06 October, 2014

இந்தியா - இயற்கையமைப்பு


* சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியது. சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் புவியியல் மாறுபாடுகளின் விளைவாக டெர்ஷியரி கால டெத்திஸ் என்ற மிகப்பெரிய கடல் பகுதியிலிருந்து மேலெழுந்து இமயமலைகள் தோன்றின.

* புவியியல் கொள்கையின்படி, துவக்க காலத்தில் பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே நிலப்பகுதியாக இருந்ததென்று கருதப்படுகிறது. ஒரே தொகுப்பான அப்பகுதி பேஞ்சியா என்று அழைக்கப்பட்டது. அதைச்சுற்றி பேன்தலாசா என்ற நீர்ப்பரப்பும் காணப்பட்டது.

* பேஞ்சியா நிலப்பகுதி டெத்திஸ் என்ற தாழ்வான இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு காலப் போக்கில், அந்த ஒன்றை நிலப்பகுதி சிறிது சிறிதாக இரண்டு பெரிய நிலப்பரப்புகளாக உடைந்தன.

* வடக்கில் உடைந்த பகுதி அங்காரா நிலப்பகுதி என்றும், தெற்கில் உடைந்த பகுதி கோண்ட்வானா நிலப்பகுதி என்றும் அழைக்கப்பட்டது.

* அவ்வாறு தெற்கில் உடைந்த கோண்ட்வானா நிலப்பகுதியில் இருந்து காலப்போக்கில் சிறிது சிறிதாகப் பிரிந்து வந்ததே இந்தியத் துணைக்கண்டமாகும்.

* நிலத்தோற்றம், நில உள்ளமைப்பு, வடிகாலமைப்பு, காலநிலை, இயற்கைத்தாவரம் மற்றும் மண் ஆகிய இயற்கைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்படும் வட்டாரம் இயற்கை வட்டாரம் எனப்படும்.

* ஒருமித்த புவியியல் கூறுகளை உள்ளக்கிய ஓர் நிலப்பகுதி வட்டாரம் எனப்படுகிறது.

* இந்தியாவின் இயற்கையமைப்பை 3 பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன 1. வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள் 2. வடக்கிலுள்ள சமவெளிப்பகுதிகள் 3.தீபகற்ப பீடபூமிப் பகுதி ஆகியன.


வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள்

* காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை கிழக்கு மேற்காக சுமார் 2500 கிமீ நீளம் வரை இமயமலைகள் சங்கிலித் தொடர் போன்று பரவியுள்ளது.

* அத்துடன் இவை சுமார் 150 முதல் 400 கிமீ அகலம் வரை உள்ளது. மேற்கில் சுமார் 400 கிமீ அகலத்துடனும், கிழக்கில் சமார் 150 கிமீ அகலத்துடனும் காணப்படுகிறது.

* இமயமலைகள் இந்தியாவிற்கு வடக்கில் ஓர் இயற்கை அரணாக அமைந்துள்ளது. இளம் மடிப்பு மலைகளால் (Young Fold Mountains) ஆனதே இமயமலைகள் ஆகும்.

* இமயமலை மத்திய ஆசியாவின் பாமீர் முடிச்சில் இருந்து, (பாமீர் முடிச்சு உலகின் கூரை என்று குறிப்பிடப்படுகிறது) தொடங்குகிறது.

* இந்த இமயமலைத் தொகுப்பை நாம் மூன்று உட்பிரிவுகளாகக் காண்போம். அவையான அ) பெரும் இமாலயத் தொடர் (Greater Himalayas) ஆ.மத்திய இமாலயத் தொடர் (Middle Himalayas) இ. புற இமாலயத் தொடர் (Outer Himalayas)


பெரும் இமயமலைத் தொடர்கள்

* உலகின் உயர்ந்த மலைத்தொடர்கள் இங்குதான் உள்ளன. இவற்றிற்கு ஹிமாத்ரி தொடர் என்றும் வேறு பெயர் உண்டு காரகோரம், லடாக், கைலாயம், ஜாஸ்கர் போன்ற மலைத்தொடர்கள் இதில் உள்ளன.

* காரகோரம் மலைத்தொடரில் தான் காட்வின் ஆஸ்டின் அல்லது K2 என்ற உலகின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரம் அமைந்துள்ளது. இதன் உயரம் 8611 மீட்டர் ஆகும்.

* K2 என்பது தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ளது. கைபர் மற்றும் போலன் கணவாய்களும் தற்போது பாகிஸ்தானில் தான் உள்ளன.

* இவை தவிர பால்ட்ரோ பனியாறு, சியாச்சின் பனியாறு போன்றவைகளாலும் இத்தொடர் புகழ் பெறுகிறது.

