20 September, 2014

இந்திய போக்குவரத்து



 இரயில் போக்குவரத்து

* இந்திய போக்குவரத்தின் அடிப்படை பரிமாணங்கள் இரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப்போக்குவரத்து எனலாம்.

* இந்திய இருப்புப் பாதையானது 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பொது மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

* உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய இரயில்வே அமைப்பைக் கொண்ட நாடு இந்தியா.

* உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டு ஒரே துறையாக செயல்பட்டு வரும் துறை - இந்திய ரயில்வே துறை.

* இந்தியாவின் முதல் இருப்புப் பாதை பம்பாயிலிருந்து தானா வரை(34 கி.மீட்டர்) 1853ல் துவங்கப்பட்டது.

* தற்போது இந்திய இருப்புப் பாதைகளின் நீளம் சுமார் 63,140 கி.மீ.

* இந்திய இரயில்வே தினமும் 14,444 தொடர்வண்டிகளை இயக்கி வருகின்றன.

* 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மொத்தம் 47 தொடர்வண்டி அமைப்புகள் இருந்து வந்தன. அவைகள் 1951-ல் தேசியமயமாக்கப்பட்டது. அதாவது நாட்டுடமையாக்கப்பட்டது.

* இந்திய இரயில்வே Brod Guage - 50 சசவீதமும், Metre Gauge - 43 சதவீதமும், Narrow Gauge -  7 சதவீதம் என்று மூன்று வகையான இருப்புப் பாதைகளை அமைத்து செயல்பட்டு வருகின்றன.

* இந்திய ரயில்வே 16 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் வடக்கு இரயில்வே சுமார் 11000 கி.மீ நீள இருப்புப் பாதையுடன் மிக நீண்டதாக விளங்குகிறது.

* இந்திய இரயில்வே 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி தனது 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

* கொங்கன் இரயில்வே திட்டம் மார்ச் 1990ல் துவங்கப்பட்டது. இத்திட்டம் கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களை குறுகிய வழியில் இணைக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் சுமார் 760 கி.மீ. தூரத்தை இணைக்கிறது.

* இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சதாப்தி அதிவேக இரயில் இயங்கி வருகின்றன.

* புதுதில்லிக்கும் மும்பைக்கும் இடையே செல்லும் அதிவிரைவு இரயில்களிலும், ராஜஸ்தானில் இயங்கக்கூடிய அரண்மனை இராஜஸ்தானி இரயிலிலும் தொலைபேசி வசதிகள் செய்யப்பட்ட இரயில்கள் இயங்கி வருகின்றன.

* 1994 ஆம் ஆண்டு முதல் அதிவிரைவு இரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய இரயில்வே.

* 1985-ல் நீராவி இரயில் இயந்திரங்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது.

* 1995-ல் இரயில் முன்பதிவு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.

இந்திய இரயில்வே மண்டலங்கள் மற்றும் தலைமையிடம், தொடங்கப்பட்ட ஆண்டு, பயணிக்கும் தூரங்கள்(கிமீ):

01. வடக்கு இரயில்வே (NR ) 1952 -ம் ஆண்டு முதல் 6968 கிமீ தூரம் தலைமையிடம் - தில்லி

02. வடகிழக்கு இரயில்வே (NER ) 14.4.1952-ம் ஆண்டு முதல் 3667 கி.மீ தூரம் தலைமையிடம் கோரக்பூர்.

03. வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே (NFR ) 15.01.1958 -ம் ஆண்டு முதல் 3907 கி.மீ தலைமையிடம் - குவஹாத்தி

04. கிழக்கு இரயில்வே (ER ) 1952-ம் ஆண்டு முதல் 2414 கி.மீ தலைமையிடம் கொல்கத்தா.

05. தென்கிழக்கு இரயில்வே (SER ) 1955-ம் ஆண்டு முதல் 2631 கி.மீ. தலைமையிடம் கொல்கத்தா.

