செய்யுள் - வாழ்த்து - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

பண்ணினை இயற்கை வைத்த
பண்பனே போற்றி போற்றி
பெண்மையில் தாய்மை வைத்த
பெரியனே போற்றி போற்றி
வண்மையை உயிரில் வைத்த
வள்ளலே போற்றி போற்றி
உண்மையில் இருக்கை வைத்த
உறவனே போற்றி போற்றி
- திரு.வி.க

சொற்பொருள்:
  • பண் - இசை
  • வண்மை - கொடைத்தன்மை
  • போற்றி - வாழத்துகிறேன்
  • இருக்கை - ஆசனம்
ஆசிரியர் குறிப்பு:
  • திரு.வி.க என்பதன் விரிவாக்கம் - திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.
  • திரு.வி.க வின் பெற்றோர் - விருத்தாசலனார் - சின்னம்மையார்
  • திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  • தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)
திரு.வி.க வின் சிறப்பு:
  • இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.
திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
  • பெண்ணின் பெருமை
  • தமிழ்த்தென்றல்
  • உரிமை வேட்கை,
  • முருகன் அல்லது அழகு முதலியன.
திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன?
  • 26.08.1883 - 17.09.1953
திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது?
  • பொதுமை வேட்டல்
பொதுமை வேட்டல் என்னும் நூல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?
  • போற்றி
பொதுமை வேட்டல் எதனைக் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறது?
  • நாடு, மதம், இனம், மொழி, நிறம்
தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக எத்தனை தலைப்புகளில் உள்ளது?
  • நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.
நூல் பயன்: 
  • இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும், உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.
பொதுமை வேட்டல் எத்தனை பாக்களால் ஆனது?
  • நானூற்று முப்பது
சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்?
  • இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில்
இறைவன் உயிரில் வைத்தது எதனை?
  • இறைவன் கொடைத்தன்மையை உயிரில் வைத்தார்.
இறைவனின் இருக்கை யாது?
  • இறைவனின் இருக்கை உண்மை

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...