* மக்காலு, தவளகிரி, நங்க பர்வதம், நந்தா தேவி போன்ற பிற சிகரங்களும் இத்தொடரில் தான் அமைந்துள்ளன. மேலும் இத்தொடரில் சில முக்கியக் கணவாய்கள் உள்ளன.

* காஷ்மீரிலுள்ள காரகோரம், கணவாய், இமாச்சலப் பிரதேசத்திலுள்ள ஷிப்கிலா கணவாய், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள பொம்டிலா கணவாய் ஆகிய குறிப்பிடத்தக்கவை.

* பெரும் இமாலயத் தொடர்கள் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டிருக்கும். ஹிமம் என்றால் பனி என்று பொருள், ஹிமாலயா என்றால் பனியின் இருப்பிடம் என்று பொருள்.

* வடக்குப் பகுதியில் இத்தொடர்களில்தான் உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் (8848 மீ) அமைந்தள்ளது. இது நேபாளத்தில் அமைந்துள்ளது. இதற்கு சாகர் மாதா என்றும் பெயர் வவங்கப்படும்.

* அத்துடன் கஞ்சன் ஜங்கா மலைத்தொடரில், 8598 மீ உயரமுடைய, இந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான கஞ்சன் ஜங்கா சிகரம் விளங்குகிறது. இது சிக்கிம் மாநிலத்தில் உள்ளது.


மத்திய இமயமலைத் தொடர்கள்

* ஹிமாச்சல் தொடர்கள் என்றும் இதற்கு வேறுபெயர் உண்டு. சுமார் 3000 முதல் 4500 மீட்டர் உயரமுடையவை.ஹிமாத்ரி தொடருக்குத் தெற்கே அமைந்துள்ளது.

* பீர் பாஞ்சால், குமாயுன், மகாபாரத், திம்பு ஆகிய மலைத்தொடர்கள் இதில் அமைந்துள்ளன. இவற்றில் பீர் பாஞ்சால் தொடர் காஷ்மீரிலும், தவுளதார்தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத் தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத்தொடர்கள் நேபாளத்திலும் அமைந்துள்ளன.

* புகழ்பெற்ற பீர்பாஞ்சால் மற்றும் காஷ்மீர் பள்ளதாக்கு இத்தொடரில் உள்ளன. இதில் அதிக  உயரத்தில் உள்ள கோடை வாசஸ்தலம் குல்மார்க் ஆகும்.

* மேலும் டல்ஹெளசி (இமாச்சலப் பிரதேசம்), தர்மசாலா, சிம்லா (இமாச்சலப் பிரதேசம்), முசெளரி (உத்திரப் பிரதேசம்), நைனிடால் (உத்திராஞ்சல்), டார்ஜிலிங் (மேற்கு வங்காளம்) ஆகிய கோடை வாசஸ்தலங்கள் அமைந்துள்ளன.


புற இமயமலைத் தொடர்கள்

* இமயமலைகளின் தெற்குமுனைப்பகுதி இது. சிவாலிக் கொடர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. சராசரியாக 1000 மீ உயரமுடையது. தராய் காடுகள் இங்கு காணப்படுகிறது.

* இத்தொடர் தொடர்சிசியற்றுக் காணப்படுகிறது. இத்தொடருக்கும், மத்திய இமாலயத் தொடருக்கும் இடையில் பல பள்ளத்தாக்குகள் உள்ளன. அவை டூன்கள் என்றழைக்கப்படுகின்றன.

* டேராடூன் அத்தகைய பள்ளத்தாக்கே ஆகும். இத்தொடரின் கிழக்குப் பகுதியில் பூர்வாஞ்சல் குன்றுகள் உள்ளன. மேலும் இத்தொடரில் தான் காசி குன்றுகள், காரோ குன்றுகள், ஜெயந்தியா குன்றுகள் ஆகியன மேகாலயாவில் அமைந்துள்ளன. இத்தொடரில் பெருமளவு மண்ணரிப்பு நடைபெறுகிறது.

* மேற்காணும் பிரிவுகள் போலவே இமயமலைகளை திசைகளை அடிப்படையாகக் கொண்டும் பிரிப்பர்.

* ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாலங்களிலுள்ள இமயமலைகள் மேற்கு இமயமலைகள் என்றும், உத்திரப்பிரதேசம், நேபாளம் ஆகிய இடங்களிலுள்ளவை * மத்திய இமயமலைகள் என்றும், மேற்கு வங்காளம், சிக்கிம், பூடான், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் உள்ள இமயமலைகள் கிழக்கு இமயமலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

* குமாயுன் பள்ளத்தாக்கு உத்திரப்பிரதேசத்திலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு (பூமியின் சொர்க்கம்) ஜம்மு-காஷ்மீரிலும் அமைந்துள்ளன.


