13 August, 2014

நாடகக்கலை - 8 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்


  • நாடகம் என்னும் சொல் நாடு + அகம் = நாடகம் எனப் பிரியும்
  • நாட்டை அகத்தில் கொண்டது நாடகம்
  • நாட்டின் கடந்த  காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால், நாடகம்  எனப் பெயர் பெற்றது
  • கதையைநிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம்  என்பர்.
  • இதற்குக்  நாடகக்கலைஎன்னும் பெயர் உண்டு.


நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்:
  • தமிழின்  தொன்மையான கலை வடிவம் நாடகம்.
  • நாடகம் என்பது  போலச் செய்தல் என்னும் பண்பு அடிப்படையாக அமைதலைக் காணலாம்
  • பிறர்  செய்வதைப்போல தாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற மனித உணர்சித்தான் நாடகம்  தோன்றக் காரணம்.
  • பண்டைய மரப்பவைக்கூத்து , பொம்மலாட்டமாக வளர்ச்சி அடைந்த பின்னர் தோல்பாவைக் கூத்து ,நிழற் பாவைக்கூத்து ஆகியன முறையே பாவைக் கூத்தின் வளர்ச்சி நிலைகளாக இருந்தன

இலக்கியங்களில் நாடகம் பற்றிய குறிப்புகள்
  • தொல்காப்பிய  மெய்பாட்டியல் நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.
  •  " கூத்தாட்  டவைக்குல்லாத் தற்றே "என்னும் குறள் வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி தெரிய வருகிறது .
  • சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள், நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று நாட்டியமாடும் மாதவியை குறிப்பிடுகிறார்



இலக்கணம் வகுத்த நாடக நூல்கள்
  • தமிழ் நூல்களில் முறுவல்சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல்கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாட்டியத்திற்கும் நாடகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.
  • பரிதிமாற்கலைஞர்செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் எனும் நூலில் நாடகம் அதன் விளக்கம்வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள் நடிப்புக்குரிய இலக்கணம் நடிப்பவர்களுக்குரிய இலக்கணம்  போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.
  • சுவாமி  விபுலானந்தர் எழுதிய  மதங்க சூளாமணியும்  மறைமலையடிகள் எழுதிய   சாகுந்தலமும் நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் ஆகும்
  • பம்மல்  சம்பந்தனார், நாடகத்தமிழ்  என்ற தம் நூலில் தொழில் முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து  எழுதியுள்ளார்.

காலம்தோறும் நாடகக்கலை
  • ஏழாம்  நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்ற நாடக நூலை எழுதியுள்ளான்.
  • பதினொன்றாம்  நூற்றாண்டில் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் இராசராசேச்சுவர நாடகம்நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  • நாயக்க  மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின.
  • பள்ளு நாடக வகை உழவர்களின் வாழ்க்கையை கூறுகிறது
  • பதினேழாம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகம் தோன்றின.
  • பதினெட்டாம்  நூற்றாண்டில் அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகம், கோபால கிருட்டின பாரதியின்  நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடலோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.
  • சமுதாய சீர்திருத்த நாடகங்களில் காசி  விஸ்வநாதரின் டம்பாச்சாரி விலாசம்  , பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை கி பி 1891 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
  • இந்நூல் லிட்டன் எழுதிய மறைவழி என்னும் ஆங்கில கதையை தழுவியது
  • கதரின் வெற்றி நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக  நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்.
  •  இதனைத்  தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன
  • சங்கரதாசு  சுவாமிகள்   என்று  தமிழ் நாடக உலகின் இமயமலை, தமிழ் நாடக பேராசிரியர் என்று அழைக்கப்பட்டார்
  • பிரகலாதன் ,சிறுத்தொண்டர்,  இலவகுசா ,பவளக்கொடி , அபிமன்யு ,சுந்தரி முதலிய நாற்பதுக்கும் மேற்ப்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்
  • தமிழ் நாடகத்தந்தை என்று போற்றப்பட்ட பம்மல் சம்பந்தனார் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை மொழிப் பெயர்த்துள்ளார் . 
  • இவரது மனோகரன் நாடகம் எழுபது ஆண்டுகளாக தமிழ் நாடக மேடைகளில் புகழ் பெற்று விளங்கியது .
  • மதுரையில் ஒளவையார் நாடகம் அரங்கேறியது .இதில் ஒளவையாராக நடித்த தி க சண்முகனார் ஒளவை சண்முகனார் என்று அழைக்கப்பட்டார்.
  • நாடகச்  சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து என்பது நாடகம் பற்றிய கவிமணியின் கருத்து 

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...