24 October, 2014

TNPSC General Knowledge Questions -001




ANSWERS

நான்மணிக்கடிகை - 6 ஆம் வகுப்பு சமச்சீர்


மனைக்கு விளக்கம் மடவார் ; மடவார் 
தனக்குத் தகைசால் புதல்வர்; மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே;  கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு.
                                                          -விளம்பிநாகனார்
சொற்பொருள்:

  1.   மடவாள் - பெண்
  2.   தகைசால் - பண்பில் சிறந்த
  3.   உணர்வு - நல்லெண்ணம்
  4.   புகழ்சால் - புகழைத் தரும்
  5.   காதல் புதல்வர் - அன்பு மக்கள்
  6.   மனக்கினிய - மனத்துக்கு இனிய
  7.   ஓதின் - எதுவென்று சொல்லும்போது


நூல்குறிப்பு:

*  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நான்மணிக்கடிகை.
*  கடிகை என்றால் அணுகலன்(நகை)
*  நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
*  ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.

ஆசிரியர் குறிப்பு:

*  பெயர்: விளம்பிநாகனார்.
*  விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.


இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...