28 August, 2014

ஜி.யு.போப் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்



  •   பெயர் -  ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
  •   பிறந்த ஊர் - பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
  •   பிறப்பு -  கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் நாள் பிறந்தார் 
  •   பெற்றோர் - ஜான் போப், கேதரின்  யூக்ளோ போப் 
  •   போப்பின்  தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில்  கிறித்துவமதத்தைப்  பரப்பும் சமய குருவாகப்  பணியாற்றினார்.    அவரைப்போன்று  பணியாற்ற  விரும்பி, தமது 19வது வயதில் தமிழகம்  வந்தார்.
  •  அவர் பாய்மரக்  கப்பலில் தமிழகம் வந்து சேர எட்டு மாதங்கள் ஆகின.
  •   தமிழ்நாட்டில்  சென்னை சாந்தோம் பகுதியில் முதலில் சமயப்பணி ஆற்றினார். திருநெல்வேலி  மாவட்டம் சாயர்புரம் என்னும் பகுதியில் சமயப்பணி ஆற்றினார். அங்கு பள்ளிகளை  நிறுவினார். கல்விப்பனியையும் சமயப்பணியையும் ஒருங்கே ஆற்றினார்.
  •  சமயக்கல்லூரியில்  தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தின்,  எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.
  •  கணிதம், அறிவாய்வு(தருக்கம்),  மெய்யறிவு(தத்துவம்) ஆகியவற்றை கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  •   திருநெல்வேலியில்  1842 முதல் 1849 வரை கல்விப் பணியும் சமயப்பணியும்  ஆற்றினார் .
  • 1850இல்  இங்கிலாந்து சென்று திருமணம் செய்துக்கொண்டு, தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம்  வந்து தஞ்சாவூரில் சமயப்பணி ஆற்றினார்.
  • தஞ்சையில்  பணியாற்றிய எட்டு ஆண்டுக் காலத்தில், புறநானூறு முதலான சங்க நூல்களையும் நன்னூல்  முதலான இலக்கணங்களையும் பயின்றார்.
  •  அவற்றை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
  •  இந்தியன்  சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு போன்ற ஏடுகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.
  •  அக்கட்டுரைகளில்  புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கங்களும்,  தமிழ்ப்புலவர் வரலாறும் இடம் பெற்றன.
  •  போப் உயர்ந்த  பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் 600  செய்யுள்களை, நீதிநூல்களில் இருந்து எடுத்து,   தமிழ் செய்யுட் கலம்பகம்  என்னும் தொகுத்து அதன் விளக்கங்களையும் எழுதி வெளியிட்டார்.
  •  பள்ளி  குழந்தைகளுக்காக வினாவிடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.
  •  பெரியவர்கள்  கற்கும் வகையில் இலக்கண நூலொன்றையும் படைத்தார்.
  •  மேலை நாட்டார்  தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றையும், ஆங்கிலம்-தமிழ் அகராதி ஒன்றையும் எழுதி வெளியிட்டார்.
  •   பழைய தமிழ் இலக்கியங்களில்  இருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு, அதனைப் பாடநூலாக வைக்க  ஏற்பாடு செய்தார்.
  • 1858ஆம் ஆண்டு  உதகமண்டலம் சென்ற அவர், பள்ளி ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  • இங்கிலாந்திற்கு  சென்ற போப் 23 ஆண்டுகள் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு  கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்தார்.
  •   திருக்குறளை 40  ஆண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1866ஆம் ஆண்டு  வெளியிட்டார்.
  •   தமது 86ஆம்  வயதில் 1900ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.
  • 13.02.1908  அன்று போப் தம் இன்னுயிரை நீத்தார்.
  •  அவர், தம்  கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என எழுத வேண்டும் என்று தமது இறுதிமுறியில்  எழுதி வைத்தார்.
  •  அவர்  தமிழ் மாணவன் என்றே தம்மை கூறிக்கொண்டார்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...