10 August, 2014

அம்புஜத்தம்மாள் - சமச்சீர் பாடம்

அம்புஜத்தம்மாள் 
  • 1899ஆம் வசதியான குடும்பத்தில் ஆண்டு பிறந்தார்.
  • அன்னை  கஸ்துரிபாயின் எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.
  • பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.
  • வை மு கோதைநாயகி அம்மாள் ,ருக்மணி முதலியவர்களோடு இணைந்து பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தார்
  • காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்  என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.
  • தன் தந்தையின்  பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து சீனிவாச காந்தி நிலையம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
  • அம்புஜத்தம்மாள் எழுபதாண்டு நினைவாக,நான் கண்ட பாரதம்என்ற நூலை எழுதினார்.  1964ஆம் ஆண்டு  இவருக்கு பத்மஸ்ரீவிருது வழங்கப்பட்டது

கடலூர் அஞ்சலையம்மாள் - சமச்சீர் பாடம்


கடலூர் அஞ்சலையம்மாள்
  • 1890 – ல் கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்
  • நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்பு காய்ச்சும் போராட்டம் வெள்ளையனே வெளியேறு இயக்கம் முதலிய போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்
  • வேலூர்  சிறையில் இருந்த போது, கருவுற்ற நிலையில் இருந்த இவரை ஆங்கிலேய அரசு வெளியில்  அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
  • நீலன் சிலையை  அகற்றும் போராட்டத்தில் தனது 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும்  சிறைத்தண்டனை பெற்றார்.
  • காந்தியடிகள்  சிறையில் வந்து பார்த்து, இவரின் மகள் அம்மாக்கண்ணுவை தன்னுடன் அழைத்து சென்று  வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து அவருக்கு லீலாவதி எனப்பெயரும் இட்டார்.
  • காந்தியடிகள் அஞ்சலையம்மாலை தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைத்தார்

இன்றையக் கேள்விகள் - 10/08/2014

1.நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று குறிப்பிடப்படுபவர்
  1. கண்ணகி
  2. மணிமேகலை
  3. மாதவி
  4. மாதரி

2.மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய நூல்
  1. மத்த விலாசம்
  2. சாகுந்தலம்
  3. குணநூல்
  4. முறுவல்

3.குறவஞ்சி நாடகங்கள் யாருடைய ஆட்சி காலத்தில் தோன்றின
  1. சோழர்
  2. பல்லவர்
  3. நாயக்கர்
  4. களபிரர்கள்

4.டம்பாச்சாரி விலாசம் என்னும் நூலை எழுதியவர்
  1. மறைமலையடிகள்
  2. காசி விசுவநாதர்
  3. சங்கரதாச சுவாமிகள்
  4. பம்மல் சம்பந்தனார்

5.தமிழ் நாடக உலகின் தந்தை
  1. தி க சண்முகனார்
  2. பம்மல் சம்பந்தனார்
  3. சங்கரதாச சுவாமிகள்
  4. பேராசிரியர் சுந்தரனார்

6.எழுபது ஆண்டுகளாக தமிழ் நாடக மேடைகளில் புகழ் பெற்று
விளங்கிய நாடகம்
  1. கதரின் வெற்றி
  2. தேசியக்கொடி
  3. தேசபக்தி
  4. மனோகரன்

7.சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்
  1. அடியார்க்கு நல்லார்
  2. நச்சினார்க்கினியர்
  3. இளம்பூரணர்
  4. அரும்பதவுரைகாரர்

8.தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்
  1. தேசியக்கொடி
  2. தேசபக்தி
  3. கதரின் வெற்றி
  4. அபிமன்யு

 9.சித்திரை வந்தாள்
  1. சினையாகு பெயர்
  2. காலவாகு பெயர்
  3. இடவாகுபெயர்
  4. தொழிலாகு பெயர் 
10.பூகம் - பொருள் கூறுக 
  1. மகரந்தம் 
  2. மலர் 
  3. குளம் 
  4. கமுகம் 
விடைகள் 

  1. மாதவி
  2. மத்த விலாசம்
  3. நாயக்கர்
  4. காசி விசுவநாதர்
  5. பம்மல் சம்பந்தனார்
  6. மனோகரன்
  7. அடியார்க்கு நல்லார்
  8. கதரின் வெற்றி
  9. காலவாகு பெயர்
  10. கமுகம் (பாக்கு மரம் )

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...