குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது.
சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது
- பூதந்சேந்தனார்.
சொற்பொருள்:
- குழவி - குழந்தை
- பிணி - நோய்
- கழறும் - பேசும்
- மயரி - மயக்கம்
- சலவர் - வஞ்சகம்
- மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்
- பெயர் - மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்.
- ஊர் - மதுரை
- காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இனிய கருத்துக்களை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.
- ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.
No comments:
Post a Comment