13 July, 2014

கணித மேதாவியார்


ஏலாதி

















பொருள் :









பொருள் கூறு :












இலக்கணக்  குறிப்பு :









தேவாரம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
                  நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
           ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோம் அல்லோம்;
                இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.
தாமார்க்கும்        குடியல்லாத்     தன்மையான
                சங்கரன்நற் சங்கமென்குழை யோர்காதில்,
கோமாற்கே      நாமென்று          மிரளாவாழாக் 
               கொய்மலர்ச் சேவடியே குறுகினோமே.
சொற்பொருள்:

  • இடர் – துன்பம்
  • ஏமாப்பு – பாதுகாப்பு
  • பிணி – நோய்
  • நடலை – துன்பம்
  • சேவடி –இறைவனின் செம்மையான திருவடிகள்
  • நமன் – எமன்

இலக்கணக்குறிப்பு:

  • நற்சங்கு – பண்புத்தொகை
  • வெண்குழை – பண்புத்தொகை
  • மலர்ச்சேவடி – உவமைத்தொகை
  • மீளா ஆள் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பிரித்தறிதல்:

  • பிணியறியோம்  –  பிணி + அறியோம்
  • எந்நாளும்  –  எ + நாளும்
  • நாமென்றும்  –  நாம் + என்றும்


ஆசிரியர் குறிப்பு;

  • திருநாவுக்கரசர் திருவாமூரில் பிறந்தவர்.
  • பெற்றோர்  – புகழனார், மாதினியார்.
  • இவரது தமக்கையார் திலகவதியார்.
  • இயற் பெயர்  – மருணீக்கியார்
  • சிறப்பு பெயர்கள்  – தருமசேனர், அப்பர், வாகீசர்.
  • இவரின் நெறி  – தொண்டு நெறி
  • இவர் தாண்டகம் பாடுவதில் வல்லவர். அதனால் இவரை “தாண்டக வேந்தர்” எனப்படுவார்.
  • இவரது காலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டு.
  • திருவாமூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்து உள்ளது.

நூல் குறிப்பு:

  • தேவாரம் என்னும் சொல்லைத் தே+வாரம் எனப் பிரித்துத் தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள் என்று கூறுவர்.
  • தே+ஆரம் எனப் பிரித்து தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பாமாலை என்றும் கூறுவர்.
  • அப்பர் அருளிய பாடல்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள்.
  • தமிழகத்தில் விடுதலை வேட்கைக் கனலைத் தம் வீறுகொண்ட பாக்களால் மக்களைத் தட்டியெழுப்பிய மகாகவி பாரதியின் அச்சமில்லை !அச்சமில்லை எனும் பாடலுக்கு முன்னோடி இத்திருத்தாண்டகப் பாடலே.


உரிய விடையை தேர்ந்தெடுத்து எழுது












விடை 
அ.  மூத்த அறிவுடையார் 
ஆ.  பெரியார் 
இ . ஊதியம்

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...