06. தென்மத்திய இரயில்வே (SCR ) 02.10.1966 -ம் ஆண்டு முதல் 5803 கி.மீ தலைமையிடம் செகந்திராபாத்.

07. தென்னக இரயில்வே (SR ) 14.04.1951 -ம் ஆண்டு முதல் 5098 கி.மீ தலைமையிடம் சென்னை.

08. மத்திய இரயில்வே (CR)  05.11.1951 -ம் ஆண்டு முதல் 3905 கி.மீ தலைமையிடம் மும்பை

09. மேற்கு இரயில்வே (WR) 05.11.1951 -ம் ஆண்டு முதல்  6182 கி.மீ தலைமையிடம் மும்பை

10. தென்மேற்கு இரயில்வே (SWR) 01.04.2003-ம் ஆண்டு முதல் 3177 கி.மீ தலைமையிடம் ஹூப்ளி

11. வடமேற்கு இரயில்வே (NWR) 01.10.2002 -ம் ஆண்டு முதல் 5459 கி.மீ. தலைமையிடம் ஜெய்ப்பூர்

12. மேற்குமத்திய இரயில்வே (WCR)  01.04.2003 -ம் ஆண்டு 2965 கி.மீ. தலைமையிடம் ஜபல்பூர்

13. வடமத்திய இரயில்வே (NCR) 01.04.2003 -ம் ஆண்டு முதல் 3151 கி.மீ. தலைமையிடம் அலகாபாத்

14. தென்கிழக்குமத்திய இரயில்வே (SECR)  01.04.2003 -ம் ஆண்டு முதல் 2447 கி.மீ. தலைமையிடம் பிலாஸ்பூர்

15. கிழக்குக்கடற்கரை இரயில்வே (ECoR) 01.04.2003 -ம் ஆண்டு முதல் 2572 கி.மீ. தலைமையிடம் புவனேஸ்வர்

16. கிழக்குமத்திய இரயில்வே (ECR) 01.10.2002 -ம் தேதி ஆண்டு முதல் 3628 கி.மீ. தலைமையிடம் ஹாஜிபூர்

சாலைப் போக்குவரத்து

* இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு வரையிலான மதிப்பீட்டின்படி இந்தியாவில் 33 லட்சம் கி.மீ.க்கும் அதிகமான தொலைவி்ற்கு சாலை வசதிகள் உள்ளன.

* இந்திய மாநிலங்களில் கர்நாடகா மிக நீண்ட சாலைகளுடன் (64000 கி.மீ) முதலிடத்தை பெற்று வருகிறது.

* சாலைகளை பொருத்தவரை தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், கிராம வழிச் சாலைகள், சர்வதேச சாலைகள் என்று பல வகைகளில் செயல்பட்டு வருகின்றன.

* இந்தியாவின் எல்லா மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக சுமார் 30 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

* தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் தங்கநாற்கரத் திட்டம் (Golden Quardrilateral Connecting four Metropolican Cities) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நான்கு முக்கிய நகரங்களான தில்லி, மும்பை, சென்னை மற்றும் கல்கத்தா ஆகியவை இணைக்கப்பட உள்ளன.(5952 கி.மீ)

* வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் விதமாக சுமார் 7300 கி.மீ நீளத்தில் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* தேசிய நெடுஞ்சாலைகளுக்கான திட்டங்கள் அனைத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.

* இந்திய சாலை கட்டுமான நிறுவனம் 562.88 கோடி இழப்பால், தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் கீழ் இந்நிறுவனம் 2000ம் ஆண்டு களைக்கப்பட்டது

வான்வழிப் போக்குவரத்து

* இந்தியாவில் மொத்தம் 5 சர்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை: 01. இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையம், பாலம், தில்லி 02. டம் டம் விமான நிலையம். 03. கல்கத்தா, சாந்தா குரூஸ் விமான நிலையம், கல்கத்தா 04. சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம் 05. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்.