தீபகற்ப இந்திய மலைத்தொடர்கள்

* தீபகற்ப இந்தியாவில் மூன்று மலைத்தொடர்கள் உள்ளன. 1.விந்திய-சாத்பூரா மலைகள் 2. மேற்குத்தொடர்ச்சி மலைகள் 3. கிழக்குக்குன்றுகள் ஆகியன. இவற்றில் விந்திய சாத்பூரா மலைகள் ந்ரமதை நதி பள்ளத்தாக்கிற்கு இணையாக மேற்கு-கிழக்கான செல்லுகின்றன. இவை உண்மையில் நர்மதா பள்ளத்தாக்கின் பக்கச்சுவர்களே உண்மையில் மலைகளே அல்ல. இம்மலைகள் வாரணாசிக்கு அருகில் முடிவடைகின்றன.

* சாத்பூரா மலைகள் நர்மதைக்கும் தபதிக்கும் இடையே காணப்படுகின்றன. இம்மலைகளின் பாறைகள் தக்காண, லாலா பீடமூபூமி பாறை வகைகளைச் சார்ந்தவை. இவை வரலாற்று காலத்தில் ஏற்பட்ட மடிப்பு மவைகள் ஆகும்.

* சாத்பூரா என்றால் ஏழு மடிப்புகள் என்று பொருள்படும் சாத்பூரா மலைகள் மிகப் பழமையான மடிப்பு மலைகள்.

* இவ்வாறே தீபகற்ப இந்தியாவின் மேற்கில் மேற்கு கடற்கரைக்கு இணையாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. தபதி நதியின் முகத்துவாரத்திலிருந்து கன்னியாகுமரி வரை வடக்கு தெற்காவும் அமைந்துள்ளன.

* இத்தொடரில் மூன்று கணவாய்களும் உள்ளன. வடக்கில் தால்காட் போர்காட் கணவாய்களும், தெற்கில் பாலக்காட்டுக் கணவாயும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் உயரமான சிகரங்கள் உள்ளன.

* குறிப்பாக, நீலகிரி மலைகள் தொட்டபெட்டாவும், ஆனைமலையில் ஆனைமுடியும் குறிப்பிடத்தக்கவை. பழனிமலை, கொடைக்கானல் மலை, குற்றால மலை ஆகியனவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்தவை.

* கோடை வாழிடங்களான உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, ஆகியனவும் இம்மலைத் தொடரில் உள்ளன.

* கிழக்குக் குன்றுகள் கிழக்குக்  கடற்கரைச் சமவெளியை ஒட்டி அமைந்துள்ளன. தொடர்ச்சியற்ற பல குன்றுகளாகவும் உள்ளன. ஒரிசா மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டிச் செல்கின்றன.

* பின்னர் தென்மேற்காகச் சென்று நீலகரியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன் இணைகின்றன. இதில் திருப்பதி மலை, ஜவ்வாது மலை, கொல்லி மலை, பச்சைமலை ஆகியவை முக்கியமானவை. ஏற்காடு, ஏலகிரி ஆகியவை இம்மலைகளில் முக்கிய சுற்றுலாத் தலங்கள்.


வடக்கில் உள்ள சமவெளிப் பகுதிகள்

* இமயமலைகளின் அடிப்பகுதியிலிருந்து தீபகற்ப இந்தியாவின் வடபகுதி வரை சுமார் 7.5 இலட்சம் சதுர கிலோ மீட்டர் வரை சமவெளிகள் பரந்துள்ளன.

* பஞ்சாப் சமவெளி முதல் அல்லாம் பள்ளத்தாக்கு வரையில் இச்சமவெளி பரவியுள்ளது. சுமார் 3200 கிமீ நீளமும், 150 முதல் 300 கிமீ வரை அகலும் உடையது. வண்டல் படிவுகளால் ஆனது.

* இமயமலையிலிருந்து தோன்றும் ஆறுகளால் இப்பகுதி வளப்படுத்தப்படுகிறது. இச்சமவெளியின் உயர்நிலப் பகுதி பாங்கர் மண்ணால் ஆன வளம் மிக்க பகுதியாகும்.

* மேலும் இச்சமவெளியின் தாழ்நிலப்பகுதி காதர் மண்ணால் ஆனது.

* ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு இடைப்பட்ட, தோவாப் பகுதிகளில் உயரமான இடங்களில் பழமையான படிவு மண் காணப்படுகிறது. இதுவே பாங்கர் ஆகும்.

* எனினும் பாங்கர் நிலப்பகுதிகளில், சமச்சீரற்ற சுண்ணாம்புப்படிவுகள் உள்ளன. இவை கான்கர் எனப்படும்.

