29 September, 2014

இந்திய நீர்வளம்



* இந்தியா ஒரு விவசாய நாடு என்பதால் இந்திய விவசாயம் பருவக்காற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. ஆனால் பருவாக்காற்று எதிர்பார்ப்பது போல் அதிக மழையை தருவதில்லை.

* தேவைக்கு அதிகமான மழைப்பொழிவு உண்டாக்கும் போது, வெள்ளம் ஏற்பட்டு, பெருத்த சேதம் ஏற்படுகிறது. மழை பொய்த்துவிடும்போது, வறட்சி உண்டாகி, உணவுப் பற்றாக்குறையும் நீர்ப் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. சில பகுதிகளில் அதிக மழைப்பொழிவும் ஏற்படுகிறது.

* வேறு சில பகுதிகள் மழையே இல்லாத நிலையில் வறண்டு காணப்படுகிறது. எனவே மழைப்பொழிவு ஏற்படும் இடங்களில் மழைநீரைச் சேமித்து, பிறகு வறண்ட பகுதியில் பயன்படுத்துவதையே நாம் நீர்ப்பாசனம் என்று அழைக்கிறோம்.

* சராசரியாக இந்தியா 118 செமீ மழையளவு பெறுகிறது. எனினும் இது மேகாலயாவின் மெளசின்ராம்(1270 செ.மீ), சிரபுஞ்சி (1110 செமீ) அதிக மழைப்பொழிவிலிருந்து, தார் பாலைவனத்தின் ஆண்டு மழையளவாகிய 10 செமீ வரை வேறுபடுகிறது.

இந்திய காலநிலை

* இந்தியாவின் காலநிலை பல வேறுபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. உலகிலேயே மழைமிகு சிரபுஞ்சியும் (1080 செ.மீ), 13 செ.மீ.க்கும் குறைவாக மழை பெறும் தார் பாலைவனமும் இந்தியாவில் தான் உள்ளது.

* இவ்வித வேறுபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் காலநிலை அமைப்பு ஓரளவு ஒத்தமைந்துள்ளது. இவ்விதம் காலநிலையைச் சமன்படுத்தும் ஒரே அமைப்பு பருவ காற்று ஆகும்.

* இந்தியாவின் காலநிலையை வேறுபாடுகள் கொண்டதாக ஆக்கும் பண்புகள் மூன்றாகும். அவை: 01. இமயலைகள் 02. கடலிலிருந்து அமைந்த இடைவெளி 03. வேறுபட்ட நிலத்தோற்றம் ஆகியன.

* இமயமலை இந்தியாவின் வட எல்லை முழுவதும் நெடிதுயர்ந்து அமைந்து, இந்தியாவினை ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்கிறது.

* இந்தியாவின் காற்றோட்டம் வெப்பநிலை ஆகியன வெளிப்பாதிப்பு இன்றி அமைகிறது. உதாரணமாக குளிர்காலத்தில் மத்திய ஆசியா, திபெத் ஆகிய பகுதிகளிலிருந்து வீசும் குளிர்காற்று இமயமலைகளால் தடுக்கப்படுவதால், இந்தியச் சமவெளி கடும் குளிரிலிருந்து தடுக்கப்பெறுகிறது.

* இது போன்ற மலை அரண் பெற்றிராமையால் தென் சீனா கடும் குளிரால் பாதிக்கப்படுகிறது. அவ்விதமே கோடையில் பருவக் காற்றினைத் தடுத்து பெரும் மழையைப் பொழிவிக்கிறது.

* இமயமலை இல்லையெனில் வளமிக்க கங்கைச் செவெளி தார் பாலைவனத்தின் தொடர்ச்சியாகவே அமைந்திருக்கும்.

* இந்தியக் கடற்கரை உடைபடாது ஒழுங்காகக அமைந்திருத்தல் ஒரு பெரும் குறைபாடு ஆகும். இதனால் இந்தியாவின் பெரும்பகுதி கடலிலிருந்து வெகுதூரத்தில் அமைந்து வெவ்வேறு பண்புகளைப் பெறுகிறது.

* மிகுந்த வெப்பநிலை, வறட்சி ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. குறுகி அமைந்துள்ள தென்னிந்தியாவிலும், மேற்குத் தொடர்ச்சி மலை, கடற்பண்புகள் உள்நாட்டில் ஊடுருவாது தடுத்துவிடுகின்றன.

* கோடையில் வட இந்தியச் சமவெளி அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும்போது மலைகளில் அமைந்த இமாசலப் பிரதேசம் காஷ்மீர் போன்றவை குளிர்ச்சியாக அமைகின்றன.

* மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்குச் சரிவில் பெரும் மழை பொழிவிக்கும் தென்மேற்குப் பருவக்காற்று அமமலைகளுக்குக் கிழக்கிலமைந்த பகுதிகளுக்கு மிகக் குறைந்த மழையை அளிக்கிறது.

* இதனால் தக்காணப் பீடபூமி முழுவதும், மழை மறைவுப் பிரதேசமாக உள்ளது. இதற்கு மாறாக ஆரவல்லி மலைகள் காற்றிற்குக் குறுக்காக அமையாததால் மழையைப் பொழிவிப்பதில்லை. ராஜஸ்தான் பாலைவனமாக உள்ளது.

* இந்தியாவின் காலநிலை நான்கு பருவங்களாகப் பிரிக்கலாம். அவை: 01. குளிர்காலம் (டிசம்பர் - பிப்ரவரி) 02. கோடை காலம் (மார்ச் - மே) 03. தென்மேற்கு பருவக்காற்றுக் காலம் (ஜூன் - செப்டம்பர்) 04. பருவக் காற்று பின்வாங்கும் காலம் (அக்டோபர் - நவம்பர்)

குளிர்காலம்

* டிசம்பர் முற்பகுதியில் தொடங்கி பிப்ரவரி முடிய குளிர்காலமாகும். பொதுவாக இப்பருவத்தில் வானம் தெளிந்து அமையும், வறண்டும் அமையும்.

* இரவு வெப்பநிலைகள் வட இந்தியாவில் இரவு வெப்பநிலைகள் மிகத் தாழ்ந்தும், பகல் வெம்மையாகவும் அமையும். இக்காலத்தில் தான் இந்தியாவின் இரு சிறு பாகங்களில் மழை பொழிகிறது.

* வட இந்தியாவில் இமயத்தின் அடிவாரத்தை ஒட்டி மேற்கிலிருந்து வரும் மத்தியத் தரைக்கடல் புயல்களால் மழை ஏற்படுகிறது.

* அலகாபாத் வரை இம்மழைப் பொழிவு காணப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் குளிர்காலத்தில் தான் உச்சமழையைப் பெறுகிறது. இம்மழை கோதுமை சாகுபடிக்கு மிக உதவியாய் இருப்பதால், இதனைக் கோதுமை மழை எனவும் கூறுவர்.

* மழை பெறும் மற்றொரு பகுதி தமிழ்நாட்டின் தென்கோடியாகும். வட இந்தியாவிலிருந்து வீசும் வறண்ட காற்று திசைமாற்றம் அடைகிறது. இது வங்கக் கடல் மீது வீசும்போது நீராவியை ஏற்று தென்கோடிக்கு மழை தரும் காற்றாக அமைகிறது.

கோடை காலம்

* மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி சூரியன் வட அரைக்கோளத்தில் அமைகிறது. எனவே, சூரியனின் செங்குத்துக் கதிர்களால் இந்தியாவின் வெப்பநிலை உயருகிறது.

* இவ்வுயர்வு தெற்கில் தொடங்கி படிப்படியாக வடக்கு நோக்கி நகர்கிறது. மே மாதத்தில் வட சமவெளிகளில் வெப்பநிலை வெகுவாக அதிகரிக்கிறது. இதன் விளைவாக தார் பாலைவனப் பகுதி தொடங்கி, சோட்டா நாகபுரி பீடபூமி வரை ஒரு குறை அழுத்தப் பள்ளம் பரவி அமைகிறது.

* இக்குறை அழுத்தத்தைச் சார்ந்து ஆங்காங்கே தீவிர தல கதாற்றோட்டங்கள் ஏற்படுகின்றன. இப்பருவத்தில் ஏற்படும் இடி புயலால் பெரும் மழைப்பொழிவு ஏற்படுகிறது.

* லூ என்னும் வறட்சிமிக்க காற்றும் இப்பருவத்தில் வடமேற்கு இந்தியாவில் வீசுகிறது. தெற்கில் கேரள, கர்நாடக கடற்கரைப் பகுதிகளை ஒட்டி இட்ப்புயல் மழை ஏற்படுகிறது. காப்பிச் செடி துளிர் விட இது மிகப் பயன்படுவதால், இதனை துளிர் மழை என்பர்.

* வங்காளத்தில் இப்பருவத்தில் வடமேற்கிலிலருந்து வீசும் வறண்ட காற்றும், வங்கக் கடலிலிருந்து வீசும் ஈரக்காற்றும் சந்திப்பதால் பெருமழை ஏற்படுகிறது. இதனை நார்வெஸ்டர் மழை என்பர். இதைத் தவிர பிற பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன.

தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம்

* சூரியன் வடக்கில் நகர நகர வெப்பநிலை உயருகிறது. ஜூன் இருதியில் சூரியின் வட அயனக்கோட்டில் அமையும்போது உச்ச வெப்பநிலை ஏற்படுகிறது.

* சூரியனைத் தொடர்ந்து குறை அழுத்தப் பகுதியும் நகர்ந்து இந்தியாவின் வடமேற்கில் நிலை கொள்கிறது. பின்னர் தீவிரமைடகிறது. அப்போது ஆஸ்திரேலியாவிலிருந்து வீசும் தென்கிழக்கு வியாபாரக் காற்று புவி நடுக்கோட்டுப் பகுதியுடன் நின்று விடாது அதனைக் கடந்து வடக்கில் வீசுகிறது.

* அப்போது வலப்பக்கம் திசை மாற்றமடைந்து தென்மேற்குப் பருவக் காற்றாக இந்தியாவில் வீசுகிறது நீண்டதூரம் வெப்பமிகு கடற்பகுதியின் மீது வந்தமையால் இக்காற்று நீராவி மிகுந்த ஈரக் காற்றாக உள்ளது.

* இந்தியாவை அடையும் இக்காற்று அரபிக்கடல் பிரிவு, வங்கக் கடல் பிரிவு என இரண்டாகப் பிரிகிறது. அரபிக் கடல் கடல் பிரிவு மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் செங்குத்தாக வீசுவதால் தடுக்கப்பட்டு மேலெழுகிறது. எனவே பெரும் மழையை மேற்குச் சரிவுகளில் பொழிவிக்கிறது. மழையளவு தெற்கில் திருவனந்தபுரத்திலிருந்து சிறிது தசிறிதாக அதிகரித்து மங்களூருக்கருகில் உச்ச அளவாக அமைகிறது.

* வங்க கடல் கிளை பர்மாவின் அரக்கன்யோமா மலைகளால் தடுக்கப்படுகிறது. இதனால் பர்மாவின் மேற்குக் கடற்கரை மிகுதியான மழையைப் பெருகிறது. பின்னர் இக்காற்று இந்தியா நோக்கித் திசை திருப்பப்பட்டு கங்கைச் சமவெளியை அடைகிறது.

* இங்கு இது இமயத்திற்கு இணையாக வடமேற்குத் திசையில் முன்னேறுகிறது. இதனால் கங்கைச் சமவெளி முழுவதும் பரவலாக மழை பெறுகிறது.

* இக்காற்று வடமேற்கிலுள்ள தாழ் அழுத்த மையத்தை அடைகிறது. ஜூன் துவக்கத்தில் இந்தியாவின் தென்கோடியை வந்தடையும் தென்மேற்குப் பருவக்காற்று ஜூலை மாத துவக்கத்தில் இந்தியா முழுவதையும் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வருகிறது.

* வங்க்க கடல் பிரிவினால் வட இந்தியாவின் பெரும்பகுதி மழை பெறுகிறது. தாழ் அழுத்த மையம் அமைந்துள்ள போதிலும் ராஜஸ்தான் மிக்க குறைந்த மழையையே பெறுகிறது.

* மேகாலாயாவில் அமைந்துள்ள சிரபுஞ்சி மற்றும் மெளசின் ராம் ஆகியவை உலகிலேயே மழை மிகுந்த பகுதிகளாகக் கருதப்படுகின்றன.

பருவக்காற்று பின்வாங்கும் காலம்

* இதையே வடகிழக்குப் பருவக்காற்று என்று அழைக்கிறோம். ஜூலை மாதம் தொடங்கி சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்குவதால் வெப்பநிலை குறையகத் தொடங்குகிறது.

* வடமேற்கில் அமைந்த தாழ் அழுத்தம் சிறிது சிறிதாக வலுவிழுந்து செப்டம்பர் முடிவில் ஒரு சிறு உயரழுத்திற்கு இடம் கொடுக்கிறது. இதனால் தென்மேற்குப் பருவக்காற்று முதலில் பஞ்சாப்பிலிருந்தும் படிப்படியாகக் கங்கைச் சமவெளியிலிருந்து பின்வாங்குகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் தென்னிந்தியாவில் பின்வாங்கி முடிவாக இந்தியாவை விட்டு வெளியேறுகிறது.

