30 November, 2014

உயர்தனிச் செம்மொழி - 10 ஆம் வகுப்பு பாடங்கள்


பாவலரேறு பெருஞ்சித்திரனார்:
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி
என்று தமிழின் பெருமையைப் போற்றுகிறார் பெருஞ்சித்திரனார்.
செம்மொழியின் இலக்கணம்:
திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்என்று பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
பாவணார் கூற்று:
தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழிஎன்பார் பாவாணர்.
முஸ்தபாவின் செம்மொழி தகுதிப்பாடுகள்:
தொன்மை, பிறமொழித் தாக்கமின்மை, தாய்மை, தனித்தன்மை, இலக்கிய வளமும் இலக்கியச் சிறப்பும், பொதுமைப் பண்பு, நடுவுநிலைமை, பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு, உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை வெளிபாடு, மொழிக் கோட்பாடு எனப் 11 தகுதிகளை அறிவியல் தமிழறிஞர் முஸ்தபா வரையறுத்துள்ளார்.
தொன்மை:
முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம். அவன் பேசிய மொழி தமிழ் மொழியே என்பர்.
உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை, அதன் தொன்மையைக் கருத்து என்றுமுள தென்தமிழ்என்பார் கம்பர்.
பிறமொழித் தாக்கமின்மை:
பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது.
ஆனால், தமிழ் ஒன்றே பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது.
தாய்மை:
தமிழ் மொழியானது திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்குத் தாய்மொழியாகத் திகழ்கிறது.
தமிழ் மொழி பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது என்பார் கால்டுவெல்.
1090 மொழிகளுக்கு வேர்ச்சொல்லையும், 180 மொழிகளுக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது தமிழ்.
தனித்தன்மை:
இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைத் கொண்டது தமிழ்.
தமிழர் அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்துள்ளனர்.
திருக்குறள், மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்துள்ளது.
இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு:
உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.
இவற்றின் மொத்த அடிகள் = 26350.
அக்காலத்தே இவ்வளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகின் வேறு எம்மொழியிலும் இல்லைஎன்பது உலக இலக்கியங்களை ஆய்ந்த கமில்சுவலபில்என்னும் செக் நாடு மொழியியல் அறிஞரின் முடிபு.
மாக்சுமுல்லர் என்னும் மொழி நூலறிஞரோ தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும் பாராட்டி இருக்கின்றார்.
சங்க இலக்கியங்கள் மக்கள் இலக்கியங்கள்எனப்படும்.
தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பதை உண்டாக்குவதுஎன்பார் கெல்லட்.
நமக்கு கிடைத்த இலக்கண நூல்களுள் மிகவும் பழமையானது தொல்காப்பியம்.
தொல்காபிய்யம் எழுத்து,சொல்,பொருள் என மூன்று இலக்கணங்களை கூறுகின்றது. அவரின் ஆசிரியர் அகத்தியர்எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி என ஐந்து இலக்கணங்களையும் கூறியுள்ளார்.
பொதுமைப் பண்பு:
தமிழர் தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தவர்கள்.
செம்புலப் பெயல்நீர்போல அன்புள்ளம் கொண்டவர்கள்.
நடுவுநிலைமை:
சங்க இலக்கியங்கள் இனம், மொழி, மதம் கடந்தவை.
இயற்கையோடு இயைந்தவை.
மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துக்களை மொழிபவை.
பண்பாடு, கலை பட்டறிவு வெளிப்பாடு:
சங்கப் படைப்புகள், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், பிறன்மனை நோக்காப் பேராண்மைமுதலிய பண்பாட்டு நெறிமுறைகளையும் வெளிப்படுத்திகிறது.
உயர் சிந்தனை:
யாதும் ஊரே, யாவரும் கேளிர்என உலக மக்களை ஒன்றினைந்து உறவுகளாக்கிய உயர்சிந்தனை மிக்கது புறநானூறு.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்எனத் திருக்குறள் உலகுக்கு எடுத்துரைக்கிறது.
கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு:
தமிழ்ச்சான்றோர் மொழியை, “இயல், இசை, நாடகம்எனப் பிரித்து வளமடையச் செய்தனர்.
எளிய குடிமகனையும் குடிமகளையும் காப்பியத் தலைவர்களாக்கிக் காப்பியம் படைத்தனர்.
குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்னும் அறநெறியை உலகாள்வோர்க்கு உணர்த்துகிறது.
மொழிக் கோட்பாடு:
இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றதுஎன்பார் முனைவர் எமினோ.
ஒருமொழிக்கு 33 ஒலிகள் இருந்தாலே போதும் என்பர். ஆனால் தமிழோ 500 ஒலிகளைக் கொண்டுள்ளது.
செம்மொழி:
இவ்வருஞ்சிறப்புமிக்க தமிழைச் செம்மொழிஎன அறிவித்தல் வேண்டும் என்ற முயற்சி 1901இல் தொடங்கி 2004வரை தொடர்ந்தது.
நடுவண் அரசு 2004ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.