* பாங்கர் பகுதிகளைப் பொறுத்த வரை, உயரமான உடங்களில் அமைந்துள்ளதால், வெள்ளத்தினால் அரிக்கப்படாமல் உள்ளது.

* ஆற்றுப்பள்ளத்தாக்குளின் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மண் காதர் ஆகும். உத்திரப்பிரதேசத்தில் இம்மண் காதர் என்றும் பஞ்சாப் பகுதியில் இம்மண் பெட் என்றும் வழங்கப்படுகிறது.

* இம்மண் உள்ள இடங்கள் தாழ்நிலங்களாக உள்ளமையால், வெள்ளத்தினால் அரிப்புக்கு உட்படுகிறது.
பஞ்சாப் சமவெளி

* ராவி, பியாஸ், சட்லெஸ் பேபான்ற ஆறுகளின் படிவுகளால் இச்சமவெளி வளப்படுத்தப்படுகிறது. சட்லெஜ் மற்றும் யமுனா நதிகளுக்கிடையில் காக்கர் ஆறு அல்லது சரஸ்வதி ஆறு பாய்கிறது.

இராஜஸ்தான் சமவெளி

* தார் பால்வனத்தின் மருஸ்தாலி மற்றும் ஆரவல்லி மலைத்தொடர்களின் மேற்குப் பகுதிகளில் இச்சமவெளி காணப்படுகிறது.

* கட்ச் வளைகுடாவை நோக்கிப் பாயும் லூனி ஆறு இச்சமவெளியை வளப்படுத்துகிறது. சாம்பார் எரியும் இச்சமவெளியில் தான் உள்ளது.

கங்கைச் சமவெளி

* சுமார் 3.5 லட்சம் சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இச்சமவெளி உத்திரப்பிரதேசம், பீகார், மேறு வங்காளம் ஆகிய பகுதிகளில் அமைகிறது.

* கங்கை மற்றும் அதன் துணை ஆறுகளால் இச்சமவெளி உருவாகிறது. இச்சமவெளியின் கீழ்ப்பகுதிகளில்தான்  கங்கையின் டெல்டா படிகிறது.

* கங்களையின் பழைய டெல்டா அடுக்கினை பரின்ட் என்பர். கங்கையின் விளைவாகவே சுந்தர்பன் டெல்டா படிகிறது.

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு

* இதனை அஸ்ஸாம் பள்ளத்தாக்கு என்றும் அழைப்பர். பிரம்மபுத்திராவின் படிவுகளால் இச்சமவெளிப்பகுதி உருவாகிறது. கிழக்கிலிருந்து மேற்காக தாழ்வாக உள்ளது.

* பிரம்மபுத்திரா தனது மிகப் பரந்த டெல்டாவை பங்களாதேசத்தில் உருவாக்குகிறது.

* அருணாச்சலப் பிரதேசத்தில் பிரம்மபுத்திரா பகுதி திஹாங் என்றும், திபெத்தில் ஸாங்போ என்றும் அழைக்கப்படுகிறது.

தீபகற்ப பீடபூமி

* இப்பீடபூமி வடசமவெளிக்குத் தெற்கில் காணப்படுகிறது. இது பழமையானதும், கடினமானதுமான படிகப் பாறைகளால் ஆனதாகும்.

* நர்மதை ஆறு அமைந்துள்ள பிளவுப்பள்ளத்தாக்கு இப்பீடபூமியை வட, தென் பகுதிகளாகப் பிரிக்கிறது. வடக்கில் அமைந்த சிறிய பீடபூமிப் பிரதேசத்தை மாளவப் பீடபூமி என்றும், பெரிய பீடபூமியை தக்காணப் பீடபூமி என்றும் வழங்குவர்.

மாளவப் பீடபூமி

* மாளவப் பீடபூமியின் மேற்குப் பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரும், தெற்கில் விந்திய மலைத்தொடரும், மாளவப்பீடபூமியின் வடமேற்கில் இராஜஸ்தான் பாலைவனமும் அமைந்துள்ளது.

* ஆரவல்லி மலைத்தொடரில் தான் மவுண்ட் அபு (கோடை வாசஸ்தலம்) மற்றும் குரு ஷிக்கார் ஆகிய முக்கிய சிகரங்கள் உள்ளன.

* இப்பீடபூமியில் தான் பண்டில்கண்ட் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கு அமைந்துள்லது. மாளவப் பீடபூமி இந்தியாவின் கனிமச் சுரங்கங்களின் இருப்பிடம் ஆகும்.

* மாளவப் பீடபூமியின் கிழக்கில்தான் தாமோதர் நதியினால் உருவாக்கப்பட்ட சோட்டா நாகபுரி பீடபூமிப்பகுதி அமைந்துள்ளது.

