சிறுபஞ்சமூலம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு
வட்டான்நன் றென்றால் வனப்பு
- காரியாசான்

சொற்பொருள்:
  • கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
  • எண்வனப்பு - ஆராய்சிக்கு அழகு
  • வேந்தன் - அரசன்
  • வனப்பு - அழகு
  • கிளர்வேந்தன் - புகழுக்குரிய அரசன்
  • வாட்டான் - வருத்தமாட்டான்
 இலக்கணக்குறிப்பு:
  • கண்ணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் - தொழிற்பெயர்கள்
  • கேட்டார், வாட்டான் - வினையாலணையும் பெயர்
 ஆசிரியர் குறிப்பு:
  • காரியாசான் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
  • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
  • இவரும் கணிமேதவியாரும் ஒருசாலை மாணாக்கர்.
நூல் குறிப்பு:
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.
  • கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல் நோயைத் தீர்ப்பன.
  • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து அறக்கருத்துகள் உள்ளன.
  • ஐந்து அறக்கருத்துக்களும் மக்கள் மனநோயைப் போக்குவன.

1 comment:

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...