20 July, 2014

வாழ்த்து - 9 ஆம் வகுப்பு

உலகம் யாவையும் தாமுள வாக்கலும் 
நிலைபெ  றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே.
-கம்பர்



சொற்பொருள்:
  1. உளவாக்கல் – உண்டாக்குதல், படைத்தல்
  2. நிலைபெறுத்தல் - காத்தல்
  3. நீக்கல் – அழித்தல்
  4. நீங்கலா – இடைவிடாது
  5. அலகிலா – அளவற்ற
  6. அன்னவர் – அத்தகைய இறைவர்
  7. சரண் – அடைக்கலம்
இலக்கண குறிப்பு:

  1. யாவையும் – முற்றும்மை
  2. ஆக்கல், நீக்கல், விளையாட்டு – தொழிற் பெயர்
  3. அலகிலா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
ஆசிரியர் குறிப்பு:
  • நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூரில் கம்பர் பிறந்தார்.
  • இவர் கம்பராமாயணம்,ஏர் எழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • இவர் குலோதுங்கச்சோழனின் அவைப் புலவராக விளங்கினார்.
  • திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
  • கவிச்சக்ரவர்த்தி என்றும் கல்வியில் பெரியவர் கம்பர் என்றும் போற்றப்பட்டார்.
  • இவரின் காலம் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
  • வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் கம்பர் எழுதியதே கம்பராமாயணம்.
  • கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் = இராமாவதாரம்.
  • இது பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.



No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...