* ஆரவல்லி மலைத்தொடர் தான் உலகின் மிகப்பழமையான மலைத்தொடர் (எஞ்சிய மலைகள்) ஆகும். மாளவப்பீடபூமியின் பெரும்பகுதி மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

* மாளவப் பீடபூமி சிறிய முக்கோண வடிவத்தில் உள்ளது. மாளவப்பீடபூமியின் மிக உயர்ந்த சிகரம் மவுண்ட் அபு (குறு ஷிகார்) என்பதாகும்.

தக்காணப் பீடபூமி

* நர்மதைப் பிளவிற்குத் தெற்கில் தக்காணப்பீடபூமி உள்ளது. தக்காணப் பீடபூமி தலைகீழ் முக்கோண வடிவில் அமைந்துள்ளது.

* இதன் வடக்குப் பகுதியில் சாத்பூரா தொடர், மைக்கால் தொடர், ஹசாரிபாக் தொடர் ஆகியன அமைந்துள்ளன. நர்மதா மற்றும் தபதி நதிகளுக்கிடையில் சாத்பூரா தொடர் அமைந்துள்ளது.

* தக்காணப் பீடபூமியின் மேற்கு எல்லை மேற்குத் தொடர்ச்சி மலை என்னும் பெயருடன் வடக்கு தெற்காக உள்ளது. வடக்கில் சஹாயத்ரி என்றும், இடையில் நீலகிரி என்றும், முடிவில் ஆனைமலை, ஏலமலை என்றும் பெயர் பெறும் இம்மலைத் தொடர்ச்சி உண்மையில் மலையே அன்று.

* பீடபூமியின் உயர்ந்த மேற்கு விளிம்பே ஆகும். இவ்விளிம்பு மேற்கில் வன்சரிவுடன் குறுகிய அரபிக்கடற்கறையை அடைகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை தெற்கில் உயரம் மிகுந்துள்ளது.

* இதன் உயர்ந்த சிகரம் கேரளாவில் உள்ள ஆனைமுடி (2695 மீ) ஆகும். இச்சிகரம் ஆனைமலையில் உள்ளது.

* மேற்குத் தொடர்ச்சி மலையில் தால்காட், போர்காட், பால்காட், தார்வார், ஆரியங்காவு, ஆரல்வாய் மொழிக் கணவாய் போன்ற கணவாய்கள் உள்ளன.

* அத்துடன் மேற்குத் தொடர்ச்சியின் முகட்டில் இருந்து நிலம் கிழக்கு நோக்கி மென்சரிவுடன் சாய்கிறது. தக்காணப் பீடபூமியின் கிழக்கு எல்லையிலும் மலைகள் காணப்படுகின்றன. இவை கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகும்.

* எனினும் இவை தொடர்ச்சியானவை அல்ல. அத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலை போன்று உயரமானவையும் அல்ல.

* ஆறுகளின் நர்மதை மற்றும் தபதி ஆகிய இரு ஆறுகள் மட்டும் மேற்கு நோக்கிப் பாய்கின்றன. பிற ாறுகள் அனைத்தும் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன.

* கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் அனைத்தும் அகன்ற டெல்டாக்களை அமைக்கின்றன. ஆனால் நர்மதையும் தபதியும் அவ்விதமான டெல்டாக்களை அமைக்கவில்லை,

* தக்காணப் பீடபூமியின்  மூன்று பக்கங்கள் மலைகளால் சூழப்பட்டும், கிழக்கு நோக்கிச் சரிந்தும் காணப்படுகிறது.

* கிழக்குத் தொடர்ச்சி மலைகளும், மேற்குத்தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மலையில் உள்ள தொட்டபெட்டா(2637 மீ) (தமிழகத்தின் உயர்ந்த சிகரம்) சிகரத்தில் இணைகின்றன.

* கிழக்குத் தொடர்ச்சி மலையில் நல்லமலை (ஆந்திரப்பிரதேசம்), ஜவ்வாது மலை (தமிழ்நாடு), கொல்லி மலை (தமிழ்நாடு), பச்சமலை (தமிழ்நாடு) ஆகிய மலைகள் உள்ளன.

* மேற்குத் தொடர்ச்சி மலையில் அPந்தா குன்றுகள் (மகாராஷ்டிரா), நீலகிரி மலைகள், ஆனைமலை, ஏலக்காய் மலை, அகத்திய மலை போன்றவைகள் உள்ளன.

கடற்கரைச் சமவெளிகளும் தீவுகளும்

* தக்காணப் பீடபூமியின் கிழக்கில் கிழக்குக் கடற்கரைச் சமவெளியும், மேற்கில் மேற்குக் கடற்கரைச் சமவெளியும் அமைந்துள்ளன.