செம்மொழிக் காலக்கோடு
1901 - மதுரைத் தமிழ்ச்சங்க இதழான செந்தமிழில் பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது.
1918 - மேலைச்சிவபுரிச் சன்மர்ச்க்க சபை, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டித் தீர்மானம் நிறைவேற்றி, அதை இந்திய அரசுக்கும் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வற்புறுத்தியது.
1918 - சைவ சித்தாந்த, மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1919 - கரந்தைத் தமிழ்ச்சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது.
1966 - உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூல் தேவநேயப்பாவாணரால் எழுதி வெளியிடப்பட்டது.
2004 - நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.


29 November, 2014

இன்றைய கேள்விகள் - 29/11/14

1."உண்பது நாழி , உடுப்பவை இரண்டே " என்ற பாடலடியை
எழுதிய புலவர் ?
A.திருவள்ளுவர்
B.நக்கீரர் 
C.ஒளவையார்
D.கண்ணகனார்

2. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க
A.கால்கள் நடுங்குகின்றது
B.கால்கள் நடுங்குகின்றன 
C.கால் நடுங்குகின்றன
D.நடுங்குகின்றது கால்கள்

3.ஆதரவற்றவர்களுக்காக ஓளவை இல்லத்தை
ஆரம்பித்தவர்
A.முத்துலெட்சுமி 
B.தருமாம்பாள்
C.தில்லையடி வள்ளியம்மை
D.டாக்டர் இலட்சுமி

4.1876,2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில்
முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடம்
A.மதுரை
B.திருச்சி
C.ஆதிச்சநல்லூர்
D. புகளூர்

5.தமிழர்களை ஒப்பந்தக் கூலிகளாக ரீயுனியன் தீவிற்கு அழைத்துச்
சென்றவர்கள்
A.ஆங்கிலேயர்கள்
B.பிரெஞ்சுக்காரர்கள்
C.போர்த்துக்கீசியர்கள்
D.டச்சுக்காரர்கள்

6.மரங்களின் பெயரை தங்கள் ஊர் பெயராக வழங்கி வரும் மக்கள்
A.குறிஞ்சி நில மக்கள்
B.முல்லை நில மக்கள்
C.மரு த நில மக்கள்
D.நெய்தல் நில மக்கள்

7.தாயுமானவர் திருப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின்
எண்ணிக்கை
A.1452
B.1500
C.1542
D.1342

8.நிலக்கிழார் ஒழிப்பு போராட்டத்தை  நடத்தியவர்
A.அண்ணா
B.பெரியார்
C.காமராஜர்
D.முத்துராமலிங்கத்தேவர் 

9. தமிழ் லெக்சிகன் எத்தனை தொகுதிகளாக வெளியிடப்பட்டது ?

A. 6
B. 4
C. 3
D. 2
(தமிழ் - ஆங்கில அகராதிகளுள் வின்சுலோ அகராதிதான் 67000 சொற்களைக் கொண்ட பேரகராதியாய் விளங்குகிறது. இதில் விடுபட்டுப்போன பல சொற்கள், பொருள்களைப் போப்புப் பாதிரியார் தம்முடைய படியில் குறித்துவைத்திருந்தார் . இவருடைய அகராதிப்படியை அடிப்படையாக வைத்துப் பல்வேறு புதுச் சேர்க்கைகளுடன் அமைந்ததே தமிழ் லெக்சிகன் எனப்படும் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி. தமிழில் வந்த மிகப் பெரிய இருமொழி அகராதி இதுவே. அறிஞர் பலர் கூடிப் பல்லாண்டுகள் உழைத்து உருவாக்கப்பெற்றுது இந்த அகரமுதலி. இதன் ஆறு தொகுதிகளையும், இணைப்புத் தொகுதியையும் பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையவர்கள் பதிப்பித்து 1939-ல் முற்றுவித்தார்கள். இஃது உலகப் புகழ்பெற்ற ஒரு பேரகராதியாக இப்பொழுது விளங்கிவருகிறது
http://www.tamilvu.org/library/ldttam/html/ldttam09.htm)

