14 July, 2014

மாணிக்கவாசகர்



  •   சைவ  சமயக்குரவர் நால்வரில் ஒருவர்.
  •   திருவாதவூரில் பிறந்தவர்.
  •   இவ்வூர் மதுரைக்கு அருகில் உள்ளது.
  •   மாணிக்கவாசகர், சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் ((863-    911)) காலத்தில்   வாழ்ந்தவர்
  •   இவர்  அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக பணிப் புரிந்தார்.
  •   திருப்பெருந்துறை  இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
  •   இவரை அழுது அடியடைந்த அன்பர் என்பர்.
  •   திருவாசகமும்  திருக்கோவையாரும் இவர் அருளியவை.
  •   இவர் எழுப்பிய  கோவில், தற்போது ஆவுடையார் கோவில்என  வழங்கப்படும்   திருப்பெருந்துறையில் (புதுகோட்டை மாவட்டம்)  உள்ளது.
  •  இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன.  பக்திச்   சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள்,   தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது.
  •  சைவத்  திருமுறைகளில் எட்டாவது திருமுறை இவரின் திருவாசகமும்     திருகோவையாரும் ஆகும்.
  •  திருவாசகத்தில்  658 பாடல்கள் உள்ளன.
  •  திருவாசகத்தை  சிறப்பிக்க,திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும்     உருகார் என்னும் தொடர் வழங்கலாயிற்று.
  • திருவாசகத்தை  ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • சதகம் என்பது  நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...