* ஏர் இந்தியா நிறுவனம் 1953-ல் தோற்றுவிக்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு வரை சுமார் 90 நாடுகளுடன் விமானத் தொடர்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது.

* ஏர் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு வான்வழிப் போக்குவரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

* 1953-ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

* Pawan Hans Limited என்ற நிறுவனம் தேவைப்படும் நபர்களுக்கு ஹெலிகாப்டர் சரிவீஸ் வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. பொதுவாக எண்ணெய் நிறுவனங்கள் இவற்றின் பயன்பாட்டைப் பெரிதும் பெற்று வருகின்றன.


நீர்வழிப் போக்குவரத்து

உள்நாட்டு நீர்வழிகளின் மேம்பாட்டிற்காக 1985-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி கப்பல் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் 1986 அக்டோபர் 27-ல் இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் அமைக்கப்பட்டது.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமையகம் - உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ளது.

* இந்தியாவின் பன்னாட்டு வர்த்தகத்தில் நீர்வழிப்பாதை போக்குவரத்து மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.

* வளரும் நாடுகளிடையே சரக்குக் கப்பல்களின் நிலையில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது.

* இந்தியாவில் பெரிய துறைமுகங்களும், சிறிய துறைமுகங்களும் என இரு துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன. 12 பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

* மேற்குக் கடற்கரையில் கண்ட்லா, மும்பை, மர்மகோவா, மங்களூர் மற்றும் கொச்சி துறைமுகங்களும், கிழக்குக் கடற்கரையில் கொல்கத்தா, பாரதீப் விசாகப்பட்டினம்,

சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களும் அமைந்துள்ளன.

* கண்ட்லா துறைமுகம் ஒரு Tidal Port ஆகும்.

* விசாகப் பட்டினம் துறைமுகம் ஆழமிகுந்த துறைமுகமாக செயல்பட்டு வருகிறது.

* சென்னை துறைமுகம் ஒரு செயற்கைத் துறைமுகமாகும்.

* சமீப காலமாக தமிழகத்தின் எண்ணூர் துறைமுகம் 12-வது பெரிய துறைமுகமாக செயல்பட்டு வருகிறது.

* மும்பை ஒரு சிறந்த இயற்கைத் துறைமுகமாகும். சூயஸ் கால்வாய் வழியாக வரும் கப்பல்கள் மும்பையில் தங்கிப் பின்னர் செல்கின்றன.

* மேற்கு ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகளை நோக்கியிருக்கும் மும்பை துறைமுகத்தை இந்தியாவின் மேற்கு வாயில் என்பர். இதுவே இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் முதல் துறைமுகமாகும்.

* மும்பை துறைமுகத்தின் நெரிசலைத் தவிர்ப்பதற்காக நவஹேவா என்னுமிடத்தில் கட்டப்பட்ட துறைமுகம் ஜவகர்லால் நேரு துறைமுகம் ஆகும். இது ஒரு நவீன துறைமுகம் ஆகும்.

* போர்ச்சுகீசிய துறைமுகமாக இருந்த மர்மகோவா துறைமுகமும் ஒரு முக்கிய இந்திய இயற்கைத் துறைமுகமாகும். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் இரும்புத் தாதுவில் சுமார் 60 சதவிதம் இத்துறைமுகத்தின் வழியாகவே ஏற்றுமதியாகிறது.

* கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள புதிய மங்களூர் துறைமுகம் குதிரேமுக் என்ற இடத்தில் உள்ள இரும்புத் தாதுக்களை ஏற்றுமதி செய்ய இத்துறைமுகம் பயன்படுகிறது.

* நீர்வழிப் போக்குவரத்தில் அலகாபாத் முதல் ஹால்தியா வரையிலான நீர்வழிப்பாதை NW-1 என்று குறிப்பிடப்படுகிறது.

நன்றி 
தினமணி 

இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்


* ஒரு திட்டங்களின் மூலம் பல நோக்கங்களை சென்றடைவதே பல்நோக்குத் திட்டங்கள் ஆகும். இவை ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களே ஆகும்.