10.  ' பள்ளிப் பறவைகள் ' யாருடைய நூல்?
A.பெருஞ்சித்திரனார் 
B.திரு . வி . க .
C.ந.மு.வேங்கடசாமி நாட்டார் 
D.சி . இலக்குவனார் 

28 November, 2014

இன்றைய கேள்விகள் - 28/11/14

1.அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர்
A.வடலூர்
B.இரட்டணை
C.திண்டிவனம்
D.செங்கல்பட்டு


2.காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் ________என்று கூறுவர்
A.ஓரிகாமி
B.காகிதக்கலை
C.குச்சிப்புடி
D.பேப்பர் ஆர்ட்


3.சமவெளி மரங்களில் வாழும் பறவைகள்----------------------
A.கொக்கு
B.இருவாச்சி
C.பனங்காடை
D.மரங்கொத்தி


4.தாராபாரதிஎழுதிய நூலில் இடம்பெறாத ஒன்று ?
A.புதிய விடியல்
B.
இது எங்கள் கிழக்கு
C.
தாராபாரதி கவிதைகள்
D.புதிய தமிழகம்



5.இளம் வயதில் முத்துராமலிங்க தேவருக்குக் கற்பித்த ஆசிரியர்
A.
வ.வே.சு
B.
உக்கிரபாண்டி தேவர்
C.
இந்திராணி அம்மையார்
D. குறைவற வாசித்தான் பிள்ளை



6.தனித்திரட்டு பாடலில் சிலேடை எழுதியவர்
A. இராமச்சந்திரக் கவிராயர்
B. உடுமலை நாராயணக்கவி
C. திரிகூட ராசப்பக் கவிராயர்
D. அழகிய சொக்கநாதப் புலவர்



7. ”ஈக்கால் துணையும் உதவாதார்”  என்று எழுதியவர்
A.சமணமுனிவர்
B.நல்லாதனார்
C.கணிதமேதாவியார்
D.கணியன் பூங்குன்றனார்


8.” மனைக்கு விளக்கம் மடவாள் “  என்று  கூறும் நூல்
A.திருக்குறள்
B.நான்மணிக்கடிகை
C.நாலடியார்
D.சிறுபஞ்சமூலம்


9.மருணீக்கியார் என்ற பெயரைக் கொண்டவர் 
A.சுந்தரர் 
B.மாணிக்கவாசகர் 
C.வாகீசர் 
D.குமரகுருபர் 


10.தொல்லியல் என்பது ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது 
A.ஆர்கியாலாஜி 
B.காஸ்மாலஜி
C.ஜியாலஜி
D.தியாலாஜி


11.காய்முன் நேர் வருவது -----------------------
A.வெண்சீர் வெண்டளை 
B.இயற்சீர் வெண்டளை 
C.கலித்தளை 
D.ஒன்றாத வஞ்சித்தளை

12.’கலைகளின் சரணாலயம் ‘ என்று அழைக்கப்படும் கோயில்
A. பிரகதீசுவரர் ஆலயம்
B. மாமல்லபுரம்
C. ஐராவதிசுவரர்
D. கங்கை கொண்ட சோழபுரம்

13.நிலத்தை குறிக்கும் சொல்
A.
புரம்
B. 
பட்டினம்
C.
குப்பம்
D.புலம்


14.துயின்றார் என்பதன் வேர்ச்சொல்
A.தூக்கம்
B.துயில்
C.துயின்ற
D.துயின்


15.”முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே”- இப்பாடலை எழுதியவர்
A. இளங்கோவடிகள்
B. தாயுமானவர்
C. கம்பர்
D. இராமலிங்க அடிகளார்


அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)