* அதனிடத்தில் குளிர்ந்த காற்று வடமேற்கில் அமைந்த உயரழுத்தத்திலிருந்து வடஇந்தியாவில் வீசுகிறது. வடமேற்கிலிருந்து சிறிது சிறிதாகப் பின் வாங்கும் தாழ் அழுத்தம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வங்க்க கடலில் மையம் கொள்கிறது.

* இத்தாழ் அழுத்தத்தின் விளைவாக அடுத்தடுத்துப் பல புயல்கள் வங்கக் கடலில் தோன்றி தென்னிந்தியாவின் கீழ்க் கடற்கரையைப் பாதிக்கிறது.

* இதனால் வங்கம், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகியவற்றின் கடற்கரை பெரும் மழை சுறாவளிக் காற்று ஆகியவர்றால் பாதிக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்படுகிறது.

ஆயினும் இப்புயல்களாலேயே இப்பகுதிகள் மழை பெறுகின்றன. தமிழ்நாட்டின் உண்மையான மழைக் காலம் இதுவே.

* பொதுவாக புயல்கள் ஆற்று முகத்துவாரங்களை விரும்புவதால் கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா காவிரி ஆகிய ஆறுகளின் முக்த்துவாரங்கள் புயலின் பாதைகளாக அமைகின்றன.

மழைப்பரவல்

* பருவக்காற்றுகளின் மூலமே இந்தியா மழையைப் பெறுகிறது. மழையின் பரவல் குறிப்பிட்ட பருவத்தில் குவிந்தும், மறு பருவத்தில் மழையற்றும் அமையும் தவிர, மழையளவிலும் வேறுபாடு உள்ளது.

* ஆண்டு சராசரி மழையின் அடிப்படையில் இந்தியாவை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கலாம்.

* கனத்த மழை பெறும் பகுதி - ஆண்டிற்குச் சராசரியாக 200 செ.மீ மழையளவு பெரும் பகுதிகள். இவற்றில் மேற்குக் கடற்கரை, வங்காளம், அஸ்ஸாம், கிழக்கு இமயமலைப்பகுதிகளை அடக்கிக் கூறலாம்.

* அதிக மழை பெரும் பகுதி - ஆண்டுக்கு 100 முதல் 200 செ.மீ வரை மழை பெறும் வகுதி மதிதிய கங்கைச் சமவெளி, ஒரிசா, சோட்டா நாகபுரிப் பீடபூமி அகியன இதில் உள்ளன.

* மித மழைப்பகுதி - தக்காணத்தின் மழை மறைவுப் பிரதேசம். மத்திய இந்தியப்பகுதி, உத்திரப்பிரதேசம், பீகாரின் மேற்குப் பகுதிகள் ஆகியன. இதன் மழையளவு சுமார் 50 முதல் 100 செ.மீ.வரை.

* குறைந்த மழை பெரும் பகுதி - ஆண்டிற்கு 50 செ.மீ.க்கும் குறைவான மழை பெறும் பகுதி. பஞ்சாப், ராஸ்தான், குஜராத்தின் வடமேற்குப் பகுதி ஆகியன.

* குளிர்காலம் மழைப்பகுதி - இது அளவின் அடிப்படையில் அமையாது. மழை பெறும் காலத்தின் அடிப்படையில் உள்ளது. சோழ மண்டலக் கடற்கரை வடகிழக்குப் பருவக்காற்றுக் காலத்தில் 50 முதல் 100 செ.மீ வரை மழையைப் பெறுகிறது.

* இந்திய மழையின் வேறுபாடு சுமார் 30 சதவீதம் வரை வேறுபடுவதால் அதாவது நிச்சயமான நீரளிப்பற்ற பகுதிகளில் விவசாயம் பெரும் சூதாட்டமாகவே அமைகிறது.

* இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் குடிய பகுதிகளில் 60 சதவீத பகுதி. கங்கை பிரம்மபுதிதிரா சமவெளிப் பகுதியில் அமைந்துள்ளது. பீகார், வங்காளம் மற்றும்  தாமோதர் பள்ளத்தாக்குப் பகுதிகள் குறிப்பிடதக்கவை.

* இராஸ்தான் மாநிலத்தில் விசைப் பொழிவு அல்லது டாரன்ஷியல் மழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

* கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கானது பெரும்பாலும் சூறாவளிகளால் ஏற்படுகிறது. இப்பகுதிகளில் வெள்ளமானது குறைந்த காலத்திற்கே நீடிக்கிறது.

நன்றி 
தினமணி

26 September, 2014

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்


தமிழகத்தின் அன்னிபெசன்ட் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

இன்று ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயரால்தான் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தக் காலத்திலே பெண் சீர்திருத்தக் கருத்துகளுடன் இப்படியொரு பெண் வாழ்ந்தாரா என்று ஆச்சரியப்படும் வகையில் போராட்டங்கள், சொற்பொழிவுகள், அரசியல் ஈடுபாடு, எழுத்து, புதிய சிந்தனைகள் எனத் தாம் வாழும் காலத்தைச் பெண்ணுரிமைக்காகவே தனது வாழ்க்கையை செலவிட்டவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

பிறப்பு: திருவாரூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி – சின்னம்மாள் தம்பதிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் கிராமத்தில் 1883 இல் பிறந்தவர்.தேவதாசி முறையை எதிர்த்து போராட்டம்  நடத்தினார்.

இளமை காலம்:

தனக்கு இசையும் நாட்டியமும் கற்றுத்தந்த பேரளம் சுயம்புப்பிள்ளை என்பரை எவ்விதச் சமய சடங்குகளுமற்று நெய்விளக்கில் சத்தியம் செய்து வாழத் தொடங்கினர். அம்மையாரின் அனைத்துப் போராட்டங்களுக்கும் இவருடைய கணவர் துணையாய் நின்றார்.

இசையைக் குலத் தொழிலாகக் கொண்டதனால் இவர்களுக்கு இசை வேளாளர்கள் என்ற பெயர் வந்தது. இவர்களுள் பெரும்பாலானவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இசையின் வாய்ப்பாட்டு, நரம்புக்கருவி, தோல்கருவி, நடனம் என பல துறைகளில் பல இசை வேளாளர்கள் பெயர் பெற்றுள்ளனர்.

கணவரின் துணையுடன் 1917 இல் மயிலாடுதுறையில் தமது முதல் போராட்டத்தைத் தொடங்கினார். தேவதாசி ஒழிப்பு முறைக்கு அல்லும் பகலும் பாடுபட்டார். தேவசாசிகளை ஒருங்கிணைத்து மேடை முழக்கங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

காந்தி மீது பற்று:

காந்தியத்தின் மீது மிகுந்த ஈடுபாடும் விடுதலை வேட்கையும் கொண்டிருந்தார் அம்மையார். பேச்சாளர்கள் எதையும் பேசக்கூடாது என்று ஆங்கிலேயர் கட்டளையிட்டிருந்தனர். அக்கட்டளையை மதிப்பதுபோலக் காட்டித் தமது கொள்கையை நிலை நிறுத்துவதில் அம்மையார் உறுதியோடு இருந்தார். 

எனவே, தாம் பேச நினைத்த கருத்துகளை எல்லாம் கரும்பலைகையில் எழுதி மக்கள் முன்னிலையில் வைத்தார். காந்தியடிகள், இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியா திரும்பினார். அவரை ஆங்கிலேயர் கைது செய்தனர். இதனால், சினம் கொண்ட அம்மையார், மூவர்ணக் கொடியை ஆடையாக அணிந்து கொண்டார்.



விடிவெள்ளி:

அம்மையார், பெண் உரிமைக்குப் பாடுபட்ட விடிவெள்ளியாகத் திகழ்ந்தார். தீண்டாமை, தேவதாசிமுறை, குழந்தைத் திருமணம், கைம்மை நோன்பு முதலிய சமூகக்கேடுகளை எதிர்ப்பதில் தீவிரமாக இருந்தார்.

இறுதியில், தேவதாசி முறையை ஒழிப்பது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரசின் முதுபெரும் தலைவர், “தேவதாசி முறையை ஒழித்தால் இந்திய கலாச்சாரமே கெட்டுவிடும்” என்று கொதித்தார். அப்போது, அந்த அவையில் இருந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, “தேவதாசி முறையிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம். இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக, இனி உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்” என்றார். இதனால் சர்வமும் ஒடுங்கிப்போனார் அவர். டாக்டர் முத்துலெட்சுமியை இவ்வாறு அதிரடியாகப் பேசும்படி ஆலோசனை வழங்கியவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்தான். இதன் பின்னர், நீதிக்கட்சி காலத்தில் 1929ல் தேவதாசி ஒழிப்பு முறை சட்டம் கொண்டுவரப்பட்டது.


பொதுவாழ்வில் வாழ்ந்த காலம்வரை உயர்ந்த நோக்கத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த இராமாமிர்தம் அம்மையார் தமது எண்பதாம் வயதில் 27.06.1962 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். இருப்பினும், தம் தொண்டால் தமிழக வரலாற்றில் தமக்கென அழியாப் புகழை நிலைநிறுத்திக் கொண்டார் எனில் அது மிகையாகாது.

திருமண உதவித் திட்டம்:


இவரது சேவைகளையும், தியாகங்களையும் கவுரவிக்கும் விதமாகவும், அவரது நினைவாகவும் ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டத்துக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம் என பெயர் சூட்டி இன்று வரை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது தமிழக அரசு.


25 September, 2014

மங்கள்யான்



மங்கள்யானில் உள்ள கருவிகள்

லிமான் ஆல்பா போட்டோமீட்டர்

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான கருவி. செவ்வாய் கிரக வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் கதிர்வீச்சில் டுடீரியம் ஹைட்ரஜன் அளவை இந்தக் கருவி கணக்கிடும். இந்த அளவைக் கணக்கிடுவதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் எவ்வாறு இல்லாமல் போனது அல்லது எந்த வடிவத்தில் உள்ளது என்பதை அறியலாம்.

மீத்தேன் சென்சார் ஃபார் மார்ஸ்

செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு உள்ளதா, அது எதிலிருந்து உருவானது என்பதைக் கண்டறிவதற்கான கருவி. நூறு கோடி துகள்களில் ஒரு துகளை அளவிடும் துல்லியமான கருவிகள் இதில் உண்டு. செவ்வாய் கிரகத்திலிருந்து பிரதிபலிக்கும் சூரிய கதிர்வீச்சைக் கொண்டு இது தகவல்களைச் சேகரிக்கும்.

மார்ஸ் எக்சாஸ்பெரிக் நியூட்ரல் கம்போசிஷன் அனலைசர்

செவ்வாய் கிரக வளிமண்டல மேல் அடுக்கை சுமார் 400 கிலோமீட்டர் உயரத்திலிருந்து இந்தக் கருவி ஆராயும்.

மார்ஸ் கலர் கேமரா

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு எவ்வாறு உள்ளது, வானிலை எப்படி உள்ளது என்பதை இந்தக் கேமராவில் படம் பிடிக்கலாம். அதோடு, செவ்வாயின் துணைக்கோள்களான போபோஸ், டெய்மோஸ் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் இந்த கேமராவைப் பயன்படுத்தலாம்.

செவ்வாய் கிரகம்

வளிமண்டலம் (வாயுக்களின் அடக்கம்)

நைட்ரஜன் 2.7%

ஆக்சிஜன் 0.13%

ஆர்கான் 1.6%

கார்பன்-டை ஆக்ûஸடு 95.32%

நீராவி 0.03%

நைட்ரிக் அமிலம் 0.01%

வளிமண்டல அழுத்தம்

7.5 மில்லிபார் (சராசரி)

நாளின் அளவு

24 மணி நேரம் 37 நிமிஷம்

ஆண்டின் அளவு

687 நாள்கள்

துருவப் பகுதிகள்

கார்பன்-டை-ஆக்ûஸடு மற்றும்

நீர் பனிக்கட்டிகள்

மேற்பரப்பு வெப்பநிலை

- 63 டிகிரி செல்சியஸ்

துணைக்கோள்கள்

2 (போபோஸ், டெய்மோஸ்)

சாய்வு

25 டிகிரி

ஆழமான பள்ளம்

வாலஸ் மேரினரிஸ்

7 கிலோமீட்டர் ஆழம்

சூரியனிலிருந்து தொலைவு (சராசரி)

22 கோடியே 79 லட்சத்து

36 ஆயிரத்து 637 கிலோமீட்டர்

ஈர்ப்பு விசை

புவியீர்ப்பு விசையில் 0.375 பங்கு

மிகப்பெரிய எரிமலை

ஒலிம்பஸ் மன்ஸ்

26 கிலோமீட்டர் உயரம்

602 கிலோமீட்டர் விட்டம்

தண்ணீர் 

ஒரு காலத்தில் தண்ணீர் ஓடியதற்கான தடயங்கள் உள்ளன. இப்போது தண்ணீர் மேற்பரப்புக்கு உள்ளே இருக்கலாம் என நம்பப்படுகிறது. துருவப் பகுதிகளில் பனிக்கட்டியாக உறைந்தும் காணப்படுகிறது.


