுகின்றன.

* மொத்தம் 27 தீவுகள் காணப்படுகின்றன. இவற்றில் 17 தீவுகளில் மனிதர்கள் வசிக்கவில்லை. இதன் நகரம் கவரட்டி. பாம்பன் மற்றும் இராமேஸ்வரம் தீவுகள்

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளன.

* தெற்கே கடைசியாக உள்ள தீவு மினிகாய் தீவு ஆகும். இவை எட்டு டிகிரி கணவாய் இலட்சத்தீவில் அமைந்துள்ளன. மேலும் பவழப்பாறைகள் இலட்சத்தீவில் காணப்படுகின்றன.

இந்திய வடிகாலமைப்பு

* பொதுவாக இந்தியாவில் பாயும் ஆறுகளை இருவகைகளாகப் பிரிக்கலாம். அவை: 1. வடஇந்திய ஆறுகள் 2. தென்னிந்திய ஆறுகள் அல்லது தீபகற்ப ஆறுகள்.

வடஇந்திய ஆறுகள்

* வடஇந்திய ஆறுகளில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகள் அடங்கி உள்ளன.

* வட இந்திய ஆறுகள் தென்மேற்குப் பருவக்காற்று மழை மற்றும் பனி உருகி வரும் நீரால் ஆண்டு முழுவதும் வெள்ளம் கொண்டவை. இவ்வாறுகள் நீர் மின் உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இவை உள்னாட்டு நீர் வழிப் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன.

சிந்து

* உலகின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றாகும். 2900 கிமீட்டர் நீளமுடையது. இதில் 709 கிமீ இந்தியாவில் உள்ளது.

* இவை இமயமலையில் உள்ள கயிலைக்குன்றுப் பகுதியில் அமைந்த மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி, பஞ்சாப் வழியாகப் பாய்ந்து, பிறகு பாகிஸ்தான் பகுதியில்

நுழைந்து அரபிக்கடலில் கலக்கிறது. இதன் பெரும்பகுதி பாகிஸ்தானில் உள்ளது.

* ஜீலம் , சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஆறுகள் சிந்துவின் துணையாறுகள் ஆகும் .இவற்றில்ஜீலம், சீனாப் மற்றும் சிந்து ஆகிய பாகிஸ்தானில் பாய்கிறது.

* இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்குமிடையில் 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஆறுகளின் நீரை வரம்பின்றி இந்தியா பயன்படுத்தும் அதிகாரம் பெற்றது.

* பிற இரு துணையாறுகளின் நீர் பயனாக்கம் வரையறுக்கப்பட்டுள்ளது.

* சிந்து நதியால் நமக்குக் கிடைக்கும் நீர் பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் நீர்ப்பாசனத்திற்கும், மின்சக்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

* சிந்து ஆற்றின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாற்றின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும்

பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே நம் பாரதம் இந்திய என்று பெயர் பெற்றது. (ஃஇந்துகுஷ் மலையில் இருந்து வந்ததாகவும் கூறுவர்)

கங்கை

* இந்தியாவின் புனித நதி கங்கை. இவை இமயமலையில் உள்ள கங்கோத்ரி என்ற பனியாற்றில் உற்பத்தி ஆகிறது. இந்த ஆற்றின் நீளம் சுமார் 2510 கிமீ ஆகும்.

* இவை உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் வழியாக பாய்ந்து செல்கிறது. இந்தியப் பரப்பின் 25 சதவீதம் கங்கை நதியின் பரப்பே ஆகும்.

* இமயமலைகளில் அலக்நந்தா மற்றும் பாகீரதி என்னும் இரு தலைப்பிரிவுகளாக உருவாகிறது.

* கங்கையின் முக்கியத் துணையாறு யமுனை. இவை கங்கையுடன் கலக்குமிடம் அலகாபாத்தில் உள்ள பிரயாகை ஆகும்.

* ராம்கங்கா, காக்ரா, கண்டக், பாக்மதி, கோசி, சாரதா, சம்பல், கோமதி, ஹூக்ளி ஆகியவை கங்கையின் துணையாறுகள் ஆகும்.

* ஹரித்துவார், கான்பூர், அலகாபாத், வாரணாசி, பாட்னா, கொல்கத்தா ஆகியன கங்கையின் மீது அமைந்துள்ள முக்கிய நகரங்களாகும்.

* கங்கை தனது கழிமுகப்பகுதியில் பல பிரிவுகளாகப் பிரிந்து சுந்தர்பன் டெல்டாவை உருவாக்கிய பின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

* வங்கதேசத்தில் கங்கை பத்மா என அழைக்கப்படுகிறது.

* கங்கை நதியைப் பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் 1995ல் தேசிய நதி பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1995ல் மத்திய கங்கை நதி அமைப்பும் நிறுவப்பட்டது.