• இது பகுதி 3ல் அமைந்துள்ளது.
• Art 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றி குறிப்பிடுகிறது.
• இது நடைமுறைக்கு வரும் போது 7 அடிப்படை உரிமைகள் இருந்தன.
• 44வது சட்டத் திருத்தத்தின் மூலம் சொத்துரிமை 1978 ஆம் ஆண்டு அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
• தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் 6 அவை
• சமத்துவ உரிமை Art 14- 18
• சுதந்திர உரிமை Art 19- 22
• சுரண்டலுக்கு எதிரான உரிமை Art 23- 24
• சமய உரிமை Art 25- 28
• அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் தேடும் Art 32

1. சமத்துவ உரிமை 
Art. 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்
Art. 15 சாதி, சமய, இன, பால் (அ) பிறப்பு வேற்பாடு காட்ட தடை
Art. 16 அரசு வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு
Art. 16 (4) SC, ST -க்கு முன்னுரிமை
Art. 17 தீண்டாமை ஒழிப்பு
Art. 18 பட்டங்கள் ஒழிப்பு

2. சுதந்திர உரிமை (Art. 19- 22)
Art.19 இது 6 சுதந்திரங்களை வழங்கியுள்ளது.
1.பேச்சு (Freedom of Speech and expression)
2. ஒன்று கூடும் சுதந்திரம் (Freedom of Assembly)
3. சங்கம் அமைக்க (Freedom to form Association)
4. இந்தியா எங்கும் செல்ல (Freedom of Movement)
5. இந்தியா எங்கும் வசிக்க (Freedom of Residence & Settlement)
6. தொழில் செய்ய (Freedom of Profession, Occupation, Trade, Business)
Art. 20 – சட்ட விரோதமாக குற்றம் சமத்துவதிலிருந்து பாதுகாப்பு
Art.21 – தனி நபர் சுதந்திரம்
Art.21A – 6 முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி
Art. 22கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு

3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (Art. 23 – 24)
Art.23 – சுரண்டலுக்கு எதிராகவும் கொத்தடிமை முறையை தடை செய்கிறது.
Art.24 – 14 வயதுக்குட்பட்ட சிறார்களை பணியில் அமர்த்த தடை

4. சமய உரிமை (Art.25-28) 
Art.25 – விரும்பிய மதத்தை தழுவ உரிமை
Art.26 – மத விஷயங்களை நிர்வகிக்க உரிமை
Art.27 – மத அடிப்படையிலான வரிகளை தடுத்தல்
Art.28 – குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட மதத்தைச்சார்ந்தவர்கள் கூட உரிமை

5. கல்வி, கலாச்சார உரிமை (Art.29 -30) 
Art.29 – சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாத்தல்
Art.30 – சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நடத்த உரிமை
Art.31 – நீக்கப்பட்டது.

6. அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் தேடும் உரிமை (Art 32)
இது இந்திய அரசியலமைப்பின் இதயமும் ஆன்மாவும் போன்றது  - டாக்டர் அம்பேத்கர் 
இது 5 நீதிப் பேரானைகளை வழங்குகிறது.
1. Writ of Habeas Corpus -ஆட்கொணர் நீதிப் பேராணை
2. Writ of Mandamus – கட்டளை நீதிப் பேராணை
3. Writ of Prohibition – தடை நீதிப் பேராணை
4. Writ of Quowarranto – உரிமையேது வினா நீதிப்பேராணை
5. Writ of Certiorari – ஆவணக் கேட்பு நீதிப் பேராணை

27 November, 2014

இன்றைய கேள்விகள் - 27/11/14

1.மாலை வெயிலில் உள்ள வைட்டமின் எது?
A.வைட்டமின்-A 
B.வைட்டமின்-D
C.வைட்டமின்-B
D.வைட்டமின்-E 


2.வாயுக்களின் திடவெப்பநிலை எண் மதிப்பெண் என்ன?

A.0  டிகிரி செல்சியஸ்
B.4  டிகிரி செல்சியஸ்
C.-1  டிகிரி செல்சியஸ்
D.2  டிகிரி செல்சியஸ்

3.சுத்தமான தங்கம் என்பது எத்தனை காரட்?

A.18 காரட் 
B.22 காரட் 
C.14 காரட் 
D.24 காரட்

4.டர்பைன் எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?