செவ்வாய்க்கு இதுவரை அனுப்பப்பட்ட விண்கலங்கள்


  1. 1எம் எண்.1 அக்டோபர் 10, 1960 சோவியத் ரஷியா தோல்வி
  2. 1எம் எண்.2 அக்டோபர் 14, 1960 சோவியத் ரஷியா தோல்வி
  3. 2எம்வி-4 எண்.1 அக்டோபர் 24, 1962 சோவியத் ரஷியா தோல்வி
  4. மார்ஸ் 1 நவம்பர் 1, 1962 சோவியத் ரஷியா தோல்வி
  5. 2எம்வி-3 எண்.1 நவம்பர் 4, 1962 சோவியத் ரஷியா தோல்வி
  6. மரைனர் 3 நவம்பர் 5, 1964 அமெரிக்கா தோல்வி
  7. மரைனர் 4 நவம்பர் 28, 1964 அமெரிக்கா வெற்றி
  8. úஸான்ட் 2 நவம்பர் 30, 1964 சோவியத் ரஷியா தோல்வி
  9. மரைனர் 6 பிப்ரவரி 25, 1969 அமெரிக்கா வெற்றி
  10. 2எம் எண்.521 மார்ச் 27, 1969 சோவியத் ரஷியா தோல்வி
  11. மரைனர் 7 மார்ச் 27, 1969 அமெரிக்கா வெற்றி
  12. 2எம் எண்.522 ஏப்ரல் 2, 1969 சோவியத் ரஷியா தோல்வி
  13. மரைனர் 8 மே 9, 1971 அமெரிக்கா தோல்வி
  14. காஸ்மோஸ் 419 மே 10, 1971 சோவியத் ரஷியா தோல்வி
  15. மரைனர் 9 மே 30, 1971 அமெரிக்கா வெற்றி
  16. மார்ஸ் 2 மே 19, 1971 சோவியத் ரஷியா வெற்றி
  17. மார்ஸ் 2 லேண்டர் மே 19, 1971 சோவியத் ரஷியா தோல்வி
  18. மார்ஸ் 3 மே 28, 1971 சோவியத் ரஷியா வெற்றி
  19. மார்ஸ் 3 லேண்டர் மே 28, 1971 சோவியத் ரஷியா தோல்வி
  20. மார்ஸ் 4 ஜூலை 21, 1973 சோவியத் ரஷியா தோல்வி
  21. மார்ஸ் 5 ஜூலை 25, 1973 சோவியத் ரஷியா தோல்வி
  22. மார்ஸ் 6 ஆகஸ்ட் 5, 1973 சோவியத் ரஷியா தோல்வி
  23. மார்ஸ் 7 ஆகஸ்ட் 9, 1973 சோவியத் ரஷியா தோல்வி
  24. வைகிங் 1 ஆகஸ்ட் 20, 1975 அமெரிக்கா வெற்றி
  25. வைகிங் 1 லேண்டர் ஆகஸ்ட் 20, 1975 அமெரிக்கா வெற்றி
  26. வைகிங் 2 செப்டம்பர் 9, 1975 அமெரிக்கா வெற்றி
  27. வைகிங் 2 லேண்டர் செப்டம்பர் 9, 1975 அமெரிக்கா வெற்றி
  28. ஃபோபாஸ் 1 ஜூலை 7, 1988 சோவியத் ரஷியா தோல்வி
  29. ஃபோபாஸ் 2 ஜூலை 7, 1988 சோவியத் ரஷியா பகுதியளவு தோல்வி
  30. மார்ஸ் அப்சர்வர் செப்டம்பர் 25, 1992 அமெரிக்கா தோல்வி
  31. மார்ஸ் குளோபல் சர்வேயர் நவம்பர் 7, 1996 அமெரிக்கா வெற்றி
  32. மார்ஸ் 96 நவம்பர் 16, 1996 ரஷியா தோல்வி
  33. மார்ஸ் பாத்ஃபைன்டர் டிசம்பர் 4, 1996 அமெரிக்கா வெற்றி
  34. நசோமி ஜூலை 3, 1998 ஜப்பான் தோல்வி
  35. மார்ஸ் கிளைமேட் ஆர்பிட்டர் டிசம்பர் 11, 1998 அமெரிக்கா தோல்வி
  36. மார்ஸ் போலார் லேண்டர் ஜனவரி 3, 1999 அமெரிக்கா தோல்வி
  37. டீப் ஸ்பேஸ் 2 ஜனவரி 3, 1999 அமெரிக்கா தோல்வி
  38. மார்ஸ் ஒடிசி ஏப்ரல் 7, 2001 அமெரிக்கா வெற்றி
  39. மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஜூன் 2, 2003 ஐரோப்பிய
  40. விண்வெளி அமைப்பு வெற்றி
  41. பீகிள் 2 ஜூன் 2, 2003 ஐரோப்பிய
  42. விண்வெளி அமைப்பு தோல்வி
  43. ஸ்பிரிட் ஜூன் 10, 2003 அமெரிக்கா வெற்றி
  44. ஆப்பர்ச்சூனிட்டி ஜூலை 8, 2003 அமெரிக்கா வெற்றி
  45. ரொசட்டா மார்ச் 2, 2004 ஐரோப்பிய
  46. விண்வெளி அமைப்பு வெற்றி
  47. எம்ஆர்ஓ ஆகஸ்ட் 12, 2005 அமெரிக்கா வெற்றி
  48. பீனிக்ஸ் ஆகஸ்ட் 4, 2007 அமெரிக்கா வெற்றி
  49. டான் செப்டம்பர் 27, 2007 அமெரிக்கா வெற்றி
  50. ஃபோபாஸ் கிரண்ட் நவம்பர் 8, 2011 ரஷியா தோல்வி
  51. யிங்கோ-1 நவம்பர் 8, 2011 சீனா தோல்வி
  52. கியூரியாசிட்டி நவம்பர் 26, 2011 அமெரிக்கா வெற்றி
  53. மங்கள்யான் நவம்பர் 5, 2013 இந்தியா வெற்றி
  54. மேவன் நவம்பர் 18, 2013 அமெரிக்கா வெற்றி



இதில் ரொசட்டா, டான் ஆகிய விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படவில்லை. எனவே, அவற்றின் வெற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் 21 மட்டுமே இதுவரை வெற்றி பெற்றுள்ளன.

 இந்தியாவின் மங்கள்யான்


  • ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2013, நவம்பர் 5-ஆம் தேதி  விண்ணில் செலுத்தப்பட்டது
  • திட்ட மதிப்பீடு ரூ.450 கோடி
  • செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறு, கனிம வளம், வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது
  • ஆய்வுக் காலம் குறைந்தபட்சம் 6 மாதங்கள்
  • 66 கோடி கிலோமீட்டர் பயணம்
  • 18 மாதங்களில் உருவாக்கப்பட்டது
  • விண்கலத்தின் எடை 1,337 கிலோ
  • விண்கலத்தில் உள்ள அறிவியல் கருவிகளின் எடை 15 கிலோ
  • செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை 2014, செப்டம்பர் 24-இல் அடைந்தது 


அமெரிக்காவின் மேவன்

  • ஃப்ளோரிடாவின் கேப் கேன்னிவரல்  விமானப்படை ஏவுதளத்தில் இருந்து  2013, நவம்பர் 18-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது
  • ரூ.4,083 கோடி
  • செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல மேல் அடுக்கை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது
  • முதன்மையான ஆய்வுக் காலம் ஓர் ஆண்டு. பிறகு, 29 மாதங்களுக்கும், மிக அதிக உயரத்திலான சுற்றுப்பாதையில் 6 ஆண்டுகள்
  • 71 கோடி கிலோமீட்டர் பயணம்
  • 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது
  • விண்கலத்தின் எடை 2,454 கிலோ
  • விண்கலத்தில் உள்ள அறிவியல் கருவிகளின் எடை 65 கிலோ
  • 2014, செப்டம்பர் 21-ஆம் தேதி சுற்றுப்பாதையை அடைந்ததுவரையும் இயங்கும்
நன்றி 
தினமணி

24 September, 2014

செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது மங்கள்யான்


மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

சரியாக காலை 7.59 மணிக்கு மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தினார்.

உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த இந்த அரிய நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பார்வையிடுட்டார்.

இஸ்ரோ தலைவர், மங்கள்யான் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி என பாராட்டினார்.

மங்கள்யான் கடந்து வந்த பாதை:

கடந்த ஆண்டு(2013) நவம்பர் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி25 ராக்கெட் மூலம் பிற்பகல் 2.38 மணிக்கு மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த மங்கள்யான், நியூட்டன் 440 திரவ நிலை இயந்திரம் இயக்கப்பட்டதன் மூலம் 23,550 கி.மீட்டருக்கு மேலே உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு இயந்திரங்கள் படிப்படியாக இயக்கப்பட்டதால் சுற்றுவட்டபாதையில் மங்கள்யான் மெல்ல மெல்ல மேல் எழுந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி புவி ஈர்ப்பு விசையில் இருந்து விலகி 66.6 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் தனது பயணத்தை தொடங்கியது. சந்திரனின் சுற்று வட்டப்பாதை உள்ளிட்ட முக்கிய பாதைகள் அடுத்தடுத்த நாட்களில் வெற்றிகரமாக மாற்றப்பட்டன. மங்கள் யானின் ஒவ்வொரு அசைவுக்கும் தேவை யான ஆணைகளை இஸ்ரோ விஞ் ஞானிகள் பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அவ்வப்போது கொடுத்துக்கொண்டே இருந்தனர்.

மங்கள்யான் விண்கலம் கடந்த ஜூன் 12-ம் தேதி 2-வது வழித்தடத்துக்கு மாற்றப்பட்டது. 300 நாட்களை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் கடந்த 16-ம் தேதி ம‌ங்கள்யானில் மேற்கொள்ள வேண்டிய தகவல் பரிமாற்ற ஆணைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து 3-வது வழித்தடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

செவ்வாய் கிரகத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் மங்கள் யானில் கடந்த 10 மாதங்களாக செயல்படாமல் இருந்த இயந்திரங்களை இயக்கி சோதிக்க இஸ்ரோ விஞ்ஞானி கள் திட்டமிட்டனர். அதன்படி கடந்த திங்கள்கிழமை மங்கள்யான் விண் கலத்தில் உள்ள‌ முக்கிய திரவநிலை நியூட்டன் 440 இயந்திரத்தை சுமார் 4 வினாடிகள் இயக்கினர்.

இதற்கு 0.567 கிலோ எரிபொருள் செலவானது. இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. இதனையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டது போல், மங்கள்யான் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவொருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இந்தியா புதிய சாதனை:

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால் இந்த சாதனையைச் செய்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இதனை சாதனையை படைத்துள்ளன.

முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இதுவரை செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் 21 மட்டுமே வெற்றியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி 
தி இந்து 

இந்திய இயற்கைத் தாவரம்


* ஒரு பகுதியில் எவ்வித முயற்சியும் இன்றி வளர்கிற தாவர வகையை இயற்கைத் தாவரம் என்பர். இந்தியாவின் காணப்படும் தாவரங்களை பரவல் அடிப்படையில் 6 வகைகளாகப் பிரிக்கலாம்.

பசுமை மாறாக்காடுகள்

* இந்தியாவில் 200 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் பகுதிகளில் இக்காடுகள் அமைந்துள்ளன. இக்காடுகளில் ஆண்டு முழுவதும் பசும் இலைகளோடு கூடிய மரங்கள் காணப்படுகின்றன.

* மேலும் இவை உயரமாக வளரக்கூடியவை. மழையளவு குறையும் பகுதிகளில், பசுமை மாறாக் காடுகளுக்குப் பதிலாக ஈரமுள்ள இலையுதிர்க்காடுகள் காணப்படுகின்றன.

* பசுமை மாறாக் காடுகள் அஸ்ஸாம், இமயமலையின் கிழக்குப் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகள், அந்தமான் தீவுகள் ஆகியவற்றில் அமைந்துள்ளன.

* மதிப்பு மிக்க எபோனி, தேக்கு, மூங்கில் போன்ற மரவகைகள் இக்காடுகளில் காணப்படுகின்றன.

இலையுதிர் காடுகள்

* இந்தியாவில் 10 முதல் 200 செ.மீ. வரை மழையளவுள்ள பகுதிகளில் இலையுதிர்க்காடுகள் அமைந்துள்ளன.

* இங்குள்ள மரங்கள், வறண்ட பருவ காலங்களில் ஆவியாதலைத் தடுப்பதற்காக இலைகளை உதிர்த்து விடுகின்றன.

* பருவ மழையாக உள்ள காரணத்தால், பருவக் காற்றுக் காடுகள் இலையுதிர் வகையைச் சார்ந்தவை.

* இவ்விலையுதிர்க் காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுகளிலும், வடசமவெளியை ஒட்டியமைந்த இமயமலையின் அடிவாரப் பகுதிகளிலும், தக்காணப் பீடபூமியின் வடக்கு மறஅறஉம் கிழக்குப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. தேக்கு, சால், சந்தனம், ரோஸ்வுட் மற்றும் மூங்கில் ஆகிய மரங்கள் இக்காடுகளில் உள்ளன.

* தேக்கு விலையுயர்ந்த மர வகையாகும். இது கப்பல் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அடுத்து சாலமரம், இந்தியாவில் உள்ள மிக முக்கிய மரவகையாகும்.

இது அதிகமாக இருப்புப் பாதையின் குறுக்குக் கட்டையாகப் பயன்படுத்தப்படுகிறது. விலை மதிப்புடைய சந்தன மரக்காடுகள் மைசூரில் காணப்படுகின்றன.

