21 July, 2014

உலகக் கோப்பை கால்பந்து போட்டி-ஜெர்மனி உலக சாம்பியன்


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது. ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வென்றது.

ஜெர்மனியின் 22 வயது இளம் வீரர் மரியோ கோட்ஸே 113-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இதன் மூலம் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி மீண்டும் உலக சாம்பியன் ஆனது.

சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி மீண்டும் உலக சாம்பியனாகியுள்ளது.

இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனா அணியை ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருது அர்ஜென்டீனா அணி கேப்டன் லயோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. அதிக கோல் அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் தங்க ஷூ விருதுக்கு கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் அதிகபட்சமாக 6 கோல்கள் அடித்தார்.

சிறந்த கோல் கீப்பருக்கான ‘கோல்டன் கிளவ்’ விருது ஜெர்மனி கோல் கீப்பர் நியாருக்கு வழங்கப்பட்டது.

அடுத்த உலகக் கோப்பை போட்டி 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...