A.ரப்பர் 
B.சின்கோனா
C.சந்தனம் 
D.யூக்கலிப்டஸ்

5.உயர்நீதிமன்றத்தின் எல்லை வரம்பை விரிவாக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

A.உச்சநீதிமன்றம்
B.உயர்நீதிமன்றம் 
C.பாராளுமன்றம் 
D.A மற்றும்  B

6.தமிழ்நாடு வனப்பாதுகாப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

A.1980
B.1981
C.1984
D.1983

7.அமைதிப் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?

A.தமிழ்நாடு
B.கேரளா
C.கர்நாடகா
D.ஜம்மு - காஷ்மீர்

8.Runs Ruins என்ற நூலை எழுதியவர் யார்?
A.கபில்தேவ்
B.கவாஸ்கர்
C.டெண்டுல்கர்
D.கங்குலி

9.எண்டோமாலஜி (Entomology) என்பது என்ன?
A.விலங்குகள் பற்றிய படிப்பு
B.தாவரங்கள் பற்றிய படிப்பு
C.பூச்சிகளைப் பற்றிய படிப்பு
D.மரங்களைப் பற்றிய படிப்பு

10..நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது?
A.கிருஷ்ணா 
B.கோதாவரி
C.மகாநதி
D.காவிரி

11.2011-ல் Global Micro Credit உச்சி மாநாடு எங்கு நடந்தது?
A.பிரான்ஸ்
B.ஜெர்மனி
C.ஸ்பெயின் 
D.இங்கிலாந்து 

12.இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு 
தொடங்கப்பட்டது?
A.1951
B.1950
C.1952
D.1953

13.மத்திய நில அதிர்வு மையம் எங்கு அமைந்துள்ளது?
A.மதுரை 
B.கோயம்புத்தூர் 
C.விருதுநகர் 
D.கொடைக்கானல்

14.விக்டோரியா பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?
A.1898
B.1858
C.1857
D.1868

15.நகர்பாலிகா சட்டம் என்பது எத்தனையாவது சட்டத்திருத்தம்?
A.72-வது சட்டத்திருத்தம்
B.26-வது சட்டத்திருத்தம்
C.31-வது சட்டத்திருத்தம்
D.74-வது சட்டத்திருத்தம்

16.மருந்துப்பொருட்கள் பற்றி அதிகமாகக் கூறப்பட்ட நூல்கள் ?
A.பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 
B.பதினெண்மேல்கணக்கு நூல்கள் 
C.மணிமேகலை 
D.சிலப்பதிகாரம் 

17.எந்த மன்னனுக்கு  யானைத் தந்தமும் மயில்தோகையும்
வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி 
செய்யப்பட்டன ?
A.சாலமன் 
B.அலெக்ஸ்சாண்டர்
C.ஜூலியஸ் சீசர் 
D.பிலிப் 

18.ஏரி , குளம் , ஊருணி .ஊர் என்ற விகுதியில் முடியும் ஊர் 
பெயர்கள் எந்த நிலத்தைச் சார்ந்தவை ?
A.மருதம் 
B.நெய்தல் 
C.குறிஞ்சி 
D.முல்லை 

19.  ஈ வெ இராமசாமிக்கு பெரியார் பட்டத்தை வழங்கியவர் 
A.டாக்டர் . எஸ் . தருமாம்பாள் 
B.டாக்டர்  முத்துலெட்சுமி 
C.மணியம்மை 
D.மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 

20. கலை  களஞ்சியத்தின்  முன்னோடி 
A.அபிதான கோசம் 
B.அபிதான சிந்தாமணி 
C.நாடகக் கலைக் களஞ்சியம்
D.குழந்தைகள் கலைக் களஞ்சியம்

குருசடை தீவு, இராமேஸ்வரம்


குருசடை தீவு வெளியிட ஜீவராசிகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் சொர்க்கமாக இருக்கும் தீவாகும். இந்த தீவிற்கு வருபவர்களில பெரும்பாலோர் கடலுயிர் பற்றிய சிறப்பு வல்லுநர்களாகவோ அல்லது நீர் சம்மந்தமான உயிர்களை ஆராய்ச்சி செய்பவர்களாகவோ இருந்து கடலுயிர் வாழ்க்கை முறையை தீவிரமாக கவனித்து, கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவர்களாகவே இருப்பார்கள். எனினும், இந்த தீவு தனித்தன்மையான பவளப்பாறைகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும்.
மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் இந்த தீவுகள், மண்டபம் பகுதியில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. மன்னார் வளைகுடாவில் வாழ்க்கையை அனுபவித்திடும் டால்பின்கள் மற்றும் கடற்பசுக்களை இந்த தீவில் உங்களால் காண முடியும்.


