01 September, 2014

வரலாற்று ஆய்வாளர் பிபின் சந்திரா (27 மே 1928 – 30 ஆகஸ்டு 2014)


பத்மபூஷண் விருது பெற்ற அரசியல், பொருளாதார, வரலாற்று ஆய்வாளர் பிபின் சந்திரா (86) உடல் நலக்குறைவால் ஹரியாணா மாநிலம் குர்கானில் சனிக்கிழமை காலமானார்.

இடதுசாரி சிந்தனை கொண்ட பிபின் சந்திரா, ஹிமாசலப் பிரதேச மாநிலம், காங்க்ரா மாவட்டத்தில் 1928ஆம் ஆண்டு பிறந்தார். அவர், லாகூரில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரி, அமெரிக்காவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றவர்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் அரசியல், பொருளாதாரம், சமூக வளர்ச்சி ஆகியவை குறித்து பல்வேறு நூல்களை அவர் எழுதியுள்ளார்.

"இன் தி நேம் ஆஃப் டெமாக்ரசி: தி ஜேபி மூவ்மென்ட் அண்ட் தி எமர்ஜென்ஸி' உள்ளிட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார்.

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வு மையம், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்து வந்தார்.
நன்றி-தினமணி 
31-08-2014

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...