20 July, 2014

பொறையுடைமை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  1. அகழ்வாரை – தோண்டுபவரை
  2. இகழ்வார் - இழிவுபடுத்துவோர்
  3. தலை – சிறந்த பண்பு
  4. பொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல்
  5. இறப்பினை - பிறர் செய்த துன்பத்தை.
  6. இறப்பு – துன்பம்
  7. இன்மை – வறுமை
  8. ஒரால் – நீக்குதல்
  9. மடவார் – அறிவிலிகள்
  10. விருந்து – வீட்டிற்கு புதியவராய் வந்தவர்
  11. நிறை – சால்பு
  12. ஒறுத்தாரை – தண்டித்தவரை
  13. ஒன்றாக - ஒரு பொருட்டாக
  14. பொதிந்துவைப்பர் - (மனத்துள்) வைத்துக்கொள்வர்.
  15. போன்றும் – உலகம் அழியும்வரை
  16. பொன்றும் துணையும் - உலகம் உள்ளவரை
  17. நோநொந்து – துன்பத்திற்கு வருந்தி
  18. திறனல்ல - செய்யத்தகாத
  19. மிக்கவை – தீங்குகள்
  20. மிகுதியான் - மனச்செருக்கால்
  21. தகுதியான் – பொறுமையால்
  22. துறந்தார் – பற்றற்றவர்
  23. இன்னா – தீய
  24. நோற்கிற்பவர் - பொறுப்பவர்
  25. நோற்பார் - நோன்பு மேற்கொள்பவர்
  26. இன்னாச்சொல் - தீய சொல்


இலக்கணக்  குறிப்பு:

  1. பொறுத்தல் – தொழிற்பெயர்
  2. அகல்வார், இகழ்வார் – வினையாலணையும் பெயர்
  3. மறத்தல், பொறுத்தல் – தொழிற்பெயர்
  4. நன்று – குறிப்பு வினைமுற்று
  5. விருந்து – பண்பாகு பெயர்
  6. ஒரால், நீக்குதல் – தொழிற்பெயர்
  7. நீங்காமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
  8. ஒருத்தார் – வினையாலணையும் பெயர்
  9. பொதிந்து – வினையெச்சம்
  10. வையார் – வினைமுற்று
  11. ஒருத்தார், பொறுத்தார் – வினையாலணையும் பெயர்
  12. தற்பிறர் – ஏழாம் வேற்றுமைத் தொகை
  13. செய்யினும் – இழிவு சிறப்பும்மை
  14. நொந்து – வினையெச்சம்
  15. அரண், திறன் – ஈற்றுப்போலிகள்
  16. விடல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
  17. இறந்தார், செய்தாரை,துறந்தார், நோற்கிற்பவர் – வினையாலணையும் பெயர்
  18. உண்ணாது – வினையெச்சம்
  19. விடல் - அல் ஈற்று வியங்கோள்வினைமுற்று
  20. இன்னாச்சொல் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆசிரியர் குறிப்பு:
  • இவர் நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, பெருநாவலர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுவார்.
  • இவரின் காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டு என்று கூறுவர்.
நூல் குறிப்பு:
  • திரு + குறள் = திருக்குறள்
  • திரு = செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத்தன்மை எனப் பல பொருள் உண்டு.
  • குறள் = குறுகிய அடி உடையது.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
  • அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25 அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூலை போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.
திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் :
1. தருமர்
2. மணக்குடவர்
3. தாமத்தர்
4. நச்சர்
5. பரிதி
6. பரிமேலழகர்
7. திருமலையர்
8. மல்லர்
9. பரிப்பெருமாள்
10. காளிங்கர்






No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...