01 September, 2014

பிபிசி நிர்வாகக் குழுவின் தலைவராகப் பெண் தேர்வு


உலகப் புகழ்பெற்ற வானொலி, தொலைக்காட்சி செய்தி நிறுவனமான பிபிசி}யின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பிபிசி அறக்கட்டளை நிர்வாகக் குழுவின் புதிய தலைவராக ரோனா ஃபேர்ஹெட்(Rona Fairhead) (53) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எச்.எஸ்.பி.சி. வங்கி, பெப்ஸிகோ உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள ரோனா ஃபேர்ஹெட், பிபிசி அறக்கட்டளையின் முதல் பெண் தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற பிபிசி}யில் தலைவர் பொறுப்பு ஏற்கவுள்ளது பற்றிக் கருத்து கூறிய அவர், "திறமை வாய்ந்த பலரைக் கொண்டுள்ள பிரிட்டனின் உன்னதமான நிறுவனத்தின் நிர்வாகக் குழுவுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்றார்.

இவரது நியமனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிரிட்டிஷ் கலாசாரத் துறை அமைச்சர் ஸஜித் ஜாவீத் பின்னர் வெளியிடுவார்.

அதன் பிறகு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் கலாசாரம், ஊடகம், விளையாட்டுத் துறைகளின் தேர்வுக்குழு முன்பாக அவர் ஆஜராக வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்களின் விசாரணைக்குப் பிறகே அவர் பதவியேற்பது உறுதி செய்யப்படும்.
நன்றி-தினமணி 
31-08-2014

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...