முட்புதர்க் காடுகள்

* 50 முதல் 100 செ.மீ. வரை மழையளவுள்ள பகுதிகளில் முட்புதர்க் காடுகள் உள்ளன.

* இங்குள்ள மரங்கள், புற்களைத் தின்னும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, கிளைகளிலும், தண்டுகளிலும் முள் அமைப்புகளைக் கொண்டுள்ளன. மாபல், கைர் ஆகியவை முக்கிய மரங்களாகும்.

* இத்தகைய காடுகள் அதிக அளவில் இராஜஸ்தான், கர்நாடகம், செளராஷ்டிரா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.

பாலைவனத் தாவரங்கள்

* 25 செ.மீ.க்கும் குறைவாக மழையளவு உள்ள பகுதிகளில் தாவரங்கள் காணப்படுகின்றன.

* தார் பாலைவனத்தின் எல்லைப்பகுதி மற்றும் தக்காணப் பீடபூமியின் சில பகுதிகளிலும், இவ்வகைத் தாவரங்கள் காணப்படுகின்றன.

* சப்பாத்திக் கள்ளி, சிரோபடிக் ஆகிய மர வகைகள் நன்கு வளர்கின்றன. இத்தாவரங்கள் உறிஞ்சும் நீரை அதிக நாட்கள் வரை தக்க வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட அளவு பயன்படுத்தக்கூடியவை. இவை பொருளாதார முக்கியத்துவம் உடையவை அல்ல.

மலைக்காடுகள்

* இக்காடுகள் மலைச்சரிவுகளில் காணப்படுகின்றன. இக்காடுகள் மலைகளின் உயரத்திற்கு ஏற்றவாறு வேறுபட்டுக் காணப்படுகின்றன.

* 900 மீ உயரம் வரையுள்ள சரிவுகளில் அயன மண்டலக் காடுகளும், அதனை அடுத்து 2700 மீ. உயரம் வரை அகன்ற இலைக்காடுகளும், 2700 முதல் 3600 மீ உயரத்திற்கு இடைப்பட்ட சரிவில் ஊசியிலைக் காடுகளும் அமைந்துள்ளன.

* 4800 உயரம் வரை ஆல்பைன் காடுகளும், 4800 மீட்டருக்கு மேல் பனி வயல்களும் அமைந்துள்ளன. பனி வயல்களில் தாவரங்களே காணப்படுவதில்லை.

மாங்குரோவ் காடுகள்

* கங்கை மற்றும் பிரமபுத்திரா ஆகிய ஆற்றுச் சதுப்பு நில டெல்டாக்களில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்றன.

* இக்காடுகள் சுந்தரவனக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ிங்கு மரங்கள் குட்டையாகவும், அவற்றின் வேர்கள் நீருக்கு மேல் தோன்றும்படியாகவும் அமைந்துள்ளன.

* இத்தகைய காடுகளில் சுந்தரி வகை மரங்கள் சிறப்பாகக் காணப்படுவதால் இக்காடுகள் சுந்தரவனக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

* இமய மலையின் அடிவாரத்தில் தராய் காடுகளும் இவ்வகையைச் சார்ந்தவையே.

காடுகளின் பயன்கள்

* காடுகளின் முக்கியப் பயன் நீராவி அளிப்பை அதிகரித்து மழை பொழிய உதவுவதே ஆகும்.

* தெற்கில் தேக்கும், மத்திய இந்தியாவில் சால மரமும், வட இந்தியாவில் தேவதருவும் முக்கிய மரங்களாகும். அவை கட்டடம் கட்டவும், ரயில்வேயில் குறுக்குக் கட்டையாகப் போடவும், படகுகள் கட்டவும் பயன்படுகின்றன.

* மென் மரங்களான ஊசியிலைக் காட்டு மரங்கள் பெட்டிகள், தீக்குச்சிகள் மற்றும் மரக்கூழ் தயாரிக்கப் பயன்படுகின்றன.

* லைம் என்னும் புல்லிலிருந்து பெறப்படும் எண்ணெய், கொசுவர்த்திகள் செய்யப்பயன்படுகிறது. கோரை வகைப் புற்கள் பாய் பின்னப் பயன்படுகின்றன.

* திருநெல்வேலியில் தயாரிக்கப்படும் பத்தமடை பாய் மிகவும் புகழ்பெற்றது. கடுக்காய், ஆவாரம் பட்டை போன்றவை தோல் பதனிடப் பயன்படுகின்றன.

* காடுகளின் பயன்பாடுகளின் காரணமாகவே காட்டுப் பயிற்சியாளர் பயிற்சிக்காக கோவை, டேராடூன் ஆகிய இடங்களில் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

* மத்திய அரசு டேராடூனில் காட்டு ஆராய்ச்சிக் கழகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. காடுகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டு வரும் ஒரு முக்கிய இயக்கம் உத்திரப் பிரதேசத்தில் தோன்றி செயல்பட்டு வரும் சிப்கோ இயக்கமாகும்.

* இந்தியாவில் 1894 முதலாகவே காடுகள் கொள்லை பின்பற்றப்பட்டு வருகிறது. இது 1952-ல் திருத்தப்பட்டது. 1988-ல் இந்திய அரசு புதிய காடுகள் கொள்கையை அறிவித்து காடுகளை மேம்படுத்தி வருகிறது.

* 1950-ம் ஆண்டு முதல் நாடெங்கிலும் மரம் நடுவிழா ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்று வருகிறது.

* அதிக வளர்ச்சியும், செழிப்பும் இல்லாத காடுகளைத் திருத்தம் செய்து நல்ல இனத்தைச் சேர்ந்த நாட்டுச் செடிகளை உற்பத்தி செய்யும் திட்டத்தை, காட்டு இலாகாவினர் பல மாவட்டங்களில் செயல்படுத்தி வருகின்றனர். இந்த முறையே குமரி பயிர் முறை என்று அழைக்கப்படுகிறது.

* காட்டிலாகா நிலங்களை குத்தகைக்கு எடுக்கும் நிலமில்லா ஏழைகளை குமரிதாரர்கள் என்பர்.

* அந்தச் செடிகளுக்கிடையே குமரிதாரர்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களையும் விளைவிக்கலாம்.

* தமிழ்நாட்டில் 1984-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி காடுகளின் மொத்த பரப்பளவு 2.2 மில்லியன் ஹெக்டேர். மொத்த நிலப்பரப்பில் 17 சதவீத பகுதிகள் காடுகளாகும்.

இந்திய மண் வகைகள்

* இயற்கை வளங்களில் மிக முக்கியமான வளம் மண். புவியின் மேற்பரப்பில் காணப்படும் மிகச்சிறிய பாறைத் துகள்களால் ஆன படலமே மண் எனப்படும்.

* இந்திய வேளாண்மை ஆய்வுக் குழு (இந்திய கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச்) மண் வகைகளை 8 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

* மண்ணின் மேல் அடுக்கு அரிக்கப்படுவதை மண் அரிப்பு என்பர். மழை பெய்தவுடன் மேற்பரப்பில்லுள்ள மண் கரைந்து செல்கிறது. இதற்கு தகடரிப்பு என்று பெயர்.

* நீர் தேங்குவதாலும், உரங்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாலும் மண் வளம் பாதிக்கப்படுகிறது.

* ராஜஸ்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் மூலம் மண் அரிப்பு ஏற்படுகிறது.

* விவசாய முறையில் களைகளை நீக்கி அடர்த்தியான மண்ணை உருவாக்குவது மல்ச்சிங் எனப்படும்.

* சில முக்கிய மண் வகைகளான வண்டல் மண், கரிசல் மண், செம்மண், லாட்டரைட் ஆகியவற்றைக் காண்போம்.

* இந்தியாவில் உள்ள மண் வகைகளில் மிக அதிகப் பரப்பில் காணப்படுவதும், முக்கியமானதும் வண்டல் மண் ஆகும்.

* இந்தியாவின் பரப்பில் சுமார் 43 சதவீதம் வண்டல் மண்ணாக உள்ளது.

நன்றி  
தினமணி 

23 September, 2014

திரிகடுகம் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

     

         உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும்
         பால்பற்றிச் சொல்லா விடுதலுந் - தோல்வற்றிச்
         சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றுந்
         தூஉய மென்பார் தொழில்.

நீராடி யுண்பதும், பொய்க்கரி புகலாமலிருப்பதும், உயிர் நீங்கினும் சான்றாண்மை நீங்காதிருப்பதும் தூயவர் செயல்கள்

        இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
        நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்
        துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
        நன்றறியும் மாந்தர்க்கு உள.


வறியவர்க்கு பொருளை அளித்தல், இவ்வுலகத்துப் பொருள்களின் நிலையாமையை அறிந்து நல்வழி நிற்றல் , எவ்வுயிரையும் துன்புறுத்தாத நிலையில் வாழ்தல் என்னும் இம்மூன்றும்  அறவழியில் நடக்கும் மக்களுக்கே என்றும் உண்டு  


       முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்

       நிறையிலான் கொண்ட தவமும் - நிறைஒழுக்கம்
       தேற்றாதான் பெற்றவனப்பும் இவைமூன்றும்
       தூற்றின்கண் தூவிய வித்து.

முறை புரியமாட்டாதவன் தலைவனா யிருப்பதும், மனவலி யில்லாதவன் தவஞ் செய்வதும், நன்னடக்கை யில்லாதவன் அழகும் வீண் என்பது.
  

திரிகடுகம்

காரம், கார்ப்பு (உறைப்பு) என்று பொருள்படும். கடுக்கும் பொருளாகிய சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ அல்லது இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்போது இது திரிகடுகம் என்று சொல்லப்பெறும். (பிங்கல நிகண்டு, 352) 

ஆசிரியர் 

திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார். ஆதனார் என்பது இயற்பெயர். ‘நல்’ என்பது அடைமொழி. காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. 

 நூல் அமைப்பும் சிறப்பும் 

திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை, ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார். திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது. இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும். ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.

இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது. இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது. 

22 September, 2014

இந்திய கனிம வளம்






































* இந்தியாவில் முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்த உலோகம் தாமிரம் ஆகும்.

* இந்தியாவைப் பொறுத்த வரையில் உலோகத் தாதுக்களில் இரும்பு, பாக்சைட், மாங்கனீசு போன்றவை பெருமளவிலும், செம்பு, தங்கம், காரீயம், துத்தநாகம் போன்ற ஓரளவு பங்கு பெற்று வருகின்றன.

* இந்தியாவில் பொதுவாக தாதுப்பொருட்களில் மினரல்ஸ் வளமிகுந்து காணப்படுகின்றன.

* தாதுப்பொருட்கள் தொழிற்சாலைகளின் வைட்டமின்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இவை இயற்கையின் அன்பளிப்பு என்றும் குறிப்பிடப்படுகின்றன.

* அலோகத் தாதுக்களில் மைக்கா, சுண்ணாம்பு போன்றவை அதிகயளவில் காணப்படுகின்றன.

இரும்புத்தாது

* இந்தியா இரும்புத்தாது உற்பத்தியில் 7-வது இடத்தை பெற்றுள்ளது.

* இந்தியாவில் மிக அதிகமாகக் கிடைக்கும் இரும்புத்தாது வகை - ஹேமடைட்.

* இந்தியாவில் இரும்பின் கனிகளில் மாக்னடைட் மற்றும் ஹேமடைட் போன்றவை அதிகயளவில் கிடைக்கின்றன.

* ஹேமடைட்டில் 68 சதவீத இரும்பும், மாக்னடைட்டில் 50 - 60 சதவீத இரும்பும், லிமோனைட்டில் 30 சதவீத இரும்பும் காணப்படுகின்றன.

* சமீபத்திய தகவலின்படி 13000 மில்லியன் டன்  அளவிற்கு இரும்புத்தாது இரும்பு வெட்டியெடுக்கப்படமாலே உள்ளதாகத் தெரிவிக்கிறது. அவற்றில் தரமான இரும்புத்தாது ஒரிசா மாநிலம் கியாஞ்சார், போனை, மயூர்பஞ்ச் மாவட்டங்களில் கிடைக்கிறது.

* பீகார் மற்றும் ஒரிசா ஆகிய இரு மாநிலங்களிலும் இரும்புத்தாது உற்பத்தியில் 75 சதவீதம் பங்களிக்கிறன. எனவே இவை இரண்டையும் இந்திய இரும்புத்தாது படலம் என்று குறிப்பிடுகின்றனர்.

* மத்தியப்பிரதேசத்தில் உள்ள துர்க், பஸ்தார் மாவட்டங்களிலும், சத்தீஸ்கரில் உள்ள ரெய்ப்பூரிலும், தமிழகத்தில் சேலம்(கஞ்சமலை) மற்றும் மதுரையிலும், கர்நாடகாவில் குத்ரேமுக் (சமீபத்தில் மூடப்பட்ட குத்ரேமுக் இரும்புத்தாது தொழிற்சாலை) மற்ரஉம் பாபா புதான் குன்றுகளிலும் இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படுகிறது.

* ஜப்பானின் உதவியோடு மத்தியப்பிரதேசத்தின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பைலாடிலா சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

* விசாகப்பட்டினத்திலிருந்து இரும்புத்தாது ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

* இந்தியாவின் இரும்புத்தாதுவிற்கு சர்வதேச சந்தையில் நல்ல வாய்ப்புகள் இருந்து வருகின்னறன. காரணம் அதன் தரமே ஆகும்.

