27 August, 2014

தமிழ் வளர்த்த சான்றோர் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வீரமாமுனிவர்(1680-1747)


  •  வீரமாமுனிவர் இத்தாலி  நாட்டில் பிறந்தார். 
  • வீரமாமுனிவரின்  இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி   தம்  முப்பதாம் வயதில் தமிழகம் வந்தார். 
  •  தமிழின் மீது  கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை தைரியநாதன் என  மாற்றிகொண்டார்.   பின்னர்  தனித்தமிழுக்கு ஏற்ப வீரமாமுனிவர்  என மாற்றம் பெற்றது. 
  •  தமிழில்  முதன்முதலாக சதுரகராதி  என்னும் அகரமுதலியை படைத்தார். 
  •  கிறித்துவ  சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும்  தேம்பாவணி என்னும் காப்பியத்தை படைத்தார். 
  •   தமிழ் எழுத்து  வரிவடிவத்தை திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். 
  •  குட்டித்  தொல்காப்பியம் எனப் போற்றப்படும் தொன்னூல் விளக்கம்  படைத்தார். 
  •   கலம்பகம்,  அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களையும்,  பரமார்த்த குரு கதை என்னும்  நகைச்சுவை நூலையும் படைத்தார். 
  •  " தேம்பாவணி,  காவலூர் கலம்பகம் கதம்ப மாலையாக காட்சி அளிக்கிறது. தொன்னூல் பொன்நூலாக  இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது. வீரமாமுனிவர் தமிழ்  முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்"  என ரா.பி.சேதுபிள்ளை பாராட்டுகிறார்

குணங்குடி  மஸ்தான்(1788-1835)
  •  "மாதவஞ்ச்சேர்  மேலோர் வழுத்தும் குணங்குடியான்  "என்று  அழைக்கப்படுபவர். 
  •  இயற்பெயர் -  குணங்குடி மஸ்தான் சாகிபு.  
  •  இளம்வயதிலே  முற்றும்  துறந்தவராய் வாழ்ந்தவர்.
  •  இவர்  தாயுமானவர் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் .
  •  அவருடைய  பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல  இயற்றியுள்ளார். 
  •   பராப்பரக்கண்ணி,  எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி,  நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில  கண்ணிகள். 
  •  இவர்தம்  பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப்  பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை  அழைத்து செல்லும். 
  •   இவர் குருநிலை,  தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை,  தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும்  வகையில் பாடல்கள் பல  இயற்றியுள்ளார். 
  •  இவர் மீது  கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள்    நான்மணிமாலை ஒன்று  இயற்றியுள்ளார். 
  •  அந்நூலில் "மடல் சூல்புவியில உளத்திருளைக் கருணை ஒளியினாற்  களைந்து, விடல்சூழ்பவரின் குணங்குடியான், மிக்கோன் எனற்கு ஓர்  தடையுளதோ? எனக் கேட்கிறார்.
  •  "தடை உண்டு என உரைப்பார்  தமிழுலகில் இல்லை "என்கிறார். 
ஆறுமுக நாவலர்(1822-1879)

  •   ஆறுமுக நாவலர்  யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். 
  •   இவருடைய  இயற் பெயர்   ஆறுமுகனார். 
  •   இளமையிலே சைவ  சிந்தாந்த சாத்திரங்கள் படித்தவர். 
  •   இவரின்  சொற்பொழிவு திறமையை கண்டு திருவாவடுதுறை ஆதினம்       இவருக்கு நாவலர் பட்டம் வழங்கினார். 
  •   இவர் சிறந்த  பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர். 
  •   நாவலரே முதன்  முதலில் இலக்கண வலுவற்ற தூய்மையான எளிய        தமிழ்   உரைநடையை கையாண்டார். 
  •   தமிழ்  உரைநடைக்கு இவர் ஆற்றிய தொண்டிற்காக பரிதிமாற்கலைஞர்     இவரை வசன நடை கைவந்த  வல்லாளர் என பாராட்டினார். 
  •   சென்னையில்  அச்சுக்கூடம் நிறுவி, சிறந்த தமிழ் நூல்கள் பல    பதிப்பித்தார். 
  •   பாரதம்,  பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை  போன்ற    இலக்கிய நூல்களை  பதிப்பித்தார். 
  •   இலக்கண  வினாவிடை, இலக்கண சுருக்கம், நன்னூல் விருத்தியுரை,    நன்னூல்    காண்டிகையுரை, இலக்கண  கொத்து, இலக்கண சூறாவளி  முதலிய இலக்கண     நூல்களை பதிப்பித்து வெளியிட்டார். 
  •   முதல் வகுப்பு  முதல் நான்காம் வகுப்பு வரை பாலபாடங்களையும் எழுதி        அச்சிட்டு வெளியிட்டார்

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...