14 July, 2014

சொற்றொடர் வகைகள்















குறுக்கங்கள்-ஐகாரக் குறுக்கம்,ஒளகாரக்குறுக்கம்,மகரக்குறுக்கம்,ஆய்தக்குறுக்கம்

ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.
ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.
ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்.

எ.கா:
ஐந்து
- ஐகாரம் மொழிக்கு முதலில்
- 1 1/2 மாத்திரை
வளையல்
- ஐகாரம் மொழிக்கு இடையில்
- 1 மாத்திரை
மலை
- ஐகாரம் மொழிக்கு கடையில்
-  1 மாத்திரை

ப்பசி, வைகல்      - முதல் 
டைசி, றைவன்
    - இடை 
ழை, கை
 , டை   - இறுதி

ஐகாரம் அளபெடுக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை,
 சை, சை


ஒளகாரக்குறுக்கம்
ஒளகாரம் நெடில் எழுத்து என்பதால் இரண்டு மாத்திரை பெறும். ஒளகாரம் சொல்லுக்கு முதலில் வரும்போது குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதை ஒளகாரக்குறுக்கம் என்பர்.ஒளகாரக்குறுக்கம் ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும்.
ஒளவையார்,  மௌவல்,  வௌவால்.
ஒளகாரம் தனியே ஒலிக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை.
தற்சுட்டு அளபு ஒழி ஐம் மூவழியும்
நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்
(நன்னூல் 95)
(பொருள்: ஐகார எழுத்து சொல்லில் வரும்போது, தன்னைச்சுட்டிக் கூறும் இடத்திலும் அளபெடையிலும் தவிர மற்ற இடங்களில் (சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும்) குறைந்தே ஒலிக்கும். ஒளகார எழுத்தும் சொல்லின் முதலில் வரும்போது குறைந்து ஒலிக்கும். )
மகரக்குறுக்கம்
மகரக்குறுக்கம் என்பது மகர ஒற்று, குறைந்து ஒலிப்பதைக் குறிக்கும்.  மகரக்குறுக்கம் இரண்டு வகைப்படும்.
  • தனிமொழி
ணகர, னகர ஒற்று எழுத்துகளை அடுத்து வரும் மகரமெய் எழுத்து, குறைந்து ஒலிக்கும்.
மருண்ம், உண்ம் 
போன்ம், சென்ம்
  • புணர்மொழி
இரண்டு சொற்கள் சேரும்போது, முதல் சொல்லின் இறுதியில் மகர ஒற்று வந்து, இரண்டாம் சொல்லின் முதல் எழுத்தாக வகரம் வந்தால் மகர ஒற்று குறுகும்.
தரும் வளவன் 
வாழும் வகை
மகர ஒற்று அரை மாத்திரை ஒலிக்க வேண்டும். மேற்கண்ட இடங்களில் குறைந்து ஒலிக்கும் மகரக்குறுக்கம் கால் மாத்திரையே பெறும்.
, ன முன்னும், வஃகான் மிசையும் மக்குறுகும். 
(நன்னூல். 96)
பொருள்:
வகரத்திற்கு முன்பும் ண், ன் மெய் எழுத்துகளுக்குப் பின்பும் மகர ஒற்று, குறைந்து ஒலிக்கும்.
ஆய்தக்குறுக்கம்
இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் இறுதியில் ல், ள் ஆகிய மெய் எழுத்துகள் வந்து இரண்டாம் சொல்லின் முதலில் தகர எழுத்து வந்தால் ல், ள் ஆகியவை ஆய்த எழுத்தாக மாறிவிடும்.

அல்
+
திணை
=
அஃறிணை
 முள்
+
தீது
=
முஃடீது


இந்த ஆய்த எழுத்து, குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும். இதையே ஆய்தக்குறுக்கம் என்று கூறுவர்.
, ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்
(நன்னூல் 97)
(பொருள்: ல், ள் ஆகிய எழுத்துகள் ஆய்த எழுத்தாகத் திரியும். அந்த ஆய்த எழுத்து, குறைந்து ஒலிக்கும். )


பரிதிமாற் கலைஞர்


  • பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார்),  ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில்முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்.
  •  இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர்.
  •  'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர்.
  • இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.
  • இராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார் .

பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:

  •    ரூபவதி
  •    கலாவதி
  •    மான விஜயம்
  •    தனிப்பாசுரத் தொகை
  •    பாவலர் விருந்து
  •    மதிவாணன்
  •    நாடகவியல்
  •    தமிழ் விசயங்கள்
  •    தமிழ் மொழியின் வரலாறு.
  •    சித்திரக்கவி விளக்கம்


பதிப்பித்த நூல்கள் :
1.சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
2. மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)
3.புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)
4.உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)
5.தனிப்பாசுரத்தொகை (1901)
ஞானபோதினி என்னும் இதழை பரிதிமாற் கலைஞர் நடத்தினார்



உயர்தனிச் செம்மொழி part II


உயர்தனிச் செம்மொழி part I


திருவாசகம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்



மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் 
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் 
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் 
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே

சொற்பொருள்:
மெய் –உடல்
விதிர்விதிர்த்து – உடல் சிலிர்த்து
விரை – மணம்
நெகிழ – தளர
ததும்பி – பெருகி
கழல் – ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
சயசய – வெல்க வெல்க

இலக்கணக்குறிப்பு:
விடேன் – தன்மை ஒருமை வினைமுற்று

பொருள் : உடையாய் - என்னை ஆளாக உடையவனே, உன் - உனது, விரை ஆர் - மணம் நிறைந்த, கழற்கு - திருவடிகளைக் குறித்து, என் - என்னுடைய, மெய் அரும்பி - உடல் புளகித்து, விதிர்விதிர்த்து - நடுநடுங்கி, கை தலைவைத்து - கைகளைச் சிரமேல் வைத்து, கண் நீர் ததும்பி - கண்களில் நீர் நிரம்பி, உள்ளம் வெதும்பி - மனம் வாடி, பொய் தவிர்ந்து - பொய்யொழுக்கத்தினின்றும் நீங்கி, உன்னை - உன்னை, போற்றி - வணக்கம், சயசய போற்றி - வெற்றி வெற்றி வணக்கம், என்னும் - என்று துதிக்கின்ற, கை - ஒழுக்கத்தை, நெகிழவிடேன் - அடியேன் நழுவவிடேன், (ஆகையால்) என்னை - எனது, நிலைமையை, கண்டு - நோக்கி, கொள் - என்னை ஏற்றுக் கோடல் வேண்டும்

நூல் குறிப்பு:
  • திருவாசகம் சைவ சமயக் கடவுளான சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
  • இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
  • பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. 
  • திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை.
  • பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
  • திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன
  • ஜி யு போப் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
  • ஜி.யு.போப்:
    “உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவர்கின்றவர் யாரும் இல்லை” என்கிறார் ஜி.யு.போப்.

மாணிக்கவாசகர்



  •   சைவ  சமயக்குரவர் நால்வரில் ஒருவர்.
  •   திருவாதவூரில் பிறந்தவர்.
  •   இவ்வூர் மதுரைக்கு அருகில் உள்ளது.
  •   மாணிக்கவாசகர், சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் ((863-    911)) காலத்தில்   வாழ்ந்தவர்
  •   இவர்  அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக பணிப் புரிந்தார்.
  •   திருப்பெருந்துறை  இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
  •   இவரை அழுது அடியடைந்த அன்பர் என்பர்.
  •   திருவாசகமும்  திருக்கோவையாரும் இவர் அருளியவை.
  •   இவர் எழுப்பிய  கோவில், தற்போது ஆவுடையார் கோவில்என  வழங்கப்படும்   திருப்பெருந்துறையில் (புதுகோட்டை மாவட்டம்)  உள்ளது.
  •  இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன.  பக்திச்   சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள்,   தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது.
  •  சைவத்  திருமுறைகளில் எட்டாவது திருமுறை இவரின் திருவாசகமும்     திருகோவையாரும் ஆகும்.
  •  திருவாசகத்தில்  658 பாடல்கள் உள்ளன.
  •  திருவாசகத்தை  சிறப்பிக்க,திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும்     உருகார் என்னும் தொடர் வழங்கலாயிற்று.
  • திருவாசகத்தை  ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • சதகம் என்பது  நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.

ஏலாதி


  • ஏலாதி என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. 
  • கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவியக் காலத்தில் தோன்றியவை.
  • ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி என்ற 
  • ஆறு பொருட்கள் சேர்த்து செய்யப்படும் சூர்ணத்திற்கு ஏலாதி என்று பெயர். 
  • துபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு அறக்கருத்துக்களைக் 
  • கொண்டிலங்குவதால் ஏலாதி என்று இந்நூல் பெயர் பெற்றது.


இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...