* கிழக்குக் கடற்கரைக் சமவெளி மகாநதி டெல்டா பகுதியிலிருந்து கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. 50 முதல் 250 கிமீ வரை அமைந்துள்ளது.

* மகாநதி டெல்டா, கிருஷ்ணா டெல்டா, கோதாவரி டெல்டா ஆகிய டெல்டாக்கள் இக்கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ளன. சில்கா ஏரி மற்றும் புலிக்காட் ஏரி ஆகிய இரண்டும் இதில் தான் உள்ளன.

* கிழக்குக் கடற்கரைச் சமவெளியை சோழ மண்டலக் கடற்கரை என்றும் வழங்குவர்.

* சோழ மண்டலக் கடற்கரையின் வடபகுதி அதாவது ஒரிசா மாநிலத்தின் கடற்கரைப்பகுதி, உத்கல் கடற்கரைச் சமவெளி என்றும், அதன்கீழ் வடசார்க்கார் கடற்கரைச் சமவெளி (ஆந்திரப்பகுதி) என்றும் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் காவிரி டெல்டா இக்கடற்கரைச் சமவெளியின் சிறப்பம்சம் ஆகும்.

* மேற்குக் கடற்கரைச் சமவெளி வடக்கில் சூரத் (குஜராத்) முதல் தெற்கில் திருவனந்தபுரம் (கேரளா) வரை பரவியுள்ளது. இக்கடற்கரைச் சமவெளியின் வடபகுதி கொங்கணக் கடற்கரை என்றும், தென்பகுதி மலையாளக் கடற்கரை அல்லது மலபார் கடற்கரை என்றும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நடுப்பகுதி கன்னடக் கடற்கரை என்றும் வழங்கப்படுகிறது.

* வெம்புநாடு என்னும் உப்பு ஏரி இக்கடற்கரைச் சமவெளியில் தான் அமைந்துள்ளது. இக்கடற்கரைச் சமவெளியில் தான் மும்பை மற்றும் மப்மகோவா துறைமுகங்கள் அமைந்துள்ளன.

* தீபகற்ப இந்தியாவின் பிளவுகள் ஏற்பட்டபோது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கில் வடக்கு தெற்காக ஏற்பட்ட பிளவின் வழியே நிலப்பகுதி கடலில் அமிழ்ந்தது.

அவ்வாறு நிலப்பகுதி அமிழ்ந்ததால்தான் மேற்குக்க கடற்கரை உருவானது. எனவேதான் மேற்குக் கடற்கரை நேராகவும், குறுகலாகவும் காணப்படுகிறது.

* இந்தியப் பெருங்கடலில் சுமார் 350 தீவுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான தீவுகள் மிகவும் சிறியவை. இவை இரு பிரிவுகளாக உள்ளன. அவை:1. அந்தமான் மற்றும் நிக்கோபார் 2. இலட்சத் தீவுகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

* இவை வங்காள விரிகுடாவில் அந்தாமான் என்றும் நிக்கோபார் தீவுகள் என்றும் இரு பிரிவுகளாக அமைந்துள்ளன. இவை மொத்தம் 300 தீவுகள் உள்ளன.

* அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைப் பிரிப்பது Ten Degree Channel என அழைக்கப்படுகிறது. இதன் தலைநகர் போர்ட்ப்லேயர் ஆகும். இந்தியாவின் தென்கோடி

முனையாகிய இந்திரா முனை இங்குதான் உள்ளது. இந்திரா முனை நிக்கோபார் தீவுகளில்தான் உள்ளது.

* வடக்கில் அந்தமான் தீவுகளும், தெற்கில் நிக்கோபார் தீவுகளும் அமைந்துள்ளன. இங்கு பாரன் மற்றும் நார்கெடாம் தீவுகளில் எரிமலைகள் உள்ளன.

* சில தீவுகளில் பவழப்பாறைகள் உள்ளன. அந்தமானில் உள்ள உயர்ந்த சிகரம் சாடில் சிகரம் ஆகும்.

இலட்சத் தீவுகள்

* அரபிக்கடலில், கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 320 கிமீ தொலைவில் இலட்சத்தீவுகள் உள்ளன. இவற்றில் வளைம் போன்ற அமைப்போடு காணப்படுவை தீவுகள் எனப்படுகின்றன.

* மொத்தம் 27 தீவுகள் காணப்படுகின்றன. இவற்றில் 17 தீவுகளில் மனிதர்கள் வசிக்கவில்லை. இதன் நகரம் கவரட்டி. பாம்பன் மற்றும் இராமேஸ்வரம் தீவுகள்

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளன.

