25 July, 2014

திருவிளையாடற்புராணம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



சொற்பொருள்:

  1.  வையை நாடவன் - பாண்டியன்
  2.  உய்ய - பிழைக்க
  3.  இரந்து செப்பினான் - பணிந்து வேண்டினான்.
  4.  தென்னவன் குலதெய்வம் - சொக்கநாதன் (அ)) சுந்தரபாண்டியன்
  5.  இன்னல் - துன்பம்
  6.  நல்கினார் - அளித்தார்
  7.  இறைஞ்சி - பணிந்து
  8.  அளக்கில் கேள்வியார் - அளவற்ற கேள்வியறிவினர்.
  9.  சிரம் துளக்கி - தலையசத்து
  10.  புறம்பு - வெளியில்
  11.  பையுள் - வருத்தம்
  12.  நம்பி - தருமி
  13.  கண்டம் - கழுத்து
  14.  வழுவு பாடல் - குற்றமுள்ள பாடல்
  15.  ஆர்அவை - (புலவர்) நிறைந்த அவை
  16.  சீரணி - புகழ்வாய்ந்த
  17.  வேணி - செஞ்சடை
  18.  மீனவன் - மீன்கொடியை உடைய பாண்டியன்
  19.  விபுதர் - புலவர்
  20.  பொற்கிழி - பொன் முடிப்பு
  21.  கிளத்தினேன் - சொன்னேன்
  22.  ஓரான் - உணரான்
  23.  அற்குற்ற - (அல்கு+ உற்ற) - இருளையொத்த
  24.  நாற்றம் - நறுமணம்
  25.  குழல் - கூந்தல்
  26.  அல்கு - இரவு
  27.  ஞானப்பூங்கோதை - உமையம்மை
  28.  உம்பரார் பதி - தேவர் தலைவன் (இந்திரன்)
  29.  கரந்தான் - மறைந்தான்
  30.  நாவலன் - புலவர்

இலக்கணக் குறிப்பு:

  1.  உரைத்து, இரந்து - வினையெச்சங்கள்
  2.  சொல்லி, இறைஞ்சி - வினையெச்சங்கள்
  3.  விளக்கி, சிறந்து - வினையெச்சங்கள்
  4.  மகிழ்ந்த - தொழிற்பெயர்
  5.  தூங்கிய, ஆயந்த - பெயரெச்சங்கள்
  6.  நேர்ந்த - வினையெச்சம்
  7.  கொண்டு, வைத்து - வினையெச்சங்கள்
  8.  நோக்கி - வினையெச்சம்
  9.  கிளத்தினேன் - தன்மை ஒருமை வினைமுற்று
  10.  தேராக்கீரன் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  11.  புனைமலர் - வினைத்தொகை
  12.  பற்றுவான், அஞ்சான் - வினையாலணையும் பெயர்கள்
  13.  குற்றம் - தொழிற்பெயர்
  14.  விழுந்து - வினையெச்சம்
  15.  செந்நீ, வெம்மை - பண்புத்தொகை
  16.  தேய்ந்த, பாய்ந்த, ஆய்ந்த, காய்ந்த - பெயரெச்சங்கள்


 ஆசிரியர் குறிப்பு:

  •  நாகை மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தார்.
  •  தமிழிலும், வடமொழியிலும் புலமை பெற்றவர்  மீனாட்சி சுந்தர தேசிகர்.
  •  பரஞ்சோதி முனிவர் துறவியாகச் சிவாலங்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு வந்தார்.
  •  மதுரை மீனாட்சி அம்மனையும் சோமசுந்தரக் கடவுளையும் வணங்கியவர். அந்நகரிலேயே சிலகாலம் தங்கியிருந்தார்.
  •  அந்நகரத்தார் கேட்டுக் கொண்டதற்கு இணைங்க திருவிளையாடற் புராணத்தை இயற்றினார். அந்நூலை சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென் மொழிப்புலவர் யாவரும் போற்ற அரங்கேற்றினார்.
  •  திருவிளையாடற் போற்றிக்கலி வெண்பா, மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். 

நூற்குறிப்பு:

  •  திருவிளையாடற் புராணம், மதுரைக் காண்டம் (பதினெட்டுப் படலம்), கூடற்காண்டம் (முப்பது படலம்), திருவாலவாய்க் காண்டம் (பதினாறு படலம்) என்னும் முப்பெரும் பகுதிகளையும் படலம் என்னும் அறுபத்து நான்கு உட்பிரிவுகளையும் உடையது.
  •  இதில் மூவாயிரத்து முந்நூற்று அறுபத்தி மூன்று விருத்தப் பாக்கள் உள்ளன.
  •  மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை இப்படலங்கள் விளங்குகின்றன.
  •  இந்நூல், இறைவனின் திருவிளையாடல்களை விளக்கி எழுந்த நூல்களுல் விரிவானதும் சிறப்பானதும் ஆகும்.
  •  தொடைநயம் பக்திச்சுவை மிக்க இந்நூலுக்கு ந.மு. வேங்கடசாமி உரையெழுதியுள்ளார்.
  •  உடல் முழுவதும் கண்களை உடையவர் - சிவபெருமான்
  •  பொற்கிழி பெறச்சென்ற தருமியைத் தடுத்தவர் - நக்கீரனர்
  •  இறைவனிடம் பாடலைப் பெற்றுச் சென்றவர் - தருமி
  •  தமிழ்ப்புலவர்கள் இறைவனுக்கும் தமிழுக்கும் உள்ள பிணைப்பை உறுதிப்படுத்தவே திருவிளையாடல் புராணம் முதலிய புராணங்களை இயற்றியதாகக் கொள்ளலாம்.
  •  புலவர் தம் புலமைத் திறத்தை அறிய இறைவனை வேண்டிச் சங்கப் பலகையைப் பெற்றனர்.

 

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...