இந்த கடற்பகுதியின் சுற்றுப்புறங்களிலிருந்து பெரிதும் தனித்தன்மையாக மாறுபட்டுள்ள பாலனோக்லோஸ்ஸஸ் என்ற அரிய வகை வாழும் கடற்பாசிகளை இந்த தீவு பெற்றுள்ளது.
இந்த தீவின் மற்றுமொரு கடல் சூழலிற்கான சொத்து இங்கு காணப்படும் கடற்பஞ்சுகளாகும். இந்த கடற்பஞ்சு உயிரினத்திற்கு அருகில் வேறு ஏதாவது உயிரினம் வந்தாலோ அல்லது யாராவது இதற்கு ஆபத்து விளைவிக்க நினைத்தாலோ அமீபாவைப் போன்று இது உருமாறி விடும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமான இந்த தீவுக்கு செல்லும் முன் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது.

அளபெடை

அளபெடை (நீண்டு ஒளிக்கும் ஒலி)
அளபெடை என்பது நீண்டு ஒலிக்கும் ஒலியாகும். இது இரண்டு வகைப்படும்
1. உயிரளபெடை (உயிர் + அளபெடை)

          செய்யுளில் ஓசை குறையும்போது உயிரெழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள் தம்மளவில் நீண்டு ஒலிப்பது உயிரளபெடை. செய்யுளில் அளபெடுப்பதால் இஃது செய்யுளிசை அளபெடை எனவும் அழைக்கப்படும். உயிரெழுத்துக்களில் நெட்டெழுத்துக்கள் ஏழுமே அளபெடுக்கும். எந்த நெட்டெழுத்து அளபெடுக்கிறதோ அதன் இனமான குற்றெழுத்து அதன்பக்கத்தில் வரிவடிவில் அடையாளமாக எழுத்தப்படும். காட்டு:- ஓஒதல், உழாஅர்

1. செய்யுளிசை அளபெடை
2. இன்னிசை அளபெடை
3. சொல்லிசை அளபெடை

2. ஒற்றளபெடை

          செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவுசெய்யும் பொருட்டு சொல்லிலுள்ள மெய்யெழுத்துகள்அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பது ஒற்றளபெடைஎன்றழைக்கப்படும்:-

 (உ-ம்)
"இலங்ங்கு வெண்பிறை" - (இடையில்வந்தது)
"கலங்ங்கு நெஞ்சம்" - (இடையில் வந்தது)
"விடங்ங் கலந்தானை" - (இறுதியில்வந்தது)


அளபெடை
1.உயிர்அளபெடை
2. ஒற்றளபெடை
1.செய்யுளிசை(அ)இசைநிரை
2.இன்னிசை
3.சொல்லிசை
ஒரு மெய்யெழுத்து இரட்டிக்கும்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள்,
,, என்றஎழுத்தால் முடியும்
என்ற எழுத்தில்முடியும்
என்ற எழுத்தில்முடியும்
1.படாஅமை
1.உண்பதூஉந்
1.தழீஇ
1.மடங்ங்
2.வாடாஅது
2.துன்புறூஉந்
2.அறனழ்இ
2.விடங்ங்
3.தொழாஅள்
3.இன்புறூஉம்
3.புறனழீஇ
3.கண்ண்
4.போயாயமொரு
4.கொடுப்பதூஉம்
4.குடிதழ்இ
4.பொன்ன்
5.ஒஒதல்

5.எடுப்பதூஉம்
5.உரனசைஇ
6.வரனசைஇ
5.மின்ன்
6.என்ன்



அளவு எடுக்கும்போது தோன்றும் இன எழுத்துக்கள்.
எழுத்து உயிர் நெடில்
இன எழுத்து / உயிர் குறில்
ஓள

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...