22 November, 2014

இன்றைய கேள்விகள்-22/11/14

1. ' மும்மணிக்கோவை ,' என்ற நூலின் ஆசிரியர் 
A.அழகிய சொக்கநாதர் 
B.பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
C.இராமச்சந்திரக்கவிராயர் 
D.தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் 

2.இரட்டை மணிமாலையின் ஆசிரியர் யார் ?
A.திருமூலர் 
B.மாணிக்கவாசகர்
C.ஆண்டாள்
D.காரைக்கால்அம்மையார்

3.உலக நீதி என்னும் நூலை இயற்றியவர் 
A.ஒளவையார்
B.உலகநாதர் 
C.சிவப்பிரகாச சுவாமிகள்
D.அதிவீர ராமபாண்டியன் 

4.சீதக்காதி நொண்டி நாடகம் யாரால் இயற்றப்பட்டது ?
A.உமறுப்புலவர் 
B.பனு அகமது மரைக்கையார்
C.குணங்குடி மஸ்தான்
D.பீர் முகமது 

5.புதிய ஆத்திச்சூடியைப் படைத்தவர் 
A.பாரதிதாசன் 
B.பாரதியார் 
C.வாணிதாசன் 
D.சுரதா 

6. "தமிழர் தடங்கல்" என்ற நூலை எழுதியவர் 
A.க ப அறவாணன் 
B.திரு வி க 
C.தேவநேயப்பாவாணர்
D.மு . வரதராசனார் 
"
7." ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் "- இதில் அமைந்துள்ள மோனை 
A.ஒரூ உ மோனை 
B.பொழிப்பு மோனை 
C.கீழ்க்கதுவாய் மோனை 
D.கூழை மோனை 
(ஓரூஉ மோனை 1, 4
         ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் மோனை ஓரூஉ மோனை
ஆகும்.
(எ.கா) ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்)

8. "உப்பில்லாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும் "- இதில் அமைந்துள்ள மோனை 
A.முற்றுமோனை 
B.ஒரூ உ மோனை 
C.இணை மோனை
D.பொழிப்பு மோனை  
( ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் மோனை பொழிப்பு
மோனை ஆகும்.)

9. " எறும்புந்தன் கையால் எண் சாண் " -என்று பாடியவர் 
A.வெள்ளிவீதியார் 
B.காக்கைப்பாடினியார்
C.நச்செள்ளையார் 
D.ஒளவையார் 

10.சற்புத்திர மார்க்கம் எந்த நெறியில் அடங்கியுள்ளது ?
A.தோழமை நெறி 
B.மெய்ம்மை நெறி 
C.நன்மகன்மை நெறி 
D.தொண்டு நெறி 

11.மதோன்மத்தர் என்பது யாரைக் குறிக்கிறது ?
A.திருமால் 
B.சிவன் 
C.முருகன் 
D.இந்திரன் 

12.தமிழ்விடுதூது எந்த வெண்பாவினால் அமைந்தது ?
A.கலிப்பா 
B.வஞ்சிப்பா 
C.ஆசிரியப்பா 
D.வெண்பா 

13.போலிப் புலவர்களின் தலையில் குட்டுபவர் 
A.அதிவீரராம பாண்டியர்
B.ஒட்டக்கூத்தர்
C.வில்லிப்புத்தூரார்
D.கம்பர் 

14. "பதுமத்தான் "என்ற சொல் குறிக்கும் சொல் 
A.முருகன் 
B.பிரம்மன் 
C.சிவன் 
D.விஷ்ணு 

15.மார்போலையில் எழுதும் எழுத்தாணியாக முத்தொள்ளாயிரம் கூறுவது 
A.ஈட்டி 
B.தூரிகை 
C.தந்தம் 
D.வேல் 

இசையமுது - 6 ஆம் வகுப்பு சமச்சீர்


மழையே மழையே வா வா -- நல்ல
வானப்புனலே வா வா! --இவ் 
வையத்தமுதே வாவா!

தகரப்பந்தல் தணதண வென்னத்
தாழும் குடிசை சளசள என்ன
நகரப்பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் குங்கண கணகண வென்ன மழையே...

ஏரி குளங்கள் வழியும்படி, நா
டெங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி மழையே...

தழையா வாழ்வும் தழைக்கவும் -- மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவாரெல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் மழையே...

சொல்பொருள்
  •  வானப்புனல் - மழைநீர்
  •  வையத்து அமுது - உலகின் அமுதம்
  •  வையம் - உலகம்
  •  தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்
  • புனல் - நீர்
  • பொடி - மகரந்தப் பொடி
  •  தழை - செடி 
  •   தழையா வெப்பம் - பெருகும் வெப்பம், குறையா வெப்பம்
  •   தழைத்தல் - கூடுதல், குறைதல்
  •  தழைக்கவும் - குறையவும்.
ஆசிரியர்க் குறிப்பு 
  •  புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் - பாரதிதாசன்.
  •  இயற்பெயர் - கனகசுப்புரத்தினம்
  •   பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
  •   காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)
  •   பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்
  •   திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.
  •   படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.
  •  கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.
  •   கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.
  •  இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.
  •   பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...