இக்காலக் கவிதைகள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

                          

உரைநடைக் காலம்:
  • இருபதாம் நூற்றாண்டை "உரைநடைக் காலம்" என்பர்.
  • எனினும் கவிதை வடிவமும் கவினுற வளர்ந்து வந்தது.
  • இருபதாம் நூற்றாண்டில் அறிவியலும், இலக்கியமும் விரைவாக வளர்ந்தன.
  • செய்யுள், உரைநடை என்னும் இரு வடிவிலும் புதுவகை இலக்கியங்கள் மலர்ந்துள்ளன.

பாரதியார்:
  • பாரதியாரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக   இருந்தது.
  • மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும்.

பாரதிதாசன்:
  • தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடமை முதலியவற்றை பாரதிதாசன் கவிதைகள் வெளிப்படுத்தின.
"எங்கள் பகைவர் எங்கே மறைந்தார் 
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே"


கவிமணி:
  • கவிமணியின் கவிதைகள் கற்போரைக் களிப்பில் ஆழ்த்துவன.
  • கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ, எனத் தாலாட்டு பாடியவர்.

"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா"
"சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
சபைகளிலே தமிழ் எழுந்து முழங்கவேண்டும்"

நாமக்கல் கவிஞர்:
  • இவரின் கவிதைகளில் காந்தியச் சிந்தனை அதிகம்.
"தமிழன் என்றேர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு"
பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்"
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்"
காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர்.

முடியரசன்:
இவரின் கவிதையில் பகுத்தறிவு நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் தமிழுணர்வும் அதிகம் காணலாம்.
"ஆங்கிலமோ பிறமொழியோ
பயின்றுவிட்டால்
அன்னைமொழி பேசுவதற்கு நாணுகின்ற
தீங்குடை மனப்போக்கர் வாழும்நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி?"

சுரதா:
  • சுரதாவின் கவிதைகளில் புதிய உவமைகளைக் காணலாம்.
  • உவமைக் கவிஞர் என்று அழைப்பர்.
மறைமலையடிகளைப் பற்றி சுரதா பாராட்டுதல்.
முல்லைக்கோர் காடுபோலும்
முத்துக்கோர் கடலேபோலும்
சொல்லுக்கோர் கீரன்போலும்
தூதுக்கோர் தென்றல்போலும்
கல்விக்கோர் கம்பன்போலும்
கவிதைக்கோர் பரணர்போலும்
வில்லுக்கோர் ஓரிபோலும்
விளங்கினார், வென்றார், நின்றார்.
  • சுரதாவின் பாடல்களில் வரலாற்றுச் செய்திகளும், இலக்கண விளக்கங்களும் கலந்து வரும்.
  • சுரதா மறைமலையடிகளாரை உவமைகளால் பாராட்டியுள்ளார்.

வாணிதாசன்:
  • பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம் பிடித்துக் காட்டுவதில் வாணிதாசன் கவிதைகள் சிறந்து விளங்குகின்றன.
  • சுத்தானந்த பாரதியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், தமிழ்ஒளி போன்றோர் மரபுக் கவிதைகளை புனைந்து தமிழன்னைக்கு மேலும் வளமும் பெருமையும் சேர்த்துள்ளனர்.
  • மனிதகுல வளர்ச்சிக்கும் ஏற்றவாறு சிந்தனை மாற்றங்களும் சமூக மாற்றத்தின் விளைவே புதுக்கவிதையின் தோற்றம்.
  • அமெரிக்கக் கவிஞர் "வால்ட்விட்மனின்" சாயலில் வசன கவிதை எழுதியவர் - பாரதியார்.
  • பாரதிதாசன் உரைநடைகள் அனைத்தும் கவிதைநடை கொண்டவை.
  • மேலை நாட்டு இலக்கியத் தொடர்பும், சமுதாயச் சூழ்நிலையும் தமிழில் புதியதொரு வடிவம் தோன்றக் காரணமாக இருந்தவை.

மணிக்கொடி:
  • ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன் முதலியோர் தொடக்கத்தில் மணிக்கொடி என்னும் இதழில் புதுக்கவிதை எழுதினார்.
  • எழுத்து: எஸ்.வைதீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு. செல்லப்பா முதலியோர் எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைப் படைத்தனர்.

வல்லிக்கண்ணன்:
புதுக்கவிதை வரலாற்றில் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.
ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன.
 என்பது இவரின் புதுக்கவிதையின் எளிய வடிவை காட்டும்.
புதுக்கவிதை வளர்ச்சியல் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.

1 comment:

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...