28 August, 2014

ரகசியப் போர்க் கப்பல் கடற்படையில் சேர்ப்பு


உள்நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்ட, ரேடார் போன்ற சாதனங்களின் கண்காணிப்பில் சிக்காத, நீர்மூழ்கி எதிர்ப்பு ரகசியப் போர்க் கப்பலான "ஐஎன்எஸ் கமோர்ட்டா', விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி முன்னிலையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

நாமே தயாரித்துள்ள இந்த ரகசியப் போர்க் கப்பல் நமது பலத்தை வெளிப்படுத்துவதுபோல் உள்ளது என்று ஜேட்லி பேசினார். கமோர்ட்டா போர்க்கப்பல் குறித்து கடற்படை அதிகாரிகள் கூறியதாவது:

""ரேடார் போன்ற கண்காணிப்புச் சாதனங்களில் கண்களில் சிக்காத இந்தப் போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளையும், ஹெலிகாப்டரையும் சுமந்து செல்லும்.

இந்தப் போர்க்கப்பல் 110 மீட்டர் நீளத்துடனும், 14 மீட்டர் அகலத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கமோர்ட்டா போர்க்கப்பலை இந்திய கடற்படையைச் சேர்ந்த நிறுவனமான கடற்படை வடிவமைப்பு இயக்குநகரம் (டிஎன்டி) வடிவமைத்துள்ளது.
நன்றி-தினமணி 
24-08-2014

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...