* ஒரு ஆற்றுப்பகுதி முழுவதும் ஒரு திட்டத்திற்குரிய பரப்பாகவே கருதப்படுகின்றன. இத்திட்டங்கள் நீர்ப்பாசனம், நீர் வளம், வெள்ளத் தடுப்பு, தொழில் வளம், மண் அரிப்பு தடுப்பு, காடு வளர்ப்பு, மீன் பிடிப்பு, மின் சக்தி் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்படுகின்றன.

* ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் நவீன இந்தியாவின் புதிய கோயில்கள் என்று புகழப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களின் முதல் பல்நோக்குத் திட்டமாக

அமைக்கப்பட்ட திட்டம் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் ஆகும். இவை வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் திட்டமாகும்.

தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம்

* சோட்டா நாகபுரி பகுதியிலிருந்து மேற்கு வங்காளம் வரை பாய்ந்து வருகிறது தாமோதர் நதி.

* தாமோதர் நதி கோடைக்காலங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை வெள்ளத்தில் மூழ்கச் செய்து வருகின்றன.

* இதனால் தாமோதர் ஆறு இந்தியாவின் துயரம் என்று வர்ணிக்கப்படுகிறது.

* 1948ல் தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம் துவங்கப்பட்டது.

* இக்கழகம் சுமார் ரூ.150 கோடியில் திலாயா, கோனார்.பாஞ்சத், மைதான் ஆகிய நான்கு இடங்களில் அணைகளைக் கட்டியுள்ளது.

* மேலும் தாமோதர் பள்ளத்தாக்கில் காணப்படும் இரும்பு மற்றும் நிலக்கரி வளத்தையும் பயன்படுத்த ஆலோசித்து வருகின்றன.

* இத்திட்டத்தின் உதவியால் ஜாம்ஷெட்பூர், துர்க்காப்பூர், குல்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளும் மிகுந்த  பயன் பெற்றி வருகின்றன.

* இத்திட்டத்தின் பயனை பீகார் (ஜார்க்கண்ட்) மற்றும் மேற்கு வங்காளம் இரு மாநிலங்களும் பெற்று வருகின்றன. மேலும் மத்தியப்பிரதேசமும் இதன் பயனை பங்கிட்டுக்கொள்கின்றன.

ஹிராகுட் திட்டம்

* இத்திட்டம் மகாநதியின் மீது 1948-ல் தொடங்கப்பட்டு 1957-ல் முடிவடைந்தது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.83 கோடி.

* இத்திட்டத்தின் கீழ் மகாநதியின் மாது ஒரிசாவில் ஒரு நீண்ட அணை கட்டப்பட்டது. அதாவது 4.8 கிமீ நீளமும், 61 மீட்டர் உயரமும் உடைய இந்த அணைக்கட்டுதான்  உலகின் மிக நீண்ட அணைக்கட்டு ஆகும்.

* இந்த அணை சுமார் 810 கோடி கியூபிக் மீட்டர் நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டது. இத்திட்டத்தின் கீழ் 9 மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு 270 மெகாவாட் நீர் மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

* திக்காரா மற்றும் நாராஜ் ஆகிய அணைகள் இத்திட்டத்தின் கீழ் அமைந்துள்ளன. வெள்ளத் தடுப்பு, ஒரிசாவின் இயற்கை வளப்பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இத்திட்டமாகும்.

துங்கபத்ரா திட்டம்

* துங்கபத்ரா நதி, துங்க் மற்றும் பத்ரா ஆகிய இரு ஆறுகளின் இமைப்பாகும்.

* ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியே இத்திட்டமாகும்.

