பாஞ்சாலி சபதம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  • எம்பி - என் தம்பி
  • களிக்க - மகிழ
  • மடப்பிடி - பாஞ்சாலி
  • கோமான் - அரசன்(திருதராட்டிரன்)
  • நுந்தை - நும் தந்தை
  • அடவி - காடு
  • தடந்தோள் - வலியதோள்
  • மருங்கு - பக்கம்
  • குலவு - விளங்கும்
  • பண்ணவர் - தேவர்
  • அரம்பையர் - தேவமகிளிர்
  • வீறு - வலிமை
  • கோலமுறு - அழகு மிக்க
  • செறிந்த - அடர்ந்து
  • கா - காடு
  • குலவு - விளங்கும்
  • ஞாலம் - உலகம்
  • ஞானம் - அறிவு
  • புன்மை - இழிந்த தன்மை
  • சதுரங்கச் சேனை - நால்வகைப் படைகள்
 இலக்கணக்குறிப்பு:
  • அழைத்தனன் - முற்றெச்சம்
  • மாநகர் - உரிச்சொற்றொடர்
  • சார்ந்தவர் - வினையாலணையும் பெயர்
  • நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ
  • அடவி மலையாறு - உம்மைத்தொகை
  • கடந்து - வினையெச்சம்
  • தடந்தோள் - உரிச்சொற்றொடர்
  • செறிந்து, பாய்ந்து - வினையெச்சம்
  • பாலாடையும் நறுநெய்யும் தேனும் - எண்ணும்மை
  • நீளமுடி, நன்செய், புன்செய் - பண்புத்தொகை
  • காத்தல் - தொழிற்பெயர்
  • தொல்லுலகு - பண்புத்தொகை
  • தாளமும் வேளமும் - எண்ணும்மை
  • பதமலர் - உருவகம்
  • பாய்ந்து, செறிந்து - வினையெச்சங்கள்
  • ஞாலமெலாம், மக்களெலாம் - எல்லாம் எனபதன் தொகுத்தல் விகாரம்.
  • காத்தல் - தொழிற்பெயர்
  • தாளமும் மேளமும் - எண்ணும்மை

ஆசிரியர் குறிப்பு:
  • சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தலி 11.09.1882 ஆண்டு பிறந்தார்.
  • பெற்றோர் - சின்னசாமி - இலக்குமி அம்மையார்
  • துணைவி - செல்லம்மாள்
  • இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
  • ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.
  • இவர் 11.12.1921 அன்று மறைந்தார்.
நூல் குறிப்பு:
  • பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது.
  •  பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது.
  • இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.
சிறப்பு:
  • பாரதியார் "பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாகவி"  எனப் புகழப்பெற்றார்.
  • சுதேசமித்திரன், இந்திய முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...