மாங்கனீசு

* இரும்பு எஃகுத் தொழிலுக்கு அடிப்படையானது மாங்கனீசு.

* மாங்கனீசில் கலந்துள்ள இரும்பு மிகவும் கடினமானதாகும்.

* மாங்கனீசு இருப்பு வைப்பதில் இந்தியா ரஷ்யாவிற்கு அடுத்த இடத்தைப் பெற்று வருகிறது.

* இந்தியாவில் மாங்கனீஸ் உற்பத்தியில் ஒரிசா முதலிடத்தையும், கர்நாடகா இரண்டாமிடத்தையும் பெற்று வருகின்றன.

* உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

பாக்சைட்

* பாரக்சைட் அலுமினியக் கனியாகும்.

* மின்னாற்பகுப்பு முறையில்தான் உலோகத்தைத் தனிமைப்படுத்த முடியும். எனவே அலுமினிய உருக்குத் தொழில் குறைந்த விலையில் மிகுந்த அளவு மின்சக்தி காணப்படும் பகுதிகளிலேயே சாத்தியமாகும்.

* கேரளாவில் ஆல்வாயிலும், தமிழ்நாட்டில் மேட்டூரிலும் அலுமினிய உருக்கு ஆலைகள் அமைந்துள்ளன. விமானக் கட்டுமானத் தொழிலுக்கு மிக முக்கியத் தேவை பாக்சைட் ஆகும்.

* ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய இடங்களில் கிடைக்கிறது.

* இங்கு கிடைக்கும் தாதுக்கள் ஜப்பானுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

* தமிழ்நாட்டில் நீலகிரி மலைகளில் பாக்சைட் தாது கிடைக்கிறது.

மைக்கா

* மைக்கா உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

* உலகிலேயே அதிகயளவு மைக்கா இருப்பு வைத்துள்ள நாடு இந்தியா.

* உலகின் 90 சதவிகித மைக்கா உற்பத்தியை இந்தியா செய்து வருகிறது.

* இந்தியாவில் வெள்ளை மைக்கா, கறுப்பு மைக்கா, ஆம்பர் மைக்கா என மூன்று வகை மைக்கா கிடைக்கிறது.

* இந்தியாவில் மைக்கா உற்பத்தியில் பீகார் மாநிலம் முதலிடம் வகிக்கிறது.

* இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மைக்காவில் 70 சதவீதம் பீகாரில் கிடைக்கிறது.

* பீகாரில் கயா, ஹசாரிபாக், முங்கர் ஆகிய மாவட்டங்களில் கிடைக்கிறது.

* உயர்தரமான பெங்கால் ரூபி மைக்கா பீகாரில் கிடைக்கிறது.

* பீகாரின் கிரித் துரங்கம், கோதர்பா சுரங்கம் ஆகிய சுரங்கங்களில் அதிகயளவில் மைக்கா உற்பத்தி செய்யப்படுகிறது.

* பச்சை மைக்கா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள நெல்லூர் மாவட்ட ஆத்மபூர் மற்றும் கடூர் சுரங்கங்களிலும், தமிழ்நாட்டில் சேலம், நீலகிரி பகுதிகளிலும், இராஜஸ்தானில் பில்வாரா, ஆஜ்மீர், ஜெய்ப்பூர், உதயப்பூர் பகுதிகளிலும், மத்திய பிரதேசத்தின் பஸ்தார் மாவட்டப்பகுதிகளிலும் மைக்கா கிடைக்கிறது.

* மைக்கா உற்பத்தியில் இந்தியா பிரேசில் நாட்டுடன் போட்டியிட்டு வருகிறது.

வெள்ளி

* காரீயம் மற்றும் துத்தநாக தாதுக்களைப் பிரித்தெடுக்கும்போது கிடைப்பதே வெள்ளி.

* வெள்ளியின் முக்கிய சுரங்கம் இராஜஸ்தானில் உள்ள சாவார் சுரங்கம்.

தங்கம்

* 1871 முதல் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் முக்கியச் சுரங்கமாக செயல்பட்டுகிறது. இதுவே உலகின் மிக ஆழமான தங்கச் சுரங்கமாகும்.

* ஹட்டி சுரங்கமும், கர்நாடகாவின் ரெய்ச்சூர் மாவட்ட சுரங்கமும் தங்கத்தின் முக்கியச் சுரங்கமாக விளங்குகிறது.

* ஆந்திரப்பிரதேசத்தில் அனத்பூர், ராம்கிரி பகுதிகளிலும் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது.

* ஆந்திரப்பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு தங்கச்சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

* இந்தியாவின் தங்க இருப்பு சுமார் 66700 கிலோ ஆகும். தற்போது தங்கத்தின் உற்பத்தி ஆண்டுதோறும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



நிலக்கரி

* நிலக்கரி அயன மண்டலத்தின் பெருங்காடுகள் படிவங்களால் மூடப்பட்டு, நீண்ட கால அளவில் கரிமமாக்கப்பட்டு தோன்றும் படிவுப்பாறைகள் நிலக்கரி எனப்படும்.

* 1774ல் மேற்கு வங்காளத்தில் உள்ள இராணிகஞ்ச் பகுதி நிலக்கரி வயலில் முதன்முதலாக நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டது.

* தாவரப் பொருட்களை வெப்பமும். அழுத்தமும் நிலக்கரியாக மாற்றுகின்றன. சக்தியின் மூல ஆதாரம் இதுவே ஆகும். எனவேதான் தொழிற்சாலைகளின் தாய் நிலக்கரி என்று அழைக்கப்படுகிறது.

* இரும்பு எஃகு உற்பத்தியில் நிலக்கரி கச்சாப் பொருளாகப் பயன்படுகிறது.

* உலக நிலக்கரி இருப்பு அளவில் 1 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது.

* இந்தியாவில் உள்ள நிலக்கரி பெரும்பாலும் பிட்டுமினஸ் வகையைச் சார்ந்தவை. அதாவது தரம் குறைந்த சாம்பலை அதிகமாகத் தரக்கூடிய நிலக்கரி வயல்களே இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன.

* இந்தியாவில் இரு வகையான நிலக்கரி வயல்கள் உள்ளன. அவை: 01. கோண்ட்வானா கால நிலக்கரி வயல். 02. டெர்ஷியரி கால நிலக்கரி வயல். இவை சுமார் 2 சதவீதம் மட்டுமே உள்ளது.

* தமிழ்நாட்டில் நெய்வேலி, அஸ்ஸாமின் மகும் பகுதி, இராஜஸ்தானின் பிக்கானிர் போன்ற இடங்களில் டெர்ஷியரி கால நிலக்கரி வயல்கள் உள்ளன.

* கோண்ட்வானா கால நிலக்கரி வயல்களில் மேற்கு வங்காளத்தின் இராணிகஞ்ச் நிலக்கரி வயல் மிகப் பழமையானதாக சுமார் 1267 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது.

* ஜார்க்கண்ட் நாநிலத்தின் ஜாரியா, பொக்காரோ, கிரிஷ், கரன்புரா, ராம்கார், டால்டோன்கஞ்ச், அவுரங்காபாத், ஹட்டார் மற்றும் ராணிகஞ்ச் ஆகிய இடங்களிலும் , * ஆந்திரப்பிரதேசத்தின் சிங்கரேணி பகுதியிலும் (இராமகுண்டம்), மத்தியப்பிரதேசத்தின் கோர்பா பகுதியிலும் நிலக்கரி வயல்கள் உள்ளன.

* இந்தியாவில் நிலக்கரி இருப்பில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ஜார்க்கண்ட ஆகும். இங்கு சமார் 32 சதவீத நிலக்கரி இருப்பு உள்ளது.

* ஜார்க்கண்ட மாநிலம் நிலக்கரி உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

* மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் இரண்டும் கூட்டாக நிலக்கரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. ஒரிசா மூன்றாம் இடத்தில் உள்ளது.

* தமிழ்நாட்டில் நெய்வேலி, குஜராத் மற்றும் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது.

* இந்தியாவின் முதல் மற்றும் முக்கிய நிலக்கரிச் சுரங்கம் தற்போது ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ள ராணிகஞ்ச் ஆகும்.

* பெரும்பாலான கோண்ட்வானா கால நிலக்கரி வயல்கள் தமோதர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ளது.

* நிலக்கரியிலிருந்து உரங்கள் மற்றும் 'குக்கிங் கோல்' ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன

* 1983 முதல் உலக நிலக்கரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.

தாமிரம்

* தாமிர உற்பத்தியல் இந்தியா பற்றாக்குறையிலேயே இருந்து வருகிறது.

* தாமிர உற்பத்தியில் மத்தியப்பிரதேசம் முதலிடத்திலும், இராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும் இருந்து வருகின்றன.

* கேத்ரி தாமிரச் சுரங்கம் (இராஜஸ்தான்) மிகவும் புகழ்பெற்றதாகும்.

* இராஸ்தானின் துரதேரரே, கோ தாரிபா ஆகிய இடங்களிலும், ஜார்க்கண்டின் சிங்பம் மாவட்டத்தின் மொசபானி, ரக்கா, தோபனி சுரங்களிலும், ஆந்திராவின் கம்மம் பகுதியும், ஹாசன் மறஅறும் சித்ரதுர்கா (கர்நாடகா) பகுதிகளிலும், இராஜஸ்தானின் ஆல்வார் மற்றும் ஜூஞ்ஜூனு பகுதிகளிலும் தாமிர சுரங்கங்கள் அமைந்துள்ளன.

பெட்ரோலியம்

* எரிபொருள் பயன்பாட்டில் முதலிடம் வகிப்பவை பெட்ரோலியம்.

* இந்தியாவில் 1867 ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தின் திக்பாய் பகுதியின் மக்கும் என்னும் இடத்தில் பெட்ரோலியம் வெளிக்கொணரப்பட்டது.

* பெட்ரோலியத்தை அதன் முக்கியத்துவத்தின் பொருட்டு திரவத் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

* இந்தியாவின் பெட்ரோலியத் தேவையில் 33 சதவிகிதத்தை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. மீதமுள்ள 67 சதவிகித பெட்ரோலியமே இறக்குமதி செய்யப்படுகின்றன.

* இந்தியாவில் அதிக அளவில் பெட்ரோலியம் உற்பத்தி (65 சதவிகிதம்) செய்யப்படும் இடம் மும்பை ஹை ஆகும்.

* மிகக்குறைவாக உற்பத்தி செய்யப்படும் இடம் அருணாச்சலப்பிரதேசம் ஆகும்.

* தமிழ்நாட்டில் சுமார் 14 சதவிகிதம் பெட்ரோலியம் உற்பத்தி செய்யப்படுகிறது.

* இந்தியாவின் மிகப்பழமையான எண்ணெய்க் கிணறு திக்பாய் எண்ணெய் வயல்.

* குஜராத் காம்பே வளைகுடா பகுதியில் கலோல், அங்கலேஸ்வர், லூனேஜ் ஆகிய இடங்களிலும், அஸ்ஸாமில் திக்பாய், மொரான், ககர்கட்டியா, சிப்சாகர் ஆகிய இடங்களிலும், மகாராஷ்டிராவில் மும்பைக் கடற்கரையின் மும்பை ஹை பகுதியிலும், மேலும் மகாராஷ்டிராவின் பசீன் பகுதியிலும் எண்ணெய் வயல்கள் உள்ளன.

* இந்தியாவில் தற்போது 11 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவை: பீகார் மாநிலம் பரெளனி, மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை, கேரளா மாநிலம் கொச்சி, அஸ்ஸாம் மாநிலம் திக்பாய், குவஹாத்தி, மேற்கு வங்கா மாநிலம் ஹால்தியா, ஆந்திரப்பிர மாநிலம் விசாகப்பட்டினம், .குஜராத் மாநிலம் கயட்டி, தமிழ்நாடு மாநிலம் சென்னை மற்றும் நரிமணம், .உத்திரப்பிரதேசம் மாநிலம் மதுரா, ஹரியானா மாநிலம் கர்னால், குஜராத் மாநிலம் அங்கலேஸ்வார், கலோர், நவகம், கொசம்பா, காதனா, அலியாபெட் தீவுகள் ஆகிய இடங்களில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நன்றி 
தினமணி 

21 September, 2014

சீவக சிந்தாமணி - 7 ஆம் வகுப்பு சமச்சீர்


வீழ்ந்து வெண்மழை  தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு
ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச்
சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத் தனவே .

பொருள் :  வெண்மழை வீழ்ந்து தவழும் விண் உறு பெருவரை - வெள்ளிய முகில் படிந்து தவழும் வானுயர் பெருமலை; பெரும் பாம்பு ஊழ்ந்து தோல் உரிப்பன போல் ஒத்த - பெரிய பாம்பு கழன்று தோலுரிப்பன போலேயாய், அம் முகில் போன பிறகு அப் பாம்பை ஒத்தன; அவற்று அருவி தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின - அம்மலையினின்றும் அருவிகள் தாழ்ந்து வீழ்கின்றவை முழவு போல முழங்கின; மதுகரம் பாடச் சூழ்ந்து மாமயில் ஆடி நாடகம் துளக்கு உறுத்தன - (அம் முழக்கம் கேட்டு) வண்டுகள்பாட, வளைந்து மயில்கள் ஆடிப், பிறர் ஆடும் நாடகங்களை வருத்தம் உறுத்தின.