* தெற்கே கடைசியாக உள்ள தீவு மினிகாய் தீவு ஆகும். இவை எட்டு டிகிரி கணவாய் இலட்சத்தீவில் அமைந்துள்ளன. மேலும் பவழப்பாறைகள் இலட்சத்தீவில் காணப்படுகின்றன.

இந்திய வடிகாலமைப்பு

* பொதுவாக இந்தியாவில் பாயும் ஆறுகளை இருவகைகளாகப் பிரிக்கலாம். அவை: 1. வடஇந்திய ஆறுகள் 2. தென்னிந்திய ஆறுகள் அல்லது தீபகற்ப ஆறுகள்.

வடஇந்திய ஆறுகள்

* வடஇந்திய ஆறுகளில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகள் அடங்கி உள்ளன.

* வட இந்திய ஆறுகள் தென்மேற்குப் பருவக்காற்று மழை மற்றும் பனி உருகி வரும் நீரால் ஆண்டு முழுவதும் வெள்ளம் கொண்டவை. இவ்வாறுகள் நீர் மின் உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இவை உள்னாட்டு நீர் வழிப் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன.

சிந்து

* உலகின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றாகும். 2900 கிமீட்டர் நீளமுடையது. இதில் 709 கிமீ இந்தியாவில் உள்ளது.

* இவை இமயமலையில் உள்ள கயிலைக்குன்றுப் பகுதியில் அமைந்த மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி, பஞ்சாப் வழியாகப் பாய்ந்து, பிறகு பாகிஸ்தான் பகுதியில்

நுழைந்து அரபிக்கடலில் கலக்கிறது. இதன் பெரும்பகுதி பாகிஸ்தானில் உள்ளது.

* ஜீலம் , சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஆறுகள் சிந்துவின் துணையாறுகள் ஆகும் .இவற்றில்ஜீலம், சீனாப் மற்றும் சிந்து ஆகிய பாகிஸ்தானில் பாய்கிறது.

* இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்குமிடையில் 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஆறுகளின் நீரை வரம்பின்றி இந்தியா பயன்படுத்தும் அதிகாரம் பெற்றது.

* பிற இரு துணையாறுகளின் நீர் பயனாக்கம் வரையறுக்கப்பட்டுள்ளது.

* சிந்து நதியால் நமக்குக் கிடைக்கும் நீர் பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் நீர்ப்பாசனத்திற்கும், மின்சக்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

* சிந்து ஆற்றின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாற்றின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும்

பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே நம் பாரதம் இந்திய என்று பெயர் பெற்றது. (ஃஇந்துகுஷ் மலையில் இருந்து வந்ததாகவும் கூறுவர்)

கங்கை

* இந்தியாவின் புனித நதி கங்கை. இவை இமயமலையில் உள்ள கங்கோத்ரி என்ற பனியாற்றில் உற்பத்தி ஆகிறது. இந்த ஆற்றின் நீளம் சுமார் 2510 கிமீ ஆகும்.

* இவை உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் வழியாக பாய்ந்து செல்கிறது. இந்தியப் பரப்பின் 25 சதவீதம் கங்கை நதியின் பரப்பே ஆகும்.

* இமயமலைகளில் அலக்நந்தா மற்றும் பாகீரதி என்னும் இரு தலைப்பிரிவுகளாக உருவாகிறது.

* கங்கையின் முக்கியத் துணையாறு யமுனை. இவை கங்கையுடன் கலக்குமிடம் அலகாபாத்தில் உள்ள பிரயாகை ஆகும்.

* ராம்கங்கா, காக்ரா, கண்டக், பாக்மதி, கோசி, சாரதா, சம்பல், கோமதி, ஹூக்ளி ஆகியவை கங்கையின் துணையாறுகள் ஆகும்.

* ஹரித்துவார், கான்பூர், அலகாபாத், வாரணாசி, பாட்னா, கொல்கத்தா ஆகியன கங்கையின் மீது அமைந்துள்ள முக்கிய நகரங்களாகும்.

* கங்கை தனது கழிமுகப்பகுதியில் பல பிரிவுகளாகப் பிரிந்து சுந்தர்பன் டெல்டாவை உருவாக்கிய பின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

* வங்கதேசத்தில் கங்கை பத்மா என அழைக்கப்படுகிறது.

* கங்கை நதியைப் பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் 1995ல் தேசிய நதி பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1995ல் மத்திய கங்கை நதி அமைப்பும் நிறுவப்பட்டது.

பிரம்மபுத்திரா

* இவை கயிலைக்குன்றுகளில் அமைந்த மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி கிழக்காக திபெத்தில் ஸாங்போ என்ற பெயருடன் இந்தியா மற்றும் லங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்கிறது. இவை 2880 கிமீ நீளமுடையது.

* அருணாச்சலப் பிரதேசத்தில் திஹாங் என்ற பெயருடன் நுழைகிறது.

