17 July, 2014

நந்திக் கலம்பகம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்


பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு 
      பருமணி பகராநெற்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு 
      காவிரி வளநாடா
நிதிதரு கவிகையும் நிலமக ளுரிமையும் 
      இவைஇவை யுடைநந்தி
மதியிலி யரசர்நின் மலரடி பணிகிலர்   
      வானகம் ஆள்வாரே

சொற்பொருள்:

  • புயல் – மேகம்
  • பனண – மூங்கில்
  • பகரா – கொடுத்து
  • பொருது – மோதி
  • நிதி – செல்வம்
  • புனல் – நீர்
  • கவிகை – குடை
  • வானகம் - தேவருலகம்

இலக்கணக்குறிப்பு:
  • பொழிதருமணி – வினையெச்சம்
  • வருபுனல் – வினையெச்சம்
  • நிதிதருகவிகை – வினையெச்சம்
  • இவை இவை - அடுக்குத்தொடர்

நூல் குறிப்பு:

  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  • பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாக கொண்டது இந்நூல்.
  • கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல்.
  • கலம்பகம் என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • பலவகைப் பொருள்களைப் பற்றிப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெரும் நூல் கலம்பகம்.
  • கலம்பகம் பதினெட்டு உருபுகளை கொண்டது.
  • (புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம்)


3 comments:

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...