சொற்பொருள்:

  விண் – வானம்
  வரை – மலை
  முழவு – மத்தளம்
  மதுகரம் – தேன் உண்ணும் வண்டு

தமிழில் முழுமையாகக் கிடைக்கும் காப்பியங்களுள் ஒப்பற்றதாய்த் திகழ்வது சீவக சிந்தாமணி ஆகும். சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் கதை அமைப்பு, கதை மாந்தர் படைப்பு, நூற்பயன் முதலான கூறுகளால் முழுமை பெற்றுத் திகழ்கின்றது. விருத்தம் என்னும் புதிய பாஇனம்-இந்நூலில் முதன் முறையாகக் கையாளப்பட்ட சிறப்புடையது. அதனால் இக்காப்பியம் பிற்காலத்தில் எழுந்த கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய காப்பியங்களுக்கு அடிப்படையாகவும், முன்னோடியாகவும் அமைந்துள்ள பெருமையுடையது.

பெயர்க் காரணம்

சிந்தாமணி - ஒளி கெடாத ஒரு வகை மணி. இந்நூலிற்கு இப்பெயர் அமைந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒளி கெடாத மணி போன்றது என்ற காரணமே இந்நூலுக்குப் பொருத்த மானதாகும். இந்நூல் தோன்றிய காலம் முதல் புகழ் குன்றாது நின்று நிலவுவதே தக்க சான்றாகும்.

இலக்கண நூலார், சிந்தாமணி என்பது நெஞ்சின் கண் பொதிந்து வைத்தற்குரிய ஒரு மணி போன்றது என்பர். அதுபோல் இந்நூலைப் படிப்போர் அறிவுப் பொருள் அனைத்தும் ஒருங்கே பெறுமாறு படைத்தலால் இந்நூல் இப்பெயர் பெற்றது எனலாம்.

காவியத் தலைவனான தன் மகனை விசய மாதேவியார் முதன் முதலாக இட்டு விளித்த பெயர் சிந்தாமணி என்பதாகும். பின்னர் வழிபடு தெய்வம் வானொலியாக ‘சீவ’ என்று வாழ்த்தியது. அதற்குப் பின் அக்குழந்தைக்குச் சீவகன் என்று பெயரிட்டனர். சீவகனின் வரலாற்றை முழுமையாகத் தெரிவிப்பதால் சீவக சிந்தாமணி என்று இந்நூல் பெயர் பெற்றது.

நூலாசிரியர்

சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்தைப் படைத்தவர் திருத்தக்க தேவர். சோழர் குலத்தில் அரச மரபைச் சார்ந்தவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். தீபங்குடியில் பிறந்தவர். இவருடைய காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும்.

சமணத் துறவிகள் அறக்கருத்துகளை மட்டும் அன்றி இல்லறச் சுவையையும் பாட முடியும் என்பதனை நிறுவும் பொருட்டு இந்நூலை இயற்றினார் திருத்தக்க தேவர்.குருவின் வேண்டுகோளுக்கு இணங்க நரி விருத்தம் பாடிய பிறகே சீவக சிந்தாமணியைப் பாடினார். இத்தகு சிறப்புக் கொண்ட திருத்தக்க தேவரைத் ‘தமிழ்க் கவிஞர்களுள் சிற்றரசர்’ என்று வீரமாமுனிவர் பாராட்டுகின்றார். தேவர், திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், திருத்தகு மகாமுனிகள் என்னும் பெயர்களாலும் வழங்கப்படுவார்.

நூல் கூறும் செய்தி

சச்சந்தன் விசயை என்போர் சீவகனின் பெற்றோர் ஆவர். கட்டியங்காரன் என்னும் அமைச்சன் சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனைக் கொன்று, ஏமாங்கத நாட்டினைக் கைப்பற்றினான். குழந்தைப் பருவம் முதற்கொண்டு சீவகனைக் கந்துக்கடன் என்னும் வாணிகன் வளர்த்து வந்தான். உரிய பருவம் எய்தியதும் தன் நாட்டைப் பெறுவதற்குத் தாயின் அறிவுரையோடு, மாமன் கோவிந்தனின் துணைக்கொண்டு போரிட்டு வென்றான், சீவகன். அச்செய்திகளை விரிவாக விளக்கிக் கூறும் நூலே சீவக சிந்தாமணி ஆகும்.

நூல் அமைப்பு

சீவக சிந்தாமணி என்னும் பேரிலக்கியம், நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாக, 13 இலம்பகங்களைக் கொண்டு திகழ்கின்றது. இலம்பகம் யாவும் மகளிர் பெயரினையே பெற்றுள்ளன. ஒவ்வோர் இலம்பகத்திலும் ஒரு மண நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இலக்கியச் சிறப்பு மிக்க இந்நூலில் 3145 பாடல்கள் உள்ளன. விருத்தம் என்னும் பாவகையால் பாடப் பெற்றது.

நூலின் சிறப்பு

சீவகனின் வீர தீரச் செயல்கள், பேரழகு, பேராற்றல், போராற்றல், அரச குடும்பத்தின் செயல்கள், அரசியல் நெறிமுறைகள், மனித குல மேம்பாட்டிற்குத் தேவையான அறக்கருத்துகள் கூறுதல் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. சீவகன் தன் ஆற்றலால் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு. திருத்தக்க தேவர் தம் நூலுக்குச் சிந்தாமணியின் சரிதம் என்றே பெயரிட்டனர்.

சிந்தாமணி ஒரு சமயக் காப்பியமாகும். வட மொழியிலுள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் ஆகிய நூல்களில் சீவகன் கதை காணப்படுகிறது. அவற்றைத் தழுவித் தமிழில் சீவக சிந்தாமணி என்னும் பெரு நூலாகத் தந்துள்ளார் திருத்தக்க தேவர்.

20 September, 2014

இந்திய போக்குவரத்து



 இரயில் போக்குவரத்து

* இந்திய போக்குவரத்தின் அடிப்படை பரிமாணங்கள் இரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப்போக்குவரத்து எனலாம்.

* இந்திய இருப்புப் பாதையானது 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பொது மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

* உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய இரயில்வே அமைப்பைக் கொண்ட நாடு இந்தியா.

* உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டு ஒரே துறையாக செயல்பட்டு வரும் துறை - இந்திய ரயில்வே துறை.

* இந்தியாவின் முதல் இருப்புப் பாதை பம்பாயிலிருந்து தானா வரை(34 கி.மீட்டர்) 1853ல் துவங்கப்பட்டது.

* தற்போது இந்திய இருப்புப் பாதைகளின் நீளம் சுமார் 63,140 கி.மீ.

* இந்திய இரயில்வே தினமும் 14,444 தொடர்வண்டிகளை இயக்கி வருகின்றன.

* 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மொத்தம் 47 தொடர்வண்டி அமைப்புகள் இருந்து வந்தன. அவைகள் 1951-ல் தேசியமயமாக்கப்பட்டது. அதாவது நாட்டுடமையாக்கப்பட்டது.

* இந்திய இரயில்வே Brod Guage - 50 சசவீதமும், Metre Gauge - 43 சதவீதமும், Narrow Gauge -  7 சதவீதம் என்று மூன்று வகையான இருப்புப் பாதைகளை அமைத்து செயல்பட்டு வருகின்றன.

* இந்திய ரயில்வே 16 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் வடக்கு இரயில்வே சுமார் 11000 கி.மீ நீள இருப்புப் பாதையுடன் மிக நீண்டதாக விளங்குகிறது.

* இந்திய இரயில்வே 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி தனது 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

* கொங்கன் இரயில்வே திட்டம் மார்ச் 1990ல் துவங்கப்பட்டது. இத்திட்டம் கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களை குறுகிய வழியில் இணைக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் சுமார் 760 கி.மீ. தூரத்தை இணைக்கிறது.

* இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சதாப்தி அதிவேக இரயில் இயங்கி வருகின்றன.

* புதுதில்லிக்கும் மும்பைக்கும் இடையே செல்லும் அதிவிரைவு இரயில்களிலும், ராஜஸ்தானில் இயங்கக்கூடிய அரண்மனை இராஜஸ்தானி இரயிலிலும் தொலைபேசி வசதிகள் செய்யப்பட்ட இரயில்கள் இயங்கி வருகின்றன.

* 1994 ஆம் ஆண்டு முதல் அதிவிரைவு இரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய இரயில்வே.

* 1985-ல் நீராவி இரயில் இயந்திரங்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது.

* 1995-ல் இரயில் முன்பதிவு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.

இந்திய இரயில்வே மண்டலங்கள் மற்றும் தலைமையிடம், தொடங்கப்பட்ட ஆண்டு, பயணிக்கும் தூரங்கள்(கிமீ):

01. வடக்கு இரயில்வே (NR ) 1952 -ம் ஆண்டு முதல் 6968 கிமீ தூரம் தலைமையிடம் - தில்லி

02. வடகிழக்கு இரயில்வே (NER ) 14.4.1952-ம் ஆண்டு முதல் 3667 கி.மீ தூரம் தலைமையிடம் கோரக்பூர்.

03. வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே (NFR ) 15.01.1958 -ம் ஆண்டு முதல் 3907 கி.மீ தலைமையிடம் - குவஹாத்தி

04. கிழக்கு இரயில்வே (ER ) 1952-ம் ஆண்டு முதல் 2414 கி.மீ தலைமையிடம் கொல்கத்தா.

05. தென்கிழக்கு இரயில்வே (SER ) 1955-ம் ஆண்டு முதல் 2631 கி.மீ. தலைமையிடம் கொல்கத்தா.

06. தென்மத்திய இரயில்வே (SCR ) 02.10.1966 -ம் ஆண்டு முதல் 5803 கி.மீ தலைமையிடம் செகந்திராபாத்.

07. தென்னக இரயில்வே (SR ) 14.04.1951 -ம் ஆண்டு முதல் 5098 கி.மீ தலைமையிடம் சென்னை.

08. மத்திய இரயில்வே (CR)  05.11.1951 -ம் ஆண்டு முதல் 3905 கி.மீ தலைமையிடம் மும்பை

09. மேற்கு இரயில்வே (WR) 05.11.1951 -ம் ஆண்டு முதல்  6182 கி.மீ தலைமையிடம் மும்பை

10. தென்மேற்கு இரயில்வே (SWR) 01.04.2003-ம் ஆண்டு முதல் 3177 கி.மீ தலைமையிடம் ஹூப்ளி

11. வடமேற்கு இரயில்வே (NWR) 01.10.2002 -ம் ஆண்டு முதல் 5459 கி.மீ. தலைமையிடம் ஜெய்ப்பூர்

12. மேற்குமத்திய இரயில்வே (WCR)  01.04.2003 -ம் ஆண்டு 2965 கி.மீ. தலைமையிடம் ஜபல்பூர்

13. வடமத்திய இரயில்வே (NCR) 01.04.2003 -ம் ஆண்டு முதல் 3151 கி.மீ. தலைமையிடம் அலகாபாத்

14. தென்கிழக்குமத்திய இரயில்வே (SECR)  01.04.2003 -ம் ஆண்டு முதல் 2447 கி.மீ. தலைமையிடம் பிலாஸ்பூர்

15. கிழக்குக்கடற்கரை இரயில்வே (ECoR) 01.04.2003 -ம் ஆண்டு முதல் 2572 கி.மீ. தலைமையிடம் புவனேஸ்வர்

16. கிழக்குமத்திய இரயில்வே (ECR) 01.10.2002 -ம் தேதி ஆண்டு முதல் 3628 கி.மீ. தலைமையிடம் ஹாஜிபூர்

சாலைப் போக்குவரத்து

* இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு வரையிலான மதிப்பீட்டின்படி இந்தியாவில் 33 லட்சம் கி.மீ.க்கும் அதிகமான தொலைவி்ற்கு சாலை வசதிகள் உள்ளன.

* இந்திய மாநிலங்களில் கர்நாடகா மிக நீண்ட சாலைகளுடன் (64000 கி.மீ) முதலிடத்தை பெற்று வருகிறது.

* சாலைகளை பொருத்தவரை தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், கிராம வழிச் சாலைகள், சர்வதேச சாலைகள் என்று பல வகைகளில் செயல்பட்டு வருகின்றன.

* இந்தியாவின் எல்லா மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக சுமார் 30 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

* தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் தங்கநாற்கரத் திட்டம் (Golden Quardrilateral Connecting four Metropolican Cities) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நான்கு முக்கிய நகரங்களான தில்லி, மும்பை, சென்னை மற்றும் கல்கத்தா ஆகியவை இணைக்கப்பட உள்ளன.(5952 கி.மீ)

* வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் விதமாக சுமார் 7300 கி.மீ நீளத்தில் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* தேசிய நெடுஞ்சாலைகளுக்கான திட்டங்கள் அனைத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.

* இந்திய சாலை கட்டுமான நிறுவனம் 562.88 கோடி இழப்பால், தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் கீழ் இந்நிறுவனம் 2000ம் ஆண்டு களைக்கப்பட்டது

வான்வழிப் போக்குவரத்து

* இந்தியாவில் மொத்தம் 5 சர்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை: 01. இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையம், பாலம், தில்லி 02. டம் டம் விமான நிலையம். 03. கல்கத்தா, சாந்தா குரூஸ் விமான நிலையம், கல்கத்தா 04. சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம் 05. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்.