* அஸ்ஸாமில் பெரும்பாலான போக்குவரத்து பிரம்மபுத்திரா ஆற்றின் மூலமாகவே நடைபெறுகின்றன.

* பிரம்மபுத்திரா, பங்களாதேஷில் பத்மா ஆற்றுடன் இணைந்து உலகின் மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கிய பின் வங்காளா விரிகுடாவில் கலக்கிறது.

* வங்களாத்தில் ஜமூனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தென்னிந்திய ஆறுகள்

* தென்னிந்திய ஆறுகளில் நர்மதை, தபதி, லூனி, சபர்மதி ஆகிய ஆறுகள் மட்டும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. பிற ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்றன.

* கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் மட்டும் டெல்டாவை அமைக்கின்றன. தென்னிந்திய ஆறுகளின் சில முக்கிய ஆறுகள் நர்மதை, தபதி, தாமோதர் ஆறு, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி.

நர்மதை ஆறு

* மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் மிக நீளமான ஆறு நர்மதையே ஆகும். விந்திய சாத்பூரா மலைத்தொடர்களுக்கு இடையில் இந்நதி பாய்கிறது.

* இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமர்கண்டக் என்னும் பகுதியில் உற்பத்தியாகிறது. இது பெரும்பாலும் மத்தியப் பிரதேசத்திலேயே பாய்கிறது. இதில் 10ல் ஒரு பகுதி மட்டுமே குஜராத்தில் பாய்கிறது.

தபதி

* மத்தியப்பிரதேசத்தில் உற்பத்தியாகிறது. 724 கிமீ நீளம் உடையது. அரபிக்கடலில் கலக்கிறது. மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் இரண்டாவது மிக நீளமான ஆறு தபதி ஆகும்.

* மத்தியப்பிரதேசம் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளது.

தாமோதர் ஆறு

* 530 கிமீ நீளமுடைய மகாநதி, மத்தியப்பிரதேசத்தின் அமர்கண்டக் பகுதியிலிருந்து உற்பத்தியாகி, ஒரிசாவை முழுமையாக வளப்படுத்தி, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

* இது கடலில் சேருவதற்கு முன் ஒரு மாபெரும் டெல்டா சமவெளியை உருவாக்குகிறது. மகாநதியின் குறுக்கே தான் ஹிகுராட் ஆணை உள்ளது.

கோதாவரி

* தென்னிந்திய ஆறுகளின் மிகப்பெரிய ஆறு கோதாவரி ஆகும் இந்திய நிலப்பகுதியில் 10 சதவீதம் இதன் பரப்பாகும்.

* 1440 கிமீ நீளமுள்ள இந்த ஆறு மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் பகுதியில் இருந்து உற்பத்தியாகி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மஞ்சிரா, பென்கங்கா, வெயின்கங்கா,

இந்திராவதி, வார்தா ஆகியன இதன் துணை ஆறுகள் ஆகும். தட்சிண கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணா

* மகாராஷ்டிராவில் மகாப்லேஸ்வர் குன்றுகளில் உற்பத்தியாகிறது. தென்னிந்திய ஆறுகளில் இரண்டாவது மிகப்பெரிய ஆறு கிருஷ்ணா.

* இவை மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிருஷ்ணா நதி பாய்கிறது.

* கொய்னா, பஞ்சகங்கா, கதப்ரபா, மலப்ரபா, பீமா, துங்கபத்ரா, வாணா ஆகியவை இதன் துணையாறுகள். இவைகள் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

காவிரி
* தென் கங்கை என்றழைக்கப்படும் ஆறு. கர்நாடகாவில் உள்ள குடகு மலைக்கருகில் தலைக்காவிரி என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது இதன் நீளம் 760 கிமீ நீளமுடையது.

* கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாகப் பாய்ந்து வங்காள வரிகுடாவில் கலக்கிறது. காவிரி அமைந்துள்ள டெல்டாவினையே தஞ்சை டெல்டா என்கிறோம். பவானி,

நொய்யல், அமராவதி போன்றவை இதன் துணையாறுகள்.

* காவிரி பாயும் மாநிலங்கள் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியன.

* காவிரியில் தென்மேற்குப் பருவகாலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படும்.

* காவிரி நதியின் குறுக்கே கர்நாடகத்தில் கண்ம்பாடி என்னும் இடத்தில் கிருஷ்ணராஜசாகர் என்ற அணையும், தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் ஸ்டானில் அணையும் கட்டப்பட்டுள்ளன.

* திருச்சிக்கு மேற்கில் காவிரி இரண்டாகப் பிரிந்து ஸ்ரீரங்கம் தீவைத் தோற்றுவிக்கின்றன.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...