பிரம்மபுத்திரா

* இவை கயிலைக்குன்றுகளில் அமைந்த மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி கிழக்காக திபெத்தில் ஸாங்போ என்ற பெயருடன் இந்தியா மற்றும் லங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்கிறது. இவை 2880 கிமீ நீளமுடையது.

* அருணாச்சலப் பிரதேசத்தில் திஹாங் என்ற பெயருடன் நுழைகிறது.

* அஸ்ஸாமில் பெரும்பாலான போக்குவரத்து பிரம்மபுத்திரா ஆற்றின் மூலமாகவே நடைபெறுகின்றன.

* பிரம்மபுத்திரா, பங்களாதேஷில் பத்மா ஆற்றுடன் இணைந்து உலகின் மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கிய பின் வங்காளா விரிகுடாவில் கலக்கிறது.

* வங்களாத்தில் ஜமூனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தென்னிந்திய ஆறுகள்

* தென்னிந்திய ஆறுகளில் நர்மதை, தபதி, லூனி, சபர்மதி ஆகிய ஆறுகள் மட்டும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. பிற ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்றன.

* கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் மட்டும் டெல்டாவை அமைக்கின்றன. தென்னிந்திய ஆறுகளின் சில முக்கிய ஆறுகள் நர்மதை, தபதி, தாமோதர் ஆறு, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி.

நர்மதை ஆறு

* மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் மிக நீளமான ஆறு நர்மதையே ஆகும். விந்திய சாத்பூரா மலைத்தொடர்களுக்கு இடையில் இந்நதி பாய்கிறது.

* இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமர்கண்டக் என்னும் பகுதியில் உற்பத்தியாகிறது. இது பெரும்பாலும் மத்தியப் பிரதேசத்திலேயே பாய்கிறது. இதில் 10ல் ஒரு பகுதி மட்டுமே குஜராத்தில் பாய்கிறது.

தபதி

* மத்தியப்பிரதேசத்தில் உற்பத்தியாகிறது. 724 கிமீ நீளம் உடையது. அரபிக்கடலில் கலக்கிறது. மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் இரண்டாவது மிக நீளமான ஆறு தபதி ஆகும்.

* மத்தியப்பிரதேசம் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளது.

தாமோதர் ஆறு

* 530 கிமீ நீளமுடைய மகாநதி, மத்தியப்பிரதேசத்தின் அமர்கண்டக் பகுதியிலிருந்து உற்பத்தியாகி, ஒரிசாவை முழுமையாக வளப்படுத்தி, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

* இது கடலில் சேருவதற்கு முன் ஒரு மாபெரும் டெல்டா சமவெளியை உருவாக்குகிறது. மகாநதியின் குறுக்கே தான் ஹிகுராட் ஆணை உள்ளது.

கோதாவரி

* தென்னிந்திய ஆறுகளின் மிகப்பெரிய ஆறு கோதாவரி ஆகும் இந்திய நிலப்பகுதியில் 10 சதவீதம் இதன் பரப்பாகும்.

* 1440 கிமீ நீளமுள்ள இந்த ஆறு மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் பகுதியில் இருந்து உற்பத்தியாகி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மஞ்சிரா, பென்கங்கா, வெயின்கங்கா,

இந்திராவதி, வார்தா ஆகியன இதன் துணை ஆறுகள் ஆகும். தட்சிண கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணா

* மகாராஷ்டிராவில் மகாப்லேஸ்வர் குன்றுகளில் உற்பத்தியாகிறது. தென்னிந்திய ஆறுகளில் இரண்டாவது மிகப்பெரிய ஆறு கிருஷ்ணா.

* இவை மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிருஷ்ணா நதி பாய்கிறது.

* கொய்னா, பஞ்சகங்கா, கதப்ரபா, மலப்ரபா, பீமா, துங்கபத்ரா, வாணா ஆகியவை இதன் துணையாறுகள். இவைகள் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

காவிரி
* தென் கங்கை என்றழைக்கப்படும் ஆறு. கர்நாடகாவில் உள்ள குடகு மலைக்கருகில் தலைக்காவிரி என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது இதன் நீளம் 760 கிமீ நீளமுடையது.

* கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாகப் பாய்ந்து வங்காள வரிகுடாவில் கலக்கிறது. காவிரி அமைந்துள்ள டெல்டாவினையே தஞ்சை டெல்டா என்கிறோம். பவானி,

நொய்யல், அமராவதி போன்றவை இதன் துணையாறுகள்.

* காவிரி பாயும் மாநிலங்கள் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியன.

* காவிரியில் தென்மேற்குப் பருவகாலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படும்.

* காவிரி நதியின் குறுக்கே கர்நாடகத்தில் கண்ம்பாடி என்னும் இடத்தில் கிருஷ்ணராஜசாகர் என்ற அணையும், தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் ஸ்டானில் அணையும் கட்டப்பட்டுள்ளன.

* திருச்சிக்கு மேற்கில் காவிரி இரண்டாகப் பிரிந்து ஸ்ரீரங்கம் தீவைத் தோற்றுவிக்கின்றன.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...