26 November, 2014

இன்றைய கேள்விகள் - 26/11/14

1.ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை பாடப்படும் வெண்பா எது ?
A.குறள்  வெண்பா
B.நேரிசை வெண்பா
C.இன்னிசை வெண்பா
D.பஃறொடை வெண்பா 
{பஃறொடை வெண்பா: 

நான்கு அடிகளுக்கு மேல் அமைந்த வெண்பா பஃறொடை வெண்பா எனப்படும். இவ் வெண்பா அதிகபட்சம் 12 அடிகள் மட்டுமே கொண்டிருக்கும்}

2.விளரியாழ்   எவ்வகைத்திணைக்குரியது ?

A.குறிஞ்சி
B.மருதம்
C.முல்லை
D.நெய்தல் 

3.இரீ இ   - என்பதன் இலக்கணக் குறிப்பு

A.சொல்லிசை அளபெடை
B.செய்யுளிசை அளபெடை
C.இன்னிசை அளபெடை
D.உரிச்சொற்றொடர்

4.பொருந்தாத இணையைக் கண்டறிக
A.குமரிக்கண்டம்  - கண்ணதாசன்
B.தொடுவானம் - வாணிதாசன்
C.தேன்மழை - முடியரசன் 
D.உழவும் தொழிலும்  - மருதகாசி

5.தில்லையாடி வள்ளியம்மை யார் தலைமையில் போராடினார் ?
A.நேரு
B.காந்தி 
C.கோகலே
D.திலகர்

6.தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார் ?
A.இராமாமிர்தம் அம்மையார்
B.டாக்டர் முத்து லெட்சுமி
C.தருமாம்பாள்
D.நீலாம்பிகை .

7.1963 ல் மேற்கொண்ட கடல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நகரம்
A.துறையூர்
B.உறையூர்
C.காவிரிப்பூம்பட்டினம்
D.கொற்கை

8.யவனர்கள் என்பவர்கள்
A.கிரேக்கர்கள்
B.உரோமானியர்கள்
C.எகிப்தியர்கள்
D.A   மற்றும்   B

9.சென்னையில் முதல் ஆழ்வார்களால் பாடபெற்ற தலம்
A.மயிலாப்பூர்
B.திருவல்லிக்கேணி 
C.திருவொற்றியூர்
D.திருநின்றவூர்

10.கடற்கரையை ஒட்டியுள்ள பேரூர்கள் எவ்வாறு
அழைக்கப்பட்டன ?
A.பட்டினம் 
B.பாக்கம்
C.கரை
D.காடு


Tnpsc Aptitude Video - 020




Question:

A can complete 2/3 part of work in 10 days. A can complete 1/3 part of the same work in -----------------days
A என்பவர் ஒரு வேலையின் 22/3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார் . அதே வேலையின் 1/3 பகுதியை செய்து முடிக்க ஆகும் 
நாட்களின் எண்ணிக்கை -----------
A.3 நாட்கள் 
B4. நாட்கள் 
C.5 நாட்கள் 
D. 6 நாட்கள்


செய்தி உருவாகும் வரலாறு - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


  •  உலகில் எங்கே ஒரு மூலையில் நடைபெறும் சிறிய நிகழ்வு செய்தி ஆகிறது.
  •  அறிவியல் தொழில்நுடப் வளர்ச்சியின் பெரிய முன்னேற்றத்தின் விளைவாக உடனுக்குடன் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
  •  ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத் தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியினை கூறியவர் - அறிஞர் கிப்ளிங்
  •  ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் இடம்பெறும் பக்கம் - செய்தியின் முகப்புப் பக்கம்.
  •  ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் காணும் பணி - கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்ற அரிய பணி.
  •  செய்தியை இனங்கண்ட பின்னர் செய்தியாளர் செய்தியைத் திரட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
  •  செய்தியைப் பெறுதல் என்பது துப்பறிதல் போன்றது.
  •  செய்தியாளர்கள் அரசின் அறிக்கை, வாணிகக் குழுக்களின் வெளியீடுகள், நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டங்கள் போன்றவற்றை படித்து செய்தியைத் திரட்டுகின்றார்கள்.
  •  செய்தியாளர்கள் அறவியல் ஆய்வு முறைகளையும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் அறிய புள்ளியியல் உதவுகிறது.
  •   பொதுமக்களின் கருத்துக்களை கூறெடுப்பு ஆய்வு வாயிலாக நடத்துவார்கள்.
  •  செய்திகளை உள்ளூர்ச் செய்தியாளர், வெளியூர்ச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர், ஆர்வலர்கள் அரசு அறிக்கைகள், செய்தி நிறுவனங்கள் மூலம் பெறலாம்.
  •  உலகெங்கும் நடக்கும் செய்திகளை கம்பியில்லாத் தந்தி, தொலைபேசி, செல்பேசி, தொலை அச்சு தொலை நகல், வானொலி. தொலைக்காட்சி, கணினி மூலம் உடனுக்குடன் பெறலாம்.
  •  இலண்டன் டைம்ஸ் இதழின் செய்தியாளர் இந்திய சீனப்போரின் போது நேரடியாகப் போர் நடைபெறிகின்ற இடத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டினார்கள்.
  •   "இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தியாளர் தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலை பற்றி அறிய தானே சிறைப்பட்டு செய்திகளைத் திரட்டித்தந்து புகழ் பெற்றார்.
  •  விளையாட்டுப் போட்டிகள், புகழ்பெற்ற விசாரணைகள், சட்டப்பேரவை நடவடிக்கைகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை காண செய்தியாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கியிருப்பர்.
  •  செய்தியின் பகுதிகள் தலைப்புச் செய்தி, முகப்புச்செய்தி, உடல்பகுதிச் செய்தி (மூன்று) எனப் பதிப்புகள் பிரிக்கப்பட்டு விடியற்காலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்தித்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன.


இதழியல் கலைச்சொற்கள்:

 Bulletin - சிறப்புச்செய்தி இதழ்

 Deadline - குறித்த காலம்

 Editorial - தலையங்கம்

 Fake News - பொய்ச்செய்தி

 Flash News - சிறப்புச் செய்தி

 Folio No - இதழ் எண்

 Green Proff - திருத்தப்படாத அச்சுப்படி

 Layout - செய்தித்தாள் வடிவமைப்பு

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...