- தீயின்வாய் - நெருப்பில்
- சிந்தை - எண்ணம்
- கூர - மிக
- நவ்வி - மான்
- முகில் - மேகம்
- மதி - நிலவு
- உகு - சொரிந்த(பொழிந்த)
- புனல் - நீர்
- வெந்து, உலர்ந்து, எனா, கூர - வினையெச்சங்கள்
- செந்நாய் - பண்புத் தொகை
- கருமுகிலும் , வெண்மதியும் - எண்ணும்மை
- கருமுகில், வெண்மதி - பண்புத்தொகைகள்
- கடக்க ஓடி, இளைத்து - வினையெச்சங்கள்
- வியர்த்த வியர்வன்றோ - பெயரெச்சம்
- வாயினீர் - வாயின் + நீர்
- வெந்துலர்ந்து - வெந்து + உலர்ந்து
- காடிதனை - காடு + இதனை
- கருமுகில் - கருமை + முகில்
- வெண்மதி - வெண்மை + மதி
- கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் சயங்கொண்டார்.
- இவர், திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊரினர். முதல் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர்.
- பரணிக்கோர் சயங்கொண்டார் எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.
- இசையாயிரம், உலாமடல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
- இவரது காலம் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு.
- ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் பரணி என்பது பெயர்.
- இது தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல் கலிங்கத்துப் பரணி.
- கலிங்க மன்னன் அனந்தபன்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான்.
- அவ்வெற்றியைப் பாராட்டி எழுந்த இந்நூல் தோல்விவுற்ற கலிங்க நாட்டின் பெயரால் அமைந்துள்ளது.
- இந்நூல் ஐந்நூற்றுத் தொண்ணூற்றொன்பது தாழிசைகள் உள்ளன.
- சயங்கொண்டாரின் சமகாலப் புலவரான ஒட்டக் கூத்தர் இந்நூலைத் "தென்தமிழ்த் தெய்வப்பரணி" எனப் புகழ்ந்துள்ளார்.
- தக்கயாகப்பரணி
- மோகவதைப்பரணி
- சீனத்துப்பரணி
- வங்கத்துப்பரணி
- பாசவதைப்பரணி
- திராவிடத்துப்பரணி
மாணவ னுக்கு வகுப்பது பரணி
- பன்னிரு பாட்டியல்
- பேரறிஞர் அண்ணா "எனக்கு விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே" என்றார்.
Good
ReplyDelete