* கர்நாடகாவில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள மல்லபுரம் பகுதியில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 2.5 கிமீ நீளமும், 50 மீ உயரமும் உடையது. இங்கிருந்து சுமார் 225 கிமீ நீளத்திற்கு ஒரு கால்வாயும், 350 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு கால்வாயும் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தின் கீழ் 14 மின் சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு 126 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பக்ரா நங்கல் திட்டம்

* இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்குத் திட்டம் பக்ரா நங்கல் திட்டம் ஆகும். சிந்துவின் துணையாறாகிய சட்லஜ் ஆற்றின் குறுக்கே பக்ரா என்னும் இடத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தினால் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பயன் பெறுகின்றன. இத்திட்டம் நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

* சட்லஜ் ஆற்றின் குறுக்கே, பக்ரா என்னும் இடத்தில் 226 மீட்டர் உயரத்துடன், 518 மீட்டர் நீளத்துடனும் அணை கட்டப்பட்டுள்ளது. பக்ரா உலகின் உயரமான அணை ஆகும்.

* இந்த அணையால் உருவான மனிதனால் கட்டப்பட்ட, 8 மீட்டர் அகலமும், 80 கிமீ நீளமும் கொண்ட மிகப்பெரிய செயற்கை ஏரிக்கு, சீக்கியர்களின் 10-வது குருவான, குரு கோவிந்த் சிங் என்பவரின் நினைவாக கோவிந்த் சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

* பக்ரா அணைக்குக் கீழாக 13 கிமீ தொலைவில் நங்கல் என்னுமிடத்தில் 29 மீட்டர் உயரத்துடன் 305 மீட்டர் நீளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இதுவும் சட்லஜ் ஆற்றின் மீதே அமைந்துள்ளது. இங்கிருந்து நங்கல் நதிநீர்க்கால்வாய் தொடங்குகிறது.

* சட்லஜ் ஆற்றின் மீது பக்ரா நங்கல் அணைக்குக் கீழாக 13 கிமீ தொலைவில் நங்கல் என்னுமிடத்தில் 29 மீட்டர் உயரத்துடன் 305 மீட்டர் நீளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து நங்கல் நதிநீர்க்கால்வாய் தொடங்குகிறது.

* பக்ராவில் 2 மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு, அவற்றின் மூலம் 210 மெகாவாட் நீர் மின்சக்தி பெறப்படுகிறது. மேலும் நங்கல் கால்வாய்த் திட்டத்திலும் 2 மின்சக்தி நிலையங்கள் உள்ளன.

* 64 கிமீ நீளமுடைய நங்கல் கால்வாய் நங்கல் பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக இத்திட்டதினால் 1204 மெகாவாட் மின்சக்தி கிடைக்கிறது. அத்துடன் 1100 கிமீ நீளத்திற்கு கால்வாய்கள் அமைந்துள்ளன. இத்திட்டத்தினால் 15 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது.

கோசி திட்டம்

* பீகாரில் உள்ள கோசி நதியின் மீது நேபாளத்தின் உதவியுடன் கோசி திட்டம் அமைக்கப்பட்டது. வெள்ளத் தடுப்பே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

* கோசி ஆறு பீகாரின் துயரம் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் முக்கிய கால்வாய் ஹனுமான் நகர் தடுப்பு வரை செல்கிறது.

* கோசி திட்டத்தால் பயன் பெறும் மாநிலம் பீகார் மற்றும் நேபாளம்.

* இதே போன்று இந்தியாவும், நேபாளமும் இணைந்து செயல்படுத்தி உள்ள மற்றொரு திட்டம் கண்டக் திட்டமாகும்.

நாகார்ஜூனா திட்டம்

* ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா நதி மீது அமைந்துள்ள திட்டமாகும். புத்த துறவியாகிய நாகார்ஜூனரை நினைவுப்படுத்தும் பொருட்டு நாகார்ஜூன சாகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தின் கீழ், ஆந்திரப்பிரதேசத்தின் நாள்கொண்டா மாவட்டத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.5 கீமி உயரம் 25 மீட்டர் ஆகும்.