* ஏர் இந்தியா நிறுவனம் 1953-ல் தோற்றுவிக்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு வரை சுமார் 90 நாடுகளுடன் விமானத் தொடர்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது.

* ஏர் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு வான்வழிப் போக்குவரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

* 1953-ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

* Pawan Hans Limited என்ற நிறுவனம் தேவைப்படும் நபர்களுக்கு ஹெலிகாப்டர் சரிவீஸ் வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. பொதுவாக எண்ணெய் நிறுவனங்கள் இவற்றின் பயன்பாட்டைப் பெரிதும் பெற்று வருகின்றன.


நீர்வழிப் போக்குவரத்து

உள்நாட்டு நீர்வழிகளின் மேம்பாட்டிற்காக 1985-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி கப்பல் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் 1986 அக்டோபர் 27-ல் இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் அமைக்கப்பட்டது.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமையகம் - உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ளது.

* இந்தியாவின் பன்னாட்டு வர்த்தகத்தில் நீர்வழிப்பாதை போக்குவரத்து மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.

* வளரும் நாடுகளிடையே சரக்குக் கப்பல்களின் நிலையில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது.

* இந்தியாவில் பெரிய துறைமுகங்களும், சிறிய துறைமுகங்களும் என இரு துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன. 12 பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

* மேற்குக் கடற்கரையில் கண்ட்லா, மும்பை, மர்மகோவா, மங்களூர் மற்றும் கொச்சி துறைமுகங்களும், கிழக்குக் கடற்கரையில் கொல்கத்தா, பாரதீப் விசாகப்பட்டினம்,

சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களும் அமைந்துள்ளன.

* கண்ட்லா துறைமுகம் ஒரு Tidal Port ஆகும்.

* விசாகப் பட்டினம் துறைமுகம் ஆழமிகுந்த துறைமுகமாக செயல்பட்டு வருகிறது.

* சென்னை துறைமுகம் ஒரு செயற்கைத் துறைமுகமாகும்.

* சமீப காலமாக தமிழகத்தின் எண்ணூர் துறைமுகம் 12-வது பெரிய துறைமுகமாக செயல்பட்டு வருகிறது.

* மும்பை ஒரு சிறந்த இயற்கைத் துறைமுகமாகும். சூயஸ் கால்வாய் வழியாக வரும் கப்பல்கள் மும்பையில் தங்கிப் பின்னர் செல்கின்றன.

* மேற்கு ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகளை நோக்கியிருக்கும் மும்பை துறைமுகத்தை இந்தியாவின் மேற்கு வாயில் என்பர். இதுவே இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் முதல் துறைமுகமாகும்.

* மும்பை துறைமுகத்தின் நெரிசலைத் தவிர்ப்பதற்காக நவஹேவா என்னுமிடத்தில் கட்டப்பட்ட துறைமுகம் ஜவகர்லால் நேரு துறைமுகம் ஆகும். இது ஒரு நவீன துறைமுகம் ஆகும்.

* போர்ச்சுகீசிய துறைமுகமாக இருந்த மர்மகோவா துறைமுகமும் ஒரு முக்கிய இந்திய இயற்கைத் துறைமுகமாகும். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் இரும்புத் தாதுவில் சுமார் 60 சதவிதம் இத்துறைமுகத்தின் வழியாகவே ஏற்றுமதியாகிறது.

* கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள புதிய மங்களூர் துறைமுகம் குதிரேமுக் என்ற இடத்தில் உள்ள இரும்புத் தாதுக்களை ஏற்றுமதி செய்ய இத்துறைமுகம் பயன்படுகிறது.

* நீர்வழிப் போக்குவரத்தில் அலகாபாத் முதல் ஹால்தியா வரையிலான நீர்வழிப்பாதை NW-1 என்று குறிப்பிடப்படுகிறது.

நன்றி 
தினமணி 

இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்


* ஒரு திட்டங்களின் மூலம் பல நோக்கங்களை சென்றடைவதே பல்நோக்குத் திட்டங்கள் ஆகும். இவை ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களே ஆகும்.

* ஒரு ஆற்றுப்பகுதி முழுவதும் ஒரு திட்டத்திற்குரிய பரப்பாகவே கருதப்படுகின்றன. இத்திட்டங்கள் நீர்ப்பாசனம், நீர் வளம், வெள்ளத் தடுப்பு, தொழில் வளம், மண் அரிப்பு தடுப்பு, காடு வளர்ப்பு, மீன் பிடிப்பு, மின் சக்தி் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்படுகின்றன.

* ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் நவீன இந்தியாவின் புதிய கோயில்கள் என்று புகழப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களின் முதல் பல்நோக்குத் திட்டமாக

அமைக்கப்பட்ட திட்டம் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் ஆகும். இவை வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் திட்டமாகும்.

தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம்

* சோட்டா நாகபுரி பகுதியிலிருந்து மேற்கு வங்காளம் வரை பாய்ந்து வருகிறது தாமோதர் நதி.

* தாமோதர் நதி கோடைக்காலங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை வெள்ளத்தில் மூழ்கச் செய்து வருகின்றன.

* இதனால் தாமோதர் ஆறு இந்தியாவின் துயரம் என்று வர்ணிக்கப்படுகிறது.

* 1948ல் தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம் துவங்கப்பட்டது.

* இக்கழகம் சுமார் ரூ.150 கோடியில் திலாயா, கோனார்.பாஞ்சத், மைதான் ஆகிய நான்கு இடங்களில் அணைகளைக் கட்டியுள்ளது.

* மேலும் தாமோதர் பள்ளத்தாக்கில் காணப்படும் இரும்பு மற்றும் நிலக்கரி வளத்தையும் பயன்படுத்த ஆலோசித்து வருகின்றன.

* இத்திட்டத்தின் உதவியால் ஜாம்ஷெட்பூர், துர்க்காப்பூர், குல்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளும் மிகுந்த  பயன் பெற்றி வருகின்றன.

* இத்திட்டத்தின் பயனை பீகார் (ஜார்க்கண்ட்) மற்றும் மேற்கு வங்காளம் இரு மாநிலங்களும் பெற்று வருகின்றன. மேலும் மத்தியப்பிரதேசமும் இதன் பயனை பங்கிட்டுக்கொள்கின்றன.

ஹிராகுட் திட்டம்

* இத்திட்டம் மகாநதியின் மீது 1948-ல் தொடங்கப்பட்டு 1957-ல் முடிவடைந்தது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.83 கோடி.

* இத்திட்டத்தின் கீழ் மகாநதியின் மாது ஒரிசாவில் ஒரு நீண்ட அணை கட்டப்பட்டது. அதாவது 4.8 கிமீ நீளமும், 61 மீட்டர் உயரமும் உடைய இந்த அணைக்கட்டுதான்  உலகின் மிக நீண்ட அணைக்கட்டு ஆகும்.

* இந்த அணை சுமார் 810 கோடி கியூபிக் மீட்டர் நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டது. இத்திட்டத்தின் கீழ் 9 மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு 270 மெகாவாட் நீர் மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

* திக்காரா மற்றும் நாராஜ் ஆகிய அணைகள் இத்திட்டத்தின் கீழ் அமைந்துள்ளன. வெள்ளத் தடுப்பு, ஒரிசாவின் இயற்கை வளப்பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இத்திட்டமாகும்.

துங்கபத்ரா திட்டம்

* துங்கபத்ரா நதி, துங்க் மற்றும் பத்ரா ஆகிய இரு ஆறுகளின் இமைப்பாகும்.

* ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியே இத்திட்டமாகும்.

* கர்நாடகாவில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள மல்லபுரம் பகுதியில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 2.5 கிமீ நீளமும், 50 மீ உயரமும் உடையது. இங்கிருந்து சுமார் 225 கிமீ நீளத்திற்கு ஒரு கால்வாயும், 350 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு கால்வாயும் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தின் கீழ் 14 மின் சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு 126 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பக்ரா நங்கல் திட்டம்

* இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்குத் திட்டம் பக்ரா நங்கல் திட்டம் ஆகும். சிந்துவின் துணையாறாகிய சட்லஜ் ஆற்றின் குறுக்கே பக்ரா என்னும் இடத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தினால் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பயன் பெறுகின்றன. இத்திட்டம் நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

* சட்லஜ் ஆற்றின் குறுக்கே, பக்ரா என்னும் இடத்தில் 226 மீட்டர் உயரத்துடன், 518 மீட்டர் நீளத்துடனும் அணை கட்டப்பட்டுள்ளது. பக்ரா உலகின் உயரமான அணை ஆகும்.

* இந்த அணையால் உருவான மனிதனால் கட்டப்பட்ட, 8 மீட்டர் அகலமும், 80 கிமீ நீளமும் கொண்ட மிகப்பெரிய செயற்கை ஏரிக்கு, சீக்கியர்களின் 10-வது குருவான, குரு கோவிந்த் சிங் என்பவரின் நினைவாக கோவிந்த் சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

* பக்ரா அணைக்குக் கீழாக 13 கிமீ தொலைவில் நங்கல் என்னுமிடத்தில் 29 மீட்டர் உயரத்துடன் 305 மீட்டர் நீளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இதுவும் சட்லஜ் ஆற்றின் மீதே அமைந்துள்ளது. இங்கிருந்து நங்கல் நதிநீர்க்கால்வாய் தொடங்குகிறது.

* சட்லஜ் ஆற்றின் மீது பக்ரா நங்கல் அணைக்குக் கீழாக 13 கிமீ தொலைவில் நங்கல் என்னுமிடத்தில் 29 மீட்டர் உயரத்துடன் 305 மீட்டர் நீளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து நங்கல் நதிநீர்க்கால்வாய் தொடங்குகிறது.

* பக்ராவில் 2 மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு, அவற்றின் மூலம் 210 மெகாவாட் நீர் மின்சக்தி பெறப்படுகிறது. மேலும் நங்கல் கால்வாய்த் திட்டத்திலும் 2 மின்சக்தி நிலையங்கள் உள்ளன.

* 64 கிமீ நீளமுடைய நங்கல் கால்வாய் நங்கல் பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக இத்திட்டதினால் 1204 மெகாவாட் மின்சக்தி கிடைக்கிறது. அத்துடன் 1100 கிமீ நீளத்திற்கு கால்வாய்கள் அமைந்துள்ளன. இத்திட்டத்தினால் 15 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது.

கோசி திட்டம்

* பீகாரில் உள்ள கோசி நதியின் மீது நேபாளத்தின் உதவியுடன் கோசி திட்டம் அமைக்கப்பட்டது. வெள்ளத் தடுப்பே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

* கோசி ஆறு பீகாரின் துயரம் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் முக்கிய கால்வாய் ஹனுமான் நகர் தடுப்பு வரை செல்கிறது.

* கோசி திட்டத்தால் பயன் பெறும் மாநிலம் பீகார் மற்றும் நேபாளம்.

* இதே போன்று இந்தியாவும், நேபாளமும் இணைந்து செயல்படுத்தி உள்ள மற்றொரு திட்டம் கண்டக் திட்டமாகும்.

நாகார்ஜூனா திட்டம்

* ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா நதி மீது அமைந்துள்ள திட்டமாகும். புத்த துறவியாகிய நாகார்ஜூனரை நினைவுப்படுத்தும் பொருட்டு நாகார்ஜூன சாகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தின் கீழ், ஆந்திரப்பிரதேசத்தின் நாள்கொண்டா மாவட்டத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.5 கீமி உயரம் 25 மீட்டர் ஆகும்.

* இத்திட்டத்தின் மூலம் 50 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் இரு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பல் பள்ளத்தாக்குத் திட்டம்

* மத்தியப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியே இத்திட்டமாகும்.

* யமுனையின் தெற்கு கிளை நதியே சாம்பல்.

* இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சம்பல் பகுதியின் மண் பாதுகாப்பே ஆகும்.

* இத்திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் காந்தி சாகர் அணையும், இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நீர்த் தடுப்பு மற்றும் ஜவகர் சாகர் அணை, இராணா பிரதாப் சாகர் ஆகிய மூன்று அணைகள் அமைந்துள்ளன.

* இத்திட்டத்தினால் 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு நீர்ப்பாசனம் பெற்று வருகிறது.

ரீகண்ட் திட்டம்

* சோன் நதியின் கிளை நதியான ரீகண்ட் ஆற்றின் குறுக்கே இத்திட்டம் அமைந்துள்ளன. இந்த அணையின் நீர்த்தேக்கம் கோவிந்த் வல்லப பந்த் சாகர் என்று அழைக்கப்படுகிறது.

* இந்த அணை 90 மீ உயரமும், 1020 மீ நீளமும் கொண்டது.

* இத்திட்டம் நீர்மின்சக்தியை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

* உத்திரப்பிரதேசத்தின் 7 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இத்திட்டத்தினால் நீர்ப்பாசனம் பெற்று வருகிறது. 6 அலகுகளின் மூலம் 500 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* இத்திட்டத்தின் மூலம் பிம்பிரி என்னும் இடத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலைகளும், ரேணுகுட் பகுதியில் உள்ள அலுமினிய தொழிற்சாலையும், ஊரசர பகுதியின் சிமெண்ட் தொழிற்சாலையும் மின் ஆற்றல் பெறுகின்றன.

இந்திராகாந்தி கால்வாய்த் திட்டம்

* இராஜஸ்தானின் மாநிலத்தின் முக்கிய திட்டமாகும் இந்த திட்டம்.

