24 July, 2014

இந்திய ஆறுகள்



சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியன வட இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளாகும். 

யமுனா, கோசி என்பன கங்கை நதியின் துணை நதிகள்.

கோசி ஆறு பாயும் நிலப்பகுதி மிகக் குறைவான சரிவைக் கொண்டிருப்பதால் ஆண்டுதோறும் பொரும் அழிவைக் கொடுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.

கிருஷ்ணா, கோதாவரி, காவிரி போன்றவை தென்னிந்தியாவில் பாயும் முக்கிய ஆறுகளாகும்.காவிரி ஆறு  இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

 அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. 

இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. 

இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.நர்மதா, தாப்பி போன்ற முக்கிய ஆறுகள் இந்தியாவின் மேற்குக் கரையூடாக அரபிக் கடலில் கலக்கின்றன. வட இந்தியாவில் ஓடும ஆறுகளில் கங்கையின் துணை ஆறுகளும், இணை ஆறுகளும் மற்றும் கங்கை நதியும் சேர்ந்து கங்கைச் சமவெளிப் பகுதிகளை உருவாக்குகின்றன. 

வட இந்தியாவின் முக்கிய புவியியல் காரணியாக கங்கை ஆறு அமைந்துள்ளது.

இந்தியாவின் தீபகற்ப பகுதியில் பாயும ஆறுகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் கோதாவரி, காவிரி போன்ற ஆறுகள் குறிப்பிடத்தக்கவை.




1 comment:

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...