23 July, 2014

சாலைப் போக்குவரத்து



தங்க நாற்கரச் சாலைத் திட்டம்

தங்கநாற்கரச் சாலைத் திட்டம் என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிப்பாதைகளாக மாற்றும் திட்டம் ஆகும். இத்திட்டம் 1998ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. மேற்கூறிய நான்கு நகரங்களையும் இணைக்கும் கோடு நாற்கரமாகக் காணப்படுவதால் இது தங்கநாற்கரச் சாலைத் திட்டம் எனப் பெயரிடப் பட்டது. தற்போது 90 சதவீதத்திற்கும் மேலாக பணிகள் நிறைவடைந்து விட்டன. இதன் மொத்த நீளம் 5,846 கிலோ மீட்டர்கள் ஆகும்.

தேசிய நெடுஞ்சாலை 47A (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 47A பொதுவாக என்எச் 47A என குறிப்பிடப்படுகிறது. வில்லிங்டன் தீவு மற்றும் கொச்சி நகரங்களை இணைக்கிறது. இதன் நீளம் 6 கிமீ (3.7 மை).இந்தியாவின் மிக நீளம் குறைந்த தேசிய நெடுஞ்சாலை ஆகும்

தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை NH7, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசியையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 2369 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை ஆறு மாநிலங்களூடாகச் செல்கிறது. இது இந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை.இது வடக்கு தெற்கு விரைவு சாலையின் ஒரு பகுதியாக இருக்கிறது

எல்லையோர சாலை(BRO) அமைப்பால் உலகத்திலேயே உயரமான இடத்தில் (4270மீ)மனாலியையும்  காஷ்மீரிலுள்ள லே என்ற இடத்தையும் இணைத்துள்ளது .

பொருத்துக,பொருந்தாத இணையைக் கண்டறிக


இக்காலக் கவிதைகள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்









மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன்



சுமித்திரா மகஜன்  பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் பதினாறாவது மக்களவையின் மக்களவைத் தலைவரும் ஆவார்.

2014இல் எட்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் வென்றுள்ளார். பதினாறாவது மக்களவையில் இவ்வாறு எட்டுமுறை வென்ற மூவரில் ஒருவராக உள்ளார்.

மிக நீண்டகாலம் உறுப்பினராக உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.  1989ஆம் ஆண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து வென்று வந்துள்ளார்.

முந்தைய பாஜக ஆட்சியில் நடுவண் இணை அமைச்சராக 2002 முதல் 2004 வரை இருந்துள்ளார். மனிதவள மேம்பாடு, தொலைத்தொடர்பு, பெட்றோலியம் துறைகளில் அமைச்சராகப் பணி புரிந்துள்ளார். இந்தூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் சட்டமும் படித்துள்ளார்.

இன்றைய கேள்விகள் - 23/07/2014

1.பொருந்தா இணையைக் காண்க 
  1. அலைஓசை –   சாகித்ய அகாடமி விருது
  2. குருதிபுனல் –    ஞானபீட பரிசு
  3. சுந்தர காண்டம் – தஞ்சை தமிழ்                                                                                            பல்கலைகழகப் பரிசு
  4.  சித்திரப்பாவை - ஞானபீட பரிசு
2. சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது 

  1. நுபுவ்வத்துக் காண்டம்
  2. விலாதத்து காண்டம் 
  3. ஹிஜ்ரத்து காண்டம்
  4. மேற்கூறிய அனைத்தும் 

3. ரா பி சேதுபிள்ளையின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் எது ?
  1. தமிழின்பம்
  2. ஊரும் பேரும்
  3. வீரமாநகர்
  4. திருவள்ளுவர் நூல் நயம் 
4. முதன்முதலில் தமிழ் உள்ளிட்ட மொழிகளைத்  
" திராவிட மொழிக்குடும்பம் " என்று பெயரிட்டு தனி மொழிக்குடும்பத்தை 
உருவாக்கியவர் யார் ?
  1. எமனோ 
  2. எல்லீஸ் 
  3. ஜி யு போப் 
  4. கால்டுவெல் 
விடைகள் 
  1. குருதிபுனல் –    ஞானபீட பரிசு
  2. நுபுவ்வத்துக் காண்டம்
  3. தமிழின்பம்
  4. கால்டுவெல் 


முதல் "சோலார்' விமானம் வெள்ளோட்டம்


சூரிய ஆற்றலில் (சோலார்) இயங்கும் முதல் விமானம் அடுத்த ஆண்டு உலகத்தை சுற்றி வர முயற்சி மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அதற்கான வெள்ளோட்டம் ஸ்விட்சர்லாந்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்விட்சர்லாந்தின் பேயர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட "சோலார் இம்பல்ஸ் 2' (எஸ்ஐ2) என்ற விமானம் 2 மணி நேரம் 17 நிமிடங்களுக்கு வானத்தில் பறந்த பின்னர் விமான நிலையத்துக்கு திரும்பி வந்தது.

மார்கஸ் ஷெர்டெல் என்ற விமானி இந்த வெள்ளோட்டத்தை நடத்தினார்.
ஒருவர் மட்டும் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சோலார் விமானங்களில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இருவரும் முதன் முறையாக உலகத்தை சுற்றிவரும் முயற்சியாக 2015ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கவுள்ளனர்.

கார்பன் இழையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சோலார் விமானத்தின் இறகுகளின் நீளம் 72 மீட்டராகும். இது போயிங் 747-8ஐ ரக விமானத்தைக் காட்டிலும் பெரியது. மேலும், ஒரு காருக்கு சமமான 2,300 கிலோ எடை உடையதாகும்.

இந்த விமானத்தில் 17,000 சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதிலுள்ள 633 கிலோ எத்தியம் ரீசார்ஜ் பேட்டரிகள் இரவில் விமானம் பறக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...