* பியாஸ் நதியின் மீது போங் அணை கட்டப்பட்டுள்ளது. பியாஸ் மற்றும் இராவி நதிகளில் உள்ள நீரை சட்லஜ் ஆற்றிற்கு திசை திருப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

* கால்வாய்களி்ன் மூலம் நீரை திசை திருப்பப்படுகிறது. போங் அணையும் நீரை திசை திருப்புகிறது.

* இராஜஸ்தான் கால்வாய் அல்லது இந்திரகாந்தி கால்வாய் என்று அழைக்கப்படும் இக்கால்வாய்தான் உலகின் மிக நீளமான நீர்ப்பாசனக் கால்வாய் ஆகும்.

* இராஜஸ்தான் மாநிலத்தின் காந்தி நகர், பிக்கானீர், ஜெய்சல்மீர் போன்ற பகுதிகளை வளப்படுத்துகிறது.

* இக்கால்வாயின் உதவியால் பியாஸ், இராவி மற்றும் சட்லெஜ் ஆகிய ஆறுகளின் நீரை முழுமையாக இந்தியா பயன்படுத்த முடிகிறது.

* ரஷ்யா, கனடா, சைர், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா ஐந்தாவது இடத்தில் உலகளவில் நீர்மின்சக்தித் துறையில் இடம் பெற்றுள்ளது.

* நமது நாட்டின் நீர்மின்சக்தி வளத்தில் 30 சதவீதம் பிரம்மபுத்திரா பகுதிகளில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பல திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஷராவதி திட்டம்

* இவை ஜோக் நீர்வீழ்ச்சியில் கர்நாடாகா மாநிலம் ஷிமோகா மாவட்டம் ஷராவதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

* இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி ஜோக் நீர்வீழ்ச்சி ஆகும். 891 மெகாவாட் உற்பத்தியுடன், பெங்களூர் பகுதியை வளப்படுத்துகிறது.

* கலினாடி திட்டம் மூலம் 270 மெகாவாட் உற்பத்தி உயர்த்தப்பட்டுள்ளது.

* ஷராவதி திட்டம் மகாத்மா காந்தி நீர்மின்சக்தித் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

குந்தா திட்டம்

* தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் குந்தா திட்டத்தின் மூலம் 425 மெகாவாட் திறனிலிருந்து 535 மெகாவாட் உற்பத்திக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் முதன்முதலாக 1902-ம் ஆண்டு காவிரி ஆற்றின் மீது கர்நாடகாவில் உள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சிப் பகுதியில்தான் முதல் நீர்மின்சக்தித் திட்டம் துவங்கப்பட்டது.

* இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகருக்கு மின்சக்தி வழங்குவதற்காக துவங்கப்பட்டதுதான் டாடா நீர்மின்சக்தித் திட்டம்.

* தமிழகத்தில் பைக்காரா நீர்மின்சக்தித் திட்டமே முதல் திட்டமாகும்.

* இமயமலையின் வட பகுதியான மாண்டி என்னும் பகுதியில்தான் இந்தியாவின் முதல் திட்டம் துவங்கியது எனலாம்.

* மேட்டூர் திட்டம் - தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் கட்டப்பட்டுள்ள ஸ்டான்லி அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

* கர்நாடகாவில் மலப்ரபா ஆற்றின் மீது மலப்ரபா திட்டம் அமைந்துள்ளது.

* கேரளாவில் பெரியாற்றின் மீது இடுக்கி திட்டம் அமைந்துள்ளது.

* கேரளாவில் சபரகிரி நதியில் 300 மெகாவாட் திறனுடன் சபரகிரி திட்டம் அமைந்துள்ளது.

* கோதாவரி மீது ஆந்திரப்பிரதேசத்தில் போச்சம்பேட் திட்டம் அமைந்துள்ளது.

* பலிமேளா திட்டம், உக்காயா திட்டம் - ஒரிசாவில் அமைந்துள்ளது.

* உத்திரப்பிரதேசம் ராம்கங்கா நதியின் மீது ராம்கங்கா திட்டம் அமைந்துள்ளது.

* ஒரிசாவில் மகாநதி மீது மகாநதி டெல்டா திட்டம் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.

* குஜராத்தில் தபதி ஆற்றின் மீது காக்ரபாரா திட்டம் அமைந்துள்ளது.

* மத்தியப்பிரதேசத்தில் நர்மதையின் துணை ஆறு தவா ஆற்றின் மாது தவா திட்டம் அமைந்துள்ளது.

* போங் அணை பியாஸ் நதியின் மீது பியாஸ் திட்டம் அமைந்துள்லது. இத்திட்டத்தால் பஞ்சாப், அரியானா மற்றும் இராஜஸ்தான் மாநிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

* சலால் திட்டம் - ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் முரளி ஆற்றின் மீது மயூராக்ஷி திட்டம் அமைந்துள்ளது.

* மத்தியப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகியவற்றால் நர்மதை மீது அமைக்கப்பட்டது - நர்மதா பள்ளத்தாக்குத் திட்டம்.

* நர்மதை நதி மீது சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது.

* இந்திய அரசு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட திட்டம் - தேரி மின்சக்தி திட்டம். இத்திட்டத்தின் நோக்கம் 2400 மெகாவாட் மின் உற்பத்தியே.

* ஃபராக்கா திட்டம் - இந்தியாவும் பங்காளதேஷூம் பயன்பெற்று வரும் திட்டம் ஃபராக்கா திட்டம். மேற்கு வங்காளத்தில் கங்கை நதி மீது அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமே கொல்கத்தாவிற்கு குடிநீர் வழங்கும் திட்டமாகும்.

* கெய்னா திட்டம் - இத்திட்டத்தால் மகாராஷ்டிரா மாநிலம் பயன்பெற்று வருகிறது. சமீபத்தில் நிலநடுக்கத்தால் இத்திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.


நன்றி - தினமணி 

19 September, 2014

பாரதியார்


*   பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38) 

*   பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.

*   பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்

*   பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.

*   பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

*   பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.

*   பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா(ராமசாமி அய்யங்கார்)

*   பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.

*   பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.

*   பாரதியின் முதல் பாடல் "தனிமை இரக்கம்" வெளியிட்ட பத்திரிக்கை - மதுரையிலிருந்து வெளிவந்த "விவேக பானு" என்ற பத்திரிக்கை.

*   பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி(1904)

*   பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப்   பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)

*   பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.

*   பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.

*   பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

*   பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.

படைப்புகள்:

01. குயில் பாட்டு

02. கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.

03. சுயசரிதை

04. தேசிய கீதங்கள்

05. பகவத் கீதை

06. பாரதி அறுபத்தாறு

07. ஞானப் பாடல்கள்

08. தோத்திரப் பாடல்கள்

09. விடுதலைப் பாடல்கள்

10. விநாயகர் நான்மணிமாலை

11. பாரதியார் பகவத் கீதை (பேருரை)

12. பதஞ்சலியோக சூத்திரம்

13. நவதந்திரக்கதைகள்

14. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு

15. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)

16. சின்னஞ்சிறு கிளியே

17. ஞான ரதம்

18. பகவத் கீதை

19. சந்திரிகையின் கதை

20. பாஞ்சாலி சபதம்

21. புதிய ஆத்திசூடி

22. பொன் வால் நரி

23. ஆறில் ஒரு பங்கு

17 September, 2014

கோவூர் கிழார் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்



  • கோவூர் கிழார்  சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.உறையூருக்கு அருகில் உள்ள கோவூரில் வேளாளர் மரபில் பிறந்தார் .
  • மன்னர்கள் பகைமையின்றிக் கூடிவாழ இவர் பெரிதும் பாடுபட்டவர். 
  • போரை விரும்பாதவர். சங்கப்புலவர்களில் சகோதரச் சண்டை பற்றிய குறிப்புகளைத் தந்திருப்பது கோவூர் கிழாரின் பாடல்கள்
  • கோவூர் கிழார், சோழ மன்னர்களைப் பற்றியே அதிகம் பாடியுள்ளார். 
  • நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை  ஆகியவற்றில் இவரின் 18 பாடல்கள் உள்ளன
போரைத் தவிர்த்த புலவர் 
  • நலங்கிள்ளி உறையூரை முற்றியிருந்தான். 
  • நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான். 
  • கோவூர் நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறினார். போரிடுபவன் சேரனோ, பாண்டியனோ அல்லன். 
  • சோழன். யார் தோற்றாலும் சோழனுக்குத் தோல்வி. இதனைக் கண்டு பகைவர் நகைப்பர் என அறிவுரை கூறினார். 
  • இதனைக் கேட்ட நெடுங்கிள்ளி, நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்தான் எனத் தெரியவருகிறது.
சிறை மீட்ட செம்மல் 
  • நலங்கிள்ளியிடம் இருந்த இளந்தத்தன் என்னும் புலவர் முற்றுகையின்போது உறையூருக்கு வந்தார. 
  • ஒற்று வந்தார் என்று நெடுங்கிள்ளி அவரைக் கொல்லப் புகுந்தார். புலவர் பிறருக்குத் தீங்கு செய்யத் தெரியாதவர் எனக் கோவூர் கிழார் விளக்கிப் புலவர் இளந்தத்தனைக் காப்பாற்றினார்.
மலையமான் பிள்ளைகளைக் காத்தல்
  • சோழன் குளமுற்றத்துத் தூஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் காலின் இட்டுக் கொல்லச் சென்றான். 
  • யானையைக் கண்டவுடன் அழுகையை மறந்து சிரிக்கும் குழந்தை உள்ளத்தை எடுத்துச் சொல்லி கோவூர் கிழார் குழந்தைகளைக் காப்பாற்றினார். 

16 September, 2014

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்


மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
   யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய பொது  நான் காப்பேன் என்று    எழுந்தவர் உ.வே.சா. அவரே அனைவராலும் தமிழ்த்தாத்தா என்று   அழைக்கபடுபவர். உ.வே.சா.வின் ஆசிரியரே மகாவித்துவான்    மீனாட்சிசுந்தரனார்.

இளமையும் கல்வியும்:
  மீனாட்சிசுந்தரனார் 1815ஆம் ஆண்டு ஏப்ரல்  6ஆம் நாள் திருச்சி மாவட்டம்     எண்ணெய்க்கிராமத்தில் பிறந்தார்.  பெற்றோர்: சிதம்பரம் – அன்னத்தாச்சியார்.  தமது தந்தையிடமே தமிழ்  கற்றார்.

கல்வியே  வாழ்க்கை:
  மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு  குடும்பத்துடன் திரிசிரபுரத்தில்(    திருச்சிராப்பள்ளி )  வாழ்ந்தார்.  அவரை திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார் என்றே   அழைப்பர். அவரிடம் கல்வி கற்க வேண்டும் என்ற வேட்கை தணியாததாக   இருந்தது.  கல்வியே வாழ்கை என்று இருந்தவர்.

தமிழ்  கற்பித்தல்:
  மீனாட்சிசுந்தரனார் சாதி, சமயம் பாராது  அனைவருக்கும் கல்வி கற்பித்தார்.  குலாம்காதர் நாவலர், சவரிராயலு,  தியாகராசர், சாமிநாதர் ஆகியோர்,    அவர்களுள் குறிப்பிடத்தக்க மாணவர்கள் . இவர் சில காலம்    திருவாவடுதுறையில் ஆதின  வித்துவானாக பணியாற்றினார்.    திருவாவடுதுறையில் வாழ்ந்த காலத்தில் தான்  உ.வே.சாமிநாதருக்கு   ஆசிரியராக இருந்தார்.

தமிழ்த்  தொண்டு:
  இவர், எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை  இயற்றியுள்ளார்.
  கோவில்களை  பற்றிய தலபுராணங்கள் பல இயற்றியுள்ளார்.

பண்பு  நலன்கள்:
  மீனாட்சிசுந்தரனார் அருங்குணமும் நிறைந்த  புலமையும் தளராத          நாவன்மையும் படைத்தவர்.  நகைச்சுவை உணர்வு மிக்கவர்
  ஒருமுறை அவரது நண்பர் ஆறுமுகம் என்பவர்,  தம்முடைய குடும்பத்     தொடர்பாக கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரம் ஒன்று  எழுதிக்கொடுத்தார்.  அதில், சாட்சிக் கையொப்பமிட வந்த ஒருவருடைய  இருப்பிடம்     கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரன் தெரு என்பது. அதனை நீற்றுக்காரத்   தெருஎனவும் வழங்குவர். இந்த இரண்டில் எதனைப் பெயருக்கு முன்னால்     சேர்க்கலாம் என்று அவர் கேட்டபோது, மீனாட்சிசுந்தரனார்இரண்டும் வேண்டாம்,   மூன்றாவது தெரு என்று போட்டுவிடும் என்று சொன்னார். அதிலுள்ள     நகைச்சுவை உணர்வை  அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது   சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு  சொல்லாகும்.(வெற்றிலை + பாக்கு +     சுண்ணாம்பு)

நோய்க்கு  மருந்து இலக்கியம்:
  தனக்கு உடல்நிலை சரியில்லாத போது சற்று  ஓய்வெடுத்தல் நல்லதென்று   மற்றவர் கூற, நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறினார்.

மறைவு:
  01.02.0876 அன்று உலகவாழ்வை நீத்தார்.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...