15 September, 2014

இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் - 2



உயர்நீதிமன்றங்கள் - High Courts

* Art.214ன் படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர்நீதிமன்றம் இருத்தல் வேண்டும்.

* எனினும் Art.231-ன் படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றத்தைத் தோற்றுவிக்கவும் பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.

* மாநில நீதித்துறையின் தலைமை அமைப்பாக உயர்நீதிமன்றம் திகழ்கிறது. இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கென்று, 21 உயர்நீதிமன்றங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.

* கொல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் 1862-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டன. 2004-ல் தமிழகத்தின் மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை தோற்றுவிக்கப்பட்டது.

* 11வது நீதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விரைவு நீதிமன்றங்கள் 01.04.2001 முதல் தொடங்கப்பட்டன.

* மாநில சட்ட உதவி ஆணையத்தின் உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் லோக் அதாலத் தொடங்கப்பட்டுள்ளது.

* உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் - Appointment of Judges

* ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் ஒரு தலைமை நீதிபதிகளையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிற எண்ணிக்கையில் பிற நீதிபதிகளையும் கொண்டு செயல்படும்.

* உச்சநீதிமன்றத்தைப் போலன்றி, உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அரசியலமைப்பு வரையறுக்கவில்லை, மாறாக அந்த அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.

* உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் மட்டுமின்றி குடியரசுத் தலைவருக்கு கீழ்காணும் பிற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவை:

* நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கென்று, கூடுதல் நீதிபதிகளை நியமிக்கும் 2 ஆண்டுகளுக்கு மிகாமல், குடியரசுத் தலைவர் நியமிக்கலாம்.

* உயர்நீதிமன்ற நீதிபதி இல்லாத போதோ அல்லது பணியாற்ற இயலாத சூழ்நிலையிலோ (உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர) அக்குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிக நீதிபதிகளை நியமிக்கலாம்.

* அவ்வாறு நியமிக்கப்படும் நீதிபதி, நிரந்தரமாக நியமிக்கப்பட்ட நீதிபதி பணியேற்கும் வரை பதவில் இருப்பார்.

* எனினும் கூடுதல் நீதிபதியாக இருப்பினும், தற்காலிக நீதிபதியாக இருப்பினும் 62 வயது வரை மட்டுமே பணியாற்ற இயலும்.

* உயர்நீதிமன்ற பிற நீதிபதிகளை நியமிக்கும்போது, இந்திய தலைமை நீதிபதி, அந்த மாநில ஆளுநர் மற்றும் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை ஆலோசித்த பின்னரே குடியரசுத் தலைவர் செயல்படுவார்.

* உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தமது 62 வயது வரை பதவி வகிக்கலாம். உயர்நீதிமன்ற நீதிபதியின் வயது குறித்து எழும் பிரச்சனைகளில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார்.

 உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள்:

1. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

2. இந்திய நீதித் துறையில் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

3. ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது அதற்கு மேற்பட்ட உயர்நீதிமன்றங்களிலோ தொடர்ந்து பத்தாண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருத்தல் வேண்டும்.

 உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தனித்தியங்கு தன்மை:

* உயர்நீதிமன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக (Independency) செயல்படுவதற்கென கீழ்வரும் செயல்பாடுகளை அரசியலமைப்பு செயல்படுத்துகிறது.

* ஒருமுறை நீதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்டால், அவர் திறமையின்மை, தவறான நடத்தை ஆகிய காரணங்களுக்காக மட்டும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக மட்டுமே, குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

* உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த பின்னர், தமது ஒய்வுக் காலத்திற்குப் பிறகு அதே உயரிநீதிமன்றம் தவிர பிற உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் மட்டுமே அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலும்.

* எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவதை இந்த விதி தடை செய்யாது.

* உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும் அந்தந்த மாநில தொகுப்பு நிதியத்தின் (Consolidated Fund of State)  செலவினங்களிலிருந்து அளிக்கப்படுவதால், அம்மாநில சட்டப்பேரவையின் வாக்கெடுப்பு தேவையில்லை.

* மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும், நிதி நெருக்கடி நிலை (Financial Emergency) தவிர பிற சமயங்களில் குறைக்கப்பட் இயலாது.

* உயர்நீதிமன்ற நீதிபதியின் நடத்தை மற்றும் செயல்பாடுகளை பாராளுமன்றத்தின் , குற்ற விசாரணை தீர்மானம் கொண்டுவரும் நேரம் தவிர பிற சமயங்களில் விமர்சிக்க இயலாது.

* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையைப் பெற்ற பின்னர், ஒரு உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றுவதற்கு குடியரசுத் தலைவர் Art.222 அதிகாரம் வழங்குகிறது.

* எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனை பின்பற்றப்பட வேண்டும்.

