16 September, 2014

முதுமொழிக்காஞ்சி - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

 சிறந்த பத்து

1.ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
 ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை.
  • ஆர்கலி - கடல்
  • ஓதலின் - கற்றலைப் பார்க்கிலும்
     ஓசையினை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒழுக்கத்துடன் இருப்பது சிறந்ததாகும்.

2. காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்.
  • காதலின் - பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும்
  • சிறந்தன்று - சிறப்புடையது
     பிறர் அன்பு பாராட்டும்படி நடத்தலை விட அவர் மதிக்கும்படி நடத்தல் மேலானது.

3. மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை.
  • கற்றது - கற்ற பொருளை
  • மறவாமை - மறவாதிருத்தல்
     புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதை விட கற்றதை நினைவில் வைத்திருப்பது மேலானது.

4. வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை.
  • வண்மையின் - வளமையோடிருத்தலை விட 
   செல்வத்தினும் சிறப்புடையது உண்மை வாழ்க்கையாகும்.
5. இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை.
  • மெய் - உடம்பு
  • பிணி இன்மை - நோயில்லாமலிருத்தல்
     நோயில்லாமல் இருத்தல் இளமையினும் சிறப்பானது.

6. நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
  • நலன் உடமையின் - அழகுடைமையை விட
  • நாணு - நாணமுடைமை
     அழகைக் காட்டிலும் வெட்கம் சிறப்பானது.

7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
  • குலன் உடைமையின் - நல்ல குணத்தையுடைமையினும்
  • கற்பு - கல்வியுடைமை
     உயர்ந்த குலத்தைக் காட்டிலும் கல்வி மேன்மையானது.

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
  • கற்றாரை - கற்ற பெரியாரை
  • வழிபடுதல் - போற்றியொழுகுதல்
     கற்றலை விடக் கற்றாரை வழிபட்டொழுகுதல் மேலானது.

9. செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று.
  • செற்றாரை - பகைவரை
  • செலுத்துதலின் - ஒறுத்தலினும்
பகைவரை வெல்லுவதைவிட தன்னை மேம்படுத்திக் கொள்வது சிறப்பானது.

10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.
  • முன் பெருகலின் - முன்பு பெருகிப் பின் அழிதலைக் காட்டிலும்
  • சிறுகாமை - நின்ற நிலையில் குறையாதிருத்தல்
     செல்வம் பெருகி அழிவதைவிட, பெருகாமல் நிலையாக இருத்தல் நன்று.

சொற்பொருள்:
  1.   ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
  2.   காதல் – அன்பு, விருப்பம்
  3.   மேதை – அறிவு நுட்பம்
  4.   வண்மை – ஈகை, கொடை
  5.   பிணி – நோய்
  6.   மெய் – உடம்பு
ஆசிரியர் குறிப்பு:
  •   பெயர்: மதுரை கூடலூர் கிழார்
  •   பிறந்த ஊர்: கூடலூர்
  •   சிறப்பு: இவர் தம் பாடல்களை  நச்சினார்க்கினியர் முதலிய      நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள்.
  •   காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர்.
நூல் குறிப்பு:
  •   முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின்  துறைகளுள் ஒன்று.
  •   இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  •   இந்நூலை அறவுரைக்கோவை எனவும் கூறுவர்
  •   இந்நூலில் பத்து அதிகாரங்களும்,  அதிகாரத்திற்கு பத்துச் செய்யுள் வீதம் நூறு   பாடல்களும் உள்ளன.



No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...