* இத்திட்டத்தின் மூலம் 50 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் இரு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பல் பள்ளத்தாக்குத் திட்டம்

* மத்தியப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியே இத்திட்டமாகும்.

* யமுனையின் தெற்கு கிளை நதியே சாம்பல்.

* இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சம்பல் பகுதியின் மண் பாதுகாப்பே ஆகும்.

* இத்திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் காந்தி சாகர் அணையும், இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நீர்த் தடுப்பு மற்றும் ஜவகர் சாகர் அணை, இராணா பிரதாப் சாகர் ஆகிய மூன்று அணைகள் அமைந்துள்ளன.

* இத்திட்டத்தினால் 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு நீர்ப்பாசனம் பெற்று வருகிறது.

ரீகண்ட் திட்டம்

* சோன் நதியின் கிளை நதியான ரீகண்ட் ஆற்றின் குறுக்கே இத்திட்டம் அமைந்துள்ளன. இந்த அணையின் நீர்த்தேக்கம் கோவிந்த் வல்லப பந்த் சாகர் என்று அழைக்கப்படுகிறது.

* இந்த அணை 90 மீ உயரமும், 1020 மீ நீளமும் கொண்டது.

* இத்திட்டம் நீர்மின்சக்தியை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

* உத்திரப்பிரதேசத்தின் 7 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இத்திட்டத்தினால் நீர்ப்பாசனம் பெற்று வருகிறது. 6 அலகுகளின் மூலம் 500 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* இத்திட்டத்தின் மூலம் பிம்பிரி என்னும் இடத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலைகளும், ரேணுகுட் பகுதியில் உள்ள அலுமினிய தொழிற்சாலையும், ஊரசர பகுதியின் சிமெண்ட் தொழிற்சாலையும் மின் ஆற்றல் பெறுகின்றன.

இந்திராகாந்தி கால்வாய்த் திட்டம்

* இராஜஸ்தானின் மாநிலத்தின் முக்கிய திட்டமாகும் இந்த திட்டம்.

* பியாஸ் நதியின் மீது போங் அணை கட்டப்பட்டுள்ளது. பியாஸ் மற்றும் இராவி நதிகளில் உள்ள நீரை சட்லஜ் ஆற்றிற்கு திசை திருப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

* கால்வாய்களி்ன் மூலம் நீரை திசை திருப்பப்படுகிறது. போங் அணையும் நீரை திசை திருப்புகிறது.

* இராஜஸ்தான் கால்வாய் அல்லது இந்திரகாந்தி கால்வாய் என்று அழைக்கப்படும் இக்கால்வாய்தான் உலகின் மிக நீளமான நீர்ப்பாசனக் கால்வாய் ஆகும்.

* இராஜஸ்தான் மாநிலத்தின் காந்தி நகர், பிக்கானீர், ஜெய்சல்மீர் போன்ற பகுதிகளை வளப்படுத்துகிறது.

* இக்கால்வாயின் உதவியால் பியாஸ், இராவி மற்றும் சட்லெஜ் ஆகிய ஆறுகளின் நீரை முழுமையாக இந்தியா பயன்படுத்த முடிகிறது.

* ரஷ்யா, கனடா, சைர், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா ஐந்தாவது இடத்தில் உலகளவில் நீர்மின்சக்தித் துறையில் இடம் பெற்றுள்ளது.

* நமது நாட்டின் நீர்மின்சக்தி வளத்தில் 30 சதவீதம் பிரம்மபுத்திரா பகுதிகளில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பல திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஷராவதி திட்டம்

* இவை ஜோக் நீர்வீழ்ச்சியில் கர்நாடாகா மாநிலம் ஷிமோகா மாவட்டம் ஷராவதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

* இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி ஜோக் நீர்வீழ்ச்சி ஆகும். 891 மெகாவாட் உற்பத்தியுடன், பெங்களூர் பகுதியை வளப்படுத்துகிறது.

* கலினாடி திட்டம் மூலம் 270 மெகாவாட் உற்பத்தி உயர்த்தப்பட்டுள்ளது.

