அரியா சனமுனக்கே யான லுனக்குச்
சரியாரு முண்டோ தமிழே - விரிவார்
திகழ்பா வொருநான்குஞ் செய்யுள்வரம் பாகப்
புகழ்பா வினங்கண்மடைப் போக்கா - நிகழ்வே
நல்லேரி னாற்செய்யு ணாற்கரணத் தேர்பூட்டிச்
சொல்லே ருழவர் தொகுத்தீண்டி - நல்லநெறி
நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும்
மேலே பலன்பெறச்செய் விக்குநாள் - மேலோரிற்
பாத்தனதாக் கொண்டபிள்ளைப் பாண்டியன் வில்லியொட்டக்
கூத்தனிவர் கல்ல்லாது கோட்டிகொளும் - சீத்தையரைக்
குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம்
வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர் - கட்டி
வளர்ந்தனைபான் முந்திரிகை வாழைக் கனியாய்க்
கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத் - திளங்கனியாய்த்
தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியேயென் முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப் படுந்தேனே யுன்னோ டுவந்துரைக்கும்
விண்ணப்ப முண்டு விளம்பக்கேள்
சொற்பொருள்:
- அரியாசனம் – சிங்காதனம்
- பா ஒரு நான்கு – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
- வரம்பு – வரப்பு
- ஏர் – அழகு
- நார்கரணம் – மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
- நெறிநாலு –பாஞ்சாலம்(சித்திரகவி),மாகதம்(வித்தாரகவி) வைதருப்பம்(ஆசுகவி),கௌடம்(மதுரகவி),
- நாற்பொருள் – அறம், பொருள், இன்பம், வீடு
- கோட்டிகொளும் - கூட்டமாகக் கூடும்
- சீத்தையர் – கீழானவர், போலிப்புலவர்
- தூர்கட்டி - பயிர் அடி பருந்து வளர்தல்
- நாளிகேரம் – தென்னை
- செவியறுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
- நாற்கரணம் = நான்கு + கரணம்
- காரணத்தேர் = கரணத்து + ஏர்
- நாற்பொருள் = நான்கு + பொருள்
- செவியறுத்து - செவி + அறுத்து
- இளங்கனி = இளமை + கனி
- விண்ணப்பமுண்டு = விண்ணப்பம் + உண்டு
- தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ அஃறினைப்பொருளையோ தூது அனுபுவதாகப் பாடுவது தூது இலக்கியம்.
- இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Excellent work!
ReplyDeleteஇயல் 2 10 th STD question paper
ReplyDelete