கம்பராமாயணம் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே
- கம்பர்
சொற்பொருள்:
  • தாது - மகரந்தம்
  • போது - மலர்
  • பொய்கை - குளம்
  • பூகம் - கமுகம்(பாக்கு மரம்)
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் - கம்பர்
  • ஊர் - நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர்.
  • போற்றியவர் - சடையப்ப வள்ளல்
  • இயற்றிய நூல்கள் - சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
  • காலம் - கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவர்.
  • வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் காப்பியம் இயற்றியவர் - கம்பர். அந்நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என வழங்கலாயிற்று. எனவே இது வழிநூல் எனப்படுகிறது.
  • கதை மாந்தரின் வடசொற் பெயர்களைத் தொல்காப்பிய நெறிப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் கம்பர்.
நூல் குறிப்பு:
  • ஆறு காண்டங்களைக் கொண்டது கம்பராமாயணம்.
  • பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்.
  • காண்டம் - பெரும் பிரிவு
  • படலம் - உட்பிரிவு
  • இப்பாடல் பால காண்டத்து ஆற்றுப்படலத்தில் உள்ளது.
  • தற்போதைய உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாயும் சரயு நதியின் வளம் இதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...