* ஷராவதி திட்டம் மகாத்மா காந்தி நீர்மின்சக்தித் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

குந்தா திட்டம்

* தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் குந்தா திட்டத்தின் மூலம் 425 மெகாவாட் திறனிலிருந்து 535 மெகாவாட் உற்பத்திக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் முதன்முதலாக 1902-ம் ஆண்டு காவிரி ஆற்றின் மீது கர்நாடகாவில் உள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சிப் பகுதியில்தான் முதல் நீர்மின்சக்தித் திட்டம் துவங்கப்பட்டது.

* இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகருக்கு மின்சக்தி வழங்குவதற்காக துவங்கப்பட்டதுதான் டாடா நீர்மின்சக்தித் திட்டம்.

* தமிழகத்தில் பைக்காரா நீர்மின்சக்தித் திட்டமே முதல் திட்டமாகும்.

* இமயமலையின் வட பகுதியான மாண்டி என்னும் பகுதியில்தான் இந்தியாவின் முதல் திட்டம் துவங்கியது எனலாம்.

* மேட்டூர் திட்டம் - தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் கட்டப்பட்டுள்ள ஸ்டான்லி அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

* கர்நாடகாவில் மலப்ரபா ஆற்றின் மீது மலப்ரபா திட்டம் அமைந்துள்ளது.

* கேரளாவில் பெரியாற்றின் மீது இடுக்கி திட்டம் அமைந்துள்ளது.

* கேரளாவில் சபரகிரி நதியில் 300 மெகாவாட் திறனுடன் சபரகிரி திட்டம் அமைந்துள்ளது.

* கோதாவரி மீது ஆந்திரப்பிரதேசத்தில் போச்சம்பேட் திட்டம் அமைந்துள்ளது.

* பலிமேளா திட்டம், உக்காயா திட்டம் - ஒரிசாவில் அமைந்துள்ளது.

* உத்திரப்பிரதேசம் ராம்கங்கா நதியின் மீது ராம்கங்கா திட்டம் அமைந்துள்ளது.

* ஒரிசாவில் மகாநதி மீது மகாநதி டெல்டா திட்டம் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.

* குஜராத்தில் தபதி ஆற்றின் மீது காக்ரபாரா திட்டம் அமைந்துள்ளது.

* மத்தியப்பிரதேசத்தில் நர்மதையின் துணை ஆறு தவா ஆற்றின் மாது தவா திட்டம் அமைந்துள்ளது.

* போங் அணை பியாஸ் நதியின் மீது பியாஸ் திட்டம் அமைந்துள்லது. இத்திட்டத்தால் பஞ்சாப், அரியானா மற்றும் இராஜஸ்தான் மாநிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

* சலால் திட்டம் - ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் முரளி ஆற்றின் மீது மயூராக்ஷி திட்டம் அமைந்துள்ளது.

* மத்தியப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகியவற்றால் நர்மதை மீது அமைக்கப்பட்டது - நர்மதா பள்ளத்தாக்குத் திட்டம்.

* நர்மதை நதி மீது சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது.

* இந்திய அரசு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட திட்டம் - தேரி மின்சக்தி திட்டம். இத்திட்டத்தின் நோக்கம் 2400 மெகாவாட் மின் உற்பத்தியே.

* ஃபராக்கா திட்டம் - இந்தியாவும் பங்காளதேஷூம் பயன்பெற்று வரும் திட்டம் ஃபராக்கா திட்டம். மேற்கு வங்காளத்தில் கங்கை நதி மீது அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமே கொல்கத்தாவிற்கு குடிநீர் வழங்கும் திட்டமாகும்.

* கெய்னா திட்டம் - இத்திட்டத்தால் மகாராஷ்டிரா மாநிலம் பயன்பெற்று வருகிறது. சமீபத்தில் நிலநடுக்கத்தால் இத்திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.


நன்றி - தினமணி 

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...