* அரசிலமைப்பின் பாதுகாவலன் - உச்சநீதிமன்றம்

* அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் - உச்சநீதிமன்றம்

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது - 65

* உச்சநீதிமன்ற கூடுதல் நீதிபதிகளின் பதவிக்காலம் - 2 ஆண்டுகள்

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கப்படும் முறை - குற்ற விசாரணை முறை

* குற்ற விசாரணை முறை புகுத்தப்பட்ட ஒரே நபர் - ஆர்.ராமசாமி(1991-93ல்)

* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எதிலிருந்து வழங்கப்படுகிறது - இந்திய தொகுப்பு நிதியம் (இந்திய ஒருங்கிணைப்பு நிதியிலிருந்து)

* உச்சநீதிமன்றத்தின் இணையதளம் - supremecourtofindia.nic.in

* நீதிப்புனராய்வு செய்யும் உச்ச அதிகாரம் கொண்ட அமைப்பு - உச்சநீதிமன்றம்

* அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் எதைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது - நீதிப்பேராணைகள்

* தற்போது உச்சநீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை - 30 + 1

* உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை - 1950ல் - 8, 1956ல் - 11, 1960ல் -14, 1978ல் - 18, 1986ல் - 26, 2008ல் - 31

* உண்மையான அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும், பிற 7 நீதிபதிகளும் இடம் பெற்றிருந்தனர்.

* பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை மேலும் நியமிக்க அரசியயமைப்பு வழி செய்துள்ளது.

* இந்த அதிகாரத்தின் அடிப்படையில் பாராளுமன்றம், தற்போதைய உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும் மற்றும் பிற 30 நீதிபதிகளும் இடம்பெற சட்டமியற்றியுள்ளது. (Art.124)

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.

* குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிக்கும்போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து செயல்பட வேண்டும்.

* இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை - 21

* மாநிலத்தின் உயர்ந்த நீதித்துறை அமைப்பாக விளங்குவது - உயர்நீதிமன்றம்

* சென்னை உயர்நீதிமன்றம் வேறு எந்த பகுதிக்கும் நீதிமன்றமாக செயல்படுகிறது - பாண்டிச்சேரி

* அடிப்படை உரிமைகளுக்காக நீதிப்பேராணைகளை வெளியிடும் அதிகாரம் பெற்றது - உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம்

* ஆளுநர் பதவி காலியாக உள்போது தற்காலிக ஆளுநராகச் செயல்படுபவர் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

* தனிநபர் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தால் பிறப்பிக்கப்படுவது - ஹேபியஸ் கார்பஸ்

* செயலுறுத்தும் நீதிப்பேராணை என்பது - மாண்டமஸ்

* கோ வாரண்டோ என்பது - தகுதி முறை வினவும் பேராணை

* அடிப்படை உரிமைகள் மற்றும் பிற உரிமைாகளுக்காக ஐந்து நீதிப்போராணைகளை பிறப்பிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு - உயர்நீதிமன்றம்

* உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்

* உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எதிலிருந்து வழங்கப்படுகிறது - மாநில தொகுப்பு நிதியம்

* உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது - 62

* மத்திய அரசு குழந்தைகள் நீதிச் சட்டத்தை இயற்றிய ஆண்டு - 1986

* இந்திய உயர்நீதிமன்றங்களில் மிகவும் பழமையானது கொல்கத்தா, மும்பை, சென்னை உயர்நீதிமன்றம். இது நிறுவப்பட்ட ஆண்டு ஜூன் 26,1862.

* சென்னை உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு - ஜூன் 26,1862

* சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகார எல்லை - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளடக்கியது.

* தொடக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு 1862 ஆகஸ்ட் 15 முதல் மெட்ராஸ் ஹை கோர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

* சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சிலை - மனுநீதிச் சோழனின் சிலை.

* சென்னை உயர்நீதிமன்றத்தின் இணையதளம் http://www.hcmadras.tn.nic.in

* தற்போதைய சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியவர் - பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன். இவரின் கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்னரே தற்போதைய உயர்நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டது.

* சென்னை உயர்நீதிமன்றம் செயல்பட்ட பழைய இடத்தின் பெயர் கொய்யா தோப்பு (ஜார்ஜ் டவுன்)

* சென்னை உயர்நீதிமன்றம் ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின் பேரில் கட்டப்பட்டது.

* உலகின் முதலாவது பெரிய நீதிமன்றமாக இருப்பது லண்டன் பெய்லி நீதிமன்றம்.

* இந்தியாவில் முதல் பெரிய உயர்நீதிமன்றம் - சென்னை உயர்நீதிமன்றம்.

* உரிமையியல் நீதிமன்றத்தின் தலைவர் - மாவட்ட முன்சீப்

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...